பக்கங்கள்

31 அக்டோபர் 2013

பெண்கள் மீது இராணுவ வன்முறைகள் அதிகம்-அனந்தி

ஒரு பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால் அதை பெரிதாக்கிப் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்தும் நிலைமையே இங்கு காணப் படுகின்றது. இந்த நிலை மாற வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெண்கள் விழிப்புணர்வு தொடர்பான குறும்பட மற்றும் அசையும் படவெளியீட்டு விழா திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்: ஆண்களுக்கு மேலான சுதந்திரம் ஒரு காலத்தில் பெண்களுக்கும் இருந்தது. பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் தொடர்பில் பெரியளவில் அறியப்படாவிட்டாலும் இராணுவ வன்முறைகள் அதிகளவில் இடம்பெறுகின்றன. எமது சமூகத்தில் ஒரு பெண் வன்புணர்வுக்கு உட்படுத் தப்பட்டால் அதைப் பெரிது படுத்திப் பாதிக்கப்பட்ட பெண் இழிவுபடுத்தப்படுவதுபோல உலகத்துக்கே தெரியப்படுத்துகின்றனர். வன்புணர்வு செய்திகளில் பெண்கள் காட்சிப் பொருளாக மாற்றப்படுவதால்தான் பாதிக்கப்பட்ட பெண்கள் தமக்கு நேர்ந்த வன்முறைகளை வெளியே கூற அஞ்சுகின்றனர். பெண்கள்  மேலும் வலுவூட்டப்பட வேண்டிய நிலைமை இங்கு காணப்படுகின்றது. சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் எதையும் மாற்றிவிட முடியாது. மக்கள் மனங்களில் மாற்றம் வேண்டும். சமூகத்தில் மாற்றம் வேண்டும். மக்களுக்கு பெண்கள்தான் வன்முறை பற்றிய விழிப்புணர்வை வழங்கக் கிராம மட்டத்தில் இருந்து செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

30 அக்டோபர் 2013

யாழ்ப்பாண இடப்பெயர்வின் நினைவு நாள் இன்றாகும்

ஈழத்தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றாக கருதப்படும் யாழ். இடப்பெயர்வின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் நாள் யாழ்,குடாநாட்டு மக்களின் வாழ்வில் மறக்க முடியாத பெரும் துன்ப சுமையாக அமைந்த நாளாகும். எறிகணைத்தாக்குதல், விமான குண்டு வீச்சுக்கள் இராணுவ நகர்வுகள், என இடப்பெயர்வுகளை சந்தித்து வந்த யாழ் குடாநாட்டு மக்கள் ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். வேரோடும் வேரடி மண்ணோடும் நகர்ந்து சென்ற பெரும் துயரம் அன்றுதான் நிகழ்ந்தது. யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருப்பதால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு விடுதலைப்புலிகள் ஒலிபெருக்கியில் அறிவித்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தவர்களாக அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்ட அந்த அவலத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இடைவழியில் நடந்த மரணங்களும், பேரவலங்களும் சந்தித்த 5 இலட்சம் மக்கள் தென்மராட்சியையும் கிளாலி ஊடாக வன்னியையும் அடைந்தனர். இடைவழியில் விமான குண்டு வீச்சுக்களால் இறந்து போனவர்கள் பலர். 24மணிநேரமாக நடந்து நடந்து களைத்து போன மக்கள் அனுபவித்த பேரவலம் ஈழவிடுதலைப்போராட்ட வரலாற்றில் மக்கள் அனுபவித்த பெருந்துன்பங்களில் ஒன்றாகும்.

29 அக்டோபர் 2013

புத்தூரில் இளம் யுவதி சடலமாக மீட்பு!

வலிகாமம் கிழக்கின் புத்தூர் பகுதியில் இளம் யுவதியொருவரது சடலம் கிணற்றினிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தூர் கிழக்கினை சேர்ந்தவரான அமிர்தலிங்கம் மைதிலி வயது 27 என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த யுவதி நேற்றிரவு வழமை போன்று வீட்டினிலிருந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அவ்வேளையில் தொலைபேசி அழைப்பொன்று கைத்தொலைபேசிக்கு வந்ததையடுத்து வெளியே சென்றதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் வீட்டிற்கு வெளியே அருகாகவுள்ள புத்தூர் கிழக்கு மத்திய சனசமூக நிலைய கட்டிடத்திற்கு முன்னதாகவுள்ள கிணற்றிலிருந்து இவர் சடலமாக மீட்கப்ட்டுள்ளார். இன்று காலை வரை குறித்த யுவதி பற்றிய தகவல்கள் இல்லாத நிலையில் குடும்பத்தவர்கள் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடொன்றை செய்துள்ளனர். இந்நிலையில் பொதுமகனொருவர் இன்று நண்பகல் குறித்த கிணற்றிற்கு அருகாக சென்றிருந்த வேளை சடலத்தை கண்டு வழங்கிய தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

மனைவிகள் கை விட்டதால் தூக்கில் தொங்கினார்!

தனது இரண்டு மனைவிகளின் பிரிவை தாங்க முடியாத இலங்கை அகதி ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கரூர் மாவட்டம் குளித்தலை இரும்பூதிப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த நாகேஸ்வரன் (33) என்பவர் வசித்தார். இவருக்கு நாகேஸ்வரி (26) என்ற மனைவியும் விஜயப்பிரியா (7), கவிப்பிரியா (6), சிநேகப்பிரியன்(5) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஆண்டு நாகேஸ்வரி தனது குழந்தைகளுடன் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் திருநெல்வேலி அகதிகள் முகாமில் தங்கியிருந்த கலைச்செல்வி என்பவரை நாகேஸ்வரன் 2வது திருமணம் செய்தார். இவர்களுக்கு பவீஸ்னா என்ற 11 மாத குழந்தை உள்ளது. இவரும் கடந்த 25ம் திகதி பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட நாகேஸ்வரன் நேற்று முன்தினம் (27) வீட்டின் சாரத்தில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். குளித்தலை பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

28 அக்டோபர் 2013

தமிழ் செல்பேசி நிறுவனத்தைக் குறிவைக்கும் கே.பி குழு!

புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் தமிழர்களைக் கண்காணிப்பதற்கும், தாயகத்தில் உள்ள உறவுகளுடன் அவர்கள் மேற்கொள்ளும் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்கும் ஏதுவாக ஐரோப்பாவில் இயங்கும் முன்னணி தமிழ் செல்பேசி நிறுவனம் ஒன்றைக் கையகப்படுத்தும் நடவடிக்கையில் கே.பி குழுவினரை சிங்களம் களமிறக்கிவிட்டுள்ளது. ஐரோப்பாவில் இயங்கும் குறிப்பிட்ட செல்பேசி நிறுவனத்தின் உரிமையாளர்களை அணுகியிருக்கும் கே.பியின் கையாட்கள், அந் நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செல்பேசி அட்டைகளைப் பயன்படுத்தி தாயகத்தில் உள்ள தமது உறவுகளுடனான தொலைபேசி உரையாடல்களை பெருமளவான புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் மேற்கொண்டு வரும் நிலையில் அந் நிறுவனத்தைக் கையகப்படுத்துவதன் ஊடாக அதன் வசமுள்ள புலம்பெயர்வாழ் தமிழர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பெறுவதற்கும், அவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்கும் சிங்களம் திட்டமிட்டிருப்பதாக தெரிய வருகின்றது. அத்துடன் வெளிநாடுகளில் கே.பியின் பினாமிகளின் வசமும், ராஜபக்ச சகோதரர்களின் பினாமிகளின் வசமும் இருக்கும் பணத்தை சட்டபூர்வமான முறையில் கொழும்பிற்கு எடுப்பதற்கான பணப் பரிவர்த்தனைப் பாதை ஒன்றை திறப்பதற்கும் இந் நிறுவனத்தை சிங்களம் பயன்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான இடைத்தரகர்களாக கடந்த காலங்களில் யேர்மனி, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கொழும்பு சென்று கே.பியை சந்தித்த ‘மெத்தப்படித்த கனவான்கள்’ சிலரும் உள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இவ்வாறு இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குடாநாட்டை முற்றுகையிடும் தெற்கு வியாபாரிகள்!

newsதீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தென்பகுதியிலிருந்து நடைபாதை வியாபாரிகள் குடாநாட்டை முற்றுகையிட்டு வருகின்றனர். தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளது. இந்த நிலையில், பண்டிகை வியாபாரத்தைக் குறிவைத்து தென்பகுதி நடைபாதை வியாபாரிகள் குடாநாட்டுக்கு அதிகளவில் வருகின்றனர். முற்றவெளி பிரதேசத்தில் இதற்கென அவர்கள் தனியாக கொட்டகை போட்டு வியாபாரப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாகவுள்ள பகுதி மற்றும் முனீஸ்வரன் வீதி, புல்லுக்குளம் வீதி போன்றவை தீபாவளி பண்டிகைக்காக நடைபாதை வியாபாரத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ளன. இதனைவிட நடைபாதை வியாபாரிகள் குடாநாட்டில் கிராமப் புறங்களுக்குச் சென்று அங்கும் உடு புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடைபாதை வியாபாரிகளின் இத்தகைய வியாபார நடவடிக்கையால் நகர்ப்புற புடைவை வர்த்தக நிலையங்களின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக புடைவை உரிமையாளர்கள் விசனம் தெரிவித்தனர்.

