பக்கங்கள்

06 மே 2011

ஆலய தீர்த்தக்கேணியில் விழுந்த சிறுவனை காப்பாற்றாது தடுத்த நிர்வாகம்.(மேலதிக செய்தி)

கடந்த 3 ஆம் திகதி அன்று
புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலய தீர்த்தக்கேணியில் 10 வயதுடைய
ஞாநேந்திரன் எழிலரசன் என்ற சிறுவன் தவறி விழுந்து உயிர் இழந்துள்ளார்,இவ்
பரிதாபகரமான மரணத்திற்கு ஆலய நிர்வாகத்தினரின் அசமந்தப்போக்கே காரணமென
புளியங்கூடல் மக்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் பறறி மேலும் தெரியவருவதாவது,
குறித்த தினம் அன்று காலை ஆலய தீர்த்தோட்சவம் இடம்பெற்று பிற்பகல் கொடியிறக்க
வைபவம் நிகழ்ந்து கொண்டிருந்தத வேளை குறித்த தீர்த்தக்கேணி அருகில் விளையாடி
கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவரான 10 வயதுடைய ஞாநேந்திரன் எழிலரசன் என்பவர்
பாதுகாப்பான தடுப்பு சுவர்கள் அறற ஆலய தீர்த்தக்கேணியில் தவறி
விழுந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக அப்பகுதியில் நின்ற சிலரால்
ஆலயத்திற்குள் நின்ற நிர்வாக சபையினரிடம் தெரிவிக்கப்பட்டு சிறுவனை உடனடியாக
காப்பாற்ற உதவி கோரப்பட்டது. அப்போது கொடியிறக்க வைபவம் இடமபெற்றுகொண்டிருந்த
படியால் ஆலய நிர்வாக சபையின் முக்கிய உறுப்பினர் ஒருவரால் ``கொடியிறக்கிய பின்பே
குழந்தையை தூக்கலாம்`` என தெரிவிக்கப்பட்டது.இதனால் காப்பற்ற யாரும் இன்றி நீரில்
தத்தளித்த குறித்த சிறுவன் நீரில் முழ்கி பரிதாபகரமாக உயிர் இழந்துள்ளார்.இது
சம்பந்தமாக ஆலய நிவாக சபையிடம் தட்டிக்கேட்க முற்பட்ட இளைஞர்கள் அச்சுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.
கடந்தகால போரினால் தந்தையை பிரிந்து
நிர்க்கதியான ஒரு குடும்பம் இன்று தனது பிள்ளைகளில் ஒன்றை இழந்து
பரிதவிக்கிறது.
``தனது பிள்ளை கேணியில் விழுந்திருந்தால் குறித்த ஆலய நிர்வாக சபை
உறுப்பினர் கொடி இறக்கிய பின்னா வந்து பிள்ளையை தூக்கி இருப்பார் ? ``என் அப்பகுதி
இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
குறித்த சிறுவன் கேணியில் வீழ்ந்தது தெரிந்திருந்தும், காப்பற்ற கூடிய
சந்தர்ப்பம் இருந்தும் காப்பாற்றாமல் கொடி இறக்குவதிலேயே குறியாய் இருந்த கோவில்
நிர்வாகத்தினர் கடந்த கால போரினால் தந்தை பற்றி தெரியாத நிலையில் தனது பிள்ளைகளை
காப்பாற்றி கொண்டுவந்து இன்று அநியாயமாக பறிகொடுத்திருக்கும் தாயின் புலம்பலுக்கு
என்ன பதில் சொல்ல போகிறார்கள்.....????????

2 கருத்துகள்:

  1. sillarai thayoli seruppala adikkanum ....ivangala mathiri alla ippo kanukku munnadi irukkum yuryai vida ivangalukku sami lodi atram than mukkiyama
    indru intha siruvanukku nalai avan kulanthaiyukku intha nilai vanthal than theriyum oru yurin mathippu,,,,,,
    100 periyar vanthalum ivangala thirutha mudiyathu

    பதிலளிநீக்கு
  2. Mathankal thondiyahtu,manitha neyathai valarpatharkaga.Anal Indu mthavathigal mathathai bayanpaduthi manitha neyathai kollugindanar.Ithu vanmayaga kandikathakkathu.sattapadi ivragal thandikapadavendum.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.