பக்கங்கள்

30 நவம்பர் 2013

பொலிசார் தாக்கவில்லையென்பது பொய்-வணபிதா

யாழ்ப்பாணத்துக்கு கமரூன் சென்றிருந்தபோது யாழ்.பொதுநூலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமற் போனோரின் உறவினர்களையும், அருட்தந்தையர்களையும் பொலிஸார் தாக்கியது உண்மையே.அதனை அவர்கள் மறுக்க முடியாது. இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான அருட்தந்தை யூட் நிக்ஸ்ன் அடிகள் நேற்று தெரிவித்தார். பிரிட்டன் பிரதமரின் வருகையின் போது பொது நூலகத்துக்கு முன்பாக கவனவீர்ப்புப் போ போது தாக்குதலுக்கு இலக்கான அருட்தந்தை யூட். நின்ஸ்னிடம் கேட்ட ராட்டத்தில் ஈடுபட்ட காணாமற்போனோரின் உறவினர்களையோ, அருட்தந்தையர்களையோ தாம் தாக்கவே இல்லை என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜிவ்றி தெரிவித்தார். இது குறித்த சம்பவத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்ட மக்களையும் அருட்தந்தையர்களையும் பொலிஸார் தாக்கியது உண்மை என்றும் உறுதியாகத் தெரிவித்தார். எனினும் போராட்டம் நடத்தியவர்கள் மீதோ, அருட்தந்தையர்கள் மீதோ பொலிஸார் தாக்குதல் நடத்தவே இல்லை. அங்கு நின்ற பொலிஸார் கைத்தடியைக் கூட கையில் வைத்திருக்கவில்லை. அங்கு தவறி விழுந்த பெண்ணொருவரை பொலிஸாரே தூக்கி விட்டிருந்தனர் - என இது குறித்து நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

29 நவம்பர் 2013

கணக்கெடுப்பில் தலைவரின் குடும்பம் சேர்க்கப்படாதாம்!

போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்‌ஷவின் கபட திட்டமான "போர்க்கால இழப்புக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டின் போது தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் குடும்பத்தைக் கணக்கெடுக்க முடியாது. அவரது குடும்பத்தில் யாரும் உயிருடன் இல்லை" இவ்வாறு நேற்றுத் தெரிவித்தார் புள்ளி விபரவியல் மற்றும் தொகை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி.டபிள்யு.டி.குணவர்த்தன. போரில் ஏற்பட்ட இழப்புக்களை கணக்கெடுக்கும் நடவடிக்கை நேற்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது என்றும் அவர் கூறினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக 1983 ஆம் ஆண்டு முதல் 2009 மே வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சொத்தழிவு, உயிரிழப்பு, காணாமற் போனவர்கள் தொடர்பில் கணக்கெடுக்கும் பணிகளை புள்ளிவிவரவியல் மற்றும் தொகை மதிப்பீட்டுத் திணைக்களம் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது.போரில் குடும்பம் குடும்பமாக தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆகவே அவர்களின் எண்ணிக்கை இந்த கணகெடுபிற்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது.

28 நவம்பர் 2013

யாழில் படை முகாமிலும் மாவீரர் சுடர் ஏற்றப்பட்டது!

கைதடி சந்தியில் அமைந்துள்ள சிங்களப் படையினரின் மினிமுகாம் காவலரணில் நேற்று மாலை மாவீரர் தின ஈகைச்சுடரேற்றிய குற்றச்சாட்டில் அப்பகுதி வர்த்தகர்கள் சிலர் இன்று காலை விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளனர். மாவீரர் தினத்தை முன்னிட்டு படையினர் ரோந்துக்கு சென்றிருந்த நிலையில் அம்மினி முகாம் காலரணுள் புகுந்த சிலரே அங்கு சுடரேற்றி விட்டு சென்றுள்ளனர். ரோந்து சென்று திரும்பிய படையினர் அங்கு வீதியினால் பயணித்த பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்நிலையிலேயே இன்று காலை சில வர்த்தகர்கள் படைமுகாமிற்கு விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறீதரனின் கருத்து கூட்டமைப்பின் கருத்தல்ல என சம்பந்தன் தெரிவிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல என கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமிழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்த பிரபாகரன் ஓர் சுதந்திரப் போராட்டவீரர் என ஸ்ரீதரன் பாராளுமன்றில் அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும், இந்தக் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என சம்பந்தன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தேசிய இனப்பிரச்சினைக்கான கட்சியின் தீர்வுத் திட்டம் அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்ரீதரன் உணர்வுபூர்மாக கருத்து வெளியிட்டிருக்கக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலத் தேர்தல்களின் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான ஓர் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனும் இவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீதரன் இவ்வாறான கருத்துக்களை வெளியிட அனுமதித்திருக்க மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் அண்மையில் ஸ்ரீதரன் வெளியிட்ட கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

27 நவம்பர் 2013

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!

நெடுந்தீவு பிரதேச சபை தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இவரின் சடலத்தை பிரதே பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு ஒன்பது மில்லி மீற்றர் ரக கைத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் அதன் சன்னம் அவரின் மூளையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 47 வயதான நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷிசன் நேற்று செவ்வாய்க்கிழமை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் இவர் கழுத்து பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசேதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வல்வெட்டியில் தடைகளை மீறி நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்!

உலகத் தமிழர்களுக்கு அடையாளம் தந்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனது 59வது பிறந்த தினம், சிறீலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தின் பல கெடுபிடி முற்றுகைகளை தாண்டி நேற்று அவரது சொந்த மண்ணான வடமராட்சியினில் மகிழ்வுடன் கொண்டாடப்பட்டது. இரவு வேளை எவரும் எதிர்பாராத வண்ணமாக வெடிகள் வீதிகளினில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. எவரும் எதிர்பார்த்திராத இரவு வேளையினில் 7 மணி முதல் பரவலாக வெடிகளை வெடிக்க வைத்தும் சிற்றுண்டிகள் வழங்கியும் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்திலுள்ள வெதுப்பகங்கள் தோறும் படையினர் காவலிருக்க நேற்றைய கொண்டாட்டம் நடந்துள்ளமை படைத்தரப்பினை சீற்றமடைய வைத்துள்ளது. எனினும் பின்னர் வெடிகள் கொழுத்தப்பட்ட இடங்களெங்கும் நள்ளிரவு தாண்டியும் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதேவேளை, தம் மீது தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் படையினர் பெரிய அணிகளாகவே தரொருவரது வீடு இனந்தெரியாத கும்பலொன்றினால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.இவ்விரு தாக்குதல் சம்பவத்தையும் கண்டித்து வல்வெட்டிற்போது செயற்படுவதாக தெரியவருகிறது. இதனிடையே வல்வெட்டித்துறை நகரசபை பிரதி தவிசாளர் சதீஸின் வீடு தாக்கப்பட்டதன் எதிரொலியாக அதே நகரசபையினது ஈபிடிபி ஒட்டுக்குழு அங்கத்தவத்துறை நகரசபை இன்று கண்டன தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. இதேவேளை, தீருவில் நினைவுத் தூபி இருந்த பகுதியை சிங்கள இராணுவ மயமாக்கும் நடவடிக்கையை எதிர்த்து நடவடிக்கை எடுத்த திரு. அனந்தராஜ் அவர்களை தமிழரசுக்கட்சி ஈபிடிபி ஒட்டுக்குழுவோடு இணைந்து வல்வெட்டித் துறை நகரசபை பொறுப்பிலிருந்து நீக்கும் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

26 நவம்பர் 2013

மகிந்தவின் படத்தை கிழித்ததாக கூறி இளைஞர்கள் கைது!

மகிந்த ராஜபக்சவின் பதாகைகளை கிழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு 4 இளைஞர்கள் தெல்லிப்பளைப் பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதன்படி இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இந்த நான்கு இளைஞர்களும் தெல்லிப்பளை பொலிசாரிடம் இராணுவத்தினரினால் நேற்று இரவு 8.30 மணியளவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். தெல்லிப்பளை கிழக்கு கட்டுவன்புலம் பகுதியில் உள்ள நாமகள் சனசமூக நிலையத்தடியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளானவர்களாவர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இவர்கள் சனசமூக நிலைத்திற்கு அண்மையாக இருந்து கதைத்தக்கொண்டிருந்த வேளையில் குறித்த இடத்திற்கு இராணுவத்தினர் நால்வர் வந்தனர். அதனையடுத்து அதில் இருந்த இளைஞர்களை தாக்கியதுடன் அவர்களை பிடித்து வைத்துக் கொண்டு இராணுவத்தினரின் மேலதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். இதனை தொடர்ந்து சுமார் இருபத்தைந்தக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அந்தப் பகுதியில் நின்றிருந்த ஏனையவர்களையும் தாக்கியதுடன் பெண்களையும் தகாத வார்த்தை பிரயோகங்களால் திட்டியதாகவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள். எனினும் இவ்வாறு நாகேஸ்வர ஸ்ரீ யர்சன் 22 வயது, ரவீந்திரன் கஜீபன் 21 வயது, முருகையா அசோக்குமார் 35 வயது மற்றும் அல்பிரட் பிரதீபன் 30 வயது ஆகியவர்களே கைது செய்யப்பட்டவர்களாவார்கள். மேலும் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனராம்.

25 நவம்பர் 2013

கஜேந்திரகுமார் எதிர் பீரிஸ். வென்றது யார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலட்சிய பாதை தவறாது தமிழீத தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்த போது அதில் சர்வதேச விவகாரங்களை கையாண்டவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரகுமார். கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகளை புறக்கணித்து செயற்படுவதால், அதிலிருந்து வெளியேறிய இவர் தற்போது தனது இராஜதந்திர செயற்பாடுகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளார். இதன் அங்கமாக நவர்பர் 3ம் திகதி தொடக்கம் அமெரிக்காவின் உயர் மட்ட தரப்புகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். இதன் பின்னர் சிறீலங்காவுக்கும் அமெரிக்காவுக்குமான விரிசல் அதிகரித்தது. அதேவேளை, சர்வதேச சுதந்திர விசாரணை பொறிமுறை சிறீலங்கா தொடர்பாக உருவாகுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகரித்துள்ளது. அமெரிக்க சந்திப்பை நிறைவுசெய்து கொண்டு மொரிசீயல் விரைந்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள். அங்கு, மொரிசீயஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்ச்சின் உயர்மட்ட சந்திப்பினை மேற்கொண்டு சிறீலங்காவின் மனித உரிமை நிலைவரத்தை எடுத்துரைத்து, மொரீசியஸ் பிரதமர் சிறீலங்காவில் இடம்பெறும் கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றார். இவரது கருத்துக்களை உரிய முறையில் செவிமடுத்த மொரீசியஸ் உயர்மட்ட அதிகாரிகள், தமது பிரதமர் கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தார்கள். இதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கடந்த 5 மாதங்களில் 44 நாடுகளுக்குப் பயணம் செய்து 150 மில்லியன் ரூபாவை விரயம் செய்துள்ளதாக சிறீலங்காவின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டியுள்ளது. சிறீலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சு தனது முழு பலத்தையும் திரட்டியும் இராஜதந்திர ரீதியாக பெரும் தோல்விகளைச் சந்தித்துள்ள போது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனி ஒருவராக பாரிய இராஜதந்திர வெற்றிகளை ஈட்டியது சிறீலங்காவுக்கு அதிர்ச்சையும் ஆத்திரத்தையும் உண்டுபண்ணியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றது.

