பக்கங்கள்

14 ஏப்ரல் 2011

பான் கீ மூனின் உத்தியோகபூர்வ தளத்தில் நிபுணர் குழு அறிக்கை!

2009ஆம் ஆண்டு மே மாதமளவில் இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தம் தொடர்பான யுத்தக் குற்றச்சாட்டுகள் பற்றி ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை பான்கீ மூனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனுடைய பிரதி ஒன்றும் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் அந்த அறிக்கையை இலங்கை அரசு கடுமையாக விமர்சித்துமிருக்கின்றமை தெரிந்ததே. இந்நிலையில் இந்த நிபுணர் குழுவின் அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்கள் உத்தியோகபூர்வமாக இன்னமும் வெளியிடப்படவில்லை. இந்த நிபுணர் குழு அறிக்கையின் முக்கிய அம்சமாக சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை பான்கீ மூன் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபாரிசு செய்திருப்பதாக நம்பத்தகுந்த இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிபுணர் குழுவின் அறிக்கை இன்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனின் உத்தியோகபூர்வ தளத்தில் வெளியிடப்படும் எனவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வறிக்கை இலங்கை நேரப்படி இன்று இரவு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.