27 அக்டோபர் 2013

மகிந்தவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கத்தின் கடுமையான எச்சரிக்கை செய்தி ஒன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்தவாரம், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிறப்புச் செய்தி ஒன்றுடன் அலரி மாளிகைக்குச் சென்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தார். ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை சிறிலங்கா நிறுத்தத் தவறினால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அதில் எச்சரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதேவேளை, ஈரானுடன் சிறிலங்கா நெருக்கமான இராஜதந்திர உறவுகளை வைத்துள்ளது. அமெரிக்காவின் தடைகளை அடுத்து, ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதை சிறிலங்கா நிறுத்தியுள்ளது. எனினும், அமெரிக்காவின் தடையை மீறும் வகையில், மூன்றாவது தரப்பு ஊடாக ஈரானிய மசகு எண்ணெயை சிறிலங்கா வாங்குவதாக, அமெரிக்காவுக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்தே, அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சிறிலங்கா அதிபரிடம் அமெரிக்கத் தூதுவர் சிசன் கையளித்த சிறப்புச் செய்தியில், ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை சிறிலங்கா உடனடியாக நிறுத்தத் தவறினால், பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இராஜதந்திர மொழியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

26 அக்டோபர் 2013

இந்துப் பெண்ணை மணம் செய்ய இந்துவாக மாறிய இஸ்லாம் இளைஞர்!

மட்டக்களப்பு கரடியனாறு கிராமத்தைச்சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரை மணம் முடிப்பதற்காக முஸ்லீம் இளைஞர் ஒருவர் இந்து மதத்திற்கு மாறியதுடன் இந்துமத முறைப்படி திருமணமும் செய்துகொண்டுள்ளார். தோப்பூர் அல்லை நகர்-05ஐ சேர்ந்த முகமது றியாஸ்தீன் முகமது இப்ஹான் என்ற முஸ்லீம் இளைஞருக்கும் கரடியனாறு கொலனியைச் சேர்ந்த ஞானச்செல்வம் வேவிசரளா என்ற பெண்னுக்கும் இடையில் கைத்தொலைபேசி மூலம் ஏற்பட்ட உறவு காரணமாக இவர்கள் இருவரும் திருமணம் செய்வதற்கு சம்மதித்து இன்று செங்கலடி ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து இந்துமத முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். குறித்த முஸ்லீம் இளைஞர் மேற்படி பெண்னை திருமணம் செய்வதற்காக இந்துமதத்தை தழுவிக்கொண்டதோடு அவர் தனது பெயரை கிசாந்தன் எனவும் மாற்றிக்கொண்டுள்ளார். இவருக்கு செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் மோகன் அவர்கள் இந்துமத முறைப்படி தாலி எடுத்துக்கொடுத்து திருமணம் செய்துவைத்தார்.

தீவகத்தில் அஷ்தமனமாகிறது ஒட்டுக்குழு!

யாழ்.குடநாட்டின் தீவகப்பகுதிகளிலிருந்து ஒட்டுக்குழு பிரமுகர்கள் பலரும் தமது குடும்பங்களை வெறியேற்ற தொடங்கியுள்ளனர். தமது கோட்டையாக அவர்கள் கருதி வந்த தீவகப்பகுதியினில் கடந்த மாகாணசபை தேர்தலினில் ஏற்பட்ட படுதோல்வியால் ஈ.பி.டி.பி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.இதையடுத்தே தமது குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற ஈபிடிபியின் தலைமைகள் முடிவு செய்துள்ளன. பெரும்பாலான ஈபிடிபியினது தீவக அலுவலகங்கள் வெறிச்சோடிப்போயுள்ளன.மக்கள் அவர்களது அலுவலகங்களிற்கு செல்வதும் நின்று போயுள்ளது. ஒட்டுக்குழுவினர் தமது அஸ்தமனத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக ஆதரவாளர்கள் தரப்பினில் கூறப்படுகின்றது. குறிப்பாக கடந்த காலங்களினில் தமது வாகனங்களை தீவகப்பகுதிகளினிலேயே கூடுதலாக தரித்து வைத்திருந்த ஈபிடிபியினர் தற்போது அவற்றை யாழ்.நகரின் சிறீதர் தலைமையகத்தினில் தரித்து வைக்க தொடங்கியுள்ளனர். நடந்து முடிந்த மாகாணசபை தேர்தல் வாக்களிப்பினில் தீவகப்பகுதிகளினில் கூட்டமைப்பு கூடிய வாக்குகளை பெற்று ஈபிடிபியை பின் தள்ளியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

25 அக்டோபர் 2013

கூட்டமைப்பின் வெற்றிக்கு தனிப்பட்ட ரீதியில் எவரும் உரிமை கொண்டாட முடியாது!

எம்முன் பாகுபாடுகளோ, வேறுபாடுகளோ வேண்டாமென மீண்டும்மொரு முறை உங்கள் அனைவரதும் சகோதரியாக, மூன்று குழந்தைகளது தாயாக, காணாமல் போன தலைவனை தேடுகின்ற குடும்பத்தலைவியாக கேட்கின்றேன் எனத்தெரிவித்துள்ளார் திருமதி .அனந்தி சசிதரன் - எழிலன் வடக்கு மாகாணசபையினது முதலாவது அமர்வில் தனது முதல் உரையில் அனைவரையும் மக்களிற்காக ஒன்றிணைய அழைப்பு விடுத்து அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில் வணக்கம். நான் அனந்தி சசிதரன்-எழிலன். அமர்வுக்கு தலைமை தாங்கிக்கொண்டிருக்கும் தவிசாளர் அவர்களே, முதலமைச்சர் அவர்களே, அமைச்சர்களே, எமது சகமாகாணசபை உறுப்பினர் நண்பர்களே, விருந்தினர்களே, மகாணசபை அதிகாரிகளே, எனதருமை ஊடக நண்பர்களே அனைவருக்கும் முதல் கண் எனது வணக்கங்கள். நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள், கூட்டமைப்பிற்கு ஏகோபித்த ஆதரவை ஏன் வழங்கியிருக்கறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் சொல்லி தெரியவைக்க வேண்டியதொன்றல்ல. அனைவரதும் ஒற்றுமை, தமிழனை தமிழனே ஆளவேண்டும், அபிவிருத்திகளுக்கு அப்பால் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் எனபவற்றை வலியுறுத்தியே மக்கள் மீண்டுமொரு முறை திரண்டு வந்து கூட்டமைப்பிற்கு வாக்களித்திருக்கிறார்கள். வாக்குகளை அளிக்கும் போது அவர்கள் எங்களைப்பார்க்கவில்லை, கட்சிகளை பிரித்துப்பார்க்கவில்லை எந்தவித பாகுபாடும் மக்கள் மனங்களில் இருக்கவில்லை. அனைவருக்கும் ஒன்றிணைந்த கூட்டடமைப்பையே வரவேற்றார்கள். அதிலும் முதலமைச்சருக்கோ, எனக்கோ கூடிய அளவில் விருப்புவாக்குகள் அளிக்கப்பட்டமை தனிப்பட்ட நட்புபாராட்டவல்ல இவர்கள் அனைவரையும் அரவணைத்து, ஏதோ முடிந்ததை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அளிக்கப்பட்டவையே அதற்கப்பால் தனிப்பட்ட ரீதியில் எவருமே போடப்பட்ட வாக்குகளுற்கு உரிமை கோர முடியாது. 1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தப்பிரகாரம் உருவான 13வது திருத்தச்சட்டத்தின் கீழாக மாகாணசபை, இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வாக மாட்டாதென்பது அனைவருக்கும் புரியும். எமது விடுதலைப் போராட்டத்தினில் அனைத்தையுமே தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்த, இருக்கின்ற தமிமீழ விடுதலைபபுலிகள் மாகாண சபை முறைமையை நிராகரித்திருந்தது. அனைவருக்கும் தெரிந்ததே. அத்தகைய மாகாண சபைக்கு புத்துயிர் வழங்கி, எதையாவது செய்யலாமாவென இப்போது நாம் பரீட்சித்துப்பார்க்க போகின்றோம். அனைவரும் மதிக்கின்ற அமைச்சரவையொன்று இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களிற்கு துறைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டவை வெறுமனே காகிதத்தினில் இருக்காது எதையாவது செய்யக்கூடியதாக இருக்கவேண்டும். யுத்தத்தின் கோர வடுக்களை தாங்கி நிற்கின்ற எமது மக்களது உணர்வுகளை அவர்களுள் ஒருத்தியாக நானும் நன்கு அறிவேன். அவர்களிற்கு வெறுமனே இயன்ற வலி நிவாரணங்களைமட்டும் நாம் வழங்கினால் போதாது. எம்முன் பாகுபாடுகளோ, வேறுபாடுகளோ வேண்டாமென மீண்டும்மொரு முறை உங்கள் அனைவரதும் சகோதரியாக ,மூன்று குழந்தைகளதுதாயாக, காணாமல் போன தலைவனை தேடுகின்ற குடும்பத்தலைவியாக கேட்கின்றேன். மாண்புமிகு முதலைமைச்சர் , வடக்குமாகாணசபையின் ஒட்டுமொத்த கருத்துக்களையும் சமூகத்திற்கு எடுத்துச்செல்கின்றவர். அவ்வகையினில் அனைவரது கருத்துக்களிற்கு மதிப்பளிக்கப்படவேண்டும், கவனத்தினில் கொள்ளப்படவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன். வாருங்கள், நாம் ஒற்றுமையாக வடக்கு மாகாணசபைத் தேரை எமது மக்களுக்காக இழுத்துச்செல்வோம்.

