பக்கங்கள்

15 டிசம்பர் 2018

மகிந்த இராஜினாமா செய்தார்!


மகிந்த ராஜபக்‌க்ஷஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். கொழும்பு விஜேராம இல்லத்தில் நடந்த மத வழிபாடுகளுக்கு பின்னர், மகிந்த ராஜபக்ஷ ராஜினாமா கடித்தில் கையெழுத்திட்டார். தேசிய ஸ்திரதன்மையை நிலைநாட்ட தனது தந்தை பதவியிலிருந்து ராஜிநாமா செய்ததாக பிபிசியிடம் தெரிவித்தார் நாமல் ராஜபக்ஷ. இதன்மூலம் இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றும் வரும் அரசியல் நெருக்கடி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிரதமர் யார்? இதேவேளை, ரணில் விக்ரமசிங்க பிரதமராக மீண்டும் டிசம்பர் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன பிபிசிக்கு தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையேயான டிசம்பர் 14ஆம் தேதி நடந்த தொலைபேசி உரையாடலுக்கு பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.திங்கட்கிழமை புதிய அரசாங்கம் பதவியேற்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக, இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்தார்.ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கமொன்றை ஏற்படுத்திக் கொள்ளும் எந்த எதிர்பார்ப்பும் தனக்கு இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தச் சந்திப்பின்போது தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.எனினும், ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கக்கூடாது என ஜனாதிபதி தெரிவித்தாரா எனக் கேட்டபோது, ''அப்படி கூறவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எந்தவொரு உறுப்பினரும் இதற்கு ஒத்துழைக்கக்கூடாது'' என்றே கூறியதாக லக்ஸ்மன் யாபா தெரிவித்தார்.இருப்பினும், மகிந்த ராஜப‌க்ஷ பதவி விலகுவது குறித்தோ, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பார் என்பது குறித்தோ ஜனாதிபதி செயலகமோ, ஜனாதிபதி ஊடகப் பிரிவோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

06 டிசம்பர் 2018

இரும்புக் கம்பியுடன் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள்!

மன்னார்- மனித புதைகுழி அகழ்வுப் பணி இன்று 112 ஆவது நாளாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற போது, இரண்டு கால்களும் இரும்பு கம்பியுடன் இறுக்கக் கட்டப்பட்ட நிலையில், இரண்டு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த வாரத்தில் மனித புதைகுழியில் இருந்து பெண் ஒருவரின் மோதிரம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது. சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் தடய பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை மன்னார் மனித புதைகுழியில் இருந்து 256 முழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 250 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

02 டிசம்பர் 2018

புலிகளின் புலனாய்வுப் பிரிவே பொலிஸாரின் கொலைக்கு காரணமாம்!


மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் நேற்று அதிகாலை இரண்டு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், இன்று காலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், நேற்று மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு தலைவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவருடன் பணியாற்றியவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடத்த விடாது தடுப்பதில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்ததாகவும் எனவே அவர்களைப் பழிவாங்கவே விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் பொலிஸார் இருவரையும் சுட்டுக்கொன்றதாகவும் பொலிஸ் தலமையகம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர் என பொலிஸ் தலமையகம் தெரிவித்துள்ளது. இக் கொலைக் குற்றச்சாட்டுத் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்காக மட்டக்களப்புக்கு சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்களப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, குறித்த நிகழ்வை நடத்துவதில் சிக்கல் தன்மை நிலவியமையினால், குறித்த இரண்டு பொலிஸ் அலுவலர்களும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸ்தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. 48 வயதுடைய குறித்த நபரை சந்தேகத்துக்குரியவர் என கிளிநொச்சி வட்டக்கச்சி - ஹட்சன் வீதியில் வைத்து நேற்றைய தினம் சிறீலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 நவம்பர் 2018

ரணில்,மகிந்த இருவரும் சாதாரண எம்பிக்களே!


ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டுமென ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “ ரணில் விக்ரமசிங்க தற்பொழுது ஓர் நாடாளுமன்ற உறுப்பினராவார். அதனால் அவர் அலரி மாளிகையை விட்டு வெளியேறிச் செல்ல வேண்டும்.ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டுமென ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “ ரணில் விக்ரமசிங்க தற்பொழுது ஓர் நாடாளுமன்ற உறுப்பினராவார். அதனால் அவர் அலரி மாளிகையை விட்டு வெளியேறிச் செல்ல வேண்டும். ரணில் விக்ரமசிங்கவும், மஹிந்த ராஜபக்சவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். ரணில் இன்னமும் தாம் பிரதமர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்.எனினும், மஹிந்த ராஜபக்சவோ ரணில் விக்ரமசிங்கவோ பிரதமர் கிடையாது. எனவே ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாது.இருவரும், ஓர் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராவார். எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளை மட்டுமே அனுபவிக்க முடியும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

14 நவம்பர் 2018

நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றம்!

Related imageபுதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். இன்று வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 04ம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியதாகவும், இன்போது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், அதன்படி பிரேரணைக்கு ஆதரவாக கிடைத்த பெரும்பான்மை வாக்குகளுக்கமைய பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பிரதி மற்றும் அண்மையில் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவை அரசியலமைப்புக்கு எதிரானது என்று 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கடிதம் என்பன ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் நாளை காலை 10மணிவரை ஒத்திவைப்பு!

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நவம்பர் 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்திருந்த நிலையில், இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடியது. இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. பிரதமர் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ச அமர்ந்திருந்தார். ஆளும்கட்சி வரிசையில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான, புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பெற்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆரம்பம் முதலே சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்தார். அதே கட்சியைச் சேர்ந்த எம்.பி. விஜித ஹேரத், அதனை வழிமொழிந்தார். நிலையியல் கட்டளைச் சட்டத்தின்படி, வாக்கெடுப்பை நடத்துவதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடத்துவதாக சபாநாயகர் அறிவித்ததையடுத்து, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் 10:27 மணியளவில் சபாநாயகர் நாடாளுமன்றத்தை நாளை காலை 10 மணிவரை ஒத்திவைத்தார்.

07 நவம்பர் 2018

சுமூகமான முடிவுகளை எடுக்க மைத்திரிக்கு கூட்டமைப்பு ஆதரவு!


நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தாம் சந்திப்பிற்குச் செல்லவுள்ளதாக 
பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கை வருமாறு, "தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், திரு செல்வம் அடைக்கலநாதன்பா.உ, திரு. த .சித்தார்த்தன் பாஉ, திரு. எம்ஏ.சுமந்திரன் பாஉ ஆகியோர் இன்று ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றது. நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போதுஅதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சில முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழுவினருக்கு விளக்கமளித்தார் இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினாலும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான காரணங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவினர் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். இத்தீர்மானங்கள் ஏற்கனவே பகிரங்கமாக முழு நாட்டிற்கும் உலகிற்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது என்றும் அத்தீர்மானங்களின் படியே தாம் செயற்படுவோம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கி கூறினார்கள். அனைத்து கட்சிகளினுடைய இணக்கப்பாட்டோடு நாட்டின் அரசியல் சூழ்நிலையை சுமூகநிலைக்கு கொண்டு வருவதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரோடு கலந்தாலோசித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை கொடுக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குழு குறிப்பாக அதிமேதகு ஜனாதிபதிக்கு உறுதியளித்தார்கள். இந்நிலையை விரைவாக அடைவதற்கு தற்போது யோசித்துள்ள திகதிக்கு முன்னதான ஒரு திகதியில் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்று ஜனாதிபதிக்கு ததேகூ வலியுறுத்தியது. இவ்வேண்டுகோளை தான் கவனமாக ஆராய்வதாக ஜனாதிபதி உறுதியளித்தார்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

01 நவம்பர் 2018

வடக்கு கிழக்கு இணைப்பு,சமஷ்டி நான் இருக்கும்வரை சாத்தியம் இல்லை -மைத்திரி!


ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால், தாம் உடனடியாகப் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நண்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால், தாம் உடனடியாகப் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று சிறீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.மைத்திரிபால சிறிசேன நேற்று நண்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். ''நான் இருக்கும் வரை வடக்கு, கிழக்கு இணைப்பும் சமஷ்டியும் சாத்தியமில்லை. அதை அடைய வேண்டும் எனில் அவர்கள் என்னை கொலை செய்ய வேண்டும்.ஆனால் சமஷ்டி தொடர்பிலும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலும் சிலர் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சிறந்த புரிதல் ஏற்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி இருவரும் விவாதித்துள்ளோம். எனவே எதிர்காலம் குறித்து அச்சம் தேவையில்லை” என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.

27 அக்டோபர் 2018

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவை என்கிறது ரணில் கட்சி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு மிக முக்கியமானது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென பிரதமராக நியமக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தானே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தற்போது ரணில் - மகிந்த தரப்பினர் அரசியல் காய்நகர்த்தல்களை மும்முரமாக முன்னெடுத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் பங்கு வகிக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் உத்தியோகப்பூர்வ முடிவை கட்சி இன்று சனிக்கிழமை அறிவிக்கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இதுவரை எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கவில்லை எனவும், உரிய நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்து அறிவிப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவை எடுப்பதாக அக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கச் செய்து அதிர்ச்சி அரசியல் நகர்வை முன்னெடுத்துள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.இலங்கைப் பிரதமரின் உத்தியோகபூர்வமாக வாசஸ்தலமான அலரி மாளிகையில் இன்று காலை வரை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் குழுமியுள்ளனர். அலரி மாளிகையின் சுற்றுச்சூழலில் அமைதியான நிலையே காணப்படுகிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் ஆசனங்களின் விபரங்கள்

ஐக்கிய தேசிய முன்னணி - 106 (ரணில் தரப்பு)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 96 (மகிந்த - மைத்திரி தரப்பு)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 16

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 6

ஈ.பி.டி.பி. - 1

சபாநாயகர் மொத்தம் : 225 நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை நிரூபிக்க 113 பேர் ஆதரவளிக்க வேண்டும். ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் 6 உறுப்பினர்கள் இருக்கின்றனர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 7 உறுப்பினர்கள் இருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அனைத்து தரப்பிலும் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாகவும், அது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடவுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, சட்ட ஆலோசனைகளின்படி அமையும் என சபாநாயகரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பக்கசார்பற்ற முறையில் தனது நிலைப்பாடு அமையும் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நன்றி:பிபிசி தமிழ்

24 அக்டோபர் 2018

விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி!

