பக்கங்கள்

28 ஏப்ரல் 2011

பான் கீ மூன் ஒரு கிரிமினல்.

தவறிழைக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தான் அமைத்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தானே நிராகரிப்பதன் மூலம் தொடர்ச்சியாக கிரிமினல் நடத்தையில் ஈடுபட்டு வருகிறார் என்று சர்வதேசச் சட்ட நிபுணரும், இல்லினாய்ஸ் பல்கலைக்கழக பேராசிரியருமான பிரான்ஸிஸ் போய்ல் அவர்கள் கூறினார்.
தமிழர்களுக்கெதிரான இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித விரோதக்குற்றங்களை ஆராய ஆய்வுக்குழுவை அமைக்க வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்த பின்னும் பான் அதனை நிராகரித்து வருவது கிரிமினல் நடத்தை என்றார் போய்ல். தமிழ்நெட் இணையத்தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் ஐ.நா. சாசனத்திற்கும் ஐ.நா. மனித உரிமை சாசனத்திற்கும் பான் கி மூன் பான் மிகப்பெரும் இழுக்கு என்று கூறிய போய்ல், பான் மீண்டும் ஐ.நா. செயலாளர் ஆவதைத் தடுக்க வேண்டும் என்றார்.
தன்னுடைய நுலான ‘சிறீலங்காவில் தமிழினப்படுகொலை’ என்ற நூலில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனும் அவரது ஊழியர்களுக்கும் வன்னியில் இரு ஆண்டுகளுக்கு முன் நடந்த சண்டையில் 50,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு உடந்தையாக இருந்து உதவிச் செயல்படுத்தினர் என்றார் போய்ல் அவர்கள். இது செர்பெனிகாவில் நடந்த இனப்படுகொலையை விட ஆறு மடங்கு அதிகம் என்றார் போய்ல்.
இப்போது ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கி மூன் தமிழர்களுக்கெதிரான இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித விரோதக்குற்றங்களை ஆராய ஆய்வுக்குழுவை அமைக்க வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்த பின்னும் பான் அதனை நிராகரித்து தனது தனக்கேயுரிய கிரிமினல் பாணியைத் தொடர்ந்து வருகிறார். எனவே எல்லா தமிழர்களும் இந்திய அரசும் முயற்சி மேற்கொண்டு பான் கி மூன் மீண்டும் ஐ.நா. செய்லாளர் ஆவதைத் தடுக்க வேண்டும் என்றார் பேராசிரியர் போய்ல்.
தமிழர்களுக்கெதிரான சிறீலங்காவின் இனப்படுகொலைக் குற்றங்களை ஆராய்ந்து தீர்ப்பளிக்க நிபுணர்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தும் ஒரு பொதுச்செயலாளர் அதிகாரத்திற்கு வர நாம் முயலவேண்டும் என்று பேராசிரியர் போய்ல் மேலும் தெரிவித்தார்.
News: www.tamilnet.com
மொழிபெயர்ப்பு:ஈழதேசத்தின் விசேட செய்தியாளர் நிலவரசு கண்ணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.