24 அக்டோபர் 2013

தமிழ் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!

newsவன்னியில் 3 கிராமங்களில் தமிழ் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை திட்டமிட்ட முறையில் செய்யப்பட்டுள்ளதாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்டத்தைச் சேர்ந்த நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழு அறிக்கையிட்டுள்ளது. இந்த அறிக்கை வத்திக்கானின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி ஜோசப் ஸ்பிறிற்றேரி ஆண்டகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தின் வலைப்பாடு, வேரவில், கிராஞ்சி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் பலருக்குப் பலவந்தமாகக் கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. "கடந்த ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி கிளிநொச்சியில் இருந்து வந்த 20 தாதியர்கள், குடும்ப நல மாதுக்கள் ஆகியோர் இந்தக் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று 5 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வேரவில் மாவட்ட மருத்துவமனைக்கு வருமாறு அறிவித்துள்ளனர். அவர்கள் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதன்போது "கிளினிக்' அட்டைகளுடன் வருமாறும் அவர்களுக்கு பணிக்கப்பட்டது. 5 வயதுக்குக் குறைந்த குழந்தைகளின் நிறையை அளக்க வேண்டியிருப்பதாகவும் தாய்மாருக்கு சொல்லப்பட்டது. மருத்துமனைக்கு அவர்கள் வந்து சேர்ந்ததும் நீண்ட காலத்துக்கு கருத்தரிக்காது இருப்பதற்கான கட்டுப்பாட்டு முறைமையை ஏற்றுக்கொள்ளுமாறு பலவந்தப்படுத்த ஆரம்பித்த வைத்தியரும் மாதுக்களும் அவர்களது கைகளில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கான ஊசியை ஏற்றியுள்ளனர்'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பலவந்தமான சிகிச்சையை ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லை எனத் தெரிவித்த பெண்களுக்கு, எதிர்காலத்தில் குறித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாது போகும் எனவும் மிரட்டப்பட்டுள்ளதாக அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் தாய்மார் ஒத்துழைக்கவில்லையாயின் அவர்களது கணவன்மாரை அழைத்துவந்து குடும்பக்கட்டுப்பாட்டு சிகிச்சை செய்யப்போவதாகவும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கை மருத்துவர் மற்றும் தாதியர் மீது கடுமையாகக் குற்றம் சாட்டுகிறது. இதனையடுத்து பெரும்பாலான பெண்கள் சிகிச்சையை ஏற்றுக்கொண்டனர் எனவும் இவ்வாறான விவகாரங்களை நடைமுறைப்படுத்தும் அரச கொள்கை குறித்து தமது குழு சந்தேகப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. இந்தப் பகுதியில் சனத்தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகக் கூட இது இருக்கலாம் எனவும் அந்த அறிக்கை எதிர்வு கூறுகிறது. இந்தக் கிராமங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள். இந்த நிலையில் இவ்வாறான குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளை கத்தோலிக்கர்களாகிய தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் கருத்தை உடனடியாக பெறமுடியவில்லை. இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், குடும்பக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுப்பதற்கான எந்தவிதமான உத்தரவும் இல்லாத நிலையில் இப்படி ஒரு தகவல் வந்திருப்பதாகவும் , இது குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரான ஆர்.ரவீந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

23 அக்டோபர் 2013

“சிறிதரனே நிகழ்கால பிரபாகரன்”கடுப்பான சங்கரியார்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் நிகழ்கால பிரபாகரனே! என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்தசங்கரி குறிப்பிடுகிறார். வார இறுதிச் செய்திப் பத்திரிகையொன்றின் நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது: தற்போது ஸ்ரீதரன்தான் தமிழ் மக்களின் தலைவராக இருக்கின்றார். அவர்தான் நிகழ்கால பிரபாகரன். அந்த முட்டாளின் செய்தியை நான் கேட்கத் தயாராக இல்லை. அவரது இலக்குகளை அடைய அவர் இலகு வழிகளைத் தேடிவருகின்றார்.வட மாகாணசபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக ஆனந்த சங்கரியின் பெயரை தவிர்த்து, தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்ட மூவருக்கும் மட்டுமே ஸ்ரீதரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும், அம்மூவரும் தான் TNA சார்பாக களம் இறக்கப்பட்டவர்கள் என்ற தோரணையில் பிரச்சாரத்தில் ஸ்ரீதரன் ஈடுபட்டதனால் தான் ஆனந்தசங்கரி தோல்வியை தழுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.. அதனால் சிறிதரன் மீது கடுப்பாகி கொதித்து எழுந்திருக்கிறார் ஆனந்தசங்கரி!

யாழில் இளம் குடும்பஸ்தர் குத்திக் கொலை!

யாழ்ப்பாணம், பழம் வீதி, ஆறுகால்
மடம் பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (22) இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். பழம் வீதி, ஆறுகால் மடத்தைச் சேர்ந்த 30 வயதான தர்மராசா சத்தியபாபு என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரது முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சடலம் கொலை செய்யப்பட்ட இடத்திலேயே வைக்கப்பட்டுள்ள அதேவேளை மரண விசாரணைகள் இன்று (23) இடம்பெறவுள்ளன. இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியின் தந்தை உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (23) யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

22 அக்டோபர் 2013

பால் காச்சினார் முதல்வர் விக்கினேஸ்வரன்!

யாழ்.கைதடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணசபைக் கட்டடத்திற்கான சம்பிரதாயபூர்வமாக பால்காச்சும் நிகழ்வு இன்று செவ்வாக்கிழமை காலை இடம்பெற்றது. காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். கைதடி பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் முடிந்த பின்னர் அங்கிருந்து நடைபவணியாக வந்து புதிய கட்டடத்திற்கு பால் காச்சி சாந்தி செய்யப்பட்டது.

கனடாவில் மோதலில் பலியான தமிழ் மாணவர் அடையாளம் காணப்பட்டார்!

வின்சர் பொலிசார் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் பலியானவர் யார் என்பதை அடையாளம் கண்டுள்ளனர். நகர மத்தியில் கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றது. வின்சர் பல்கலைக்கழக மாணவரான ஸ்காபறோ குடும்பம் ஒன்றைச் சேர்ந்த கௌத்தம் (கெவின்) குகதாசன் என்ற 19 வயது மாணவரே கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். பெலிசிய ஸ்றீற் – யுனிவேசிற்றி அவனியூவில் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து கத்தியால் குத்தப்பட்ட கௌத்தம் குகதாசன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் அங்கு உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. மொத்தமாக 5 பேர் காயமடைந்தனர்.
இருவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை தேறுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. படிப்பதற்காக வந்த இந்த மாணவர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகத்தின் அருகே வாழ்ந்து வந்ததையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஏதாவது தகவல் தெரிந்தவர்களை தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கேட்டுள்ளனர்.

21 அக்டோபர் 2013

ஊர்காவற்றுறையில் இளைஞர் மீது தாக்குதல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காகவும் முதல்வரின் வெற்றிக்காகவும் பாடுபட்ட ஆதரவாளர்கள் பலரும் தொடர்ந்தும் பழிவாங்கப்படுவது தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. அவ்வகையில் யாழ்.தீவகப்பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை (21.10.13) சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் கூட்டமைப்பு ஆதரவாளரான இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஊர்வாவற்றுறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அல்பிட் கனிவூட் என்பவரே இந்தச் சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த இளைஞர் நடந்து முடிந்த வடக்குமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தவரென தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கூட்டமைப்பிற்கு ஆதரவான கூட்டங்களையும் இவரே தீவகப்பகுதியில் ஒழுங்கமைத்து இருந்தவரெனவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாகவே அவர் பழிவாங்கும் வகையில் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே பல தடைவைகள் படைப் புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதனிடையே வன்னிப்பகுதியிலும் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பயமுறுத்தல்களுக்கு உட்படுவதோடு படையினரின் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கும் உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.விக்னேஸ்வரன் சம்மந்திகளுடன் கும்மாளம் அடிக்கிறார் அவரது வெற்றிக்கு பாடுபட்டவர்களோ வதைகளுடன் துடிக்கிறார்கள்!நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி.

இந்தியப்படைகளால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி!

newsஇந்திய ஆக்கிரமிப்பு படைகளால் 1987 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனாவைத்தியசாலை ஊழியர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஈகைச் சுடரை வைத்தியசாலையின் வைத்தியர்களும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் ஏற்றி மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர். இந் நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி சிறிஸ்கந்தராஜா, வைத்திய கலாநிதி பவானந்த ராஜா, தாதியர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

20 அக்டோபர் 2013

மாவீரர் துயிலும் இல்லங்களை சுற்றி முள்வேலி அமைக்கிறது படைத்தரப்பு!

இலங்கை படைத்தரப்பினை பிடித்து ஆட்டிவரும் மாவீரர் துயிலுமில்ல காய்ச்சல் இரவோடிரவாக முட்கம்பி வேலிகளை அமைத்துக்கொள்வது வரை சென்றுள்ளது. வன்னியிலுள்ள தேராவில் வன்னிவிளாங்குளம் முழங்காவில் மற்றும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல காணிகளிற்கு எல்லையிடும் நடவடிக்கைகளை படைத்தரப்பு இரவோடிவாக அமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கில் படையினர் குவிக்கப்பட்டு பெருமளவு வாகனங்கள் சகிதம் முட்கம்பிகள் எடுத்து வரப்பட்டு இவ்வேலிகள் அமைக்கப்பட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வட-கிழக்கிலுள்ள படையினரால் இடித்தழிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டுமென்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியுள்ளது. பிரதேச சபைகளுள் சாவகச்சேரி மற்றும் கரைச்சி பிரதேசசபை என்பவை இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை மீளக்கட்டியெழுப்ப தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையினில் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றிய பிரதேச சபைகளை இலங்கைப்புலனாய்வு பிரிவுகள் வேட்டையாடத் தொடங்கியுள்ள நிலையில் அதற்கு ஆதரவாக கூட்டமைப்பின் அனைத்துவுள்ளூராட்சி மன்றங்களும் தீர்மானங்களை நிறைவேற்ற தீர்மானித்துள்ளன. அத்துடன் வடக்கு மாகாண சபையிலும் இத்தீர்மானத்தை கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையினில் அவசர அசவரமாக வன்னியிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களை தம் வசம் கையகப்படுத்த ஏதுவாகவே படைத்தரப்பு புதிய எல்லைகளை அமைப்பதிலும் முகாம்களை அமைப்பதிலும் முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது.

19 அக்டோபர் 2013

சனால்4விடம் இன அழிப்பு காணொளி?

