பக்கங்கள்

30 ஏப்ரல் 2011

அனலைதீவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் உடலம்.

அனலைதீவுப்பகுதியில் 25 வயது யுவதி கால்கள் இரண்டும் நிலத்தில் முட்டும் வகையில் தூக்கில் தொங்கியபடி நேற்று வெள்ளி மாலை சடலமாக மீட்கப்ட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் சிறய தீவான அனலைதீவுப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த யுவதி தாயாருடன் வீட்டுக்குச் சற்றுத் தொலைவில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றதாகவும் குளித்துவிட்டு யுவதி மட்டும் தனியே வீடு திரும்பியதாகவும் யுவதியின் தாயினால் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தாயார் குளித்து விட்டு வீட்டினுள் வரும் போது யுவதி வீட்டின் வளையில் கயிறு மாட்டி தூக்கில் தொங்கியபடி இருந்ததாகத் தெரியவருகின்றது.
யுவதியின் காதலன் கைது:
யுவதியை காதலித்து பின்னர் ஏமாற்றிய காதலன் தற்போது இது தொடர்பாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த காதலன் யுவதியை பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் திருமணம் செய்யாது ஏமாற்றியதாகவும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடந்து வருவதாகவும் தெரியவருகின்றது.
காதலன் தப்பி ஓட எத்தனிப்பு:
யுவதி தூக்கில் தொங்கியதை அடுத்து யுவதியை காதலித்து ஏமாற்றிய காதலன் பொதுமக்களின் தாக்குதல் பயத்தின் காரணமாக அனலைதீவில் இருந்து தப்பிஓட முற்பட்டபோது பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் யுவதி கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் காணப்படவில்லை எனவும் பிரேத பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.