நன்றி:பரிஸ் தமிழ்

சிங்களவர்களும் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கவேண்டும்-ஜே.வி.பி!

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தமிழ் மக்களுக்கு முழு உரிமை உண்டு. அதேபோன்று சிங்கள மக்களும் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு முன்வர வேண்டும். இந்த நாட்டின் அரசமைப்பின்படி அனைவரும் தமக்குப் பிடித்தவற்றை செய்வதற்கு உரிமையுண்டு. மாவீரர் தினத்துக்கு பயங்கரவாதிகள்தினம் என முத்திரைக் குத்தியது இனவாத அரசியல்தான். இது பிழையான செயல். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தமிழர்களின் இந்த உரிமையை அரசியல் சுயநலம் கொண்டு தடை செய்யக் கூடாது இவ்வாறு ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினரும், சகோதரத்துவத்துக்கான மக்கள் அரணின் உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்து;ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், 'போர் முடிவடைந்து தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், நாம் மீண்டும் மீண்டும் ஏன் பழைய அழிவுகளை பற்றி மீட்டுப்பார்க்க வேண்டும். இவற்றையயல்லாம் மறந்து முன்னேறிச் செல்வதே எமது நோக்கமாக இருக்க வேண்டும். நாட்டில் நடைபெற்ற போர் இரு தரப்பினரையும் பாதித்தது என்பதே உண்மை. சிங்களவர்களுக்கு வெற்றி, தமிழர்களுக்குத் தோல்வி என்றோ அல்லது இராணுவத்தினருக்கு வெற்றி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தோல்வி என்றோ நினைக்கக் கூடாது. போரில் வெற்றியடைந்ததைக் தலைநகரில் கொண்டாடும் போது ஏன் தமிழர்கள் உயிரிழந்த தங்களின் உறவுகளை நினைவுகூரக் கூடாது? தமிழர்களும் இந்நாட்டின் பிரஜைகளே. மரணித்தவர்களும் எம் நாட்டு மக்களே. அதுமட்டுமல்ல, இதை ஏன் சிங்களவர்கள் அனுஷ்டிக்கக்கூடாது? அவர்களுக்கும் தமிழர்களை நினைவுகூர முழு உரிமையுண்டு. இந்த உரிமைகளில்
 இனவாதத்தை திணிக்கக்கூடாது. எம்மைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு மட்டுமன்றி, சிங்களவர்களுக்கும் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு முழு உரிமையுண்டு' என அவர் கூறியுள்ளார்.

24 நவம்பர் 2013

தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு விடுத்துள்ள அறிக்கை!

தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு மாவீரர் நாள் தொடர்பாக எமக்கு அனுப்பி வைத்த அறிக்கையின் முழு விபரத்தையும் அப்படியே இங்கு தருகிறோம்!

அன்பான தமிழ் மக்களிற்கு,
தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை புனிதமான எங்கள் தேசிய மாவீரர்களை ஒட்டுமொத்த தமிழினமும் ஒருசேர நின்று,மெய்யுருகி  வணங்கும் மாவீரர் நாளை எதிர்கொண்டு நிற்கும் இக்காலத்தே இந்நிகழ்வு தொடர்பாக எமது நிலைப்பாட்டை மக்களுடன் பகிர்ந்துகொள்ள விளைகின்றோம்.
தமிழீழ விடுதலையை நேசிக்கும் அனைத்து தமிழர்களினதும் ஒற்றுமையை கருத்திற்கொண்டு புலம்பெயர் நாடுகளில் தமிழர் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பங்களிற்கும்,முரண்பாடுகளிற்கும் தீர்வுகாணும் முகமாக நடத்தப்படும் ஒற்றுமை முயற்சிக்கு ஆதரவு வழங்கும் முகமாக தமிழர் இறையாண்மைக்கான அமைப்பினால் நடாத்தப்பட்டு வந்த மாவீரர் நாள் நிகழ்வு தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.இந்நாளை சடங்காகவும்,சம்பிரதாயமாகவும்,ஆடம்பரமாகவும் கொள்ளாமல் காலத்தை கருத்திற்கொண்டு உணர்வெழுச்சியுடன் எம்முன்னால் இருக்கின்ற மாபெரும் கடமையை கூடிச்சுமக்கின்ற பொறுப்பை உணர்வோம்.மாவீரர்களின் நினைவுகள் அற்பத்தனங்களை அகற்றி ஆன்மாவை சுத்தப்படுத்தட்டும்.நான் பெரிது நீ பெரிது என்ற சிறுமதி தொலைத்து நாடும்,இனமும் பெரிதென்ற எண்ணத்தை விதைக்கட்டும்.மாவீரர்கள் எல்லோருக்கும் உரித்துடையவர்கள்.அவர்கள் விட்டுச்சென்ற பணியும் எல்லோருக்கும் உரித்தான தேசியக்கடமை.அவர்தம் புனிதம் கெடாமல் தூய்மையான அகத்துடன் நினைவேந்துவோம்.

தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு 
ஜெர்மனி

தடைகளை உடைத்தவர்களே மாவீரர்கள்!

தாயக மண்ணின் விடுதலைக்காக வித்தாகிப்போன மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்காகத் தமிழகத்திலும் புலத்திலும் பெரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடக்கு மாகாணசபை வந்த பின்னர் முதன் முதலாக வருகின்ற இந்த மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கவேண்டும் என்பதில் வடக்குத் தமிழ் மக்களும் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப் பொலிஸாரினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்த முடியாது என்று "உதயனி'டம் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்ததாக உதயன் தெரிவித்துள்ளது.நவம்பர் 27 தீவிரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவப் பேச்சாளரும் இதே கருத்தையே உதயனிடம் தெரிவித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.கடந்த வருடம் மாவீரர் தினத்தன்று யாழ். பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர் விடுதிகளில் மாணவர்கள் விளக்கேற்றி, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற அசம்பாவிதத்தையடுத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில்,மாவீரர் நாளில் மாவீர்களை நினைவுகூர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், படையினரின் கடும் பாதுகாப்பையும் மீறி யாழ். பல்கலைக்கழகச் சுற்றாடலில் நேற்றுமுன்தினம் விநியோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப் ஸ்ரீலங்கா பொலிசார் தடையுத்தரவு பிறப்பித்துள்ளனர்.எனினும் மாவீரர் நாள் உலகெங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

23 நவம்பர் 2013

அனந்தி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவியும், வட மாகாண சபை உறுப்பினருமான அனந்தி சசிதரன், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் தொடர்பில் அவர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். காணாமல் போனவர்களது குடும்பத்திற்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி யாழ்ப்பாணத்தில் அண்மையில் போராட்டமொன்று நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்த நாள் முதல், பாதுகாப்பு தரப்பினர் தம்மை பின்தொடர்வதாக அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். தமக்கும் தமது பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். வீடு தாக்குதலுக்கு உள்ளான போதிலும் இதுவரையில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

22 நவம்பர் 2013

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு!

தமிழீழம் என்பதே ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரும் என்பதை உலக நாடுகளிற்க்கு உணர்த்தும் வகையில், ஜனவரி 1 முதல் 15 வரை தமிழக மாணவர்களினால் தமிழகத்தில் தனி ஈழத்திற்கான மாதிரி பொதுவாக்கெடுப்பை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து தமிழக மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : இந்தியாவும் சர்வதேசமும் தொடர்ந்து தனி ஈழ கோரிக்கையை மட்டுப்படுத்தி வருகின்றன. இந்த சூழலில் நமது கோரிக்கையை அழுத்தமான முறையில் பதிவு செய்வதும் மக்களிடையே எடுத்துச் செல்வதும் இப்போது அவசியம். ஆகவே அரசாங்கமானது போராட்டத்தை ஒடுக்கிவரும் இந்த சூழலில் மக்களிடையே நமது கோரிக்கையை எடுத்து செல்வதற்காக தமிழகம் முழுவதும் தமிழீழத்திற்கான மாதிரி பொது வாக்கெடுப்பை இளைஞர்கள் மற்றும் மாணவர்களாகிய நாங்கள் முன்னெடுக்க இருக்கிறோம். ஐ.நா மன்றத்தின் அடுத்த அமர்வில் இந்த மாதிரி பொது வாக்கெடுப்பின் முடிவுகளை சமர்பிக்க இருக்கிறோம். கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், தனி நபர்கள் அனைவரும் தமிழர்களாக இணைந்து இந்த மாதிரி பொதுவாகெடுப்பினை வெற்றி பெறச் செய்வோம் . இந்த நகர்வின் மூலமாக :- தனி ஈழத்திற்கு ஆதரவாக இத்தனை பேர் தமிழகத்தில் இருக்கிறோம் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறுதல், பொது வாக்கெடுப்பே நமது கோரிக்கை அதுவே தனி ஈழத்தை அமைத்துக் கொடுக்கும் என தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க முடியும், நமது கோரிக்கைகளை வலுவற்றதாக்கும் இந்தியாவின் சதிகளை முறியடிப்பதற்கு தமிழக மக்களிடம் மாதிரி பொது வாக்கெடுப்பை எடுக்கவுள்ளோம். எங்களது வாக்குபதிவு செய்யும் மையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று இடங்களில் நிறுவ உள்ளோம் .பொதுமக்கள் அங்குவந்து அவர்களுடைய கருத்தை பதிவு செய்யலாம். இதுமட்டுமல்லாமல் மாணவர்கள் நகரங்களில் மக்கள் கூடும் வணிக வளாகங்களுக்கு சென்று வாக்கு கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று வாக்கு பதிவு செய்யவுள்ளதுடன் பெரு சேகரிகப்படவுள்ளது. மேலும், இணைய தளத்திலும் வாக்கு சேகரிப்பு நடைபெறும். இதுமட்டுமல்லாமல் புலம் பெயர் தேசங்களில் இருக்கும் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் நமக்கு ஆதரவாக அவரவர் நாடுகளில் மாதிரி பொது வாக்கெடுப்பை நடத்த உள்ளார்கள் என தமிழக மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

மாவீரர் தினத்தால் கதிகலங்கும் அரசபடைகள்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தை நினைவூட்டும் பிரசுரங்கள் சிலவற்றை இராணுவப் புலனாய்வுப்பிரிவு இன்று வீசிச்சென்றுள்ளது. இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிள்கள் சிலவற்றில் சென்றிருந்த குழு ஒன்றே குறித்த துண்டுப் பிரசுரங்களை உள்ளே வீசிச் சென்றதாக பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நிர்வாகத்திற்கு அறியத்தந்துள்ளனர். மாணவர்களிடையே குழப்பத்தை தோற்றுவிக்கும் சதி முயற்சியாக இது இருக்கலாமென பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இத்தகைய துண்டுபிரசுரங்களை வீசி வேவு பார்க்கப்படலாமென தாம் நம்புவதாக ஆசிரியர்சங்க வட்டாரங்களும் தெரிவித்தன. ஏற்கனவே இலங்கை முழுவதும் பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு தற்போது அவை திறக்கப்பட்டும் விட்டது. எனினும் மாவீரர் தின அச்சங்காரணமாக யாழ்.பல்கலைக்கழகமோ எதிர்வரும் டிசெம்பர் இரண்டாம் திகதி வரை இழுத்து மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

21 நவம்பர் 2013

பிரிட்டிஷ் பிரதமரை கோமாளி என்கிறது அரச ஊடகம்!