சிங்கள அரச படைகளினால் இறுதி சமரின் போது வெள்ளை கொடி பிடித்து வந்த அரசியற்துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட்ட பிரபல தளபதிகள் இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர். இவர்களுடன் மேலும் 400 க்கு மேற்பட்ட முதன்மை மற்றும் சாதாரண போராளிகள் சரணடைதலில் உள்ளடங்குவார்கள். அரசியற்துறை பொறுப்பாளர் நடேசனும் புலித்தேவனும் வதைகள் செய்யபட்டு சுட்டு கொலை செய்யபட்டனர்,குறித்த காணொளி காட்சி சனல் போவிடம் சிக்கியுள்ளதாக பர பரப்பாக பேசப்பட்டது. இந்த காணொளி வெளியிடப்பட்டால் அது இலங்கை அரசுக்கு உலகளாவிய ரீதியில் பாரிய நெருக்கடியினை தோற்றுவிப்பதோடு இந்திய மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை தழுவ இது உதவும் என கூறபடுகிறது. அத்துடன் இலங்கையில் இடம்பெறும் கொமன்வெல்த் மாநாட்டையும் இது பாதிக்கும் என நம்பப்படுகிறது.அந்த தேர்தலை இலக்கு வைத்து இந்த காட்சிகள் வெளியாகலாம் என்பதும் இதில் இறுதி வேளை இலங்கையில் நின்று களமாடிய இந்தியச் சிப்பாய்களின் ஆவணமும் உள்ளடங்கபடுவதாக பேசப்படுகிறது. 1500 க்கும் மேற்பட்ட இந்தியப் படைகள் குறித்த புலிகளின் முற்றுகை திடீர் தாக்குதலில் உடல் சிதறி பலியான சம்பவங்கள் அந்த களத்தில் அரங்கேறின என முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தது இங்கே சுட்டி காட்டத்தக்கது. பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். வரப்போவது எது என்பது. ஆனால் வெளிவரும் காட்சிகள் உலக தமிழரை கொந்தளிக்க வைக்கும் என்பது அடித்து கூறபடுகிறது.

18 அக்டோபர் 2013

நாரந்தனையில் சிறுமியை வல்லுறவு புரிந்தவருக்கு விளக்கமறியல்!

நாரந்தனையில் 14வயது சிறுமியை வல்லுறவு புரிந்த குற்றச்சாட்டில் அதே இடத்தை சேர்ந்த இளைஞரை 14 நாள் காவலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்,பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி இது பற்றி தெரிவிக்கையில்,நாரந்தனையில் 24 வயதுடைய இளைஞரொருவர் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக கடந்த 12ம் திகதி முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த முறைப்பாட்டினை தொடர்ந்து அதே இடத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டார்,அவ்விளைஞரை 14நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார் என பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

ஐ.ரி.வி வெளியிட்ட போர் குற்ற வாக்குமூலம்!

இலங்கையில் யுத்தத்தின்போதுதான் இராணுவத்தினர் போர் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. அதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டும் வருகிறது. ஆனால் போருக்குப் பின்னர் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்களையும் இலங்கை இராணுவம் விட்டபாடாக இல்லை. நேற்றைய தினம்(17) இரவு பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும், ஐ.ரி.வி என்னும் ஆங்கிலத் தொலைக்காட்சி, இது தொடர்பாக 2 நிமிட ஆவணச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இரவு 10 மணிச் செய்தி இடம்பெற்றவேளையே இந்தச் செய்தியும் இணைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல மில்லியன் மக்கள் பார்க்கும் ஆங்கிலத் தொலைக்காட்சியாக ஐ.ரீ.வி உள்ளது. அதுவும் இரவு 10.00 மணிச் செய்தி என்பது மிகவும் பிரபல்யமான செய்தி ஆகும். இன் நேரத்தில் குறிப்பிட்ட 2 நிமிட ஆவணப் படம் காண்பிக்கப்பட்டுள்ள விடையம், இலங்கை அரசை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறையில் அடைத்து வைத்து சுமார் தன்னை 300 தடவைகள் இராணுவத்தினர் கற்பழித்ததாக ஒருவர் தெரிவித்துள்ளார். அவரை சிகரெட்டால் இராணுவத்தினர் சுட்டு, சித்திரவதை செய்தமையும் ஆதாரங்களோடு வெளியாகியுள்ளது. இதனைத் தவிர மேலும் ஒரு பெண் தனது சாட்சியத்தையும் பதிவுசெய்துள்ளார். இலங்கை இராணுவத்தினர் தம்மை பல தடவை கற்பழித்ததாக அவர் நேரடியாகவே ஐ.ரிவிக்கு தெரிவித்துள்ளார். இலங்கையில் காமன்வெலத் நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறவுள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமருக்கு இதனால் பல அழுத்தங்கள் செல்ல ஆரம்பித்துள்ளது. இவ்வளவு கொடுமைகள் நடைபெற்றுள்ள இலங்கைக்கு பிரித்தானியப் பிரதமர் செல்லவேண்டுமா என்று தற்போது வெள்ளை இனத்தவர்களே கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளார்கள்.

சிறீதரன் கொழும்புக்கு வரக்கூடாது என்கிறார் தேரர்!

சிறிதரன் கொழும்பிற்கு வர அனுமதிக்கக் கூடாது – ராவனா பலயதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கொழும்பிற்கு வர அனுமதிக்கக் கூடாது என ராவனா பலய அமைப்பு கோரியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து சிங்கள மக்கள் வெளியேற வேண்டுமென சிறிதரன் கோரியுள்ளதாகவும், அவ்வாறு கோரினால் அவர் கொழும்பு வர அனுமதிக்கக் கூடாது எனவும் ரவனா பலய அமைப்பின் செயலாளர் இத்தன்கந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றி, சிறிதரன் கொழும்பிற்கு வர முயற்சிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த முயற்சிக்கு தமது அமைப்பு ஒருபோதும் அனுமதியளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்க எவருக்கும் அனுமதியளிக்கக் கூடாது தமது அமைப்பு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விக்னேஸ்வரன் சமாதானத்தை மதித்தால் இவ்வாறு இன முரண்பாட்டு கருத்தக்களை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சிங்கள மக்களை வெளியேறுமாறு தாம் கோரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நாவற்குழி பிரதேசத்தில் திடீரென சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதி வழியாக பயணம் செய்த போது, அங்கிருந்த சிங்கள மக்களை சந்தித்து தாம் உரையாடியதாகவும் அவர்களை அச்சுறுத்தவோ அல்லது வெளியேறிச் செல்லவோ தாம் உத்தரவிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், திடீரென குறித்த பகுதியில் சிங்கள மக்கள் குடியேறியுள்ளமை குறித்து கவனம் செலுத்தி வருவதாக சிறிதரன் தெரிவித்துள்ளார்.

17 அக்டோபர் 2013

அநாதரவான நிலையில் பெண்ணின் சடலம்!

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் அநாதரவான நிலையில் பெண்ணொருவரது சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண் பாலியல் வல்லுறவின் பின்னராக படுகொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. நடுத்தர வயதுடைய குறித்த பெண்மணி கடந்த ஓரிரு நாட்களிற்கு முன்னதாக படுகொலை செய்யப்பட்டு ஆலய தேர் முட்டியினுள் வீசப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. காங்கேசன்துறை வீதியில் அதிக மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் இவ்வாறு சடலம் கிடந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துர்நாற்றம் வீசிய நிலையில் அயலவர்கள் தேடுதல் நடத்திய வேளையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சடலம் அடையாளம் காண்பதற்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மகிந்த முன்னிலையில் பதவியேற்றார் விக்னேஸ்வரன்!

வட மாகாண சபை முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரனுக்கு வட மாகாண சபையில் 13 முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, வட மாகாண சபையின் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் வட மாகாண சபையின் நிதி திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, காணி மற்றும் வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடு மற்றும் கட்டுமாணம், நீர்பாசனம், நுகர்வோர் அபிவிருத்தி, சமூக சேவை மற்றும் புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், தொழில் மற்றும் விவசாய அபிவிருத்தி, சுற்றுலா, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு விநியோக அமைச்சராக இன்று (17) காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த், டளஸ் அழகப்பெரும, அநுர பிரியதர்ஷன யாப்பா, வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

16 அக்டோபர் 2013

ஈபிஆர்எல்எப் மாகாண சபை உறுப்பினர்கள் பதவி ஏற்பு!

புதனன்று பதவியேற்ற ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள்ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கலந்துகொள்ளவில்லை.ஈ.பி.ஆர்.எல்.எப் வடமாகாண உறுப்பினர்கள் மூன்று பேரும் இன்று புதன்கிழமை வவுனியாவில், சட்டத்தரணி க.தயாபரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். மன்னார் மாவட்ட உறுப்பினர் மயில்வாகனம் தியாகராஜா, முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், யாழ்.மாவட்ட உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோரே சத்தியப்பிரமாணம் மேற்கொண்டனர். ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன் வவுனியாவில் தங்கியிருந்தபோதும், வவுனியாவில் நடைபெற்ற தனது கட்சி அஙகத்தவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்விற்குச் செல்லவில்லை என்று தெரியவருகிறது. இருந்தும் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை வட மாகாணசபைக்கு இதே கட்சியின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட வவுனியாவை சேர்ந்த ஐ. இந்திரராஜா இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவில்லை. தான் வட மாகாண முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளமையினால் இன்றைய சத்தியப்பிரமாண நிகழ்வை புறக்கணித்ததாகவும் ஈபிஆர்எல்எப் கட்சியினருக்கும் தனக்கும் தனிப்பட்ட ரீதியில் முரண்பாடுகள் கிடையாது என்றும் அவர் தெரிவித்திருப்பதாக தெரியவருகிறது.

ராமச்சந்திர ஆதித்தனார் மறைந்தார் வைகோ இரங்கல்!

