பக்கங்கள்

15 ஏப்ரல் 2011

நிபுணர் குழு அறிக்கையை ஸ்ரீலங்கா பயன்படுத்த வேண்டும்!

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கையின் போது நிபுணர் குழுவின் பரிந்துரைகளையும் இலங்கை பயன்படுத்திக்கொள்ள முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் மார்ச் சீ டோனர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை மற்றும் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கை கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சில பிரச்சினைகளுக்கு ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, நிபுணர் குழுவின் அறிக்கை பக்கச்சார்பானது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.