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்க ஊடகமான டெய்லி நியூஸ் அவரை பட்டிக்காட்டான், கோமாளி, எருமை என விமர்சித்துள்ளது. கேமரூன் விடுத்த கோரிக்கை தொடர்பாக அவர் பெரிய மன்னிப்பை கோரவேண்டும் என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. அந்தப் பத்திரிகையின் தலையங்கத்தில், 'இலங்கையில் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்திற்காக வருகை தந்த இந்த 'பட்டிக்காட்டான்' ஒட்டுமொத்தமாக கடுமை குறையாமல் நடந்து கொண்டார். இலங்கை மண்ணில் வந்திறங்கிய நேரத்திலிருந்து பிரிட்டிஷ் பிரதமர் ஏகாதிபத்திய மடையனாக நடித்தார். அவரது அவமரியாதை தொட்டு உணரக் கூடியதாக இருந்தது. அவர் விதிவிலக்கான பட்டிக்காட்டனாகக் காணப்பட்டார். அவர் தனது பங்கை சரியாக செய்யாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்களின் பாரம்பரிய ஏகாதிபத்திய உடமை சார்ந்த நடத்தையும் முதிர்ச்சியும் இயல்பாக அவரிடம் வெளிப்பட்டது,' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் விருந்தோம்பல், வழங்கப்பட்ட மரியாதை மற்றும் பணிவுகளுக்கு மரியாதை தராமல் அரசியல் சிறுபிள்ளைதனத்தில் கேமரூன் ஈடுபட்டார். பிரிட்டிஷ் பிரதமரின் கோமளித்தமான நடத்தை தீவிரமான விளைவுகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தாது என்றாலும் அவரது செயல் ஆழமான அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்தத் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெய்லி நியூஸ் ஆசிரியான ராஜ்பால் அபேநாயக்க இந்த தலையங்கத்தை எழுதியுள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத பலரை அவர் அண்மைய காலமாக தனது ஆசிரியர் தலையங்கம் மூலம் விமர்சித்து வருகிறார்.

20 நவம்பர் 2013

யாழில் படையினனை மணம் புரிந்த தமிழ் யுவதி!

யாழ்ப்பாணத்தில் சிங்களப் படையினன் ஒருவருக்கும் தமிழ் யுவதியொருவருக்கும் இந்து சமய முறைப்படி இன்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் அமரசிங்க என்ற சிங்களப் படைத்துறையின் இரண்டாவது சிங்க படையணியில் கடமையாற்றும் படையினனும்
 மானிப்பாய் சுதுமலையைச் சேர்ந்த ரகு தர்மினி என்ற யுவதியுமே திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர் என தெரியவருகின்றது.

உள்ளக விசாரணையில் எமக்குத் திருப்தியில்லை-கமரூன்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அந்நாட்டு அரசினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் முழுமையான சுயாதீனமுடையவையாக அமையவில்லை. அந்த விசாரணைகளில் பிரிட்டனுக்குத் திருப்தி இல்லை. இவ்வாறு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் பிரதமர் டேவிட் கமரூன். "யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் "உதயன்' நாளிதழின் நம்பமுடியாத துணிச்சல் கொண்ட ஊடகவியலாளர்களை பிரிட்டன் ஊடகவியலாளர்களுடன் சேர்ந்து நான் சந்தித்தேன். அவர்களின் சகாக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் பலர் தாக்கப்பட்டு, அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்'' என்றும் கமரூன் அங்கு கூறினார். போர்க்குற்ற விசாரணை மிக அவசியம். பொதுநலவாயத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கவே கொழும்பு மாநாட்டில் நான் கலந்துகொண்டேன். மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தலையீடு செய்வதைத் தவிர, அதனைப் புறக்கணிப்பது எனது கடமையல்ல. பல பத்தாண்டுகால உள்நாட்டுப் போர் இடம்பெற்ற இலங்கைக்கு நீதி, நிலையான தீர்வு, ஆற்றுப்படுத்தல் போன்றன மிக முக்கிய தேவைப்பாடாக உள்ளன. இலங்கை, தன் மீதான போர்க்குற்றச் சாட்டுக்கள் தொடர்பான விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் இதில் அனைத்துலகத் தலையீடு இடம்பெறும். என்றும் கமரூன் தனது உரையில் குறிப்பிட்டார். இதேவேளை, இந்தப் பிரச்சினையை இப்படியே விட்டுவிட முடியாது. கனடா மற்றும் இந்திய நாடுகளின் தலைவர்கள் இலங்கையில் இடம்பெறும் உச்சி மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், இதில் பங்குபற்றுவதற்காக கமரூன் அங்கு செல்வது சரியா அல்லது தவறா எனப் பிரிட்டனின் எதிர்க் கட்சித் தலைவரும், தொழிற்கட்சித் தலைவருமான எட்வேட் மில்லிபாண்ட் நாடாளுமன்றில் கேள்வியயழுப்பினார். பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டின் இறுதியில், மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாகக் குறிப்பிடப்படவில்லை எனவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்க வேண்டுமா அல்லது இல்லையா என்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்படவில்லை எனவும் மிலிபாண்ட் குறிப்பிட்டார். இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள் பொதுநலவாய அமைப்பின் விழுமியங்களுடன் முரண்பாட்டை ஏற்படுத்துகின்றன. இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பான உண்மை உரைக்கப்படுவதைப் பிரிட்டன் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் எனவும் மிலிபாண்ட் மேலும் சுட்டிக்காட்டினார். இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதென்கின்ற தனது தீர்மானமானது 'நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கவும், உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் முதன்மையான பிரச்சினையை வெளிச்சமிட்டுக் காட்டவும் உதவுகிறது எனவும் வடக்குக்கு பயணம் செய்த முதலாவது அனைத்துலக நாட்டுத் தலைவரான கமரூன் அங்கு கூறினார். பிரிட்டன், ஐ.நாவின் ஊடாக இலங்கைமீது அழுத்தம் கொடுப்பதாகவும், இறுதி ஐந்து மாத காலப் போரின்போது இடம்பெற்ற மீறல்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துவதாகவும், இதுவே இலங்கையில் நிலையான நீண்டகால மீளிணக்கப்பாடு தோன்ற வழிவகுக்கும் எனவும் கமரூன் மேலும் குறிப்பிட்டார். 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் 2013 இல் இலங்கையில் உச்சி மாநாடு நடத்துவதெனத் தீர்மானித்தபோது அதற்கு முன்னைய தொழிற்கட்சி அரசு அங்கீகாரம் வழங்கியதாகவும், மில்லிபாண்ட் சந்தர்ப்பத்துக்கேற்ப, இரட்டை நிலைப்பாட்டுடன் இலங்கையின் பிரச்சினையை அணுகுவதாகவும் கமரூன் குற்றம் சுமத்தினார். நான் இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது விருப்பிற்கேற்ப மாநாட்டின் நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து நடத்த அனுமதிப்பதா அல்லது எமது பொதுநலவாய அமைப்பின் பங்காளிகளுடன் இணைந்து எமது நலன்களை நிகழ்ச்சி நிரலில் இணைப்பதற்காக இந்த உச்சி மாட்டில் கலந்துகொள்வதா என்கிற இரண்டு தெரிவைக் கொண்டிருந்தேன். இறுதியில் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு எமது விழுமியங்களைப் பாதுகாப்பதெனத் தீர்மானித்தேன். இதன்மூலம் என்னால் முடிந்தளவு முன்னேற்றத்தை ஏற்படுத்த விரும்பினேன். நான் இதில் கலந்துகொண்டதானது பொதுநலவாயத்துக்கும், இலங்கை மற்றும் பிரிட்டன் ஆகியவற்றுக்கான சரியான தீர்வாகும் என நம்புகிறேன்'' என்றும் கமரூன் தனது உரையில் கூறினார். பிரிட்டன் பிரதமரின் நாடாளுமன்ற உரையின் பின்னர் அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இலங்கை அரசின் செயற்பாடுகள் தொடர்பிலும், சனல் - 4 ஊடகவியலாளர்கள் அரசினால் திட்டமிட்டு அச்சுறுத்தப்பட்டமை குறித்தும் காரசாரமான விவாதங்களை முன்வைத்தனர்.தனது வடக்குப் பயணம் குறித்தும் அங்கு தான் கண்டறிந்த விடயங்கள் அனைத்தையும் பிரதமர் கமரூன் தனது உரையில் விரிவாக விளக்கினார்.

19 நவம்பர் 2013

சாட்டிக்கடலில் குளித்துக்கொண்டிருந்த பெண்களுடன் சேஷ்டை!

சாட்டிக் கடலில் தண்ணீருக்குக் கீழால் நீந்திச் சென்று பெண்களுடன் சேஷ்டை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் தலா 2 ஆயிரத்தி 500 ரூபா அபராதம் விதித்ததுடன் அவர்களை எச்சரித்து விடுதலை செய்தது . இந்த விடயம் குறித்துத் தெரியவந்துள்ளதாவது : சனிக்கிழமை சாட்டிக் கடலில் பெண்கள் குளித்துக்கொண்டிருந்த சமயம் தண்ணீருக்குக் கீழால் நீந்திச்சென்ற 3 இளைஞர்கள் அவர்களுடன் சேஷ்டை புரிந்துள்ளனர் . இவ்விடயம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் 3 பேரைக் கைதுசெய்து விளக்கமறியலில் வைத்திருந்தினர் . இது தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இடம்பெற்றது . விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி 3 பேருக்கும் தலா 2 ஆயிரத்தி 500 ரூபா வீதம் அபராதம் வழங்கியதுடன் அவர்களை எச்சரித்து விடுதலைசெய்தார்.

ஒலிபரப்பாளர் கௌசி ரவிசங்கர் காலமானார்!

