பக்கங்கள்

09 ஏப்ரல் 2011

டக்ளசை மிரட்டிய மகிந்த!

ஈபிடிபி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு மஹிந்தராஜபக்சவினால் மிரட்டல் விடுக்கப்பட்ட விடயத்தினை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வாய் தடுமாறி வெளிப்படுத்தியிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வும் தெரிவு செய்யப்பட் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வும் நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றன. அங்கு உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா, ஏ-9 வீதி, ஏ-23 வீதி என்பன 3 மாதம் தொடக்கம் ஒரு வருடத்திற்குள் திருத்தி அமைக்கப்படும். அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்த போது யாழ்.மாவட்டத்திலுள்ள வீதிகளை துரிதமாக திருத்தி அமைக்க வேண்டும். இல்லையேல் பதவியில் இருந்து கலைத்துவிடுவேன் என்று தனக்கு ஜனாதிபதி எச்சரித்ததாக உரையாற்றினார். சம்பவத்தை அடுத்து திடுக்குற்ற யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உடனடியாக சிறு ஒற்றையில் குறிப்பு ஒன்றை எழுதி உரையாற்றிக் கொண்டிருந்த டக்ளசிடம் வழங்கினார். இதனை அடுத்துச் சுதாகரித்துக் கொண்ட டக்ளஸ், வீதியைத் திருத்தாவிடின் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளை பணியில் வைத்திருக்க மாட்டேன் என்று ஜனாதிபதி எச்சரித்தார் என்று தடுமாறியபடி உரையாற்றியிருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.