பக்கங்கள்

29 மார்ச் 2016

சுவிஸ் குமாருக்கு தலையில் காயம்!உள் நடந்த மோதலா?

சுவிஸ் குமார்
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சந்தேக நபர்களிடையே சிறைச்சாலைக்குள் குழப்பங்கள் ஏற்பட்டதுடன், அவர்களுக்கிடையே மோதலும் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுவரும் விசாரணைகளின் மூலம் மேலதிகமான சில உண்மைத்தகவல்கள் கசிந்து வருவதை அடுத்தே இவர்களுக்கடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 11 ஆவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டிருந்தார். 11 ஆவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதன் பின்னர் வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக ஆதாரங்கள் பல குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் சிக்கியிருந்தது. குறிப்பாக வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் கொலை செய்யப்பட்டமை ஆகியவற்றினை வீடியோ பதிவு செய்த மெமரிக்காட் மீட்கப்பட்டிருந்தது. மீட்கப்பட்ட வீடியோவால் வழக்கு விசாரணைகளுக்கான வலுவான சான்றுகளும் குற்றப் புலனாய்வாளர்களிடம் சிக்கியுள்ளது.குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் 10 சந்தேக நபர்களிடமும் தனித்தனி விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் இறுதியாக கைது செய்யப்பட்ட 11 ஆவது சந்தேக நபர் அரச தரப்பு சாட்சியமாக மாற்றப்பட்டுள்ளார். இதனால் 11 ஆவது சந்தேக நபர் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கொடுத்தமை தொடர்பில் 10 சந்தேக நபர்களிடமும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இதன் ஒரு அங்கமாக கடந்த வாரம் சிறைச்சாலைக்கும் இருந்த வித்தியாவின் சந்தேக நபர்களுக்குள் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் சுவிஸ் குமாரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் சிறைச்சாலையில் இருந்து உறுதிப்படுத்தும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

26 மார்ச் 2016

இன அழிப்பு என்றால் என்ன?