தமிழ்த் தேசிய ஊடக உலகில் பிரசித்தி பெற்ற ஒலிபரப்பாளராக விளங்கிய திருமதி கௌசி ரவிசங்கர் அவர்கள் காலமானார். 2009 மே 18இற்கு முன்னர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களின் நிர்வாகத்தின் கீழ் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் (ஐ.பி.சி) இயங்கிய காலத்தில் அதன் ஒலிரபரப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கௌசி ரவிசங்கர் கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (ரி.ரி.என்) கலை நிகழ்ச்சிகள் சிலவற்றையும் கௌசி ரவிசங்கர் தொகுத்து வழங்கினார். 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முகமாலையில் யாழ் - கண்டி நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பொழுது அங்கிருந்தவாறு ரி.ரி.என் தொலைக்காட்சிக்கும், ஐ.பி.சி வானொலிக்கும் நிகழ்வுகளை அவர் தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழீழத் தேசியத் தலைவரின் செய்தியாளர் மாநாட்டில் இரு ஊடகங்களின் சார்பாகவும் கௌசி ரவிசங்கர் கலந்து கொண்டார். 2010ஆம் ஆண்டு பிரித்தானியாவில் அனைத்துலக உயிரோடை – தமிழ் (ஐ.எல்.சி) வானொலி ஆரம்பிக்கப்பட்ட பொழுது மூன்று மாதங்களுக்கு அதன் செய்தி வாசிப்பாளராக கௌசி ரவிசங்கர் கடமையாற்றினார். தவிர 2003ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் உட்பட பல்வேறு எழுச்சி நிகழ்வுகளிலும், கலை நிகழ்வுகளிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் ஒருவராகவும் கௌசி ரவிசங்கர் திகழ்ந்தார். அண்மைக் காலமாக உடல்நலக் குறைவுக்கு ஆளாகியிருந்த கௌசி ரவிசங்கர் 18.11.2013 திங்கட்கிழமை மருத்துவமனையில் காலமானார்.

மிலிபான்டின் கேள்விகளும் கமரூனின் பதில்களும்!

டேவிட் கமரோனின் இலங்கை விஜயம் தொடர்பில் ஆற்றிய உரைக்கு ஈ.டி. மில்லிபாண்ட் பதிலளித்து பேசுகையில், 2009 இல் ஆயிரக்கணக்கான மக்களை முப்படைகளாலும் கொன்று குவித்ததால் 2011 CHOGM இனை இலங்கையில் நடாத்தவிடாது அப்போது ஆட்சியிலிருந்த தொளிலாளர் கட்சி தடுத்தபோதும் மனித உரிமையில் எந்த முன்னேற்றமும் இல்லாத போது நீங்கள் 2013 CHOGM இனை இலங்கையில் நடாத்த 2011இல் எதற்கு சம்மதித்தீர்களென்றும் கேட்டதோடு, இது தொடர்பாக மேலதிகமான கேள்விகளையும் தொடுத்தார் ஈ.டி. மில்லிபாண்ட். முதலாவதாக் தொடர்ச்சியாக இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகளை நிராகரித்து வருவதற்கு CHOGM இன் தலமை என்றவகையில் நீங்கள் செய்தது என்னவெனவும், அடுத்ததாக 2014 மார்ச்சில் இல் இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த கோரியதாகவும், ஆனால் அக்கோரிக்கையை சில தினங்களிலேயே இலங்கை நிராகரித்ததாகவும் அதற்காக என்ன செய்தீர்களென்றும், மற்றும்; கனடா, மற்றும் இந்திய நாட்டு தலைவர்கள் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி CHOGM இல் பங்கேற்பதை தவிர்த்ததாகவும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த டேவிட் கமரோன்; ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட மகாநாட்டை நடத்தவிடாமல் தடுப்பது அவ்வளவு இலகுவானதல்ல எனவும் தமது நாடு CHOGM இன் முக்கிய உறுப்பினராகவும் தமது மகாராணி அதன் தலைவியாகவும் இருக்கும் போது இதனை புறக்கணித்து மற்றய நாடுகள் போல் விலகி இருக்க முடியாதெனவும் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு எனவும் 4000 மயில்களுக்கு அப்பாலிருந்து இலங்கையின் மனித உரிமைகள் பற்றி பேசமுடியாதெனவும் அதனால் தான் இதில் பங்கு பற்றி 'யுத்தக் குற்றம் குறித்து உண்மையான வெளிப்படையான சுதந்திர விசாரணையை ராஜபக்ஸவிடம் வலியுறுத்தினேன்' எனவும் கமரூன் தெரிவித்தார்.

18 நவம்பர் 2013

நிந்தவூரில் அதிரடிப்படையுடன் மக்கள் முறுகல்!

நிந்தவூர் கடற்கரை பகுதியில் பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிந்தவூர் பகுதியில் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்தல் மற்றும் கொள்ளையர்களை கண்டுபிடித்தல் தொடர்பில் விசேட விழிப்பு குழுவொன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. இதன் பிரகாரம் இரவு 9 மணிக்கு பின்னர் வீடுகளிலிருந்து வெளியே செல்கின்றவர்கள் தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை எடுத்துசெல்லவேண்டும் என்று அந்த குழு தீர்மானித்தது. அந்த தீர்மானத்தை பள்ளிவாயில்களின் ஊடாக பொதுமக்களுக்கு அறிவித்தது. இந்நிலையில், விசேட அதிரடிப்படையினர் அணியும் ஆடைகளை ஒத்த ஆடைகளை அணிந்து நிந்தவூர் கடற்கரை பகுதிக்கு வந்த ஐந்து பேர் அடங்கிய குழுவினர் கடற்கரையில் வைத்து ஆடைகளை மாற்றிக்கொண்டு நேற்றிரவு ஊருக்குள் வருவதை கண்ட பொதுமக்கள் அவர்களை சுற்றிவளைத்து ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டுள்ளனர். ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய அவர்கள், தங்களை சுற்றிவளைத்த மக்களை தாக்கிவிட்டு தப்பியோடுவதற்கு முயன்றுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விசேட அதிரடிப்படையினர் பொதுமக்களை தாக்கிவிட்டு அவர்களை மீட்டு சென்றுள்ளனர். இதனை கண்டித்து நிந்தவூர் பகுதியில் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டதுடன் நிந்தவூர் ஊடான போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தது.

17 நவம்பர் 2013

ஊர்காவற்றுறை தம்பாட்டி மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்!

வடமாகாணசபைத் தேர்தலின் பின் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது ஈ.பி.டி.பி யினராலும், அரசின் புலனாய்வாளர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளின் தொடர்ச்சியாக யாழ்.ஊர்காவற்றுறை தொகுதி தம்பாட்டி பிரதேச மக்கள் பொலிசாரினாலும்,புலனாய்வாளர்களாலும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அப்பிரதேசத்தைச் சேர்ந்தவரான பொலீசாருடன் சேர்ந்தியங்கும் 28 வயதுடைய காண்டீபன் எனும் பேர்வழியின் உதவியுடன் அப்பகுதி சுவற்றில் “புலிகள் மீண்டும் வருவார்கள் ” என கரியால் எழுதுவிக்கப்பட்டு, பின்னர் அப்பகுதிக்கு வந்த பொலிசாரும், புலனாய்வாளர்களும் அப்பகுதிமக்களை அச்சுறுத்தியுள்ளனர். 06 பேர் கொண்ட பட்டியல் ஒன்றை வைத்துள்ள பொலிசார் அவர்களை இது தொடர்பாக தேடிவருவதாக கூறியுள்ளனர். அப்படியலில் உள்ள அனைவரும் கடந்த மாகாணசபைத்தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றிக்காக செயற்பட்டவர்கள் என மக்கள் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களுக்கு தெரிவித்ததையடுத்து நேற்று16.11.2013 சனிக்கிழமை பிற்பகல் அப்பகுதிக்கு நேரில் சென்ற மாகாணசபை உறுப்பினர் மக்களுடன் கலந்துரையாடி , இப்பிரச்சனையை உரியவர்களிடம் எடுத்துச்சென்று தீர்வுகாண முயற்சிப்பதாக உறுதியளித்தார். அத்துடன் அப்பகுதியில் நிலவும் குடிதண்ணீர் பிரச்சனை பற்றியும் மக்கள் மாகாணசபை உறுப்பினரிடம் தெரிவித்தனர். இது பற்றியும் உரியவர்களிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். மாகாணசபை உறுப்பினருடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ப.தர்சானந்தும் உடன் சென்றிருந்தார்.

வவுனியாவில் மாபெரும் தீப்பந்த போராட்டம்!

வவுனியா பிரஜைகள் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெறும் மாபெரும் தீப்பந்த போராட்டம் பெருந்திரளான மக்கள் பங்களிப்புடன் மிகவும் எழுச்சியாக நடைபெற்றுவருகிறது. காலை 11 மணியளவில் , வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த தீப்பந்த போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துக்கொண்டுள்ளனர். இத் தீப்பந்தப்போராட்டமானது தமிழ் மக்களின் சமகால பிரச்சினைகள் பலவற்றை மையப்படுத்தியதாக நடைபெற்றுவருகிறது. காணாமல் போனோர் விடயத்தில் இலங்கை அரசே முழுப் பொறுப்பேற்கவேண்டும் ,அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் ,நில ஆக்கிரமிப்பு முற்றாக நிறுத்தப்படவேண்டும்,தமிழர் பிரதேசத்தில் , இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் இடம்பெறும் சகல திட்டமிட்ட குடியேற்றத் திணிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும், சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு நிறுத்தப்பட வேண்டும், பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படவேண்டும் ,காடழிப்பு மற்றும் இயற்கை ,கனியவள சுரண்டல்கள் நிறுத்தப்படவேண்டும், மனிதத்துவத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் அனைத்திற்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பவற்றை மையப்படுத்தி போராட்டம் நடைபெறுகின்றது. இப்போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு ," சர்வதேச விசாரணை " வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோசங்களை எழுப்பி வருகின்றனர். கையில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு மக்கள் நடத்தும் இந்த போராட்டத்தில் பல பிரமுகர்கள் தம்மை இணைத்துக்கொண்டு வருகின்றனர். இப்போது அங்கே கலந்து கொண்டுள்ள பிரமுகர்கள் உரையாற்றிவருகின்றனர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சிவசக்தி ஆனந்தன் , செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ரவிகரன், சத்தியலிங்கம் ஆகியோரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சண் மாஸ்டர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் எழுச்சி மிகு உரையாற்றி வருகின்றனர். வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனதுரையில் ,கார்த்திகைத் திருநாளில் வீடுகளை ஏற்றுகிற தீபத்தை நாங்கள் இன்று கைகளிலும் நெஞ்சிலும் ஏந்தி எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம்." யாழில் நடைபெற்ற போராட்டம் மிகவும் எழுச்சியாக நடந்தது. தடைகளை மீறி போராட்டங்களை முன்னெடுக்க தமிழர் தாயகப்பிரதேசமெங்கும் மக்கள் பேரெழுச்சியுடன் முன் வரவேண்டும். மக்கள் புரட்சி வெடிக்கும்போதே எமக்கு சுதந்திரம் கிடைக்கும் . இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட எங்களை எந்த சக்தியாலும் ஒடுக்கி விட முடியாது . நான் மக்களின் எழுச்சி மிகு போராட்டங்களுக்கு என்றும் துணை நிற்பேன். என்றார். தொடர்ந்தும் நிகழ்வு மக்கள் பேராதரவுடன் நடைபெற்று வருகின்றது.

