பக்கங்கள்

22 ஏப்ரல் 2011

வீட்டைப்பார்த்த அதிர்ச்சியில் மரணம்!

15 வருடங்களின் பின்னர் தனது சொந்த வீட்டை பார்வையிடுவதற்காக வந்த ஒருவர் வீடு சின்னாபின்னமாக உடைவடைந்திருப்பதைக் கண்டு அதே இடத்தில் வீழ்ந்து மரணமான சம்பவமொன்று யாழ்.வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி நபர் திருகோணமலையில் தங்கியிருந்து விட்டு 15 வருடங்களின் பின்னர் வடமராட்சியிலுள்ள தனது சொந்த வீட்டை பார்வையிடுவதற்காக வந்துள்ளார்.இந்த நிலையில்,அவரது வீடு சின்னாபின்னமாக உடைவடைந்திருப்பதை கண்டு அதே இடத்தில் வீழ்ந்து அவர் அதிர்ச்சியில் மரணமானார்.
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. வடமராட்சி, அல்வாய் வடக்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் வல்லிபுரம் (வயது 80) என்பவரே இவ்வாறு மரணமானவர் ஆவர்.இவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.