பக்கங்கள்

21 மார்ச் 2018

வெவ்வேறு கட்சிகளில் வெற்றி பெற்ற புளியங்கூடல் மைந்தர்கள் மூவர்!

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து தமது உறுப்பினர் பதவிகளை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.இந்த தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றுக்கொண்டவர்களில் மூவர் புளியங்கூடல் மண்ணின் மைந்தர்கள் என்பது புளியங்கூடலுக்கு பெருமை மிகு சிறப்பு அம்சமாகும்.வெவ்வேறு கட்சிகளில் வெவ்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு இருந்தாலும்,கொள்கை முரண்பாடுகளுக்கு அப்பால் இவர்களின் வெற்றி புளியங்கூடல் மக்களின் அரசியல் முன்னேற்றத்தை கோடிட்டு காட்டுகின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் வெற்றி பெற்றிருக்கிறார்.தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு சிவலிங்கம் அசோக்குமார் வெற்றி பெற்றிருக்கிறார் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு சிவகடாட்சம் சிவநேசன்(ரூபன்)வெற்றி பெற்றிருக்கிறார்.இவர்களது அரசியல் பயணம் இனிதே தொடர புளியங்கூடல்.கொம் குழுமம் வாழ்த்தி மகிழ்கின்றது.படம் இதைக் கொண்டிருக்கலாம்: 6 பேர், Ketheeswaran Gnaneswaran உட்பட, பலர் அமர்ந்துள்ளனர், பலர் சாப்பிடுகின்றனர் மற்றும் உணவுபடம் இதைக் கொண்டிருக்கலாம்: 7 பேர், பலர் அமர்ந்துள்ளனர், உணவு மற்றும் உட்புறம்படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் தாடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.