16 நவம்பர் 2013

சுயாதீன விசாரணை இன்றேல் சர்வதேச விசாரணை-கமரூன்(காணொளி)

எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் கால அவகாசம் வழங்குவதாகவும் அவ்வாறு சுயாதீன விசாரணை நடத்த தவறும் பட்சத்தில் சர்வதேச ரீதியான விசாரணைக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது இலங்கை மீதான சர்வதேச விசாரணை குறித்து அழுத்தம் கொடுக்கப்படும் என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். நேற்று (15.11.13) வடக்கிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசிய போதே பிரித்தானிய பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு நிலைமைகள் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். உள்நாட்டுபோர் நிறைவின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியது எனத் தெரிவித்த அவர குறிப்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டமை மிகச் சாதகமான ஓர் முன்நகர்வு என சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும் இடம்பெயர்ந்த மக்கள் பிரச்சினைகள், காணிப் பிரச்சினைகள், வடக்கின் இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். வட மாகாணசபைக்கு அதிகாரங்களை பகிர்வது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் டேவிட் கமரூன் முன்வைத்த கருத்துக்கள் அனைத்தையும் ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை செனல் 4 ஊடகவியலாளர்கள் இலங்கையின் போர்க் குற்றம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டேவிட் கமரூன் சுயாதீச விசாரணை இல்லையேல் சர்வதேச விசாரணை என்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பிரதமர் வலியுறுத்து யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கை உரிய முறையில் விசாரணை நடாத்தத் தவறினால் சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஊடாக விசாரணை நடத்துமாறு இலங்கையிடம் ஏற்கனவே கோரியுள்ளதாகத் பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார். எனினும் இலங்கை சுயாதீன விசாரணைகளுக்கு இணங்க மறுத்து வருவதாகத் தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ஜனாதிபதியுடன் யதார்த்தமான சந்திப்பு நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள அவர் தாம் கூறிய அனைத்தையும் ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கருத்து வெளியிட்டு உள்ளார்.

15 நவம்பர் 2013

யாழ்,போராட்டக் களத்தில் சனல்4!

நீண்டதொரு இடைவெளியின் பின்னர் காணாமல் போனோரது உறவுகள் முன்னெடுத்த போராட்டம் யாழ்நகரின் இயல்பு வாழ்க்கையினை இன்று பாதிக்கச்செய்துள்ளது. பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்ற நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி கண்டுபிடித்து தருமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதை அடுத்தே அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டகாரர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையினில் அவர்கள் பிரிட்டன் பிரதமரை சந்திக்காத வகையில் பிரதம நூலகம் முன்பதாக பொலிஸ் வாகனங்களை நிறுத்தி அவர்களை வழிமறித்து வைத்திருந்தது. மறுபுறத்தே அரச ஆதரவு படைத்தரப்பின் ஏற்பாட்டில் 50 பேரைக்கொண்ட கும்பலொன்று சனல்-4 இற்கு எதிராகவும் அரசிற்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்த ஏற்பாடாகியிருந்தது. பிரிட்டிஸ் பிரதமர் அவர்களை பார்வையிடும் வகையில் நூலக நுழைவாயிலினில் இவ்வேற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் இத்தகைய ஏற்பாடுகள் மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்த கட்டுப்பாட்டினை தகர்த்து மக்கள் பொலிஸாரை மீறி நுழைவாயிலினை நோக்கி செல்ல முற்பட்டனர். இந்நிலையில் அவர்களை பெண்கள் மதகுருமார் என பாகுபாடேதுமின்றி தாக்க பொலிஸார் முற்பட வன்முறை வெடித்தது. பொலிஸ் தடையினை தாண்டி புறப்பட்ட மக்கள் அங்கிருந்து சென்று பிரதான நுழைவாயிலை முற்றுகையிட முற்பட அங்கு ஏற்கனவே வந்து கூட்டமைப்பின் மூவர் அணியினை சந்தித்துக் கொண்டிருந்த பிரிட்டன் பிரதமர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியிருந்தார். இதனிடையே அழைத்து வரப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட கும்பல் தப்பி ஒடியிருந்தது. எனினும் பிரதமருடன் வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் மக்களது உணர்வுகளை புரிந்து அறிக்கையிடுவதில் ஈடுபட்டிருந்தனர். சனல்-4 அணி நேரடியாக தனது அறிக்கையிடலை செய்திருந்தது. இதனிடையே தமிழத்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோஸம் எழுப்பியிருந்தனர். மூடப்பட்ட காரினுள் மக்களை சந்திக்காது தப்பி செல்ல முற்பட்டவேளை இந்நெருக்கடிக்குள் அவர் அகப்பட்டுக்கொண்டார். எனினும் பின்னர் அவரும் நூலக பின் கதவினால் சென்றிருந்தார். எனினும் தமக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இன்றைய சந்திப்பு பற்றி தகவல் தரும் வரை விலகமாட்டோமெனக ;கூறி மக்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

தொடரும் உண்ணாநிலைப் போராட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்கள்!

வலி வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் இன்று தமது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கக் கோரி நான்காவது நாளாகவும் உண்ணாவிரப் போராட்டதை மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வாசலில் மேற்க் கொண்டார்கள். யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம் பெயர்ந்து தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாது உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கி வாழும் மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள். உண்ணாவிரத்தில் ஈடுபட்ட மக்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,இரா சம்பந்தன்,சுரேஸ் பிறேமச்சந்திரன்,சிவசக்தி ஆனந்தன்,ஈ.சரவணபவான்,செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் எம் .கே.சிவாஜிலிங்கம் பா.கஜதீபன் க.சாவேஸ்வரன்,க.பரம்சோதி,கனகரெட்னம் விந்தன்,கே.சயந்தன் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள். இத்துடன் யாழ்ப்பாணம் பல் கலைக்கழக ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். வழமை போன்று இன்றும் உண்ணாவிரதம் இடம் பெற்ற சுற்றாடலில் பொலிசாரும் புலனாய்வாளர்களும் அதிக அளவில் காணப்பட்டனர்.

14 நவம்பர் 2013

போராட்டத்தை குழப்ப மக்கள் மீது தொடர் தாக்குதல்!

போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் மீது இனந்தெரியாதவர்கள் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் வலி,வடக்கு மக்கள் தமது நிலங்களை தங்களிடம் வழங்குமாறு கோரி மாவிட்டபுரம் கந்தன் ஆலயத்திற்கு முன்னால் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலும் நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் தங்கி இருக்கும் மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வரும் வாகனங்களை நிறுத்தும் நோக்குடன் இனந்தெரியாதவர்களினால் பிரத்தியேகமாக ஆணிகளால் செய்யப்பட்ட இரும்புக் கட்டைகளை வீதிகளில் வீசுவதுடன் மக்கள் மீது வீசியும் தாக்குதல் நடாத்தி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நேற்று இரவு மக்கள் வருகை தரஇருந்த பஸ்கள் மீது கல்லெறி தாக்குதல் நடாத்தியதுடன் சாரதிகள் மற்றும் மக்களையும் இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்தும் போராட்டத்தில்
 கலந்து கொள்ளும் மக்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்க கூடாது என இன்றைய தினம் வடமராட்சி தனியார் சிற்றூர்திகள் சங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மக்கள் தமது பணத்தை கொடுத்து ஹயெஎஸ் என்பனவற்றிலேயே வந்துகொண்டு இருக்கின்றனர். இதேவேளை நேற்யை தினமும் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது:

தனியார் பஸ்கள் மீது கல்வீச்சு!

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்கள் இரண்டு மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிலாபம்-கொழும்பு வீதியில் காக்கைபள்ளி மற்றும் மாதம்பே-இட்டக்குளம் பிரதேசத்தில் வைத்தே இந்த கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.45 மணியளவிலேயே இந்த கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய பயணித்த பஸ் மீது சிலாபம்-கொழும்பு வீதியில் காக்கைபள்ளி எனுமிடத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சாரதி, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது வவுனியா- இட்டக்குளம் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் எவருக்கும் எவ்விதமான சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவங்கள் தொடர்பில் மாதமே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

13 நவம்பர் 2013

கனேடிய தமிழர் ஐ,நாவில் இலங்கைக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

இலங்கையில் சுமார் மூன்று வருடங்கள் தான் சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறி 43 வயதுடைய ரோய் சமாதானம் என்ற கனேடிய தமிழர் ஒருவர் ஐநா மனித உரிமை குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தான், பிளாஸ்டிக் குழாய் மற்றும் ரி-56 ரக துப்பாக்கி போன்றவற்றால் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஐநா மனித உரிமை குழுவில் தான் செய்த முறைப்பாடு குறித்து டொரொன்டோவில் இன்று (13.11.13) ஊடக சந்திப்பு நடத்தி ரோய் சமாதானம் தெளிவுபடுத்துவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தனக்கு நடந்தவை என்னவென்று உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்ட நபரே கூறுவது சிறந்தது என ரோய் சமாதானத்திற்கு சட்ட உதவி அளித்துவரும் கடனாவின் சர்வதேச நீதி உதவி மையத்தின் சட்ட இயக்குநர் மேட் ஈசென்பிரேன்ட் தெரிவித்துள்ளார். இலங்கையில் சர்வதேச தலைவர்கள் பலர் கலந்து கொள்ளும் பொதுநலவாய மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் ஐநா மனித உரிமை குழுவில் இவ்வாறானதொரு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.கனேடிய தமிழர் ஐ,நாவில் இலங்கைக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

12 நவம்பர் 2013

சனல்4 ஊடகவியலாளர்களை தேநீர் விருந்துக்கு வருமாறு மஹிந்த அழைப்பு!

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் செய்திசேகரிப்பு உள்ளிட்ட ஊடகப் பணிகளுக்காக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களை தேநீர் விருந்துக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்துள்ளார். பொதுநலவாய மாநாட்டின் இணை அமர்வான பொதுநலவாய வர்த்தக பேரவை மாநாட்டினை கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்துவிட்டு தன்னுடைய வாகனத்தில் ஏறுவதற்காக சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சனல் 4 ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர். ஆனாலும், அவற்றை கண்டுகொள்ளாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை தேநீர் விருந்துக்கு வருமாறு அழைத்துள்ளதாக அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் எதிர்காலத்திலும் ஆவணப்படங்களை எடுக்கவுள்ளதாக சனல் 4 நிகழ்ச்சி தயாரிப்பாளரும், கொலைக்களம் ஆவணப்படத்தின் இயக்குனருமான கெலம் மக்ரே கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது குறிப்பிட்டுள்ளார்.

தொடரூந்து மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.கவினர் கைது!

இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இலங்கையில் காமன்வெல்த் நடைபெற துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் இரயில் மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மதுரையில் மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான தோழர்கள் மதுரையில் இரயில் நிலையம் சென்று, இன்று (12.11.2012)காலை மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட வைகை விரைவு இரயிலை மறித்து கைது செய்யப்பட்டனர். மாவட்டக் கழகச் செயலார்கள்: மதுரை மாநகர் - புதூர் மு.பூமிநாதன், தேனி-சந்திரன், மதுரை புறநகர் கிழக்கு -வீர.தமிழ்செல்வன், மதுரை புறநகர் மேற்கு-த.முனியாண்டி, அரசியல் ஆலோசைனக்குழு உறுப்பினர் எம்.டி.சின்னசெல்லம், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், மாநில தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாநில மருத்துவர் அணித் துணைச் செயலாளர் டாக்டகர் சரவணன், மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் மகபூப்ஜான்மின்னல் முகம்மது அலி, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கழகத்தினர் மறியலில் பங்கேற்று கைதாயினர். அதேபோன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், தேர்தல் பணிச் செயலாளர் கே.கழககுமார், மாவட்டச் செயலாளர் வடசென்னை-சு.ஜீவன், தென்சென்னை பி.மணிமாறன், திருவள்ளூர்-டி.ஆர்.ஆர்.மாநில மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார், சீமா பஷீர், கவிஞர் கோட்டைச்சாமி, ஆவடி அந்திரிதாஸ், டி.சி.இராஜேந்திரன், பூவை, மு.பாபு, கவிஞர் மணிவேந்தன், பூவை து.கந்தன், பகுதிச் செயலாளர்கள்: எழும்பூர்-தென்றல் நிசார், வேளச்சேரி-சு.செல்வபாண்டியன் ஆயிரம்விளக்கு-ரெட்சன் சி.அம்பிகாபதி, பெரம்பூர்-நா.பாஸ்கர், சேப் பாக்கம்- மார்க்கெட் சேகர், ஆர்.கே.நகர்-எஸ்.ஆர்.விசு, அண்ணாநகர்-டேவிட், திரு.வி.க.நகர்- எம்.டி. மனோகரன், வில்லிவாக்கம்-சு.நவநீதகிருஷ்ணன் மற்றும் முராத் புகாரி, பூங்கா இராமதாஸ், வி.ஜார்ஜ், கௌசல்யா, லட்சுமி ஜீவா, சகாயஅரசி, ஜெயகுமாரி விசு, முத்துக்குமார், ஆரி, மின்னல் பிரேம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் இரயில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

11 நவம்பர் 2013

வடக்கில் படைக் காவலரண்கள் உருமறைப்பு!

பொதுநலவாய மாநாட்டிற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் சில ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் எக்ஸ்போ பிற் ஹோட்டலில் தங்கியுள்ள இவர்கள் யாழ்ப்பாணத்தில் பல சந்திப்புக்களை இன்று முதல் மேற்கொள்ளவுள்ளனர். இதேவேளை யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகள் மற்றும் நகரங்களை அண்டிய பகுதிகளிலிருந்தும் கிராமங்களின் சில இடங்களில் இருந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த காவலரண்கள் உருமறைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் சில காவலரண்களை தற்காலிகமாக அகற்றியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

10 நவம்பர் 2013

சந்திரசிறியின் உரையை புறக்கணிக்கப்போவதாக அனந்தி தெரிவிப்பு!

வடக்கு மாகாணசபையின் நாளைய பேரவை அமர்வின் போது இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ள ஆளுநர் சந்திரசிறியினது சிறப்புரையினை புறக்கணிக்க தான் முடிவு செய்திருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அனந்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இராணுவத் தளபதியாகவிருந்த வேளையிலேயே ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் போயிருந்தனர். குறிப்பாக கிருசாந்தி குமாரசாமி பாலியல் வன்புணர்வுக்கு உட்பட்டு கொல்லப்பட்டதும் இவரது காலத்திலேயே எனத் தெரிவித்த அனந்தி, இவர் தளபதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெண்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்ததாகவும் கூட்டிக் காட்டியுள்ளார். இவை தவிர இவரை வவுனியா தடுப்பு முகாம்களின் இணைப்பாளராக நியமித்த வேளையிலேயே முகாம்களிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வடிகட்டப்பட்டு காணாமல் போகவும் செய்யப்பட்டிருந்தனர். இவற்றை தாம் மறக்க முடியாதென அனந்தி சசிதரன் தெரிவித்தார். அத்துடன் முதலமைச்சரே ஆளுநரை வேண்டாம் என்று சொன்ன பின் அவரது உரையை கேட்கும் தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக மற்றொரு மாகாணசபை அங்கத்தவர் கே.சிவாஜிலிங்கம் தான் நாளைய ஆளுநர் சந்திரசிறியினது சிறப்புரையினை பகிஸ்கரிக்கப் போவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மாகாண சபையின் அங்கத்தவரான சுகிர்தன், ஆளுநரின் சிறப்புரையை புறக்கணிக்க உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட அவர் 'எல்லாவற்றிற்கும் மேலாக கூட்டமைப்பினரை அதன் தலைவர்களை நாய்கள் என பகிரங்கமாகப் பேசியவர் இந்த ஆளுநர். நடந்து முடிந்த தேர்தலில் கூட கூட்டமைப்பின் தேர்தல் தோல்விக்காக முழு அளவில் வேலை செய்தவர். பகிரங்கமாக மேடையேறி ஆளும் தரப்பின் வெற்றிக்காக பாடுபட்டவர். இவருக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டுமென்ற எந்த தேவையுமில்லை' எனக் கூறிய அவர் தானும் நாளைய தினம் ஆளுநர் சிறப்புரையினை பகிஸ்கரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இன்று வரை கூட்டமைப்பினை கிள்ளு கீரையாக கருதுபவர் சந்திரசிறி. அவருக்கு எமது நிலைப்பாட்டினை சொல்லி வைக்க எமது ஒற்றுமையான வெளிநடப்பு முக்கியமானதென மற்றுமொரு அங்கத்தவர் தெரிவித்த போதும் அவர் உடனடியாக தனது பெயரை குறிப்பிடவிரும்பவில்லை. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பல கூட்டமைப்பு அங்கத்தவர்களும் நாளைய ஆளுநரது சிறப்புரையினை பகிஸ்கரிக்கலாம் என தெரியவருகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

09 நவம்பர் 2013

கோமா நிலைக்குச் செல்லும் அபாயத்திலிருந்து பரமேஸ்வரன் காப்பாற்றப்பட்டார்!

தமிழினப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவிற்கு அங்கீகாரம் அளிக்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை மீளப்பெறுமாறு பிரித்தானியப் பிரதமரை வலியுறுத்தி பட்டினிப் போரில் ஈடுபட்ட சுப்ரமணியம் பரமேஸ்வரன் குறுகிய நேர இடைவெளிக்குள் கோமா நிலைக்கு செல்லும் அபாயத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். Parames-on-ambulanceகடந்த திங்கட்கிழமை முதல் இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாக தொடர்ச்சியாகப் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பரமேஸ்வரனின் உடல்நிலை கடும் குளிர், பலத்த காற்று வீச்சு, கன மழை ஆகியவற்றின் விளைவாக 07.11.2013 வியாழக்கிழமை மாலை முதல் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தது. வியாழக்கிழமை இரவு முதல் கடும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பரமேஸ்வரனின் உடல்நிலை இன்று வெள்ளிக்கிழமை காலை மேலும் மோசமடைந்தது. எனினும் தனது பட்டினிப் போரைத் தொடர்வதில் உறுதியாக இருந்த பரமேஸ்வரன், அவரது உடல்நலம் கருதிப் போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்திய தமிழின உணர்வாளர்கள் – செயற்பாட்டாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இந்நிலையில் இன்று நண்பகலை அண்மித்த வேளையில் பரமேஸ்வரனை செவ்வி காண்பதற்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்த பொழுது அவர் மயக்க நிலையை நோக்கிச் செல்லத் தொடங்கினார். param-1இதனையடுத்து விரைந்து செயற்பட்ட அங்கிருந்த தமிழின உணர்வாளர்கள், இலண்டன் முதலுதவிப் பிரிவினருக்கு அவசர தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு முதலுதவியாளர்களை பட்டினிப் போர் நடைபெறும் பகுதிக்கு வரவழைத்தனர். இதனையேற்றுத் துரிதமாக தலத்திற்கு விரைந்த இலண்டன் முதலுதவிப் பிரிவினர், பரமேஸ்வரனைப் பூர்வாங்கப் பரிசோனைக்கு உட்படுத்திய பின்னர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் போவதாக அறிவித்தனர். எனினும் காவுகட்டிலில் ஏற்றப்படும் பொழுது மீண்டும் பரமேஸ்வரன் மயக்கநிலைக்கு சென்றதை அடுத்து முதலுதவி வண்டிக்குள் வைத்து வண்டி நகர்ந்து கொண்டிருந்த பொழுதே அவருக்கு முதலுதவியாளர்களால் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் இலண்டன் சென்.தொமஸ் மருத்துவமனை நோக்கி விரைந்த இலண்டன் முதலுதவிப் பிரிவினர் பரமேஸ்வரனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். param-3அங்கு அவரை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்திய இரண்டு மருத்துவர்கள், அவரது குருதியில் சீனியின் மட்டம் 2.1 ஆக ஆபத்தான நிலையில் இருந்ததைக் குறிப்பிட்டதோடு, உரிய நேரத்திற்குள் அவருக்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்காத பட்சத்தில் அவர் கோமா நிலைக்கு சென்றிருக்கக்கூடும் அல்லது பாரிசவாதத்திற்கு ஆளாகியிருக்கக்கூடும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த 2009ஆம் ஆண்டு 23 நாட்களுக்குப் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டவர் என்ற வகையில் பரமேஸ்வரனின் உடல்நலம் மேலும் பட்டினிப் போராட்டங்களைத் தாங்கிக் கொள்ளும் நிலையில் காணப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டிய மருத்துவர்கள், இதன் காரணமாகவே ஐந்து நாட்களில் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் குறிப்பிட்டனர். இந்நிலையில் இனியும் பட்டினிப் போராட்டத்தில் பரமேஸ்வரன் ஈடுபடுவது அவரது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்றும் இரு மருத்துவர்களும் எச்சரித்தனர். இதனையடுத்து பரமேஸ்வரனின் அருகில் நின்றவர்கள் விடுத்த கோரிக்கையையும், மருத்துவர்களின் எச்சரிக்கையையும் ஏற்றுத் தனது பட்டினிப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குப் பரமேஸ்வரன் இணங்கினார். எனினும் மேலும் சில மணிநேரத்திற்கு அவரைத் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள், அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியதை அடுத்து இன்று இரவு அவரை வீடு செல்வதற்கு அனுமதித்துள்ளனர்.

யாழ்,பல்கலைக்கு விடுமுறை அறிவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு மட்டும் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட் கிழமையிலிருந்து டிசெம்பர் மாதம் 1ஆம் திகதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு சகல பல்கலைக்கழகங்களுக்கும் எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் எட்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. இருந்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அதிகநாட்கள் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான அறிவுறுத்தல் ஒவ்வொரு பீடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. இதற்கான காரணம் வெளிப்படுத்ததாத போதும் இந்த விடுமுறைக் காலத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் எவரும் பிரவேசிக்கக் கூடாது; என்ற அறிவுறுத்தலும் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளை 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் பல்கலைக்கழக விடுதியில் இருக்கும் மாணவர்கள் அனைவரையும் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

08 நவம்பர் 2013

அழகுராணிப் போட்டிக்கு சிறிலங்கா சொர்க்கபுரியல்ல!

