ராஜபக்சே, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை போர் குற்றவாளியாக அறிவித்து ஐ.நா சபை மூலம் தண்டனை வழங்கக் கோரி புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினரால் 26-04-2011 காலை 11 மணி அளவில் சென்னை நினைவரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் தென்கனல் தலைமை வகித்தார்,தோழர் மார்க்ஸ் சிறப்புரையாற்றினார்.
ஐ.நா.சபையே! உலகநாடுகளே!
இலங்கை அரசுடன் கூட்டுச் சேர்ந்து ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இந்திய அரசின் போர்குற்றத்தை மூடி மறைக்காதே!
இலங்கையும் – இந்தியாவும் போர்குற்றம் புரிந்த நாடுகள் என அறிவிப்பு செய்!
தேசிய விடுதலை இயக்கத்தையும் இனப்படுகொலை இலங்கை அரசையும் சமப்படுத்தி நாடகமாடதே!
ஈழத் தமிழின அழிப்பு போரை நடத்திய ராஜபக்சே – சோனியா – மன்மோகன்சிங் கும்பலை போர்குற்றவாளிகள் என அறிவித்து தண்டனை வழங்கு!
என்ற முழக்கத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றி ஆய்வு நடத்த ஐ.நா சபையில் வந்த கோரிக்கையை முறியடித்து இந்திய அரசு தமிழக மீனவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டும் தற்போது 4 மீனவர்கள் கழுத்தறுத்து கொல்லப்பட்டும் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய அரசு.
இவை இந்திய அரசின் விரிவாதிக்க நலனும் தமிழின அழிப்பு கொள்கையுமே காரணம்.
டெல்லியின் எடுபிடி கருணாநிதியோ தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக நாடகமாடுகிறார்
பாசிச ஜெயலலிதாவோ நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என அம்பலப்படுத்தி பேசினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.