நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
27 ஜூன் 2015
20 ஜூன் 2015
கம்(Hamm)காமாட்சி அம்பாள் நாளை இரதோற்சவம்!
ஜெர்மனியின் கம்(Hamm)மாநகரில் கோவில் கொண்டருளியிருக்கும் ஸ்ரீ காமாட்சி அம்பாள் தேர்த்திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை(21.06.2015)நடைபெற உள்ளது.பகல் 12மணிக்கு அம்பாள் தேரேறி புறப்படுவாள்.இவ்வாலயத்தின் தேர் உற்சவத்தை காண ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு வருகின்றனர்.அத்துடன் பிற மதத்தை சார்ந்தவர்களும் குறிப்பாக வெள்ளையின மக்களும் பெருமளவில் கலந்து சிறப்பித்து வருகிறார்கள்.அத்துடன் ஜெர்மானிய பாடப்புத்தகங்களிலும் கம் காமாட்சி அம்பாள் ஆலயம் இந்துக்களின் அடையாளமாக குறிப்பிடப்பட்டிருப்பது சுட்டிக்காட்டதக்கது.
19 ஜூன் 2015
பிரான்சில் சிங்கள அரச புலனாய்வாளர்கள் அடாவடி!
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரான்ஸ்
13 ஜூன் 2015
யாழ்,நீதிமன்ற தாக்குதலில் ஈபிடிபி?
யாழ்.நீதிமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஈபிடிபியின் முக்கிய கைகள் இருந்தமை தொடர்பான தகவல்கள் விசாரணைக் குழுவிற்கு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.கொழும்பில் இருந்து வருகை தந்துள்ள விசேட குற்றத்தடுப்பு காவல்துறைக்கே இத்தகவல்கள் கிடைத்துள்ளனவாம்.அவ்வகையில் ஈபிடிபி வசமுள்ள வேலணைப்பிரதேச சபையின் தலைவரான போல் என்றழைக்கப்படும் சி.சிவராசா உள்ளிட்ட வேறு சில கட்சியின் உறுப்பினர்களிடம்
மேற்படி வன்முறைச் சம்வங்களின் பின்னணி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் டக்ளஸின் வலது கையும் முன்னாள் யாழ்.மாநகர துணை முதல்வாரன றீகனையும் தேடி வலைவிரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கைதாகியுள்ள விஜயகாந்த் மற்றும் செந்தூரன் இருவரும் இத்தகைய பின்னணியினை கொண்டுள்ளனர்.
இதனிடையேகைது நடவடிக்கைகளை அடுத்து வன்முறைச்சம்பவங்களில் தொடர்புபட்டனரென அடையாளம் காணப்பட்ட பலர் தலைமறைவாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
05 ஜூன் 2015
புளியங்கூடல் அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம்!
புளியங்கூடல் ஊர்காவற்றுறை செருத்தனைப்பதியில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் சிறீ இராஜமகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 12ம்(12.06.2015)திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற அம்பாளின் அனுக்கிரகம் கூடியுள்ளது.(27.06.2015)சனிக்கிழமை தேர்த்திருவிழாவும்,(28.06.2015)ஞாயிற்றுக் கிழமை தீர்த்தோற்சவமும்,18ம் திருவிழாவாகிய திங்கட்கிழமை பூங்காவனத் திருவிழாவும் இடம்பெறும்.இதேவேளை"எனை ஆளும் என் அன்னை"எனும் ஒலிப்பேழை வெளியிடப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ் ஒலிப்பேழைகளை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
04 ஜூன் 2015
நாரந்தனையில் தொடரும் வாள்வெட்டு!
நாரந்தனையில் நேற்றுக்காலை மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் ஒருவரை வாளால் வெட்டியதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரு சமூகப் பிரிவுகளுக்கு இடையே கடந்த ஒரு மாத காலமாக நிலவும் பிரச்சினையே இந்த வாள்வெட்டுக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே மது போதையில் சென்ற நால்வர் ஊர்காவற்றுறைப் பகுதியில் வைத்து ஒருவரை வாளால் வெட்டினர்.
இதில் படுகாயமடைந்தவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
01 ஜூன் 2015
பெண்களுடன் சேஷ்டை விடுவோரைக் கைது செய்ய உத்தரவு!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)