பக்கங்கள்

08 ஏப்ரல் 2011

படைச்சிப்பாயின் சடலம் காட்டுக்குள்ளிருந்து மீட்பு!

சிறீலங்கா இராணுவக் காவல்துறையினருக்கு பயந்து காட்டுக்குள் ஒளிந்துகொண்ட சிறீலங்கா இராணுவத்தில் இருந்து தப்பியோடிய சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுர மாவட்டத்தில் உள்ள கலன்பின்துனுவேவா பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறீலங்கா இராணுவத்தில் இருந்து தப்பியோடிய சிப்பாயை தேடி தினமும் இராணுவக் காவல்துறையினர் அவரின் வீட்டுக்கு செல்வதால். இரவு வேளைகளில் தினமும் காட்டுக்குள் தூங்கும் பழக்கத்தை கொண்டிருந்தார் குறிப்பிட்ட சிப்பாய். ஆனால் அவர் காட்டுக்குள் ஒளிந்துகொள்ளும் இடம் அவரின் தாயாருக்கு மட்டுமே தெரியும். வழமைபோல கடந்த புதன்கிழமை (06) இரவும் காட்டுக்குள் ஒளிந்துகொள்ளச் சென்ற சிப்பாய் காலை வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து அவரின் மறைவிடத்தை தேடிச் சென்ற தாயார் சிப்பாய் சடலமாக கிடப்பதை கண்டுள்ளார். அனில் சுதர்சனா (25) என்ற சிப்பாயே இறந்துள்ளார். குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் சிறீலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.