இரு ஊடகர்களை இழந்து நிற்கும் பிரென்சு தேசத்துக்கு தங்கள் தோழமையினை தெரிவித்து ஒன்றுகூடிய பிரான்ஸ் தமிழர்கள், இசைப்பிரியா போல் பல தமிழ்பெண்களின் குருதிபடிந்த இலங்கைத்தீவானது, பிரென்சு அழகுராணிப் போட்டிக்கு சொர்க்கபுரியல்ல என முழக்கமிட்டுள்ளனர். 2014ம் ஆண்டுக்குரிய பிரான்ஸ் அழகுராணிப் போட்டியின் (Miss France 2014) அலங்கார அணிவகுப்புக்கு சிறிலங்கா தனது அனுசரணையினை வழங்கியுள்ள நிலையில், 33 பிரென்சு அழகிகள் 25க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் சகிகதம் சிறிலங்காவுக்கு பயணமாகவுள்ளனர். இந்நிலையில் அழகுராணிப் போட்டியின் அலங்கார அணிவகுப்புக்கு சிறிலங்கா சிறந்ததொரு தேர்வல்ல என்ற முழக்கத்துடன் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள AFP சர்வதேச செய்திநிறுவனத்துக்கு முன்னால் ஒன்றுகூடியிருந்தனர். தமிழர் தாயகத்தில் பெண்களின் நிலைகுறித்து சர்வதேச அமைப்புக்களினால் வெளியிடப்பட்ட கூற்றுக்களை மையக்கருவினைத் தாங்கிய வரைகலை அட்டைகள், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததோடு துண்டுப்பிரசுர பரப்புரையும் இடம்பெற்றிருந்தன. AFP செய்திநிறுவனத்தின் சர்வதேச செய்திசேவை விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி ஒன்றுகூடலுக்கான காரணத்தினை கேட்டறியும் பொருட்டு தமிழர் தரப்பு பிரதிநிதிகளை தங்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று உரையாடியிருந்தார். ஆபிரிக்காவின் மலி நாட்டில் தீவிரவாதிகளினால் இரு ஊடகர்களை இழந்து நிற்கும் பிரென்சு தேசத்துக்கு தோழமையினை பிரான்ஸ் தமிழ் சமூகத்தின் சார்பில் எடுத்துரைத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள், சிறிலங்கா அரச பயங்கரவாத்தினால் இசைப்பிரியா எனும் ஊடகரை தமிழர் தேசம் இழந்து நிற்கின்றது என் விடயத்தினை சுட்டிக்காட்டியிருந்தனர். பிரென்சு அழகுராணிப்போட்டிக்கான அலங்காரபவனி சிறிலங்காவில் இடம்பெறுவதன் ஊடா,க தன்மீதான இனஅழிப்பு புரிந்த தனது இரத்தம் தோய்ந்த முகத்தினை சிறிலங்கா மூடிமறைக்கின்றதென சுட்டிக்காட்டிய தமிழர் தரப்பு பிரதிநிதிகள், இவ்விவகாரத்தினை சிறிலங்கா செல்லும் 25க்கு மேற்பட்ட பிரென்சு ஊடகவியலாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கோரியிருந்தனர்.

07 நவம்பர் 2013

லண்டனில் உள்ள மகனைப்பார்க்க துடிக்கும் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்!

யாழ்ப்பாணம், கைதடி முதியோர் இல்லத்திலுள்ள தாயொருவர் இலண்டனில் பொறியியலாளராக கடமையாற்றும் தன் மகனை பார்க்க வேண்டுமென்று முதியோர் இல்ல அதிகாரிகள் மற்றும் உறவினர்களிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளார். கைதடி முதியோர் இல்லத்தில் கடந்த பத்து வருடங்களாக வசித்து வரும் வயோதிபத் தாயான பூவேந்திரம் தவபோசனம் (வயது 61) என்பவரே இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளார். இவர் நெல்லியடி, வதிரியைச் சேர்ந்தவராவார். இவர் தொடர்பில் தகவலளித்த கைதடி முதியோர் இல்ல அத்தியட்சகர் த.கிருபாகரன் கூறியதாவது, 'குறித்த பெண் திருமணமான ஒரு மாத காலத்தில் கணவனை இழந்ததாகவும் இவருக்கு ஒரே ஒரு மகன் இருப்பதாகவும் எமக்கு தெரிவிக்கப்பட்டது. கணவனின் இழப்பு காரணமாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 10 வருடங்களக்கு முன்னர் கைதடி முதியோர் இல்லத்தில் அவரது உறவினர்களால் அனுமதிக்கப்பட்டார். குறித்த பெண்ணின் மகன் உறவினர்களால் வளர்க்கப்பட்டு தற்போது அவர் லண்டனில் பொறியியலாளராக கடமை புரிகின்றார். இந்நிலையில், இவர் ஓரளவு மனநலம் தேறி பழைய நினைவுகளுக்கு திரும்பி தனது மகனின் பெயர் மற்றும் உறவினர்களின் பெயர்களை கூறி வருகின்றார். தற்போது அவர் தனது மகனை தேடுவதாகவும் மகன் தன்னை வந்து பார்ப்பாரா? என குறித்த தாய் பாசம் மேலிட்ட நிலையில் ஏங்கி அதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தருமாறும் எம்மிடம் கோருகின்றார். இதனால், கைதடி முதியோர் இல்லத்தில் வசிக்கும் தாயைப் பார்ப்பதற்காக அவரது மகன் எங்கு இருந்தாலும் இல்லத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று முதியோர் இல்ல அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் சிசுவை கொன்று புதைத்த தாய்!

பிறந்தவுடனேயே கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த ஆண் சிசுவொன்றின் சடலத்தினை வவுனியா, கல்மடு, பூம்புகார் பிரதேசத்திலிருந்து பொலிஸார் தோண்டி எடுத்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணியளவில் புதைக்கப்பட்ட இந்த சிசுவின் சடலம் இன்று பிற்பகல் பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிசுவைப் பிரசவித்த தாய் மற்றும் அப்பெண்ணின் தாயார் ஆகியோரே அச்சிசுவை கொன்று புதைத்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பூம்புகார் பிரதேசத்தைச் சேர்ந்த சிவகுமார் வேளாங்கண்ணி (வயது 25) என்ற பெண்ணே இந்த சிசுவை பிரசவித்துள்ளார். இப்பெண் திருமணமாகாதவர். கள்ள உறவில் உருவான அச்சிசுவை தனது தாயாரான தங்கவேலு காளியம்மா (வயது 63) என்பவருடன் இணைந்தே கொன்று புதைத்துள்ளார். சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சிவகுமார் வேளாங்கண்ணி இன்று அதிகாலை 4 மணியளவில் அவரது வீட்டு மலசலகூடத்துக்கு அருகில் வைத்து சிசுவை பிரசவித்துள்ளார். பின்னர் அவரே தான் பிரசவித்த சிசுவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அது தொடர்பில் தனது தாயாரான காளியம்மாவிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரும் இணைந்து தங்களது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்கருகில் சுமார் ஒன்றரை அடி ஆழத்தில் குழியொன்றை வெட்டி அதில் சிசுவின் சடலத்தை போட்டு புதைத்துள்ளனர். குழந்தையைப் பிரசவித்த வேளாங்கண்ணிக்கு அதிகளவில் இரத்தோட்டம் ஏற்பட்டதால் அவர் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து வைத்தியசாலை அதிகாரிகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அவரை விசாரித்ததில் உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து சிசுவைப் பிரசவித்த பெண் மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து சிசுவின் தாய் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

06 நவம்பர் 2013

சிங்களச்சிப்பாய்தான் இசைப்பிரியா பிடித்து செல்லப்படும் காணொளியை கொடுத்தார்!

இசைப்பிரியா 
இசைப்பிரியா இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படுகின்ற வீடியோவை இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரே தனக்குத் தந்தார் என அதன் தயாரிப்பாளரான சனல் 4 இயக்குநர் கெலும் மக்ரே அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இந்தக் காட்சிகளை ஏற்கனவே இலங்கை அரசு பார்த்திருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படும் வீடியோவை சனல் 4 தொலைக்காட்சி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. இசைப்பிரியா கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகளையும் கடந்த வருடம் சனல் 4 தொலைக்காட்சியே வெளியிட்டிருந்தது. இந்தக் காட்சிகள் மற்றும் இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் இரு ஆவணப் படங்களை தயாரித்து வெளியிட்ட கெலும் மக்ரேக்கு இந்தியா செல்வதற்காக வீசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியின் போது, இசைப்பிரியாவின் வீடியோ போலியானது என்றும் அது நாடகம் என்றும் இலங்கை அரசு மறுத்திருப்பது தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், எல்லாவற்றையும் எடுத்த எடுப்பிலேயே மறுக்கும் போக்கை இலங்கை அரசு கைவிட வேண்டும். இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வீடியோ காட்சிகளை இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவர் தனது நாட்டு அரசிடம் கொடுக்காமல் எங்களிடம் கொடுத்திருக்கிறார். இது, இலங்கை அரசு இந்தக் காட்சிகளை ஏற்கனவே பார்த்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. எல்லா வீடியோ காட்சிகளையும் பார்த்த பின்னர் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டதாகவே தோன்றுகின்றது. இது உண்மையில் சிக்கலான பிரச்சினை என்றும்
 குறிப்பிட்டுள்ளார்.

05 நவம்பர் 2013

பொன்காந்தன் விடுதலை!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரனின் செயளாலரான பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் (பொன்காந்தன்) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான அருணாசலம் வேலமாலிதன் ஆகியவர்கள் குற்றங்கள் நிருபிக்கப்படாத நிலையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொன்.காந்தன் அ.வேலமாலிதன் ஆகியவர்கள் சார்பில் சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி.தவராசா,கெலும் ஒபயசேகர மற்றும் கே.சயந்தன் ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்களின் குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன் இவர்கள் உண்மைக்கு புறம்பான வகையில் கைது செய்யப்பட்டமையால் வழக்கிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுதலையின் பின்னணியில் கைது செய்யப்பட்டவர்களிடம் இது வரை குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்பட்டிருக்கவில்லை. இக்கைதுக்கான காரணத்தை பொலிசார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. அத்துடன் வெடி பொருட்கள் ஆபாச பொருட்களை கைப்பற்றிய முறையில் குழப்பம் ஆகிய காரணங்கள் இவர்களது விடுதலையில் தாக்கம் செலுத்தின. அத்துடன்; உடல், உள ரீதியாக பொன்.காந்தன் பல சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில் இவர் தொடர்பில் சிரேஸ்ரசட்டத்தரணி கே.வி.தவராசா சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை கேட்டிருந்தார். இந் நிலையில் இவர்கள் இருவர் மீதும் வழக்குகள் ஏதும் தாக்கல் செய்யப்படாது கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி நிரோசா பெர்னான்டோ முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

04 நவம்பர் 2013

மாயாவின் இசை நிகழ்வில் ஜூலியன் அசான்ஜே!