சிங்களத்தின் கொடூரம்!
இனப்படுகொலை என்பது மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய மிக மோசமான குற்றச்செயலாக பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறது.எந்தெந்தச் செயல்பாடுகள் இனப்படுகொலை எனக் கருதப்படுகிறது? மனிதக் குழு ஒன்றினை முற்றாக ஒழிக்கும் முயற்சியுடன், அவர்களை முற்றாக அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயல்பாடே இனப்படுகொலை எனப்படுகிறது. `ஜெனோசைட்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இனப்படுகொலை என்ற சொல் எவ்வாறு நடைமுறைக்கு வந்தது? ஜெனோசைட்டில் வரும் முதல் பாதி சொல்லான `ஜெனொஸ்' என்பது கிரேக்க சொல் ஆகும், அது `இனம்' அல்லது பழங்குடி என்ற பொருள் தருகிறது. `சைட்' எனப்படும் இலத்தின் சொல் `கொல்வதற்கு' என்ற பொருள் தருகிறது, இந்த இரண்டும் சேர்ந்தே `ஜெனொசைட்' என்ற வார்த்தை உருவானது.யூத இனப்படுகொலையின் போது தனது சகோதரன் தவிர குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்த ரஃபேல், இனப்படுகொலை சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றமாக இனங்காணப்பட வேண்டும் என பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தார். இதனை அடுத்து 1948 டிசம்பரில் இனப்படுகொலை குறித்த ஐ.நா தீர்மானத்தில் இது உள்வாங்கப்பட்டு பின்னர் 1951 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது. ஒரு இனக் குழுவின் உறுப்பினர்களை கொல்வது குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியாக மோசமான தீங்கினை ஏற்படுத்துவது இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது. அந்த இனக் குழுவில் புதிதாக பிறப்புக்களை தடுக்கும் நோக்கில் செயற்படுவது, குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறொரு இனக்குழுவுடன் சேர்ப்பது,ஒரு தேசிய இனத்தை அல்லது சமய குழுவை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் இனப்படுகொலை என ஐநா தீர்மானத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு இது கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது. இந்தத் தீர்மானம் மிகக் குறுகியதாக உள்ளது என்றும் வேறு சிலர் இது தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டிவருகின்றனர். நாஜிக்களால் மேற்கொள்ளப்பட்ட யூதர்களுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமே கடந்த நூற்றாண்டில் நடந்த இன அழிப்பு என சிலர் கூறுகின்றனர். ஆனால், 1948ஆம் ஆண்டுத் தீர்மானத்தின்படி, குறைந்தது மூன்று இன அழிப்பு சம்பவங்களாகவது நடந்திருப்பதாக வேறு சிலர் கணக்கிடுகின்றனர். முதலாவதாக, 1915க்கும் 1920க்கும் இடையில், ஒட்டோமான் துருக்கியர்களால் ஆர்மீனியர்கள் பெரும் எண்ணிக்கையில் படுகொலைசெய்யப்பட்டது. அதன் பிறகு, நாஜிக்களால் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டது.மூன்றாவதாக, ருவாண்டாவில் 1994ல் டுட்ஸி, ஹுடு இனத்தைச் சேர்ந்த 8 லட்சம் பேர் கொல்லப்பட்டது. இவைதவிர, 1995ல் போஸ்னியாவின் ஸ்ரெப்ரெனீட்சாவில் நடந்தது இன அழிப்பு என யுகோஸ்லோவியாவுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதுபோக, 1932-33ல் உக்ரைனில் சோவியத் ஒன்றியம் ஏற்படுத்திய செயற்கைப் பஞ்சம், 1975ல் கிழக்குத் திமோர் மீது இந்தோனேஷியா எடுத்த படையெடுப்பு, 1970களில் கம்போடியாவில் நடந்த க்மெர் ரூஜ் படுகொலைகளையும் சிலர் இனப்படுகொலையாக முன்வைக்கின்றனர்.இவ்வாறு பிபிசி தமிழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
´´அட பாவிகளே....!இலங்கையில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக சிங்களவர்களால் கொல்லப்பட்டார்களே இது உங்களுக்கு இன அழிப்பாக தெரியவில்லையா?அட...உங்களின் எழுத்தில் கூட இல்லையே சமதர்மம்''.

18 மார்ச் 2016

பொட்டம்மான் குறித்து எதுவும் தெரியாது என்கிறார் சரத்பொன்சேகா!

சரத்பொன்சேகா
இறுதி யுத்தம் நடந்த சமயம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோர் சிலருடன் தப்ப முயன்றனர். 2009 மே 17 ஆம் திகதி வடக்கு நந்திக்கடலூடாகத் தப்ப முயன்ற இவர்களில் பிரபாகரனும் மற்றவர்களும் திரும்பி யுத்த களத்துக்கு வந்தனர். ஆனால் பொட்டு அம்மான் வரவில்லை. இந்த விடயத்தை கே.பி. கூறியே தெரிந்து கொண்டோம். பொட்டு அம்மான் குறித்து என்னிடம் உள்ள இறுதித் தகவல் இதுவே. - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான 'பீல்ட் மார்ஷல்' சரத் பொன்சேகா கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று அவர் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். இதன்போது "பொட்டு அம்மான் இந்தியாவில் உயிருடன் இருக்கிறார் என செய்திகள் வெளியாகி உள்ளனவே" என எழுப்பிய வினாவுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்ட தகவலை தெரிவித்தார். மேலும் இந்தியாவில் பொட்டு அம்மான் இருக்க முடியாது. காரணம் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அவர் தேடப்படுபவர். வட கிழக்கு நந்திக்கடல் தாக்குதலில் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி உட்பட பலர் கொல்லப்பட்டனர். இதன்பின்னரே பிரபாகரனும், பொட்டு அம்மானும் தப்பிக்க முயன்றனர். பிரபாகரன் மீண்டும் யுத்த களத்துக்கு வந்தபோதும் பொட்டு வரவில்லை. அவருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது.அவர் உயிரிழந்திருக்கலாம்.இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.