பக்கங்கள்

06 ஏப்ரல் 2011

ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்க முயலும் கோத்தபாய.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் முயற்சியில் இஸ்ரேலிய நிறுவன மொன்றுடன் கைகோத்துள்ளார். இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் ஸ்கைப் அழைப்புக்கள் பதிவுசெய்தல் மற்றும் ஒட்டுக் கேட்டல் என்பனவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நோக்கமாகும். ஆரம்பத்தில் அதற்காக சர்சஸ் எனப்படும் பிரபல கம்பியூட்டர் தொழில்நுட்ப நிறுவனமே அணுகப்பட்டுள்ளது. ஆயினும் பாதுகாப்புச் செயலாளரின் நீண்டகால நண்பரான அதன் உரிமையாளர் அதனை அடியோடு மறுத்துவிட்டார். ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்க முடியுமாயின் அதனை இதுவரை அமெரிக்கப் படையினர் விட்டுவைத்திருக்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ள அவர், வேண்டும் என்றால் ஸ்கைப் உரையாடல்களை தடைசெய்ய மட்டுமே முடியும் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆயினும் அதன் பின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச­ பிரஸ்தாப விடயத்திற்காக இஸ்ரேலின் தொழில்நுட்ப நிறுவனமொன்றை நாடியுள்ளார். பல நூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒப்பந்தத்தில் அதனை மேற்கொள்ள இணங்கியுள்ளனர். ஏனெனில் இதுவரை ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்பதற்கான வசதியை தொழில்நுட்பவியலாளர்கள் எவரும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.