இலங்கையை  பூர்வீகமாக கொண்ட பிரித்தானியாவின் பொப்பிசைக் கலைஞரான எம்.ஐ.ஏ என்று அழைக்கப்படும் மாயா (மாதங்கி) அருள்பிரகாசம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் ஆரம்பத்தில் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜே பிரதம பேச்சாளராக திரையில் தோன்றினார். நியூயோர்க் நகரின் டெர்மினல்-5 என்ற இடத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவினால் தேடப்பட்டு வரும் அசான்ஜே ஸ்கைப் மூலம் தோன்றி மாயாவுக்கு ஆதரவு வழங்கி உரையாற்றினார். அவர் அங்கு திரையில் தோன்றியது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்திலும் பிரமிப்பிலும் ஆழ்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இலங்கை அரசு தம்மை ஓர் தீவிரவாதியாக முத்திரை குத்த முயற்சிப்பதாக மாயா அருள்பிரகாசம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

03 நவம்பர் 2013

பரமேஸ்வரன் உண்ணாநிலை போராட்டம்!

சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி 04.11.2013 திங்கட்கிழமை முதல் தொடர் பட்டினிப் போராட்டத்தில் சுப்ரமணியம் பரமேஸ்வரன் குதிக்கின்றார். இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலமான 10 டவுணிங்க் வீதிக்கு முன்பாக திங்கட்கிழமை மாலை 5:30 மணிக்கு தனது உண்ணாநிலைப் போராட்டத்தை பரமேஸ்வரன் ஆரம்பிக்கின்றார். பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் முடிவை பிரித்தானியா மீளப்பெறும் வரை தொடரவுள்ள இவ் உண்ணாநிலைக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் இணைந்து அடையாள உண்ணாநோன்பை மேற்கொள்ளுமாறு பிரித்தானியாவாழ் தமிழீழ உறவுகளுக்கு பரமேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

வேறு வழியை பார்க்கப்போகும் சம்பந்தன்!

வலி.வடக்கு வீடழிப்பு விவகாரம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு அதனை நிறுத்துமாறு அவர் உத்தரவிட்ட பின்னரும் அது தொடர்கிறது. இதனால் நாம் வேறு வழியைத் தான் பார்க்க வேண்டும்'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் "தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலி.வடக்கில் வீடழிப்பை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவிடம் தொலைபேசி மூலம் கோரியிருந்தார். இதற்கமைவாக வீடழிப்பை நிறுத்துமாறு ஜனாதிபதி யாழ். மாவட்ட இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார் என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க சம்பந்தனுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். இதனையும் மீறி நேற்றும் வீடழிப்பு தொடர்ந்தது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறுகையில்,தொடர்ந்து வீடழிப்பு இடம்பெற்றால் தனக்கு உடனடியாக அறிவிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் என்னிடம் தெரிவித்தார். இதனடிப்படையில் இன்றும் (நேற்றும்) வீடழிப்பு நடவடிக்கைகள் தொடர்வதைத் தெரியப்படுத்த அவருடன் பலமுறை தொடர்பு கொண்ட போதும் அழைப்புக் கிடைக்கவில்ல. நாங்கள் எமது மக்கள் சார்பாக ஜனாதிபதியுடன் வேண்டுகோளை விடுப்பது கடமை. ஜனாதிபதியின் உத்தரவையும் மீறி அது நடந்தால் என்ன செய்வது? நாங்கள் வேறு வழியைத்தான் பார்க்க வேண்டும். நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.

02 நவம்பர் 2013

சோகமயமானது வடக்கு!

இறுதி யுத்தம் நடந்த வடபகுதியில் தீபாவளி தினம் சோக முகத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில தினங்களின் முன்னர் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட இசைப்பிரியா தொடர்பான வீடியோ வடக்கு மக்கள் மத்தியில் தீபாவளி தினமான இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு கொளுத்தி தீபாவளியைக் கொண்டாட வேண்டிய இளைஞர்கள் பலரும் குறித்த வீடியோக் காட்சியை கண்டு கதி கலங்கிப் போயுள்ளனர். வடக்கில் பட்டாசு கொளுத்தும் வெடிச்சத்தங்கள் எதுவும் கேட்கப்படவில்லை. புதிய ஆடை வாங்க முண்டியடிக்கும் மக்களை வடக்கு நகரங்களில் காணவும் கிடைக்கவில்லை. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் திரைப்படங்களில் நடித்தவருமான இசைப்பிரியா வன்னி மக்களுக்கு மிகவும் பரிச்சியமானவர். இவர் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட வீடியோ மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் காணாமல் போனவர்களின் வீடுகளில் அழுகையும் சோகமும் அதிகரித்துள்ளது. இறுதி யுத்தகளத்தில் தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்று அவர்கள் கொந்தளிக்கின்றனர். இன்றைய நாள் காணாமல் போன தமது பிள்ளைகளின் நினைவுகளை கிளறியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

01 நவம்பர் 2013

இராஜதந்திரம் வாக்களித்த மக்களை ஏமாற்றுவதல்ல!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தாம் இந்திய பிரதமரை மாநாட்டில் கலந்துகொள்ளும் வகையில் அழைக்கவில்லை என விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார். இந்திய ஊடகங்கள் தவறாக கற்பிதம் கொடுத்துள்ளன எனவும் கூறியுள்ளார். இது விக்னேஸ்வரனின் இரண்டாவது ஊடக விளக்கம் ஆகும். முன்னரும் சிங்களவரும் நாமும் சம்பந்திகள் எனவும் தமிழக தலைவர்கள் இந்த விடயத்தில் தலையைப்போடக்கூடாது என்றும் கூறி பின்னர் அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்தார். இப்போது இந்திய பிரதமரை தான் அந்தக் கருத்துபட அழைக்கவில்லை என கூறுகின்றார். நீண்ட அனுபவமும் மொழித்திறனும் இலங்கை இந்திய வரலாறும் அரசியல் நிலைப்பாடும் தெரிந்த விக்னேஸ்வரனுக்கு ஓர் அறிக்கை எப்படி கருத்துப்படும் கையாளப்படும் என தெரியாதா என்ன. இப்போது அவர் கொடுத்த விளக்கத்தைப் பாருங்கள். முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமருக்கு தனிப்பட்ட ரீதியில் நன்றியறிதலை தெரிவிக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இக்கடிதத்திற்கும் பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இலங்கைக்கு விஜயம் செய்யும் வேளையில் யாழ்ப்பாணத்திற்கு வரவேண்டும் என்று மன்மோகன்சிங்கிற்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அக்கடிதத்தில் பொதுநலவாய உச்சிமாநாடு பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மன்மோகன்சிங் இதுவரை இலங்கைக்கு வரவில்லை இப்போது பொது நலவாய மா நாட்டிற்கு வரவுள்ளதான சூழல் இருக்கின்றது. இந்த சூழலில் வந்தால் யாழ்ப்பானத்திற்கும் வாருங்கோ என எழுதினால் இதன் அர்த்தம் என்ன? ஏன் இந்த நன்றிக் கடிதத்தில் இதனைச்சேர்க்கவேண்டும்.? இந்த கடிதத்தினை மையமாக வைத்து தமிழக போராட்டங்களை கொச்சைப்படுத்தும் இந்திய நடுவண் அரசு என்ன கூறுகின்றது பாருங்கள். அதாவது மன்மோகன் சிங்கின் செயலர் இது பற்றி இன்று கூறுகையில் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் இந்திய பிரதமரை யாழ்ப்பாணத்துக்கு வருமாறு விடுத்த அழைப்பு கடிதம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அக்பருதீன், விக்னேஸ்வரனி
ன் கடிதம் கடந்த 28 ஆம் திகதி இந்திய பிரதமருக்கு கிடைத்ததாக தெரிவித்தார் இந்தநிலையில் பிரதமரின் இலங்கை பயணம் விக்னேஸ்வரனின் அழைப்பையும் மையமாகக்கொண்டு அமையும் என்று அக்பருதீன் தெரிவித்தார் விக்னேஸ்வரனின் இந்தக் கடிதம் சுயமாகவோ அல்லது கருத்து விளக்கம் தெரியாமலோ எழுதப்பட்டது அல்ல. இது இலங்கை இந்திய தலைவர்களால் திட்டமிட்டு எழுதி தருமாறு கேட்கப்பட்டது. தமிழக மற்றும் உலகத்தமிழர்களின் வேண்டுகோளை புறக்கணிப்பதற்கு விக்னேஸ்வரனின் இந்தக் கடிதம் ஒன்றே போதும் என்பதே டில்லியின் நிலைப்பாடு. கூடவே இதனூடாக ஈழத்தமிழர்களிற்கு இடையேயும், தமிழக-உலகத் தமிழர்களிற்கு இடையேயும் இடைவெளியினை ஏற்படுத்தும் ஒரு சதியாகவும் இந்த கடிதம் அமையலாம். இந்திய- சிறிலங்கா நலன்களுக்கு ஏற்ப செயற்பட்டுக்கொண்டு அதற்கு ராயதந்திரம் என கற்பிதம் கொடுத்து வருகின்றார் விக்னேஸ்வரன். உண்மையை ஏற்றுக்கொள்வது வேறு ஆனால் அரசல் புரசலாக கருத்துக்களைக் கூறி தனக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்குப் பெயர் ராஜதந்திரம் அல்ல. இவர் மட்டுமல்ல இவருக்கு ஆலோசனை கூறுபவர்கள் [முன்னாள் ஐ. நா. திட்ட ஊழியர்கள், அரச திணைக்களச் செயலர்கள்.] எல்லோரும் சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தில் வந்து தமது பதவி நீடிப்பிற்காக சிபார்சு செய்யுமாறு தவம் இருந்தவர்கள்தான். ஆனால் விடுதலைப்புலிகள் அதனைச் செய்யவில்லை. ஆகவே இவர்கள் இந்தியா, கொழும்பு கேட்டால் எதனையும் செய்யத் தயாராகவே உள்ளார்கள். ஆனால் வெளியாக செய்யமுடியாது இப்படித்தான் [மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியது போல] செய்வார்கள்.

இசைப்பிரியா பிடித்துச் செல்லப்படும் காட்சி!

பிரித்தானியாவை மையமாக கொண்டியங்கும் சனல் 4 ஊடகம் அவ்வப்போது இலங்கைப் போர்க்குற்றங்களை காணொளியாக அம்பலப்படுத்திவரும் இந்நிலையில் இன்றும் ஒரு சிறு காணொளியினை வெளியிட்டுள்ளது அதில் ஊடகவியலாளர் இசைப்பிரியா முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படும் காட்சி தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது.