பக்கங்கள்

20 ஏப்ரல் 2011

இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும்!

இலங்கை மீதான யுத்தக் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.
உலகின் பலம்பொருந்திய நாடுகளில் ஒன்றாக உருவாக வேண்டுமானால் இந்தியா மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குரல் கொடுக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்புரிமை பெற்றுக் கொள்வதற்காக இந்தியா முயற்சித்து வருகின்ற சந்தர்ப்பத்தில், பிராந்திய நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சிகளின் ஆரம்ப கட்டத்தில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்த போதிலும், இடைநடுவில் நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் தமிழக தமிழர்கள் கூடுதல் கரிசனை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.