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சிங்கள முரண்பாடு 2019 உடன் நூற்றாண்டை எட்டுகின்றது. ஆனாலும் அதற்கான அடிப்படை காரணங்கள் ஏதுமே மாறவில்லை. நாங்கள் முன்னெடுப்பது தற்பாதுகாப்பிற்கான போராட்டம். அதனை சோர விடாது தொடர்ந்தும் முன்னெடுப்போம். எமது பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த சிங்கப்பூர் இப்போது எட்ட முடியாத இலக்கை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்க தென முதல் அமைச்சர் தனது நல்லூர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். நல்லாட்சி என்பது ஆட்சி மாற்றமேயன்றி தமிழ் மக்களிற்கு தீர்வை தரவில்லை. அதிகாரமற்ற மாகாண சபையில் எங்களால் செய்ய முடிந்தமை பற்றி நேற்று பேசியிருந்தேன். எங்களுக்கு தேவை சலுகையல்ல.உரிமையே எங்கள் தேவையெனவும் முதலமைச்சர் தெரிவித்தார். வடக்கு ஆளுநர் முதலமைச்சர் நிதியத்தை முடக்கி விட்டு இப்போது இலண்டன் சென்று புலம் பெயர் உறவுகளிடம் பிச்சை கேட்கிறார். என்னிடமுள்ள நான்கு தெரிவுகள் பற்றி கூறியிருந்தேன். வீட்டே செல்வது, வேறு கட்சியில் இணைவது என்பது பொருத்தமில்லாது போய்விட்டது. அவ்வகையில் கைப்பொம்மையாக கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுவது சாத்தியமற்றதாகி விட்டது. தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து மக்கள் இயக்க பாதையும் சில சில காரணங்களால் சாத்தியப்படாதுள்ளது. அகிம்சை வழி எமது போராட்டம் பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியது தெரிந்ததே. அதிலும் ஒரு சில வாக்குகளால் முறையற்று வந்த சிலர் தற்போது என்னை ஏதும் செய்யவில்லையென குற்றஞ்சாட்டுகின்றனர். அவ்வாறு 9 வாக்கு பெற்று வந்த கட்சியுடன் இப்போது கூட்டமைப்பு கூட்டு வைத்துள்ளது. எமது போராட்டத்தை பயங்கரவாத போராட்டமென காண்பிக்க கை கொடுத்த இதே தரப்புக்களே இப்போது கூட்டு சார்ந்து அரசியல் பாதையில் பயணிக்கின்றனர்.வலிவடக்கில் துண்டு காணிகளை விடுவித்து விட்டு முல்லைத்தீவில் மாவட்டத்தையே சுருட்டி வருகின்றனர். அதனை கூட்டமைப்பு தலைமை வாய் மூடி பேசாதிருக்கின்றது. மன்னார் புதைகுழி பற்றி வாயே திறக்க கூட்டமைப்பு தான் பெறுகின்ற சலுகைக் கு விசுவாசமாகவே பேசாதிருக்கிறது. அரசியல் கைதிகள் விடுதலைக்கு வாய் திறக்க முடியாதிருக்கிறது .அதனால் தான் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளேன். உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகளது ஆதரவுடன் களமிறங்குகிறேன். எனது மக்களே எனது பயணத்தை தீர்மானிப்பர். தமிழ் தேசிய சிந்தனை சார்ந்த அனைவரையும் இணைத்து பயணிப்பேன். ஆனாலும் கூட்டமைப்பை உடைத்ததென்ற பெயரை விரும்பவில்லை. ஆனால் கூட்டமைப்பே தனது நேர்மையற்ற அரசியலால் என்னை தனித்து அரசியல் பயணததை முன்னெடுக்க வழிகோலியிருக்கின்றது.என்றும் நீதியரசர் விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

22 அக்டோபர் 2018

படையதிகாரியை திருப்பி அனுப்பும் ஐ.நாவின் முடிவிற்கு யஸ்மின் சூக்கா வரவேற்பு!

Image result for yasmin sookaஇலங்கை படையதிகாரி லெப்.கேணல் கலன அமுனுபுரவை மாலியிலிருந்து திருப்பியனுப்புவதற்கு ஐ.நா எடுத்துள்ள தீர்மானத்தை சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா வரவேற்றுள்ளார். சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரான யஸ்மின் சூக்கா இலங்கை படையதிகாரி தொடர்பான விவகாரம் குறித்து அறிக்கையொன்றை விடுத்துள்ளார் அமைதிப்படை தொடர்பான திணைக்களத்திற்கு இலங்கையின் படையதிகாரி அமுனுபுர தொடர்பாக நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் ஐநா அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளமை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம். 2009 யுத்தத்தில் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இன்னமும் தெரியாத நிலை காணப்படுகின்றது. இதுவரை எவரும் இதற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படவில்லை. ஐநாவின் இந்த சிறிய நடவடிக்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களிற்கு என்றோ ஒரு நாள் தங்களிற்கு நீதி கிடைக்கும் என்ற சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தும். யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இனிமேலும் ஐ.நாவின் கௌரவாமான பதவிகளை வகிக்க முடியாது என்ற செய்தியை வலுவான செய்தியை இந்த நடவடிக்கை தெரிவிக்கின்றது என்பது குறித்து எந்த வித சந்தேகமும் இல்லை. யுத்தக்குற்றவாளிகள் எதிர்காலத்தில் ஐ.நாவின் கடுமையான கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது என்ற செய்தியையும் இந்த நடவடிக்கை தெரிவிக்கின்றது. 2009 இல் இடம்பெற்றவைகளில் இருந்து தான் விடுவிக்கப்பட்டுள்ளதாக நாடகமாடுவதற்காக ஐ.நாவின் அமைதிப்படை நடவடிக்கைகளை இலங்கை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க கூடாது. மூன்று வருடங்களிற்கு முன்னர் இலங்கை ஐ.நா மனித உரிமை பேரவையில் தீர்மானமொன்றிற்கு இணை அனுசரனை வழங்கியதுடன் கலப்பு நீதிமன்றமொன்றை உருவாக்குவதாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளை யுத்தக்  குற்றங்களிற்காக விசாரணை செய்வதாகவும் வாக்குறுதி வழங்கியது. இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை இன்னமும் நிறைவேற்றவில்லை. 2009 இல் அமுனுபுரவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சவீந்திர டி சில்வா தற்போது இலங்கை படைகளின் மனித உரிமை விவகாரங்களிற்கு பொறுப்பாக செயற்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இவரே படையினர் வெளிநாடுகளில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் அது குறித்து விசாரணை செய்கின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

16 அக்டோபர் 2018

யாழில் ஊடகவியலாளர்களை சந்தித்தார் பாரதிராஜா!


ஈழத்தில் நடந்த போராட்டத்தில் இந்திய அரசாக இருக்கட்டும் எந்த அரசாக இருக்கட்டும் அவர்கள் உறுதுணையாக இருந்து செயற்பட்டதில்லை. தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாட்டில் இருந்து குரல் கொடுக்கிறார்களே ஒழிய அதை அவர்கள் அரசியல் போராட்டமாக நினைக்கிறார்கள். ஒரு இனப்போராட்டமாக மொழிப் போராட்டமாக இந்திய அரசு நினைப்பதில்லை என்று இயக்குநர் சிகரம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 
ஈழத்தில் நடந்த போராட்டத்தில் இந்திய அரசாக இருக்கட்டும் எந்த அரசாக இருக்கட்டும் அவர்கள் உறுதுணையாக இருந்து செயற்பட்டதில்லை. தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாட்டில் இருந்து குரல் கொடுக்கிறார்களே ஒழிய அதை அவர்கள் அரசியல் போராட்டமாக நினைக்கிறார்கள். ஒரு இனப்போராட்டமாக மொழிப் போராட்டமாக இந்திய அரசு நினைப்பதில்லை என்று இயக்குநர் சிகரம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தென்னிந்திய சினிமா இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 'இந்தக் காலச்சூழலில் ஈழம் பற்றி படம் எடுத்தால் கூட என்ன சொல்லுவார்கள் என்றால் இந்திய இராணுவம் இங்கே வந்தது. ஈழத் தமிழர்களுக்கு உறுதுணையாக இல்லை அப்படி சொல்லியாகணும் அதை நியாயப்படுத்தி சொன்னால் அதை ஒத்துக்கமாட்டான். சென்சார் அதை தூக்கிவிடும். அந்த அரசு ஆளுகின்ற வரை விரோதமான செயல்களை நான் வெளிப்படுத்தும் போது அந்தந்த பகுதிகளை தூக்கிவிடுவான். நானும் மொட்டையாக படம் சொல்லணும். தலைவர் பிரபாகரனை பார்த்தேன் என்று சொல்லும் போது இவனுக்கு தலைவன் பிரபாகரனா? என்று மாறுபட்ட கண்ணோடு என்னைப் பார்த்து என் செயல்களை எல்லாம் வகுத்துப் பார்த்து என்மீது ஒரு கண் வைத்திருப்பான். நான் நல்லது சொன்னாலும் அதை வெட்டிவிடுவான் ஆளுகின்ற அரசு. உங்களால் உங்கள் கதையை படம் எடுக்க முடியுமா? இலங்கை அரசு அதை வெட்டிவிடும். அதே மாதிரி தான் இதுவும். ஈழத்தில் நீங்கள் சந்திக்காத பிரச்சினைகள் இருக்காது. உங்கள் பிரச்சினையை வைத்தே ஆயிரக்கணக்கான படங்களை எடுக்க முடியும். தொழில்நுட்பம் கடந்த காலத்தில் நீங்கள் வளர்ச்சியடைவதற்கான சூழல் இல்லை. அறிவும் மூளையும் உலகத்தில் உள்ள தமிழனுக்கு ஒன்றுதான் வாய்ப்புகளும் வசதிகளும் உங்களுக்கு இல்லாத காரணத்தால் எல்லா கற்பனை வளங்களை உள்ளே வைத்துவிட்டு நீங்கள் தேங்கிக்கிடக்கிறீர்கள். ஈழத்தமிழன் நினைத்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம். உலகம் முழுவதும் ஸ்தாபித்துள்ளான் ஈழத்தமிழன். இலங்கை வானொலியைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். மிகப்பெரிய இலக்கியவாதி இங்கிருந்து வந்தவன். பாலுமகேந்திரா மிகப்பெரிய ஒளிப்பதிவாளர் இங்கிருந்து வந்தவர். எந்தெந்தக் காலம் அந்தந்தக் காலத்துக்கு என்னை மாற்றிக்கொண்டிருக்கிறேன். காலமாற்றத்துக்கு ஏற்ப சிந்தனைகள் மாறும் சூல்நிலைகள் மாறும் என்றார்.

13 அக்டோபர் 2018

நாங்கள் போறம் நீங்களும் வாங்கோ-மாணவர்களின் நடைபவனி!


தமிழ் அரசியல் கைதிகள் இதற்கு முன்னர் முன்னெடுத்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை வாக்குறுதி வழங்கி, நிறுத்திய தமிழ் அரசியல்வாதிகளின் தவறை தாமும் இழைக்கப் போவதில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் இதற்கு முன்னர் முன்னெடுத்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை வாக்குறுதி வழங்கி, நிறுத்திய தமிழ் அரசியல்வாதிகளின் தவறை தாமும் இழைக்கப் போவதில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி இன்று அனுராதபுர சிறைச்சாலைக்கு முன்பாக நடைபெறவுள்ள போராட்டத்தில் பலர் பங்கேற்பதாக தமக்கு உறுதி வழங்கியுள்ளதாகவும் யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கே.கிருஷ்ணமேனன் கூறியுள்ளார். அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலை நோக்கி நடைபவனியை ஆரம்பித்தனர். நாங்கள் போறம் நீங்களும் வாங்கோ என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடைபவனியின் நான்காம் நாள் பயணம் நேற்று மதவாச்சி ரம்பேவ பகுதியை சென்றடைந்துள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்காமல் அரசியல் பிரச்சினையாக பார்த்து அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதே பல்கலைக்கழக மாணவர்களது கோரிக்கை என நடைபயணத்தை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய செயலாளர் ஜக்ஸன் லீமா கருத்து வெளியிட்டுள்ளார் இன்று காலை மதவாச்சியிலிருந்து அனுராதபுரம் நோக்கி தமது நடைபவனியை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் கே.கிருஷ்ணமேனன் தெரிவித்துள்ளார்.

06 செப்டம்பர் 2018

நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி,எடப்பாடியை சந்திக்கிறார் அன்னை அற்புதம்மாள்!

Perarivalan mother Arputham Ammal express happy 7 தமிழர் விடுதலை தொடர்பான தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார். இதேபோல நளினியின் தாயார் பத்மாவும், மகிழ்ச்சி வெளிப்படுத்தினார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.இது தொடர்பாக, அற்புதம்மாள் கூறியதாவது: ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. 28வது ஆண்டாவது, உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைப்பதாக கூறியது மகிழ்ச்சி. ஜெயலலிதா, இவர்கள் விடுதலை தொடர்பாக இருமுறை அறிவித்தார். எனவே உடனடியாக தமிழக அரசு, எனது மகனை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கைவிடுக்கிறேன். முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சரை இன்று அல்லது நாளை நான் சந்தித்து, கோரிக்கைவிடுப்பேன். விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் பரிந்துரை செய்ய கோரிக்கைவிடுப்பேன். இவ்வாறு அற்புதம்மாள் தெரிவித்தார்.நளினியின் தாய் பத்மா: ஒரு கோடி குடம் பாலை தலையில் ஊற்றியதை போல எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 28 வருட காலம் அவர்கள் பட்ட ரணம் கொஞ்சமில்லை. ஒவ்வொரு நாளும் கண்ணீராக சிந்தி கொண்டு இருந்தேன். புள்ளைங்க வரணும், புள்ளைங்க வரணும் என ஏங்கினேன். என் பிள்ளை மட்டுமல்ல 7 பிள்ளைகளும் வெளியே வர வேண்டும். 28 வருடம் சிறையில் வாடியுள்ளனர். இதைவிட வேறு ரணம் என்ன உள்ளது. இதைவிட தண்டனை என்ன உள்ளது? இவ்வாறு பத்மா தெரிவித்தார்.

12 ஆகஸ்ட் 2018

புளியங்கூடல் மக்கள் ஒன்றிய ஒன்றுகூடல் சிறப்புற வாழ்த்துகள்!

புளியங்கூடல் மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் ஒன்றுகூடல் நிகழ்வு இன்று நடைபெறும் நிலையில் எம் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கின்றோம்.வருடந்தோறும் இந்த ஒன்று கூடலை மிகவும் சிறந்த முறையில் நடாத்திவரும் இலட்சுமணபிள்ளை சிவசோதி,மற்றும் ஊர் உறவுகள் அனைவருக்கும் புளியங்கூடல்.கொம் குழுமம் பாராட்டுதல்களை தெரிவிப்பதுடன்,உலகப்பரப்பெங்கும் பரந்து வாழும் புளியங்கூடல் உறவுகள் இதை முன்மாதிரியாகக் கொண்டு தங்களுக்குள் தொடர்புகளை பேணி ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்ற பேரவாவையும் முன் வைக்கின்றோம்.விழா சிறப்புற அமைய ஊர் உறவுகள் சார்பில் எம் மகிழ்ச்சிகர வாழ்த்துக்கள்.

11 ஆகஸ்ட் 2018

தமிழகப் பொலிஸாரின் அடாவடி..திருமுருகன் காந்தி சிறையில் அடைப்பு!

Image result for thirumurugan gandhiதிருமுருகன் காந்தியை கைது செய்வது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியும், வேறு ஒரு வழக்கில் தமிழக போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஸ்டெர்லைட் ஆலை, 8 வழிச்சாலை உள்ளிட்ட விவகாரங்களுக்கெல்லாம் எதிராக குரல் கொடுத்து வருபவர். சில சமயங்களில் மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த முனையும் தமிழக அரசையும் விமர்சித்து காட்டமாக பேசி வருபவர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் திருமுருகன்காந்தி மீது உள்ளது.இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதியும் ஐநா மனித உரிமை மாநாட்டில் பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்தும் பேசியிருந்தார். இந்த பேச்சு சமூகவலைதளங்களிலும் வெளியானது. அதனால் தமிழக போலீசார் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு ஒன்றினை பதிவு செய்ததுடன், அவர் தலைமறைவாக இருக்கிறார் என்றும் தெரிவித்து வந்தது.ஆனால் நேற்று முன்தினம் பெங்களூரு வந்த அவரை தமிழக போலீசார் விமான நிலையத்திலேயே கைது செய்து, சென்னை கூட்டி வந்தனர். நேற்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அவரை அடைக்க வேண்டும் என மனுவும் தந்தனர். அப்போது திருமுருகன் காந்தி தரப்பில் வக்கல் பெரியசாமி ஆஜராகி, "தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த ஒன்றுதான் அதைத்தான் அவர் பேசி உள்ளார். தேசதுரோக வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப கூடாது" என்றார்.உடனே அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஐநாவில் திருமுருகன் காந்தி என்ன பேசினாரோ அந்த கருத்துக்களை எழுத்து வடிவில் நீதிபதியிடம் தந்தார். அதனை படித்து பார்த்த நீதிபதி, "இதில் எந்த தேசதுரோகமும் இல்லையே? எந்த அடிப்படையில் இப்படி ஒரு வழக்கை பதிவு செய்துள்ளீர்கள்? ஐநாவில் பேசியதற்கு இங்கே எப்படி வழக்கு போடுவது? எந்த அடிப்படையில் அவரை சிறைப்பது?" என்று சரமாரியாக அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார். இதனையடுத்து திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்கவும் நீதிபதி மறுத்துவிட்டார்.நீதிபதி இப்படி கூறியதும் போலீசார், கைது செய்த 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தலாம் என்ற நடைமுறை உள்ளதால், அதன் அடிப்படையில் திருமுருகன் காந்தியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு அனுமதி அளித்த நீதிபதி, 24 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்திவிட்டு, அவரை விடுவித்து விட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைதொடர்ந்து போலீசார் திருமுருகன் காந்தியை எழும்பூர் கமிஷனர் அலுவலகம் அழைத்து சென்றனர். அப்போது அவரிடம் விசாரணை நடைபெற்றது.தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றதாக ஒரு வழக்கு திருமுருகன்காந்தி மீது உள்ளதால், அந்த வழக்கில்தான் அவரை கைது செய்து உள்ளோம் என போலீசார் தெரிவித்தனர். அதனால், போலீஸாருடன் திருமுருகன் காந்தி வாதம் செய்தார். இருப்பினும் போலீஸார் அவரை கைது செய்வதாக கூறி சைதாப்பேட்டை கோர்ட்டில் இன்னொரு நீதிபதியான அங்காளபரமேஸ்வரி முன்பு ஆஜர்படுத்தினர். அவர் திருமுருகன் காந்தியை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து திருமுருகன் காந்திைய போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர்.

28 ஜூலை 2018

கருணாநிதியின் உடல்நிலை குறித்து தவறாகப் பதிவிடவேண்டாம்-சீமான்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவிடக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவில் இருந்து அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரிசையாக அரசியல் தலைவர்கள் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்தநிலையில் சமூக வலைத்தளங்களில் சிலர் அவர் உடல்நிலை மோசமாக இருக்கும்போது கூட அவருக்கு எதிராக கருத்துக்களை உமிழ்ந்து வருகிறார்கள். சில பாஜக, நாம் தமிழர் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருக்கு அறிவுரை வெளியிட்டு இருக்கிறார். அதில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பேஸ்புக் உள்ளிட்ட எந்த சமூக இணையதளங்களிலும் எதிர்மறை கருத்துகளை நாம் தமிழர் கட்சியினர் பதிவிடக்கூடாது. பதிவிட்டால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும். அவர் உடல்நிலை தேறி மீண்டும் அரசியல் தளத்தில் பணியாற்ற வேண்டும், என்றுள்ளார்.

கருணாநிதியின் உடல்நிலை மோசம்,தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!

Police protection increased in TN as Karunanidhi admitted in hospital திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தமிழகம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நிலை தற்போது மோசமாகி உள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் செய்யப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனையில் 500க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு தொண்டர்கள் குழுமுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கலைஞர் மருத்துவமனையில் இருப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுப்பில் உள்ள காவலர்கள் அனைவரையும் பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலும், திருக்குவளை கிராமத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. பதட்டத்தை தணிக்கவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் விரிவான பாதுகாப்பு அளிக்கப்படுவதாக போலீஸ் கூறியுள்ளது.

பழைய விடையங்களை மறந்துவிடுமாறு மஹிந்தவிடம் கோரினேன்-சம்பந்தன்!


புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தாம் ஒத்துழைப்புக் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்  அவர் இதனை குறிப்பிட்டுள்ளர்.புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தாம் ஒத்துழைப்புக் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளர். அண்மையில் கொழும்பில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் சம்பந்தன் ஆகியோர் சந்தித்து பேசியிருந்தனர். இந்த சந்திப்பு குறித்து ஊடகவிலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த இரா.சம்பந்தன், “அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொழும்பில் சந்தித்து பேசியிருந்தேன். நான் அவர்களை சந்தித்து பேசியிருந்தது உண்மை. இந்த சந்திப்பின் போது பல விடயங்கள் குறித்து பேசியிருந்தோம். தனது அரசாங்க காலத்தில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை வழங்க விரும்பியதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.அந்த காரியங்களை செய்ய முடியாமல் போனமைக்கு பல காரணங்களையும் கூறியிருந்தார். இந்நிலையில், பழைய விடயங்களை மறந்து விடுமாறு நான் அவரிடம் கோரினேன். தற்போது புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படுகின்றது. அதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. அந்த முயற்சிக்கு எதிர்ப்பு வெளியிடாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அனைவரினதும் அவசியம். உங்களுடைய ஆதரவு மிகவும் முக்கியம். அதனை நீங்கள் வழங்க வேண்டும் என அவரிடம் கோரினேன். நாடு தற்போது அடைந்திருக்கும் நிலையிலிருந்து மீட்கப்பட வேண்டுமாக இருந்தால் அது அத்தியாவசியமான ஒன்று. அந்த விடயத்தில் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். தான் அதைப்பற்றி சிந்திப்பதாக சொல்லியிருந்தார். மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நாங்கள் யாருடைய பகைமையையும் சம்பாதிக்க விரும்பவில்லை” என இரா. சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.

26 ஜூலை 2018

தமிழ் தேசியத்தை இல்லாதொழிக்கும் முயற்சியில் பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டமைப்பு!

ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலில் மீண்டும் கொண்டு வரவுள்ள அரசியலமைப்பை நிராகரிக்க தமிழ் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக விளக்கமளிக்க நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 'புதிய அரசியல் அமைப்பிற்கான முயற்சிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு, ஒற்றையாட்சி அரசியலமைப்பை வலியுறுத்தி தமிழ் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டு ஆதரவு அளிப்பதற்கான நிலமையைக் காட்டுவதற்காக முயற்சிகள், கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் போது கூட்டமைப்பிற்கு கிடைத்த தோல்வியின் பின்னர் கைவிடப்பட்ட நிலையில், மீளவும் அரசியலமைப்பு தொடர்பாக ஆட ஆரம்பித்து விட்டார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிமைப் போராட்டத்திற்கு மாறான அமைப்புக்களை ஒருங்கிணைத்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு மட்டுமல்ல. எதிர்காலத்தில் தமிழ் தேசிய நீக்கத்தினைச் செய்வதற்கான முடிவிற்கும் வருகின்றார்கள். இலங்கையில் உள்ள பேரினவாத கட்சிகள் மட்டுமன்றி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டீ.பி , புளொட் உள்ளிட்ட தமிழ் கட்சிகள் இவ்வாறு செயற்படுவதாக சுட்டிக்காட்டி வந்துள்ளோம். மஹிந்த ராஜபக்ஷ சிங்கள பேரிவாதத்தினைப் பேசும் பேரினவாதி என்ற வகையில், மஹிந்த ஆட்சியில் இருந்த போது, தமிழ் தேசிய நீக்கத்தினை செய்ய முடியாது என்ற பிரச்சினை இருந்ததினால், மஹிந்த ராஜபக்ஷ சீனா சார்ந்த போக்குடையவர் என்ற காரணத்தினாலும், மஹிந்தவை அகற்றி, தமிழ் தேசிய கூட்டமைப்பினை மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் மக்கள் தமிழ் தேசிய கோட்பாடுகள் அனைத்தையும் கைவிட்டு, ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அடிப்படை திட்டம். தமிழ் தேசிய கூட்டமைப்பில், இரா.சம்பந்தன் தலைமையில், தேசியவாதி இல்லாத ஒருவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இணைத்து தமிழ் தேசியத்தினை நீக்குவதற்கான பங்களிப்பைச் செய்வதற்காக சுமந்திரன் இணைக்கப்பட்டுள்ளார். சுமந்திரன் அடிப்படையில் தமிழ் தேசியவாதி அல்ல. அவர் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர். சுமந்திரனை வல்லரசுகளும், ஐக்கிய தேசிய கட்சியும், சிங்கள தேசிய நலன்சார்ந்த தரப்புகளும் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் ஒத்துழைப்புடன், தமிழ் தேசியத்தினை நீக்குவதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. அதன் ஒரு பிரதிபலிப்பு தான் கடந்த காலங்களில் வெளியாகிய புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கைகள். புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையினை சுட்டிக்காட்டியே கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தோற்கடிக்கக் கூடியதாக இருந்தது. தமிழ் தேசியத்தினை நீக்குவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. அவற்றினை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒற்றையாட்சியை மீளக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் கடந்த இருவாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பை சிங்கள தேசியவாதத்தின் அங்கமாக தமிழ் தேசியத்தினை நீக்குவதற்கு பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, ஒற்றையாட்சி மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ ஆணித்தரமாக பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு என்பது ஒரு ஒற்றையாட்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் எனப் பல தடவைகள் தெரிவித்து வந்தோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து, ஒற்றையாட்சிக்கான ஒரு அரசியலமைப்பினையே உருவாக்குகின்றார்கள். மஹிந்த அணியினர் தமது அரசியலுக்காகவே, அரசியலமைப்பை எதிர்க்கின்றார்கள் என பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்தோம். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது கூறிய அனைத்து விடயங்களும் இன்று அம்பலமாகியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றார்கள் என்பதனை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை மற்றும், பிரதி சபாநாயகர் போன்ற விடயங்கள் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனைய அரசியல்கட்சிகளும் மஹிந்த ராஜபக்ஷ சீன சார்ந்தவர் என்பதற்காக எதிர்க்கின்றார்களே தவிர, மஹிந்த அணி மீண்டும் அரசியலுக்கு வந்தால், அரசியலமைப்பை ஒற்றையாட்சிக்குள் கொண்டு வருவதற்கு முனைகின்றதுடன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரனிடம், நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலிற்குள் செயற்பட வேண்டாம், எங்களுடன் ஒத்துழைத்தால், ஐக்கிய தேசிய கட்சியிடம் கேட்கும் கோரிக்கைகளை தாங்கள் செய்யத் தயார் என்ற கோணத்தில் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தனிடம் தெரிவித்திருக்கின்றார். தமிழ் தேசிய நீக்கத்தினை செய்வதற்கு 2009 ஆம் ஆண்டு செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுத்தது மட்டுமன்றி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக தமது விடயங்களை நிறைவேற்றினால், சிங்கள மக்கள் மத்தியில், இரு கட்சிகளையும், நிலை நிறுத்த முடியும் என்ற கோணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது. இந்த உண்மைகளை தமிழ் மக்கள் புரிந்து கொண்டால், மீண்டும் ஒற்றையாட்சியை நிறைவேற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிகளை நிராகரிக்க வேண்டும் என்பதுடன், மஹிந்த ராஜபக்ஷவே அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளும் நிலமையில் இருக்கின்றார் எனின், தமிழ் தேசியத்திற்கு மாறான அரசியலமைப்பு என்பதனை மக்கள் உணர்ந்து விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

20 ஜூலை 2018

சிறையில் இருந்து வெளியே வந்தார் சீமான்,வாசலில் அமோக வரவேற்பு!

சென்னை-சேலம் 8 வழிச்சாலை குறித்த பொதுமக்களிடம் கருத்து கேட்ட நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.சென்னை-சேலம் 8 வழி சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் நிலத்தை கையகப்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாய நிலங்களை அழிக்கும் இந்த திட்டத்திற்கு அதிமுக, பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்த நிலையில் நேற்று முன்தினம் சேலம் அருகே உள்ள கூமாங்காடு என்ற பகுதிக்கு சென்ற சீமான், அந்த பகுதி மக்களிடம் சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டம் குறித்து கருத்து கேட்டார். அப்போது திடீரென அங்கு வந்த மல்லூர் போலீசார் சீமானை கைது செய்து மாலை வரை திருமண மண்டபத்தில் வைத்து பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சீமான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதனால் இன்று காலை அவர் சேலம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சேலம் சிறை வாசலில் அவரை நாம் தமிழர் கட்சியினர் சிறப்பாக வரவேற்றனர்.

18 ஜூலை 2018

நாம் தமிழர் சீமான் திடீர்க் கைது!

Seeman arrested near Salem சென்னை-சேலம் நடுவே அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து கருத்து கேட்பதற்காக கூமாங்காடு என்ற இடத்திற்கு சீமான் சென்றபோது, அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசியிருந்தார் சீமான். இதற்காக அவர் மீது ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எனவே, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்தார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. சேலத்தில் ஒரு வாரமாக தங்கியுள்ள சீமான், தினமும் காலை 10 மணிக்கு ஓமலூர் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில்தான், இன்று பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கூமாங்காடு என்ற இடத்திற்கு சென்ற சீமான், சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். அப்போது திடீரென ஓமலூர் போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து தனியார் திருமண மண்டபத்தில் சீமான் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, முன்னாள் எம்எல்ஏ பாலபாரதியை இதுபோன்ற காரணத்திற்காக காவல்துறை கைது செய்திருந்தது. மக்களை தூண்டும் விதமாக செயல்படுவதாக காவல்துறை குற்றம்சாட்டி பாலபாரதியை கைது செய்திருந்தது. இதேபோன்ற காரணத்திற்காகவே சீமானையும் கைது செய்துள்ளனர் போலீசார்.

14 ஜூலை 2018

திருக்குறள் நூலை வைத்து உறுதிமொழி எடுத்த கனடாத் தமிழன்!

கனடாவின் ஒன்ராரியோ பாராளுமன்றம் உத்தியோகபூர்வமாக யூலை 11ஆம் திகதி ஆரம்பித்துள்ள நிலையில் அதற்கு யூன் 7ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்காபுரோ ரூச்பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளையவர் விஜய் தணிகாசலம் யூலை 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொண்டார். தாங்கள் விரும்பிய புனித நூலை முதன்மைப்படுத்தி பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் வாய்பபைப் பயன்படுத்தி தமிழ் மறையாம் திருக்குறளை முதன்மைப்படுத்தியே அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். பெரும் சவால் நிறைந்த மேற்கத்திய அரசியல் அரங்கில் தனது உரிமைகளை சரிவரப்பயன்படுத்தி அவர் தனது பதவிப்பிரமாணத்தை மேற்கொண்டதையிட்டு பலரும் மகிழ்ச்சியும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளனர்.

