பக்கங்கள்

22 ஏப்ரல் 2011

நிபுணர் குழு அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டாம் என்கிறது ஸ்ரீலங்கா.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்பித்துள்ள அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டாம் என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.
சிறீலங்காவில் உள்ள அனைத்துலக தூதுவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பை தொடர்ந்து சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரீஸ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஐ.நாவின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை ஐ.நா பகிரங்கப்படுத்துவது சிறீலங்கா அரசு மே;றகொண்டுவரும் நல்லிணக்கப்பாட்டு நடவடிக்கைக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
அது ஐ.நாவுக்கும் பாதகமானதே. நிபுணர்களின் அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளக்கூடாது. அது ஒரு தவறான அறிக்கை. அறிக்கையை பகிரங்கப்படுத்துவதை எதிர்க்கும் நாம் எவ்வாறு அதனை ஊடகங்களுக்கு இரகசியமாக வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.