பக்கங்கள்

25 ஏப்ரல் 2011

பான் கீ மூனை சந்தித்த உலகத்தமிழர் பேரவை.

நியூயோர்க் சென்றிருந்த உலகத்தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர் சுரேன் சுரேந்திரன் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் மேற்கொண்ட சந்திப்பு தொடர்பில் சிறீலங்கா அரசு விசனம் அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எந்த அரசையும் சாராத ஒரு அமைப்பின் உறுப்பினர் ஐ.நாவின் செயலாளர் நாயகத்தை சந்தித்தது தொடர்பில் ஆச்சரியம் வெளியிட்டுள்ள கொழும்பு ஊடகம், இந்த சந்திப்பின் பின்னனியில் சக்திவாய்ந்த நாடு ஒன்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதேசமயம், ஐ.நாவின் அறிக்கையை தொடர்ந்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிறீலங்காவுக்கு எதிரான பரப்புரைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். கடந்த வாரம் முழுவதும், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் போஃர் செய்தி நிறுவனம், அல்ஜசீரா செய்தி நிறுவனம் மற்றும் இந்திய ருடே நிறுவனத்தின் தொலைக்காட்சி நிறுவனம் என்பன சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன.
இதனிடையே, தமிழத் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாரம் சிங்கப்பூருக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்கா அரசுடன் நடைபெற்றுவரும் பேச்சுக்கள் தொடர்பில் அனைத்துலக அமைப்புக்களுடன் பேச்சுக்களை மேற்கொள்வதற்கே அவர்கள் அங்கு செல்வதாக தெரிவிக்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.