08 ஜூலை 2018

எம் இனத்திற்காக போராடிய தலைவன் பிரபாகரன்-விஜயகலா!


எத்தகைய தடைகள் வந்தாலும், எம் இனத்திற்காக போராடிய தலைவன் பிரபாகரனை ஏற்றுக் கொள்வதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எத்தகைய தடைகள் வந்தாலும், எம் இனத்திற்காக போராடிய தலைவன் பிரபாகரனை ஏற்றுக் கொள்வதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று உரையாற்றியதால் பதவியிழந்த விஜயகலா மகேஸ்வரன் , ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார். “எனது மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய கடமை எனக்கு உள்ளது. மக்களினால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அப்படி செய்ய முடியாமல் போனால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் வரப்பிரசாதங்களை மீற வேண்டிய நிலை ஏற்படும். எனது மனதில் உள்ள வேதனையை கூற எனக்கு உரிமை உள்ளது. ஊடகங்கள் ஊடாக தான் அந்த பிரச்சினை வெளியே வருகின்றது.எனினும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஊடகத்திற்கு முன்னால் இந்தப் பிரச்சனையை கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. இந்த விடயம் தொடர்பில் நட்புறவுடனேயே நான் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்தேன். எனினும் ரஞ்சன் ஸ்பீக்கரில் போட்டு ஊடகத்திற்கு முன்னால் வெளிப்படுத்தினார் என்று அதுவரை எனக்கு தெரியாது. இது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உள்ள உரிமை மீறலாகும். அவர் எனக்கு துரோகம் செய்து விட்டார். பெண் இனத்திற்கு துரோகம் செய் துவிட்டார். ஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது. அவர் அந்தளவு கொடூரமானவர் இல்லை. நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ அவர் எம் இனத்திற்காக போராடினார் என்பதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அவர் இருந்த காலத்தில் எங்களுக்காக போராடிய தலைவராகும். அவர் வரலாற்றை எதிர்வரும் பரம்பரை ஆய்வு செய்யும். தெற்கில் ஹிட்லர் ஆட்சியே இடம்பெறுகின்றது. வடக்கில் எம்மை வாக்குகளுக்காக மாத்திரமே வைத்துள்ளனர். எனினும் ஹிட்லரையும் பிரபாகரனையும் தராசில் வைக்க முடியாது. அவர் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்றே போரிட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

28 ஜூன் 2018

சுழிபுரம் சிறுமி படுகொலை!நீதி கோரி மக்கள் போராட்டம்!


மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட சந்தேகநபர்களை நீதிக்கு புறம்பாக பொலிஸார் விடுவித்ததைக் கண்டித்தும் மாணவியின் படுகொலைக்கு நீதி கேட்டும், இன்றும் நாளையும்  போராட்டங்கள் நடத்த சுழிபுரம் காட்டுப்புலம் மக்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட சந்தேகநபர்களை நீதிக்கு புறம்பாக பொலிஸார் விடுவித்ததைக் கண்டித்தும் மாணவியின் படுகொலைக்கு நீதி கேட்டும், இன்றும் நாளையும் போராட்டங்கள் நடத்த சுழிபுரம் காட்டுப்புலம் மக்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணம் முழுவதும் கடையடைப்பு நடத்தி மாணவியின் படுகொலைக்கு நீதிகோர வேண்டும் என காட்டுப்புலம் அபிவிருத்திச் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது - 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார். சம்பவத்தையடுத்து சிறுமியின் உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நால்வர் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் இருவர் பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என ஒருவரை மட்டும் பிரதான சந்தேகநபராக குறிப்பிட்ட வட்டுக்கோட்டை பொலிஸார், ஏனைய ஐந்து பேரையும் பொலிஸ் பிணையில் விடுவித்தனர். சந்தேகநபர்கள் 6 பேரையும் தாங்களே பிடித்துக் கொடுத்ததாக குறிப்பிடும் காட்டுப்புலம் மக்கள், நீதிக்கு புறம்பாக 5 சந்தேகநபர்களை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தாமல் பொலிஸார் விடுவித்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். பொலிஸாரின் இந்தச் செயற்பாடு தமக்கு அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர். இந்த நிலையில் பொலிஸாரின் செயற்பாட்டை கண்டித்தும் மாணவியின் படுகொலைக்கு நீதிகேட்டும் சுழிபுரம் சந்தியில் இன்று காலை 7 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் சிறுமியின் படுகொலைக்கு நீதிகேட்டு வடக்கு முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்க காட்டுப்புலம் கிராம அபிவிருத்திச் சங்கம் கேட்டுள்ளது. இதுதொடர்பில் அனைத்து தரப்புகளுடனும் இன்று பேச்சுக்கள் நடத்தப்படும் எனவும் அந்தச் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதேவேளை, ஆர்ப்பாட்டம் நடத்துவர்கள் பொலிஸாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப வேண்டாம் என சிலரிடம் தனிப்பட்ட முறையில் கோரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. வட்டுக்கோட்டை பொலிஸார் தொடர்பில் காட்டுப்புலம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவு அறிக்கையிட்டுள்ளதையடுத்தே பொலிஸ் அதிகாரி ஒருவர் அரசியல் தரப்புகளிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

24 ஜூன் 2018

கனடாவில் அபிசா யோகரெத்தினம் பெற்றுள்ள கெளரவம்!


கனடா ரொரன்றோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய University Health Network எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அதியுயர் பாராட்டினையும் அதன் நிர்வாக சபை உறுப்பினர் பதவியையும் ஈழத்தைச் சேர்ந்த அபிசா யோகரத்தினம் என்ற  பெற்று சாதனை படைத்துள்ளார்.
கனடா ரொரன்றோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய University Health Network எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அதியுயர் பாராட்டினையும் அதன் நிர்வாக சபை உறுப்பினர் பதவியையும் ஈழத்தைச் சேர்ந்த அபிசா யோகரத்தினம் பெற்று சாதனை படைத்துள்ளார். அபிசா யோகரத்தினம் தனது முதற்பட்டப்படிப்பில் முதன்மை தேர்ச்சி பெற்று அதனூடாக மருத்துவக் கல்விக்கான வாய்ப்பை ரொரன்றோ பல்கலைக்கழகத்தில் பெற்று அதன் முதல் ஆண்டிலேயே மீண்டும் முதன்மை நிலையை எய்தி அதியுயர் விருதைப் பெற்றுள்ளார். அது மட்டுமல்ல தனது ஆராய்ச்சிகளினூடாக ரொரன்ரோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய யூனிவசிற்றி கெல்த் நெற்வேக் எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அதியுயர் பாராட்டைப் பெற்று அதன் நிர்வாகசபை உறுப்பினர் பதவியையும் தனதாக்கியுள்ளார்.

14 ஜூன் 2018

புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்று தீர்ப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பில்லை என சுசிற்சர்லாந்து நடுவண் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றமே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை எனத் தீர்பளித்தது. 


குற்றம் சுமத்தப்பட்டோர்கள் அனைவரும் குற்றவியல் அமைப்பு, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.


 சுவிஸ் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த திரு.யோகேஸ், திரு.கவிதாஸ், திரு.சிவலோகநாதன், திரு.குமார் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கிலிருந்து விடுவிக்கபட்டதுடன் அர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் சுவிஸ் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பொறுப்புகளில் இருந்த மூவரான திரு.குலம், திரு.அப்துல்லா, திரு.மாம்பழம் ஆகியோர் மீது வங்கி மோசடி தொடர்பில் அறிந்திருந்து உதவியதற்காகத் தண்டனைப் பணம் செலுத்தவும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்படும் தடுப்பும் வழங்கப்பட்டது.


 அரச தரப்பு வழக்கறிஞர் திருமதி நோத்தோ இலங்கையிலும், சுவிசிலும் விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு என்பதற்கு தேடி அளித்த சான்றுகள் அனைத்தையும் சுசிற்சர்லாந்து நடுவண் அரசின் குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்தது.


 சுவிஸ் நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் இலங்கையிலும் அதற்கு அப்பால் எந்த நாட்டிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்வேளையிலும் குற்றவியல் அமைப்பாக செயற்பட்டதற்கோ அல்லது குற்றவியல் செயலை ஊக்குவித்ததற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தெளிவாக விளக்கத்தையும் அளித்துள்ளது.

ஞானசார தேரருக்கு ஆறு மாதச் சிறை!

பௌத்த பிக்குவுக்கு சிறைபொதுபல சேனா என்ற அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, ஆறு மாத கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று, வியாழக்கிழமை, தீர்ப்பளித்தது.இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு தலா ஆறு மாதம் வீதம் ஒரே நேரத்தில், இந்தத் தண்டனையை கழிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார். காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலியகொடவின் மனைவி சந்தியா எக்நெலியகொடவிற்கு அவதூறாக பேசி, அச்சுறுத்தல் விடுத்ததாக இந்த பௌத்த பிக்கு மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 2016ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி, ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வைத்தே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதவான், வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்தார்.குற்றவியல் சட்டம் 386 மற்றும் 486 என்ற பிரிவுகளின் கீழ் துன்புறுத்தியமை, அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு இந்தத் தண்டனையை விதிப்பதாக நீதவான் அறிவித்தார். ஒரு குற்றத்திற்கு ரூபாய் 1,500 வீதம் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு ரூபாய் 3,000 அபராதம் விதிக்கப்பட்டது. சந்தியா எக்நெலியகொடவிற்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார். இந்த நட்ட ஈட்டை வழங்காவிடின், அதனை அபராதமாக செலுத்த வேண்டும் என நீதவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 3 மாத கால சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதவான் குறிப்பிட்டார். நீதவான் தீர்ப்பை வாசித்த பின்னர், குற்றவாளிக்கூண்டில் நின்ற ஞானசார தேரர், தனது கருத்தைத் தெரிவிக்க சந்தர்ப்பமளிக்குமாறு கூறியதுடன் ''நீதித்துறை மட்டுமே இருக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.இதற்கு வாய்ப்பளிக்க முடியாது எனக் கூறிய நீதவான், தேவையெனில், தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்யுமாறு கூறினார். இதன்பின்னர், ஞானசார தேரரை சிறைச்சாலை பேருந்தில் ஏற்ற அழைத்துவந்தபோது அங்கு பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட தேரர் பலர் கூடியிருந்ததுடன், அங்கு சற்று பதற்றமும் ஏற்பட்டது. பொது பலசேனா என்ற அமைப்பும், அதன் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் இலங்கையில் சர்ச்சைக்குரிய தரப்பாகவே கடந்த காலம் முதல் பார்க்கப்பட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

