பக்கங்கள்

01 ஏப்ரல் 2011

தி.மு.க.கூட்டணி தோல்வி அடையும் என்கிறது கருத்துக்கணிப்பு.

இலங்கை தமிழர் விடயத்தின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் அனைத்திந்திய ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட கழகத்தின் கூட்டணி அமோக வெற்றி பெறும் என புதிய கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியா டுடே, ஹெட்லைன்ஸ் டுடே, மெயில் டுடே ஆகிய பத்திரிகைகள் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவுட் லுக் வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பிலும் இதே பெறுபேறு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் – காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஆட்சியைப கைப்பற்றும் அசாமில் எந்தக் கட்சிக்கும் அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நிலைமை ஏற்படும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இலங்கை தமிழர்கள் தொடர்பில் போதிய செயற்பாட்டை முன்னெடுக்காமை, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சந்தித்த அசாதாரண நிலைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் முன்னெடுக்காமை, போன்ற காரணங்களுக்காக தமிழக மக்கள் கருணாநிதியை இந்த முறை எதிர்ப்பர் என சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், சட்ட ஒழுங்கு சீர்குலைவு, அமைச்சர்கள் – அதிகாரிகளின் ஊழல் போன்ற காரணங்களுக்காகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லாது போயுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களின் பிரச்சினையை முறையாக கையாள தமிழக அரசாங்கம் தவரிவிட்டது என, இந்த கருத்துக் கணிப்பில் கலந்துக் கொண்ட 41 சதவீதமான மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இலங்கை தமிழர்களுக்காக போதிய அளவில் கருணாநிதி செயற்பட்டுள்ளார் என 25 சதவீதமானவர்கள் வாக்களித்துள்ளனர். எவ்வாறாயினும், இலங்கை தமிழர் விவகாரம் தமிழக அரசியலில் செல்வாக்கு செலுத்தாது என அண்மையில் த டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.