தமிழ் மான உணர்வுச் சுடர் அணைந்தது என்று மாலைமுரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் தலைமகன், மாலை முரசு ஏட்டின் அதிபர் ராமஇச்சந்திர ஆதித்தனார் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாய் தாக்கியது. அதிர்ச்சியால் மனம் கலங்குகிறேன். தன் தந்தையாரைப் போலவே தமிழ் இனமான உணர்வு கொண்டவராக தமிழ் ஈழ விடுதலை உணர்வாளராகவே வாழ்ந்தார். தமிழர்கள் உரிமைக்காக, தமிழ் ஈழ விடியலுக்காக தனது மாலைமுரசு ஏட்டையும், தான் நடத்திய கதிரவன் பத்திரிகையையும் அர்ப்பணித்தார். பல ஆண்டுகளாக அவரது பரிவான நட்பைப் பெற்றிருந்தேன். நான் சந்திக்கும்போதெல்லாம் தமிழர் நலன், ஈழ விடியல் குறித்தே பேசுவார். மெர்க்கெண்டைல் வங்கியை மீட்கின்ற பணியில் அவர் ஈடுபட்டபோது, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடமும், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா அவர்களிடமும் நிலைமையை எடுத்துக் கூறி, அவரது கோரிக்கைகளை நான் நிறைவேற்றிக் கொடுத்ததற்காக எனது இல்லம் தேடி வந்து நன்றி கூறிய பண்பாளர் ஆவார். 2008 ஆம் ஆண்டு கடைசியிலும், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கொடுந்துயர் வரையிலும் சிங்கள அரசு நடத்திய தமிழ் இனப் படுகொலையை நாள்தோறும் ஆதாரங்களுடன் விரிவாக மாலைமுரசு ஏட்டில் வெளியிட்டதனாலும், முத்துக்குமார் உள்ளிட்ட வீரத் தியாகிகளின் உயிர்கொடையை தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செய்திகளாக தனது மாலைமுரசு ஏட்டில் தந்ததனாலும், மத்திய அரசு பல வகையிலும் நெருக்கடி கொடுத்து மிரட்டியபோதும், அதற்கு சற்றும் அஞ்சாது, தலைவணங்காது நீதிக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் மாலைமுரசு பத்திரிகையை காண்டீபம் என ஏந்திய வீரமிக்க பெருந்தகையாளர்தான் இராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் ஆவார்கள். துன்பப்படுகின்றவர்வகளுக்கு உதவுகின்ற இரக்க சுபாவம் மிக்கவர். அன்னாரது இளவலான சிவந்தி ஆதித்தனார் அவர்கள் மறைந்த ஆறு மாத காலத்திற்குள் இராமச்சந்திர ஆதித்தனாரும் மறைந்த துக்கம் பத்திரிகை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகிவிட்டது. அவரது மறைவால் துயரத்தில் துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், மாலைமுரசு ஏட்டின் செய்தியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

15 அக்டோபர் 2013

சுவிஸ் தாய்வீடு நிறுவனர் கருணாகரன் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுவிஸ் குடியுரிமை பெற்ற நடராஜா கருணாகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் தாய் வீடு பணமாற்று நிறுவனத்தின் உரிமையாளருமான நடராஜா கருணாகரன் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசதரப்பு சாட்சியங்களையும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் நிராகரித்த மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசுரிய அவரை விடுதலை செய்தார். நடராஜா கருணாகரன் இலங்கை வங்கியுடன் பணமாற்று வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை வங்கியின் வேண்டுகோளையடுத்து, கொழும்புக்கு சென்ற வேளையில் இன்டர் கொண்டினன்ட் ஹோட்டலில் வைத்து 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி பயங்கரவாதத் தடைப்பிரிவுப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். நடராஜா கருணாகரனின் கைதும் தடுப்புக் காவலும் சட்டரீதியற்றதென உயர்நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை சட்டத்தரணி தவராசா தாக்கல் செய்தார். குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சரியாக பெறப்படவில்லை என சட்டத்தரணியால் சுட்டிக்காட்டப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இவரை விடுதலை செய்துள்ளார்.

14 அக்டோபர் 2013

ஒற்றையாட்சி முறையை தமிழ் மக்கள் பல தடவை எதிர்த்துள்ளனர்!

ஒற்றையாட்சி முறைமையால் தமக்கு நன்மை ஏற்படபோவதில்லை என்பதனால் அதனை தமிழ் மக்கள் பல தடவைகள் எதிர்த்துள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று (14) மதியம் 12.30 மணயளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், பிரித்தானியர் இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு சென்ற பின்னர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்கள் ஒற்றை ஆட்சி முறைமையை எதிர்த்தே வந்தனர். ஒற்றையாட்சி முறைமையால் தமக்கு நன்மை ஏற்படப்போவதில்லை என்பதனால் அதனை தமிழ் மக்கள் பல தடவைகள் எதிர்த்துள்ளனர். ஆனால் இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி முறைமையை ஏற்று கொள்கின்றோம் என கூறியதன் அடிப்படையில் தமிழர்களின் சரித்திரத்தில் ஒற்றையாட்சி முறைமையை ஏற்று கொண்டதாகி விட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை ஆனாலும் மக்களை இந்த தேர்தலை பகிஸ்கரிக்க கோரவில்லை. வடக்கில் வாழும் மக்கள் இந்த தேர்தலில் பங்கு பற்றி தெளிவான செய்தியை வெளிப்படுத்தி உள்ளனர். அதாவது இலங்கை அரசின் செயற்பாட்டில் தமக்குள்ள வெறுப்பினை வெளிக்காட்டி உள்ளனர். அதேவேளை தமிழர்களின் அபிலாஷைகளை பெற்று கொள்வதற்காகவும் ஒட்டுமொத்த இன விடுதலைக்காகவுமே சரித்திரத்தில் இல்லாதவாறு வாக்களித்து இருந்தனர். ஆனால் தேர்தல் பிரச்சார மேடைகளில் தமிழர்களின் சுயநிர்ணயம் பற்றி பேசிவிட்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி முறைமையை ஏற்று கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுயநிர்ணயம், ஒற்றையாட்சி, அதிகாரபரவலாக்கம் இவை மூன்றும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்றவை இவ்வாறாக இருக்க இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன் போன்ற சட்டம் தெரிந்தவர்கள் இருந்தும் இந்த மூன்றையும் எவ்வாறு தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்த்தார்கள் அதற்கான காரணம் என்ன? மக்கள் தாம் மனதில் நினைத்து வாக்களித்தது வேறு ஆனால் உத்தியோகபூர்வ ஆணையாக இருப்பது வேறு. தமிழர்கள் ஆரம்பத்தில் இருந்து சுயநிர்ணயத்தை பெற்று கொள்வதற்காக எடுத்து கொண்ட அனைத்து முயற்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. 13ம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் பிரிக்கப்படாத இலங்கைக்குள் அதிகார பரவலாக்கத்தை பெற்று கொள்ளவுமே மக்கள் ஆணை வழங்கியதாக தற்போது கூறுகின்றனர். பிரச்சார மேடைகளில் அபிவிருத்திக்கா? சுயநிர்ணயத்திற்கா? உங்கள் வாக்குகள் என்று பேசிவிட்டு தேர்தல் முடிவின் பின்னர் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் 13ம் திருத்த சட்டத்தின் அடிப்படையிலான அதிகார பகிர்வை பெற்று கொள்ளல் என்கின்றனர். எனவே தேர்தலின் பின்னர் மக்கள் ஒதுங்கி நிற்பது ஆபத்தானது. இந்த மக்களின் பங்களிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் மயப்படுத்த எமது போராட்டம் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம்!

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரெலோ அமைப்பின் அரசியல் துறை தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று (14.10.13) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தியாகங்களிற்கு மதிப்பளிக்கும் முள்ளிவாய்க்காலிற்கு தனது வெற்றியை சமர்ப்பணம் செய்வதாக அவர் தெரிவித்தார். இதற்கான நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சமாதான நீதவான் மருத்துவர் மயிலேறும்பெருமாள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.இதேவேளை ஏனையவர்கள் மன்னார் ஆயரின் வேண்டுகோளிற்கு இணங்க சத்தியபிரமாண நிகழ்வை பிற்போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13 அக்டோபர் 2013

ஒன்பது அங்கத்தவர்களின் பதவிப் பிரமான நிகழ்வு ஒத்திவைப்பு!

மன்னார் ஆயரின் வேண்டு கோளுக்கிணங்க வடமாகாணசபையின் ஒன்பது அங்கத்தவர்களின் பதவிப் பிரமான நிகழ்வு ஒத்திவைப்பு. மன்னார் ஆயரின் வேண்டுகோளை ஏற்று நாளை முல்லைத்தீவில் நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது உறுப்பினர்களதும் பதவியேற்பு வைபவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளதாவது: நாளை 14ஆம் திகதி முல்லைத்தீவில் நடக்கவிருந்த வடக்கு மாகாணசபையின் ஒன்பது உறுப்பினர்களின் பதவிப்பிரமானம் தொடர்பாக மன்னார் ஆயர் அவர்கள் என்னுடன் கலந்துரையாடினார். தற்பொழுது கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள மனத்தாங்கல்கள் தீர்க்கப்பட வேண்டியதும் தீர்க்கப்படக்கூடியதும் ஆகும். ஆகவே நாளை நடைபெறவுள்ள பதவிப் பிரமானத்தை நீங்கள் ஒத்திவைத்து அதனை மாகாண சபையின் தொடக்கத்தின் போதோ அல்லது அதற்கு முன்பாகவோ செய்வதினூடாக கூட்டமைப்பின்மேல் நாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும்படிக் கேட்டிருந்தார். அவரது கோரிக்கை தொடர்பாக கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த திரு.சித்தார்த்தன் அவர்களுடனும் திரு.சிவாஜிலிங்கம் அவர்களுடனும் கலந்துரையாடப்பட்டது. அதுமட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அதனை உறுதியான அமைப்பாக ஒருகட்சியாகப் பதிவு செய்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் தான் சகல கட்சிகளையும் அழைத்து மிகவிரைவாகப் பேசவிருப்பதாகவும் குறிப்பிட்டார். இவற்றைச் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவாக அவரது கருத்தை ஏற்று நாளை நடைபெறவிருந்த பதவிப்பிரமான வைபவத்தை நாங்கள் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். இதனை சபையின் ஆரம்ப நிகழ்வின்போதோ அல்லது அதற்கு முன்னதாக இன்னொரு திகதியிலோ எண்ணியுள்ளோம் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ந.சிவசக்தி ஆனந்தன்,
நாடாளுமன்ற உறுப்பினர்,
வன்னி மாவட்டம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

எவ்வளவு ஞானஸ்தன் பாருங்கள் தயா!

தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததொன்று அதனை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்ட ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியினர், ஆயுதக்குழுக்களை தமிழரசுக்கட்சி கொச்சைப்படுத்தி வருகின்றது என்று தெரிவித்தனர். இதன்போது குறுக்கிட்ட தயா மாஸ்டர் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப்போராட்டம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதனை யாரும் கொச்சைப்படுத்த முடியாது என்றும் அங்கத்துவக் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தாராம்.அடேங்கப்பா....!எவ்வளவு ஞானஸ்தன் பாருங்கள் தயா!

12 அக்டோபர் 2013

விக்னேஸ்வரன் ஆயுதப்போராட்டத்தை மலினப்படுத்துகிறார்!

மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபை உரிய முறையில் பயணிக்கிறதா என்பதனை தாம் கண்காணிக்க உள்ளதாக வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக அணியினர் தெரிவித்துள்ளனர். இன்றயதினம் (12.10.13) யாழ்ப்பாணத்தில் நடத்தும் ஊடக மகாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபீஆர் எல் எவ்பின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு வேட்டைக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மாவீரன் என்று கூறிய முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் இப்போது ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் மலினப்படுத்தியும் அறிக்கைகளை விடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் முன்நாள் ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்களை மட்டும் அவர் கொச்சைப்படுத்துகிறார் என பலரும் மௌனித்திருக்கின்றனர். எனினும் அவரது அறிக்கைகளை கூர்ந்து கவனிப்பவர்கள் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தையும் அவர் கொச்சைப்படுத்துவது நன்கு புலப்படும் என ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பலரும் தெரிவித்துள்ளனர். கூட்டமைப்பின் இலக்கணங்களுக்கு புறம்பாக எதேட்சாதிகாரமாக செயற்படும் முதலமைச்சர் தனது உறவினர்களையும் வடக்கின் நிலமைகளை துளியளவும் உணரமுடியாத கொழும்பில் வசித்த தனக்கு வெண்டியவர்களுக்குமே இணைச் செயலாளர்கள் பதவியை வழங்க உள்ள நிலையில் மற்றவர்கள் மீது பழியை சுமத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை அமைச்சுப் பதவிகளுக்காக அடிபடுகிறோம் என்ற கோதாவில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளையும் அதன் தலைவர்களையும் முதலமைச்சர் மலினப்படுத்தி வருவதாகவும் கூறிய சுரேஸ் தமது உறுப்பினர்கள் முள்ளிவாய்காகலில் தமது சத்தியப்பிரமான நிகழ்வை நடத்துவார்கள் எனவும் தெரிவித்தார். இன்றய ஊடக சந்திப்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

பாலச்சந்திரனை படையினரே கொன்றனர்!

கொழும்பில் சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஈரான், மலேசியா, வங்காளதேசம், சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான், இலங்கை, பூடான், மாலை தீவு, நேபால் ஆகிய 12 நாடுகளின் ஊடகவியலாளர்கள், இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர். இதில் உலக அளவில் பிரபலமான தி எக்கனோமிஸ்ட் இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் அடம் ராபர்ட்ஸ் கலந்து கொண்டு பேசியதாவது, 2009 மே மாதம் இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான 12 வயதான பாலச்சந்திரனை இலங்கை ராணுவத்தினரே படுகொலை செய்தனர். போர் குற்றவாளிகளான இலங்கைப் படையினர் படுகொலைகளை நிறைவேற்றிய வீடியோ காட்சிகளை வெளியிடாதிருந்தால், போரின் முடிவில் சிறை பிடிக்கப்பட்டவர்கள், கைகள் பின்புறம் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டது, வெளிச்சத்துக்கு வந்திருக்காது. அண்மையில் இலங்கை மாகாண சபைத் தேர்தல் குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்த போது, யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ் மக்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் ராணுவப் புலனாய்வு பிரிவு குறித்து அச்சத்துடன் வாழ்வதாக தெரிவித்தனர். இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள மக்கள் 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த போதிலும், முரண்பாடுகள் தீரவில்லை என்று கருதுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

11 அக்டோபர் 2013

மக்கள் ஆர்வம் காட்டாத தமிழரசுக்கட்சியின் பதவியேற்பு!

குழறுபடிகள் மற்றும் புறக்கணிப்புகளின் மத்தியில் வட மாகாணசபை அங்கத்தவர்களுள் ஒருபகுதியினர் இன்று தமது பதவியேற்புகளை செய்துகொண்டுள்ளனர். இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையில் அவர்கள் தமது சத்தியப் பிரமாணத்தினை செய்து கொண்டனர். எனினும் ஈபிஆர்எல்எவ்வின் ஜந்து உறுப்பினர்களும் புளொட் அமைப்பின் இரு உறுப்பினர்களும் டெலோவின் உறுப்பினரான சிவாஜிலிங்கமும் மற்றும் குணசீலனும் பதவியேற்பை புறக்கணித்து விட்டனர். முன்னதாக யாழ்.நகரிலுள்ள தந்தை செல்வா நினைவு தூபிப்பகுதியில் மலரஞ்சலி செலுத்திய பின்னர் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் பங்கெடுத்தனர். முன்னதாக மேடை முன்பதாக அனைத்து உறுப்பினர்களும் சத்தியப் பிரமாணத்தினை செய்த பின்னர் ஆவணங்களில் ஒப்பமிடும் நிகழ்வினை கட்சி தலைவர் இரா.சம்பந்தன் முன் செய்து கொண்டனர். பின்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட ஆவணத்தினை முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் அவர்கள் ஒப்படைத்தனர். மாவீரர்களிற்கான அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பமாகியிருந்ததுடன் உறுப்பினர்கள் அமைச்சர்கள் எவரும் மாலை மரியாதைகளை ஏற்க மறுத்ததை காணக்கூடியதாக இருந்தது. பதவியேற்பு நிகழ்வில் கூட்டமைப்பில் கூடிய வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டிருந்த பெண் வேட்பாளர் அனந்தியும் கலந்து கொண்டிருந்தார். கட்சி தலைவர்களான சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் சித்தார்த்தன் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் நிகழ்வை புறக்கணித்திருந்தனர். டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சமூகமளித்திருந்ததுடன் யாழ்.மாவட்ட அமைப்பாளர் விந்தனும் பிரசன்னமாகி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார். ஈபிஆர்எல்எவ் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஐங்கரநேசன் சமூகமளித்திருந்த போதும் அவர் மகிழ்சிகரமாக இருந்திருக்கவில்லை. பெரும்பாலும் ஒரு நீடித்த மௌனம் பதவியேற்பில் காணப்பட்டது. கோலாக கொண்டாட்டங்கள் ஏதுமின்றி நிகழ்வு இடம்பெற்றிருந்தது. வடமாகாணசபையினது அமைச்சு செயலர்கள் மற்றும் அதிகாரிகள் பெருமளவினில் நிறைந்திருந்தனர்.சம்பந்தன்,விக்கி, சுமந்திரன் ஆகியோரின் செயற்பாடுகளால் அதிருப்தியுற்றுள்ள வடக்கு மக்கள் இப்பதவியேற்பு நிகழ்வுகள் தொடர்பில் ஆர்வம் காட்டவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

10 அக்டோபர் 2013

கூட்டமைப்புக்குள் குழப்பம் வலுக்கிறது மாவைக்கு சுரேஷ் கடிதம்!

கௌரவ மாவை.சோ. சேனாதிராசா, பா.உ,
பொதுச்செயலாளர்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
மாட்டின் வீதி
யாழ்ப்பாணம்
10.10.2013

அன்புடன் தமிழரசுக் கட்சி செயலாளர் அவர்கட்கு,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பபட்டு தழிரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வடமாகாணசபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பொ.ஐங்கரநேசன் என்பவர் தனிப்பட்ட முறையில் வடமாகாணசபைக்கான அமைச்சுப் பதவியைப் பெற்றதன் காரணமாகவும் தனக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் இந்த அமைச்சுப் பதவியானது தமிழரசுக் கட்சியினுடைய தலைமையின் பரிந்துரையின் பேரில், முதலமைச்சரினால் தனக்குத் தனிப்பட்டரீதியில் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். அதுவே உண்மையுமாகும். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான என்னுடன் பொ.ஐங்கரநேசன் அவர்கட்கு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பாக தமிழரசுக் கட்சியோ முதலமைச்சரோ எவ்விதக் கருத்துப் பரிமாற்றங்களையும் மேற்கொள்ள வில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு ஒரு அமைச்சுப் பதவியை நீங்கள் வழங்க விரும்பினால் அதனை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்குமாறு நான் கோரியிருந்தபோதிலும் என்னுடன் எவ்விதக் கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படாமல், முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனவே திரு பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளபடி, அவருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் எதிர்காலத்தில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைத் தங்களுக்குத் தெளிவு படுத்துவதுடன் அவர் கூறியது போன்றே அவருக்குக் கொடுக்கப்பட்ட அமைச்சுப் பொறுப்பானது தனிப்பட்ட முறையில் அவருக்கு வழங்கப்பட்டதென்ற அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து ஆறு ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு எந்தவிதமான அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை என்பதைத் தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எதிர்காலத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு ஓர் அமைச்சுப் பதவியை வழங்கியதாக தவறானதும் பொய்யானதுமான பரப்புரைகளைச் செய்ய வேண்டாமென்று கேட்டுக்கொள்வதுடன் செய்ய மாட்டீர்கள் என்றும் நம்புகின்றேன்.
நன்றி.
இப்படிக்கு
சுரேஷ். க.பிரேமச்சந்திரன், பா.உ.,
செயலாளர் நாயகம்,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