நன்றி!பிபிசி தமிழ்

12 ஜூன் 2018

பாவப்பட்ட பணத்தை தவராசாவின் வீட்டின் முன் எறிந்த மாணவர்கள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய் நிதியை மீளத் தருமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கோரியிருந்த நிலையில்,கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் சேகரித்த 7 ஆயிரம் ரூபாய் பணத்தை, அவரது வீட்டின் முன்னால் எறிந்து விட்டுச் சென்றுள்ளனர். கடந்த மே மாதம் 18 ஆம் திகதி,முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாண சபையினால் நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்வுக்காக மாகாணசபை உறுப்பினர்களிடம் 7500 ரூபாய் பணம் அறவீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை எனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை அமர்வில் கேட்டிருந்தார். ஆனாலும் அந்த பணத்தையும் சேர்த்தே, நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தவராசாவுக்கு வழங்குவதற்காக ஒரு ரூபாய் வீதம் 7 ஆயிரம் பேரிடம் சேகரிக்கப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு இன்று காலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வடமாகாணசபைக்கு வந்திருந்தனர்.எனினும் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அந்த பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இதன் பின்னர் முதலமைச்சரிடம் அந்த பணத்தை வழங்க மாணவர்கள் முயன்றபோது, அவைத்தலைவருடன் பேசிவிட்டு மீண்டும் மாணவர்களுடன் பேசிய முதலமைச்சர், மேற்படி விடயம் தொடர்பாக கடந்த அமர்வில் பேசிவிட்டோம் ஆகவே இந்த பணத்தை பெற்றுக்கொள்ளமாட்டோம்.ஆகவே நீங்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் பேசுங்கள் என முதலமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் அப்பணத்தை பொட்டலமாக கட்டிய மாணவர்கள் ‘பாவப்பட்ட பணம்’ என எழுதி எதிர்க்கட்சி தலைவர் தவராசாவின் வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இல்லாத நிலையில், பூட்டப்பட்டிருந்த வீட்டுக்கு முன்னால் எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் இன்றைய மாகாணசபை அமர்விலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவ அதிகாரியை தோளில் சுமந்தது தமிழரின் அடிமைப்புத்தி!

விஸ்வமடு பகுதியில் இராணுவ அதிகாரி கேணல் பந்து இரத்னபிரியவிற்கு கண்ணீர் மல்க முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பொது மக்கள் பிரியாவிடை கொடுத்திருப்பது எமது மக்களின் சபலபுத்தியைத் தான் காட்டுகின்றது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ' நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டு இராணுவ அதிகாரியை தோளில் சுமந்து கொண்டு செல்வது தமிழ் மக்களின் அடிமைப்புத்தியைத்தான் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றது. இவர் நல்லவர், அவர் நல்லவர் என சாதாரண கிராம மக்கள் இதை செய்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் முன்னாள் போராளிகள் இதனை செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என வெடித்துச் சிதறி வீரச்சாவை தழுவிக்கொண்ட ஐம்பதாயிரம் மாவீரர்களுக்கு செய்கின்ற துரோகமாகத்தான் நான் இதை கருதுகின்றேன். அவர் ஒரு அதிகாரி, நல்லவராக அல்லது நேர்மையாக நடந்து கொள்ளலாம், ஆனால் நீங்கள் இவ்வாறு செய்வதென்பது ஒட்டுமொத்த இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்துகின்ற பாரிய பிரச்சினைக்கு இட்டுச்செல்லும். ஒரு தனி மனிதன் நல்லவராக இருக்கலாம், தளபதியாக இருக்கலாம், பிராந்திய தளபதியாக இருக்கலாம் அது வேறு விடயம். ஆனால் அதற்காக தமிழ் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு, விழா எடுத்து, தோளில் சுமந்துகொண்டு செல்வது என்பது எங்களுடைய அடிமை புத்தியைத்தான் காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

10 ஜூன் 2018

திருமலை அரசியற்றுறை பொறுப்பாளர் ஐங்கரன் மாரடைப்பால் சாவடைந்துள்ளார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளர் திரு ஐங்கரன் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் சாவடைந்தார். மூதூர் கிழக்கில் பலநூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் விளங்கிய ஐங்கரன் , தான் நேசித்த மக்களுக்காக சேவை ஆற்றிய ஒருவராவார் .

நன்றி:பதிவு

08 ஜூன் 2018

ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் தமிழர் வெற்றி!


கனடா- ஒன்ராரியோ மாகாண சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக  ஈழத்தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.  ஒன்ராரியோ மாகாண சட்டமன்றத்துக்கு நேற்று தேர்தலில், இதில், ஸ்காபரோ ரூஜ் பார்க்  தொகுதியில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் வெற்றி பெற்றுள்ளார்.
கனடா- ஒன்றாரியோ மாகாண சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக ஈழத்தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். ஒன்றாரியோ மாகாண சட்டமன்றத்துக்கான நேற்றைய தேர்தலில் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு, 16,224 வாக்குகள் கிடைத்துள்ளன. தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பெலிசியா சாமுவெல், 15,261 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம். 963 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் தணிகாசலம் வெற்றி பெற்றுள்ளார். லிபரல் கட்சி வேட்பாளர் சுமி சான் 8785 வாக்குகளையும், பசுமைக் கட்சியின் வேட்பாளர் பிரியன் டி சில்வா 1014 வாக்குகளையும், பெற்றுள்ளனர். இதற்கிடையே இதுவரை வெளியான முடிவுகளின்படி, ஒன்ராரியோ சட்டமன்றத் தேர்தலில், முற்போக்கு கொன்வர்வேட்டிவ் கட்சி 76 ஆசனங்களைக் கைப்பற்றி முன்னணியில் உள்ளது. தேசிய ஜனநாயக கட்சி 39 ஆசனங்களைக் கைப்பற்றி இரண்டாமிடத்திலும், லிபரல் கட்சி 7 ஆசனங்களுடன் மூன்றாமிடத்திலும், பசுமைக் கட்சி 1 ஆசனத்துடன் நான்காமிடத்திலும் உள்ளன.

01 ஜூன் 2018

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவம்!

புளியங்கூடல் செருத்தனைப்பதியில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ இராஜமகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 08.06.2018 காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இனிதே நடைபெறவுள்ளது.21.06.2018 வியாழக்கிழமை 14ம் நாள் வேட்டைத் திருவிழாவும் 23.06.2018 சனிக்கிழமை 16ம்  நாள் தேர்த் திருவிழாவும் 24.06.2018 ஞாயிற்றுக்கிழமை 17ம்  நாள் தீர்த்தோற்சவமும் இடம்பெற்று 25.06.2018  திங்கட்கிழமை 18ம்  நாள் பூங்காவனத் திருவிழாவுடன் அம்பாள் ஆலய இவ்வாண்டின் வருடாந்த திருவிழா நிறைவு பெறவுள்ளது.விழா தொடர்பான அறிக்கை ஆலய அறங்காவலர் சிவஞானச்செல்வம் செந்தூரன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

26 மே 2018

மத்திக்கு விசுவாசம் காட்டும் வட மாகாண அலுவலர்கள்!

அண்மையில் திறக்கப்பட்ட உணவகத்திற்கு ஹெல பொஜூன் என்ற சொல்லின் தமிழாக்கமான “ஈழ உணவகம்” என்று பெயர் வைக்கலாம் என மத்திய அமைச்சரொருவருக்கு கூறிய போதும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணம் சம்பந்தமான பூர்வாங்க தேவைகள் மதிப்பீடு பணிக்கூடம் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முதலமைச்சர், “எமது மாகாண அலுவலர்கள் சிலரின் நடவடிக்கைகளை நான் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றேன். மத்தி என்ன நினைக்குமோ, மத்தியை ஆத்திரமூட்டினால் கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடுமோ, மத்திக்கு ஏற்றவாறு நாங்கள் நடந்து கொள்ள வேண்டும், அவ்வாறு நடந்தால் தான் சலுகைகளை பெறலாம் என்ற மனோநிலையில் அவர்கள் நடந்து வருகின்றார்கள். உதாரணத்திற்கு ஒரு உணவகம் அண்மையில் திறக்கப்பட்டது. அதற்கு தெற்கத்தைய உணவகங்களின் சிங்களப் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மத்தி எதிர்பார்த்தது. ஹெல பொஜூன் என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. நான் அதற்கு சம்மதிக்கவில்லை. வேண்டுமெனில் ஹெல பொஜூன் என்ற சொல்லின் தமிழாக்கத்தைப் பாவிக்கலாம் என்றேன். அதாவது ஹெல - ஈழம், பொஜூன் - உணவகம் என்றவாறு ஈழ உணவகம் என்று பெயர் வைக்கலாம் என்று மத்திய அமைச்சருக்குக் கூறினேன். அதற்கு சம்மதிக்கவில்லை. அவ்வாறாயின் எமது வட மாகாண அதிகாரத்தின் கீழ்வரும் உணவகங்கள் போன்று அம்மாச்சி என்று பெயர் சூட்டுவோம் என்றேன். அதற்கும் எதுவும் கூறவில்லை. உணவகத்தைத் திறக்கவும் வரவில்லை. உணவகம் திறக்கப்பட்டு விட்டாலும் எமது அலுவலர்கள் இதுவரையில் அதற்குப் பெயரிடவில்லை. அவ்வளவு பயம் மத்திக்கு. மத்திய அரசாங்கத்தினர் என்ன கூறுவார்களோ என்று தம்மைத்தாமே ஒடுக்கிக்கொள்ளும் நிலைமையையே நான் இங்கு காண்கின்றேன். மக்களின் ஆதரவை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் இங்கு அதிகாரம் செலுத்துகின்றார்கள் என்பதை இங்குள்ள அதிகாரிகள் பலர் ஏற்றுக்கொள்வதாக இல்லை.மத்தியின் அதிகாரம் எப்பொழுது திரும்பவும் வரும் மத்திக்கு காக்காய் பிடித்து எமது தனிப்பட்ட நலன்களை எவ்வாறு நிறைவேற்றலாம் என்றே அவர்கள் சிந்திக்கின்றார்கள் போல் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

23 மே 2018

துப்பாக்கியால் சுட்ட போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

Petrol bomb hurdle on police in Thoothukudiதூத்துக்குடியில் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் நகரம் மீண்டும் போர்க்களமாகியுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள், நேற்று துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டவர்கள் உடல்களை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் மீது மக்கள் கல்வீசினர்.இதையடுத்து போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைக்கபார்த்தனர். அப்படியும் மக்கள் கோபத்தோடு முன்னேறினர். இதையடுத்து 2 ரவுண்டுகள் போலீசார் சுட்டனர். இதனால் கோபமடைந்த போராட்டக்காரர்களில் சிலர், போலீசார் மீது பெட்ரோல் குண்டை வீசினர். கடலோர கிராமங்களில் பெட்ரோல் குண்டு புழக்கம் சகஜமானது என்பதால், இந்த குண்டு எங்கிருந்து வந்திருக்கும் என்பதில் பெரிய ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் போலீசார். அதிருஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் இல்லை.