வட மாகாணசபை உறுப்பினர்கள் நாளை பதவியேற்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் பதவியேற்பு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை காலை வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் பெரு வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முதலமைச்சராக க.வி.விக்னேஸ்வரனைத் தெரிவு செய்தது. முதலமைச்சர் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ­ முன்பாகச் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றிருந்தார். இந்த நிலையில் ஏனைய 29 உறுப்பினர்களும் நாளை வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் முன்பாகவே இவர்கள் பதவியேற்கவுள்ளனர். நாளை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு யாழ். நகரிலுள்ள தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர், இவர்கள் யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு அழைத்துவரப்படவுள்ளனர். இதன் பின்னர் மாகாணசபை உறுப்பினர்கள் 29 பேரும் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டு தமது மாகாணசபை உறுப்பினர் பதவியை ஏற்கவுள்ளனர்.அடுத்து அமைச்சர்கள் நான்கு பேரும் தமக்கான பதவிப் பிரமாணத்தை செய்து கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் மற்றும் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

09 அக்டோபர் 2013

கமலேஷ் சர்மாவும் கூட்டமைப்பும் புதுடெல்லியின் கட்டளைப்படி செயற்படுவதாக குற்றச்சாட்டு!

இந்தியாவின் ஆசீர்வாதம் இல்லாமல் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா சிறீலங்காவுக்கு துணைபோக முடியாது . இந்த விடயத்தில் இந்தியா சொல்வதைத்தான் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா நிறைவு செய்து வருகின்றார். இவ்வாறு தெரிவித்துள்ளார் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் சேகல் அவர்கள். இந்தியாவின் இரகசிய அறைகள் தமிழருக்கு எதிராகவும் இந்தியாவின் அரசியல் அறைகள் தமிழருக்கு உதவிசெய்வது போல் நடித்துவருகின்றது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளார் ஈழத் தமிழ் எழுத்தாளர் ஒருவர். . ஈழத்தமிழர் மீதான இனஅழிப்புக்கு துணைநின்ற புது டெல்லி தற்போது சிறீலங்காவை பாதுகாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது என்கிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர். கனடாவின் குற்றசாட்டு கமலேஷ் சர்மா, சிறீலங்கா அரசாங்கம் செய்கின்ற அனைத்து தவறுகளையும் நியாயப்படுத்தும் வகையில் செயற்படுகிறார். அத்துடன் சிறீலங்கா அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளுக்கும் துணைபோவதாக சேகல் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்திய இராஜதந்திரியான கமலேஷ் சர்மா, சிறீலங்காவின் முன்னாள் பிரதம நீதியரசர் பதவி விலக்கப்பட்டமை உட்பட்ட உரிமை மீறல்களை கண்டுகொள்ளவில்லை என்றும் சேகல் குற்றம் சுமத்தியுள்ளார்.இது பிரித்தானியாவின் காடியன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புது டெல்லியின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து செயற்படுவதாக அமெரிக்க பல்கலைக்கழக்கத்தில் கற்பித்து வரும் பேராசிரியர் கீதா பொன்கலன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் படையினரின் கெடுபிடி அதிகரித்துள்ளது!

குடா நாட்டில் தேர்தல் முடிந்து கூட்டமைப்பு ஆட்சியினைக் கைப்பற்றியதும் மீண்டும் ராணுவ ரோந்துகளை முடுக்கி விட்டுள்ளது சிங்களம். சுமார் நான்கு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் போர் நடவடிக்கைகள் இப் போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டிய தையடுத்தும், ஆனைக்கோட்டையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்கானதையடுத்தும் இராணுவத்தினரின் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. சீருடையுடன் சைக்கிள்களில் துப்பாக்கி இன்றி நடமாடிய இராணுவத்தினர் தற்பொழுது தொலைத் தொடர்பு கருவிகளை முதுகில் சுமந்த வண்ணம் துப்பாக்கிகளுடன் சைக்கிளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, கடமையிலிருந்த பொலிஸார் மீது இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸாரின் நடவடிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதுடன் புலனாய்வுத் துறையினரின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்குடன் கடமையில் ஈடுபட்டுள்ள மானிப்பாய் பொலிஸார் இரவு பகல் என்ற வித்தியாசமின்றி வீதியால் செல்லும் வாகனங்களைத் திடீரென வழிமறித்து சோதனை செய்வதுடன் சந்தேகத்துக்குரியவர்களைத் துருவித்துருவி விசாரணை செய்வதிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் ஆனைக்கோட்டை சந்தியில் இரவு நேரம் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர், இலக்கத்தகடு இல்லாத மோடடார் சைக்களில் வந்த இனந்தெரியாதவர்களின் வாள் வெட்டுக்கு இலக்கானார். பொலிஸாரை அதிர வைத்துள்ள இந்தச் சம்பவம் குறித்து உஷார் அடைந்த மானிப்பாய் பொலிஸார் வீதியால் செல்லும் வாகனங்களை மூலை முடுக்குகளில் நிறுத்தி வழிமறித்து ஆவணங்களை சோதனை செய்வதுடன் சந்தேகத்துக்குரியவர்களைத் துருவிதுருவி விசாரிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை பொலிஸார் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர், விசேட புலனாய்வுப் பிரிவினர் தேசிய புலனாய்வுப் பிரிவினர் என சகல புலனாய்வுப் பிரிவினரும்களத்தில் இறங்கி கடமையில் ஈடுபட்டுள்ளனர். சாதாரண உடையில் திரியும் இவர்கள் பொது இடங்கள், தேநீர் கடைகள் போன்ற இடங்களில் நடமாடி வருகின்றனர்.

08 அக்டோபர் 2013

வடமாகாணத்தின் அமைச்சர்கள் இவர்களாம்!

பலத்த இழுபறிகள் மத்தியில் கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்த மாகாணசபைக்கான அமைச்சுக்கள் பதவி தொடர்பில் தற்போது முடிவு எட்டப்பட்டுள்ளது.இந்தப் பேச்சுக்களின் முடிவில் அமைச்சுப் பதவிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் சேர்ந்த கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா கல்வி அமைச்சராகவும், அந்தக் கட்சியின் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் மருத்துவர் பி.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சராகவும், ரெலோவைச் சேர்ந்த மன்னார் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் டெனீஸ்வரன் உள்ளூராட்சி அமைச்சராகவும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வைச் சேர்ந்த யாழ்.மாவட்ட மாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் விவசாய அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு வடக்கு மாகாண முதலமைச்சரினால் யாழ்ப்பாணத்தில் இன்று வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

07 அக்டோபர் 2013

பொதுநலவாய மாநாட்டில் கனடிய பிரதமர் கலந்துகொள்ள மாட்டார்!

மனித உரிமை விவகாரத்தில் முன்னேற்றம் இல்லை: மாநாட்டு புறக்கணிப்பை உறுதி செய்தது கனடா!இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க எடுத்த தீர்மானத்திற்கான காரணத்தை கனடா விளக்கியுள்ளது. இன்றைய தினம் (07) அறிக்கை ஒன்றை விடுத்துள்ள கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு இலங்கை மதிப்பளிக்கவில்லை என கனேடிய பிரதமர் விடுத்துள்ள விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளைப் பேண இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக ஸ்டீவன் ஹார்பர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மேம்படும் என நம்பியபோது துரதிஸ்டவசமாக அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை எனவும் மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் கனேடிய பிரதமர் குறிப்பிட்டார். இறுதிக் கட்ட யுத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றம் போன்றவற்றிற்கு இதுவரை தண்டனை விதிக்கப்படவில்லை எனவும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் கூறினார். எனினும் இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் கனடா உன்னிப்பாக அவதானிக்கும் என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் பதவி விலக்கப்பட்ட விதம், சிறுபான்மை மக்கள், எதிர்க்கட்சியினர், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனையாளர்கள் மீதான அடக்குமுறைகள் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கனேடிய வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச் செயலாளர் தீபக் ஒபராய் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டு அமர்வுகளில் கனடாவை பிரதிநிதித்துவம் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரன் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

இலங்கை வட மாகாண முதல்வராக , ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, சி.வி.விக்னேஸ்வரன் இன்று திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். கொழும்பில், அலரி மாளிகையில் நடந்த வைபவத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதி முன் பதவிப்பிரமாணம் செய்வது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழலில் இந்தப் பதவிப் பிரமாண வைபவம் நடந்திருக்கிறது. இதற்கிடையே, வட மாகாணத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப்போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அனந்தி சசிதரன் தான் விக்னேஸ்வரன் முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளப்போவதில்லை என்று கூறியிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. சல்மான் குர்ஷித் இலங்கையில் இதனிடையே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் இரண்டு நாள் விஜயமாக இன்று இலங்கை வந்தடைந்திருக்கிறார். அவர் இலங்கை அரசுடன், இனப்பிரச்சினையில் கண்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பூரில் இந்திய உதவியுடன் தொடங்கப்படும் மின்சார உற்பத்தித் திட்டம் குறித்த சில ஒப்பந்தங்களும் இந்த விஜயத்தின் போது கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. சல்மான் குர்ஷீத் செவ்வாய்க்கிழமையன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்வார்.

06 அக்டோபர் 2013

பங்காளி கட்சிகள் தனித் தனியே பேச்சு- சித்தார்த்தன்

நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளார்கள் என்பதுடன், மிகப்பெரிய ஆணையையும் எமக்கு கொடுத்திருக்கின்றனர். ஆனால், தேர்தலின் பின்னரான தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் ஏனைய அங்கத்துவக் கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்காமல் முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் போக்கு தொடர்கின்றது என கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வட மாகாண முதல்வரது பதவிப் பிரமாணம் தொடர்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பின் ஒற்றுமையை வலியுறுத்தி, அதேசமயம் எமது தேர்தல் அறிக்கைக்கு ஆதரவாகவும், மக்கள் கொடுத்த மிகப் பலமான ஆணையை மதிக்காமல் நடக்கின்ற தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக முதலமைச்சரின் பதவி ஏற்பு வைபவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுக்கு அதிருப்தியை அளிப்பதாக சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இவை சம்பந்தமாக TELO, EPRLF, PLOTE போன்ற கட்சிகள் தத்தமது கட்சிகளுடன் கூடி ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவினை எடுத்து, மக்களின் ஆணையை முன்னெடுத்துச் செல்வதாக தீர்மானித்துள்ளதாகவும் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

05 அக்டோபர் 2013

முடிவின்றி முடியும் கூட்டமைப்பின் கூட்டங்கள்!

வடமாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்கான கூட்டம் இன்று மாலை பம்பலப்பிட்டியில் உள்ள தமிழ் தேசியக் கூட்மைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது. எனினும் இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என, கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். எனினும் வடமாகாண அமைச்சர்களை தெரிவுசெய்வது தொடர்பான சகல அதிகாரமும் முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ள, சி.வி. விக்னேஸ்வரனிடம் ஒப்டைக்கப்பட்டுள்ளதாகவும், அவரே இது குறித்து அறிவிப்பார் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். இதேவேளை, தான் பதவி ஏற்றபின் அமைச்சர்களின் விபரம் குறித்து அறவிப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் இதன்போது கூறியதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் எதிர்வரும் 7ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். இந்த நிகழ்வில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என, சம்பந்தன் இன்று அழைப்பு விடுத்ததாக தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் கூட்டமைப்பின் அனைத்து தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்பது என்பது சந்தேகத்திற்குரியதொன்றாகவே உள்ளது. காரணம் ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கு கூட்டமைப்புக்குள் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளதோடு, மாகாண அமைச்சர்கள் தெரிவு குறித்தும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாவை சேனாதிராஜா வெளிநாடு சென்றுள்ளதாக கூட்டமைப்பின் உள்ளக தகவல்கள் கூறுகின்றன. இதேபோல் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) மன்னாரை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய அமைச்சுப் பதவி, யாழ்பாணத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் அக்கட்சியின் (டெலோ) தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக, செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் விக்னேஸ்வரனின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கூட்டமைப்பின் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வது சாத்தியமா எனும் கேள்வி எழுத்துள்ளது.

வாக்களித்த மக்களுக்கு ஆப்படித்த சம்பந்தனுக்கு மக்கள் எதிர்ப்பு!

வடமாகாண சபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்பதை தாம் விரும்பவில்லை என்று வடக்கில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதிக்கு முன்பாக பதவியேற்கவுள்ளார் என்று நேற்றுத் தகவல் வெளியானது. வடக்கு மக்களுக்கு இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்த முடிவை விமர்சித்து முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களிலும் காரசாரமான விமர்சனங்கள் உடனடியாப் பதியப்பட்டன. கூட்டமைப்பின் இந்த முடிவு குறித்து "உதயன்' மக்களிடம் கருத்துக் கேட்டது. வடமாகாணத்தைச் சேர்ந்த வைத்திய அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசியல் ஆர்வலர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டனர். அவர்களில் அறுதிப் பெரும்பான்மையானோர் கூட்டமைப்பின் இந்த முடிவு தமக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் நல்லிணக்கத்தின் பேரால் இவ்வாறு செய்யவேண்டிய அவசியம் எதுவும் கிடையாது எனவும் கருத்து வெளியிட்டனர். அவர்களின் எண்ணங்களின் சாரமாக சிலரது கருத்துக்கள் வருமாறு:

எஸ்.தவபாலசிங்கம் - புளியங்குளம்
தமிழ் மக்களின் அரசயில் தீர்வு மற்றும் உரிமை விடயங்களை கருத்தில் கொண்டே தமிழ் மக்கள் தமிழ்த் தேசிக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். வடமாகாண முதலமைச்சர் ஜனாதிபதி, ஆளுநர் முன்னிலையில் தான் சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும் என்றோ பதவியேற்க வேண்டும் என்றோ கட்டாய சட்டம் எதுவும் இல்லை. நாங்கள் எங்களது தனித்துவத்தை வெளிப்படுத்தவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தோம். எனவே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முன்னிலையில் பதவியேற்பதை விடுத்து ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது - என்றார்.

ஜெ.ஜெயரூபன் - நெடுங்கேணி
வல்வெட்டித்துறையில் மாவீரன் பிரபாகரன் என்று முழங்கிய விக்னேஸ்வரன், போர்க்குற்ற வாளியான மஹிந்தவிடம் மண்டியிட்டு பதவியேற்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. சாதாரணமாக கட்சித் தலைவர் முன்னிலையில் பதவியேற்று மக்கள் வழங்கிய ஆணையுடன் எமது தனித்துவத்தை காட்ட வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் தமிழ் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்படுவார்கள் - என்றார்.

சின்னையா சிவரூபன்- யாழ். போதனா வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரி
உலக நாடுகளே போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்­ச முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் பதவியேற்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவராகவே மஹிந்த ராஜபக்­ச உள்ளார். அவர் முன்னிலையில் முதலமைச்சர் பதவியேற்பது தமிழ் மக்களுக்கு இழைக்கும் துரோகம்.

து.தமிழ்மாறன் - காரைநகர்
வடக்கு மாகாண முதலமைச்சர் ஜனாதிபதியின் முன்பாகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளமை வெட்கம்கெட்ட செயல். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்த விடயத்தில் மட்டும் ஏன் அவசரப்பட்டு முடிவு எடுத்தார் என்பது கேள்வியாக உள்ளது. தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கவிடாமல் தடுத்து முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வரும் அரசின் தலைவர் முன்னிலையில் வடக்கு மாகாண முதல்வர் சத்தியப்பிரமாணம் செய்து தமிழினத்தை மஹிந்தவிடம் அடகு வைக்கும் செயல் - என்றார்.

ஆர்.அரசரத்தினம் - வேலணை
ஜனாதிபதி முன் முதலமைச்சர் பதவி ஏற்பது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு தமிழ் மக்களுக்குப் பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதன்மூலம் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியனவாக இருக்கும் என்றும் அவர் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இவ்வாறு இருக்கையில் சம்பந்தன் மட்டும் தனித்துச் சென்று ஜனாதிபதியைச் சந்திதமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

விஜயகாந்தன் அசோக் - தனியார் நிறுவன ஊழியர் யாழ்ப்பாணம்
ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் பதவியேற்பது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம். காரணம் தாம் மஹிந்த முன்னிலையில் பதவியேற்கமாட்டோம் என்று தெரிவித்த இவர்கள் இந்த வாக்குறுதியையே காப்பாற்ற முடியாது உள்ளனர். அப்படியானால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயத்தை முழுமையாக எவ்வாறு செயற்படுத்துவர் என்ற கேள்விக்குறி தவிர்க்கமுடியாதது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் மஹிந்தவை ஒருபக்கத்தில் போக்குற்றவாளி என்று குறிப்பிடும் இவர்கள் அப்படியான ஒருவரின் முன்னிலையில் பதவியேற்பது என்பது எந்தவகையிலும் நியாயமற்றது.- என்றார்.

சிவம் - முள்ளியவலை
ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் பதவியேற்பது பொருத்தமற்றது. குறிப்பாக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சாதாரணமாக ஒரு சமாதான நீதிவான் முன்னிலையிலேயே பதவியேற்காலம் என்று குறிப்பிட்ட கூட்டமைப்பினர் தற்போது எடுத்திருக்கும் முடிவு பொறுப்பற்றது. தாம் எடுக்கும் முடிவில் கூட நிலையான கடைப்பாடு அற்றவர்கள் எப்படி தமிழ் மக்களது பிரச்சினையில் ஒரு நிலைக்கொள்கையோடு நடந்துகொள்ளப்போகிறார்கள் - என்றார். 

ச.சஜீவன் - வலி.வடக்கு
கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் இலங்கை ஜனாதிபதி தலைமையிலான இராணுவத்தினர் தமிழின அழிப்பில் ஈடுபட்டனர் என்ற கருத்து நிலவுகிறது. அப்படியானால் ஒரு பக்க போர்க்குற்றவாளி மஹிந்தவே. இவர் முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் பதவியேற்பது என்பது கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது.

நாடக கலைஞர் - நீர்வேலி
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பியோ தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பியோ அல்ல. சிங்கள பேரினவாதம் வெல்லக்கூடாது என்பதற்காகவே அவர்கள் வாக்களித்தனர். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ந்துகொள்ள வேண்டும். பேரினவாதிகளுக்கு துணை போவதால் எதிர்காலத்தில் தமிழனின் இருப்பு இல்லாமலே போய்விடும் என்றார்.

04 அக்டோபர் 2013

மகிந்த முன்னிலையில் விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணம்!

வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் அலரி மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையிலேயே பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடைபெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவத்துள்ளது. முன்னதாக யாழ்ப்பாணத்தில் பதவிப் பிரமாண நிகழ்வுகளை நடாத்த உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. எதிர்வரும் 7ம் திகதி திங்கட் கிழமை காலை 9 மணிக்கு மகிந்த முன்னிலையில் அலரி மாளிகையில் விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். இதேவேளை, இதுவரையில் அமைச்சர்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் எதிர்வரும் 11ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில், விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அவரின் முன்னிலையில் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை மஹிந்த ராஜபக்ஷவுடன், அலரி மாளிகையில் சம்பந்தன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னரே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பதவிப் பிரமாண நிகழ்வுகள் குறித்து மகிந்தவிற்கும்
 சம்பந்தனுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.