18 மே 2018

சிறீலங்காவை முடக்கிய ஒபறேசன் முள்ளிவாய்க்கால்!

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் சிறிலங்கா துதூவராலயங்கள் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இன்படுகொலைப்படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர். இது மட்டுமல்லாமல் யாழில் உள்ள இந்தியா துணைத்தூதராக இணையத்திற்குள்ளும் அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ம் ஆண்டு மே மாதம்18ம் திகதியும் 200க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை இதே பேரில் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அமேரிக்காவையே ஆட்டம்காணவைத்திக்கொண்டிருக்கும் சைபர் தாக்குதல் இப்பொழுது மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்கின்ற பெயரில் சிறிலங்கா அரசையும் கதிகலங்க வைத்திருப்பது முக்கியமான விடயமாகும். அது மட்டுமின்றி சிறிலங்கா துதூவராலய இணையங்களுக்குள் ஊடுருவப்பட்டிருப்பதால் பல்வேறுபட்ட ரகசியத்தகவல்களும் கசிந்திருக்ககூடும்.

கேரளா சிறிலங்கா துதூவராலய இணையம் http://slhckerala.org/article_details.php?articleid=NTM= 

http://slhckerala.org/

சீனா சிறிலங்கா துதூவராலய இணையம் 
http://www.slemb.com/third.php?menu_code=1&rid=46&lang=cn

சிறிலங்கா சுற்றுலா துறை அமைச்சு http://www.tourismmin.gov.lk/sinhala/news_view.php?news_id=1

இந்தியா துணைத்தூதராக இணையத்திற்குள் http://www.cgijaffna.org/ckfinder/userfiles/files/ltte-flag-300-news.jpg

குவைத் துதூவராலய இணையம் http://kuwaitembassy.net/news.php?news_id=275 

சிறிலங்கா உள்ளூர் அதிகாரசபை இணையம் http://www.dolgnwp.lk/ 

சிறிலங்கா அரச இணையத்தளங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஊடக இணையங்கள் http://actuaries.org.lk/

http://www.batticaloa.mc.gov.lk/event.php?id=18

http://actuaries.org.lk/ http://avistholdings.com/ http://www.bricsventures.lk/

http://www.bungalow1926.com/ http://www.captain.lk/ http://csquareholdings.com/

http://emcuni.com/ http://www.imslanka.lk/ http://www.lankamahilasamiti.com/

http://lankapropertyclub.com/

http://mahi-mahi.net/

http://www.modernsalonfurniture.com/

http://www.onwardlogistics.net/

http://sinharafamilyrestaurant.com/

http://sphere.lk/

http://www.srilankatourismclub.com/

http://www.staractuarialacademy.com/

https://www.stbridgets-

kandy.com/ http://www.sundozmedigroup.com/

http://www.surasagammadda.lk/

http://welfaretourism.com/

http://www.ymbarestkataragama.lk/

http://www.dolgnwp.lk/

http://www.anew.lk/

http://www.libertymotors.lk/

http://www.mgttools.com/

http://www.nuhatravels.com/

http://www.ralhum.com/

http://broadwaybakers.lk/

http://www.bronteparkhighlandcottages.com.au/

http://djmaxtune.ca/web/

http://www.jptechnologies.lk/jptech/

http://nasrullah.info/

http://www.patersoniacottage.com.au/index.php

http://wijayasiribakehouse.com/

http://siscolombo.lk/

http://www.jayanandaevilla.com/index.html

http://www.nptccd.health.gov.lk/

http://www.tissatimber.com/

http://www.thuyar.com/

https://mirror-h.org/search/hacker/24172/

மன்னாரில் போராளி ஒருவரை கடத்த முயற்சி!

நள்ளிரவில் சிவில் உடையில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி முன்னாள் போராளி ஒருவரைக் கைது செய்ய முயன்றனர். அவர்களுடன் போராளி போராடியதில் அவர்கள் தமது முயற்சியைக் கைவிட்டுத் தப்பிச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு காயம் ஏற்படாத போதும் சம்பவ இடத்தில் குருதிக் கறைகள் காணப்படுகின்றன. இந்தச் சம்பவம் நேற்று இரவு மன்னார் உயிலங்குளத்தில் நடந்துள்ளது. சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. வெள்ளை நிறக் காரில் சிவில் உடையில் வந்த குழு முன்னாள் போராளியின் நண்பரைக் கடத்தித் தமது வாகனத்தில் மறைத்து வைத்துள்ளனர். வாகனம் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த முன்னாள் போராளி வாகனத்தை அவதானித்துள்ளார். அப்போது அந்த வாகனத்தில் இருந்து பதுங்கியவாறு இறங்கிய மூவர் முன்னாள் போராளியை நோக்கிச் சரமாரியாகச் சூடு நடத்தியுள்ளனர். சுதாகரித்துக் கொண்ட முன்னாள் போராளி அவர்களை நெருங்கி அவர்களுடன் இழுபறிப்பட்டுள்ளார். அதை எதிர்பார்க்காத அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். கடத்தி வைத்திருந்த நண்பரையும் அவர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் கொண்டுவந்திருந்த கை விலங்கு ஒன்றையும் விட்டுச் சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் குருதிக் கறை காணப்படுவதால் சிவில் உடையில் வந்தவர்கள் காயமடைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை அவதானித்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது. வந்தவர்கள் பொலிஸார் எனில் காரணத்தைக் கூறிக் கைது செய்யுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டது. பொலிஸார் சம்பவ இடத்துக்கு உடனடியாக வரவில்லை. சுமார் 2 மணித்தியாலத்துக்குப் பின்னரே சம்பவ இடத்துக்கு வந்தனர் என்று கூறப்படுகிள்றது. சிவில் உடையில் தப்பிச் சென்றபோது அவர்களின் வாகனத்துக்குப் பின்புறம் பொலிஸ் வாகனத்தை ஒத்த வாகனம் ஒன்றும் சென்றது என்று அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். எனினும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.

16 மே 2018

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!


முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வு தொடர்பான ஒழுங்கமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில், யாழ். பல்கலைக்கழக மாண­வர் ஒன்­றி­யத்­தின் கோரிக்­கை­க­ளுக்கு, வடக்கு மாகாண சபை இணங்கியுள்ளதையடுத்தே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வு தொடர்பான ஒழுங்கமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில், யாழ். பல்கலைக்கழக மாண­வர் ஒன்­றி­யத்­தின் கோரிக்­கை­க­ளுக்கு, வடக்கு மாகாண சபை இணங்கியுள்ளதையடுத்தே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கும், வடக்கு மாகா­ண­ச­பை­யின் முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் ஏற்­பாட்­டுக் குழு­வுக்­கும் இடை­யில் கடந்த ஞாயிற்­றுக் கிழமை முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் கலந்­து­ரை­யா­டல் நடை­பெற ஏற்­பா­டா­கி­யி­ருந்­த­போ­தும் அது நடை­பெ­ற­வில்லை. இந்த நிலை­யில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை, யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தின் பிர­தி­நி­தி­கள், சிவில் சமூ­கப் பிர­தி­கள் உள்­ள­டங்­க­லான குழு­வி­னர் நேற்­று­ முன்­தினம் மாலை சந்­தித்­த­னர். இந்­தச் சந்­திப்­பில் மாண­வர்­க­ளின் கோரிக்­கை­க­ளுக்கு, முத­ல­மைச்­சர் இணக்­கம் தெரி­வித்­தார். யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் தயா­ரித்­தி­ருந்த நிகழ்ச்சி
நிர­லின் ஒழுங்­குக்கு அமை­வாக, நிகழ்­வு­களை முன்­னெ­டுக்க
முத­ல­மைச்­சர் சந்­திப்­பில் இணங்­கி­யி­ருந்­தார். இன்று
புதன்கிழ­மையே, முள்­ளி­வாய்க்­கால் ஏற்­பாட்­டுக்­குழு
முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் சந்­திப்பு நடத்­தும் என்­றி­ருந்த
நிலை­யில், மாண­வர்­க­ளு­டன் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­ட­தும்
நேற்­றுக் கூட்­டத்­துக்கு முத­ல­மைச்­சர் அழைப்பு விடுத்­தார்.
நினை­வேந்­தல் ஏற்­பாட்­டுக்­கு­ழு­வில் 9 பேர் உள்ள நிலை­யில் 4 பேர் மாத்­தி­ரமே நேற்­றைய கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­னர். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான து.ரவி­க­ரன், த.குரு­கு­ல­ராஜா ஆகி­யோரே நேற்றைய கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­னர். யாழ்ப்­பாண பல்கலைக்­க­ழக மாண­வர்­கள் சார்­பில் 3 பேரும், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் முன்­னாள் போரா­ளி­யான பசீர் காக்­கா­வும் கலந்து கொண்­ட­னர்.மாண­வர்­க­ளு­டன் கடந்த சனிக்­கி­ழமை
பங்­கேற்ற பொது­அ­மைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் எவ­ரும் நேற்­றுச் சந்­திப்­பில் பங்­கேற்­க­வில்லை. முத­ல­மைச்­சர் முன்­னரே எழு­தி­வந்த, நிகழ்வு ஒழுங்கை வாசித்­தார். அனை­வ­ரும் ஏற்­றுக் கொண்­ட­னர். இதே­வேளை சுட­ரேற்­றல் காலை 10 மணிக்கு இடம்­பெ­ற­ வேண்­டும் என்று வடக்கு மாகாண சபை தீர்­மா­னித்­தி­ருந்­தது. பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் மதி­யம் 12.30 மணிக்கே இடம்­பெ­ற­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­னர். இந்த நிலை­யில் தற்­போது 11 மணிக்கு சுட­ரேற்­றல் மாற்­றப்­பட்­டுள்­ளது. வடக்கு – கிழக்­கின் எட்டு
மாவட்­டங்­க­ளை­யும், ஏனைய மாவட்­டங்­கள் எல்­லா­வற்­றை­யும் சேர்த்து ஒன்­றா­க­வும், மொத்­த­மாக 9 சுடர்­கள் ஏற்­று­வது என்­றும், அவை அந்­தந்த மாவட்­டங்­க­ளைப் பிர­தி­நித்­து­வப்­ப­டும்
பாதிக்­கப்­பட்ட ஒரு­வர் ஏற்­று­வார் என்­றும் வடக்கு
மாகா­ண­ச­பை­யின் நினை­வேந்­தல் குழு முடி­வெ­டுத்­தி­ருந்­தது.
இதற்­குப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் ஆட்­சே­பம்
தெரி­வித்­துள்­ள­னர்.சரி­யான ஒரு­வரை எல்லா
மாவட்­டங்­க­ளி­லி­ருந்­தும் தெரி­வது கடி­னம் என்­றும் ஒரே­யொரு முதன்­மைச் சுடரை ஏற்­று­வ­து­தான் சரி­யா­னது என்­றும்
கூறி­யுள்­ள­னர்.இதனை வடக்கு மாகாண சபை நினை­வேந்­தல்
ஏற்­பாட்­டுக்­குழு ஏற்­றுக் கொண்­டுள்­ளது.போரால்
பாதிக்­கப்­பட்­ட­வர்­களே சுட­ரேற்­று­வர் என்று முன்­னர்
தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும்,தற்­போது முத­ல­மைச்­சர் சுடரை
ஏற்றி,பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ரி­டம் கைய­ளிக்க அவர் ஏற்­று­வார் என்று மாற்­றப்­பட்­டுள்­ளது. அதேவேளை,இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கி.கிருஸ்ணமேனன், நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை, கடந்த காலங்களில் முரண்பட்டிருந்த தரப்புக்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இன்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை அனைத்து தரப்புக்களையும் இணைத்து அதாவது கடந்த காலங்களில் முரண்பட்டு இருந்த நான்கு தரப்புக்களையும் ஒன்றாக இணைத்து ஏற்பாடுகளை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்துள்ளோம். எதிர்வரும் 18ம் திகதி பல்கலைக்கழகத்தில் இருந்து பாரிய மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்று ஆரம்பமாகி முள்ளிவாய்க்கால் மண்ணை அது வந்தடையும். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு உலகுக்கு காத்திரமான செய்தி ஒன்றினை சொல்ல தயாராகிக்கொண்டிருக்கின்றோம். அதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். தாயகத்தில் எவ்வாறு நாங்கள் ஒற்றுமையான நினைவு நிகழ்வை நடத்துகின்றோமோ, அதேபோல் புலம்பெயர் நாடுகளிலும் அனைவரும் இலங்கை தூதரகத்துக்கு முன்பாகவோ அல்லது நாட்டின் தூதரகத்துக்கு முன்பாக சென்று நினைவேந்தலை செய்வதன் ஊடாக, அந்த நாட்டின் அரசாங்கம் ஊடாக காத்திரமான செய்தி ஒன்றினை ஐ.நா சபைக்கு கொண்டு செல்ல முடியும். எங்கள் உரிமையைப் பெற்றுக்கொள்ள அது வலுசேர்க்கும்” என தெரிவித்துள்ளார்.

14 மே 2018

அனலைதீவில் ஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கல் வீச்சு!

அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில், ஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறியதாகவும்  பாதுகாப்பின்மை காணப்படுவதால் அவர்கள் வெளியேறியுள்ளனர் எனவும் மேலும் அறியமுடிகிறது.இதனால் மாணவா்கள் கல்வி கற்க முடியாத நிலையில் பாடசாலைக்கு வெளியே காத்திருந்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

13 மே 2018

பிரான்ஸ் தாக்குதல்தாரி செச்சன்யாவில் பிறந்தவர்!

பாரீஸில் ஐஎஸ் தாக்குதல்தாரி நடத்திய கத்திக்குத்து: ஒருவர் பலிபிரான்ஸ் தலைநகரான பாரீஸின் மத்திய பகுதியில் சனிக்கிழமை மாலை நடந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல்தாரி 1997-ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும், ரஷ்ய குடியரசான செச்சன்யா அவர் பிறந்தார் என்றும் நீதிமன்ற தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.பிரான்ஸ் தலைநகரான பாரீஸின் மத்திய பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் கத்திக்குத்து சம்பவத்தில், ஒரு ஆயுததாரி தனது கத்தியால் 29 வயதான ஒரு நபரை கொன்றுள்ளார் என முன்னதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.பின்னர், பாரீஸின் ஒபேரா பகுதியில் இந்த தாக்குதல்காரி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 'அல்லாஹ் அக்பர்' என்று தாக்குதல்தாரி கோஷமிட்டதாக சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.சனிக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலை, தங்கள் படைவீரர் ஒருவர்தான் நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் குழு தெரிவித்துள்ளது. பாரீஸில் கேளிக்கை மற்றும் இரவு வாழ்க்கைக்கு பெயர் போன ஒரு பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.இந்த சம்பவத்தால் அங்கிருந்த மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த கஃபே மற்றும் உணவு விடுதிகளுக்குள் நுழைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் பற்றி ட்விட்டர் பதிவு வெளியிட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், '' இன்று மீண்டும் பிரான்ஸ் தனது மண்ணில் ரத்தம் சிந்தியுள்ளது. ஆனால், நமது எதிரிகளிடம் ஒரு இஞ்ச்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி:பிபிசி தமிழ்

07 மே 2018

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மாகாணசபையே நடாத்தும்!

படம் கோரமானது
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வழமை போன்று வடக்கு மாகாண சபையே இம்முறையும் நடத்தும்.அதில் பல்வேறு பொது அமைப்புக்களும் பங்கேற்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுடனான கூட்டத்தை அடுத்து முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். 07-05-2018ம் திகதியாகிய இன்று எமது மாகாணசபை உறுப்பினர்கள் கூட்டமொன்று முதலமைச்சரின் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.மேற்படி நினைவேந்தல் நிகழ்ச்சி சென்ற மூன்று வருடங்கள் நடைபெற்றது போன்று இவ்வருடமும் தொடர்ந்து வடமாகாணசபையால் ஒழுங்குபடுத்தி நடத்தப்பட வேண்டும் என்பது பிரசன்னமாகியிருந்த எமது உறுப்பினர்கள் யாவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறும் அமைவிடமானது பிரதேச சபைக்குரிய காணியாகும். சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க ஒரு உறுப்பினர் குழு நியமிக்கப்பட்டது.எமது இனத்திற்கு ஏற்பட்ட ஒரு பேரவலத்தின் நினைவுகூரும் நிகழ்வானதால் எம்முடன் ஒன்று சேர்ந்து மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபட பல அமைப்புக்கள் தமது விருப்பத்தினை தெரிவித்துள்ளன. அவ்வாறான அக்கறையுடைய, கரிசனையுடைய அனைத்து அமைப்புக்கள் எமது மேற்படி குழுவுடன் 09-05-2018 அன்று முற்பகல் 11.30 மணிக்கு கைதடி முதலமைச்சரின் மாநாட்டு மண்டபத்தில் கூடி இவ்வாறான நிகழ்வை ஒன்றுபட்டு எல்லோருடைய ஒத்துழைப்புடன் சிறந்த முறையில் நடத்துவது சம்பந்தமாக ஆராயப்படும்.நாட்டமுள்ள அனைத்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர் அவ்வவ்வமைப்புக்களின் சார்பாக குறித்த கூட்டத்திற்கு சமுகமளிக்குமாறு இத்தால் அழைக்கப்படுகின்றார்கள். என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

05 மே 2018

நாரந்தனையில் பொலிஸ் மீது வாள்வெட்டு!

ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்று நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குலில் படுகாயமடைந்தார். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி, சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

03 மே 2018

திரிவுபடுத்தப்பட்ட செய்தி தொடர்பில் கஜேந்திரன் விளக்கம்!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வு யாழ் நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் இ.எ.ஆனந்தராஜா அவர்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு நிகரான தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்று கூறினார் என்றும் அதனை கயேந்திரகுமாரே அவரூடாக திட்டமிட்டு செய்வித்தார் என்றும் திரிபுபடுத்தி வெளியிடப்பட்ட செய்திகள் தவறானவை. அவை எமது கட்சி மீதான காழ்ப்புணர்வாலும் கயேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான காழ்ப்புணர்வாலும் செய்யப்படும் பொய் பிரச்சாரங்கள். தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் அவர் மட்டுமே என்பதும் அவருடன் யாரையும் ஒப்பிட முடியாதென்பதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட கட்சியிலுள்ள அனைவரதும் உறுதியான நிலைப்பாடாகும். எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கும் தகுதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு உண்டு என்று ஆதரவாளர்கள் கூறும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்களிடம் அவ்வாறு தன்னை குறிப்பிட வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ஒருவராகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயற்பட்டுவருகின்றார். தேசியத் தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்கால் வரை பேச்சுவார்த்தை மேசையில் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை இனப்பிரச்சினைத் தீர்வாக வலியுறுத்திவந்தாரோ அந்நிலைப்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் கொண்டு செல்ல வேண்டும் என்பதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அடிக்கடி வலியுறுத்துவதுண்டு. கஜேந்திரகுமார் தன்னை தமிழ் இனத்தின் தலைவராக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படும் ஒருவர் அல்ல. அதனாலேயே வடக்கு மாகான முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவரக்ளுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டுவரப்பட்டபோது அப்பிரேரணையை தோற்கடிப்பதற்காகவும் திரு விக்னேஸ்வரனுக்கு ஆதரவாகவும் இளைஞர்களை திரட்டிச் சென்று நடாத்திய போராட்டத்தில் திரு விக்னேஸ்வரன் தலைமையேற்க வரவேண்டுமென பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக கருத்துப்பட ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். அது தொடர்பில் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது தமிழ்த் தேசிய நிலைப்பாட்iடில் உறுதியற்ற நிலையிலுள்ள ஈபிஆர்எல்எவ் புளொட் த.வி.கூட்டணி ஆகிய தரப்புக்களை கைவிட்டு திரு விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் பேரவை உறுப்பினர்களையும் பொது அமைப்புக்களையும் இணைந்தவாறு கட்சியை உருவாக்கி எம்மை கூட்டுக்கு அழைத்தால் அவரது தலைமையில் இணைந்து தேர்தலில் போட்டியிடத் தயார் என்பதனை தெரிவித்திருந்தார். எதிர்காலத்தில் தன்னை தமிழினத்திள் தலைவர் என்ற அடிப்படையில் யாரும் கருத்துக்கூறக்கூடாது என்பதனை உறுப்பினர்களுக்கு உறுதிபடத் தெரிவித்துள்ளார் என்பதனையும் தங்களது கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.

நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்.