பக்கங்கள்

31 மே 2013

மர்ம மரணச்செய்தியால் மனம் வருந்தும் ஊடகங்கள்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்பெண் திருச்சியில் மர்ம மரணம் என்ற செய்தி பல பிரபல ஊடகங்கள் தொடங்கி முகநூல்கள் வரை வெளியாகி எல்லோர் மனங்களையும் வேதனைக்குள்ளாக்கி இருந்தது  என்பது மறைக்க முடியாத உண்மை!செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தபோதும் சில ஊடகங்கள் தலைப்புக்களை மாற்றி பிரதான செய்தியாக வெளியிட்டிருந்தன.இதிலிருந்து இச்செய்தி ஒருவரால்தான் திட்டமிட்ட முறையில் பரப்பப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.இந்த ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டு பல ஊடகங்கள் கறைபடிந்து நிற்கின்றன.அந்த வகையில் தமிழ் சி.என்.என் இணையம் தனது தவறான செய்திக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டது,அதன் பின் லங்காசிறி இணையமும் தனது பதிப்பு தவறென்றும் சசீந்தினி மரணம் இயற்கை மரணம் என்பதை மருத்துவ சான்றிதழ்,காவல்துறை அறிக்கை உறுத்திப்படுத்துவதாகவும் தாம் முன்பு வெளியிட்ட செய்திக்கு மனம் வருந்துவதாகவும் தெரிவித்திருந்தது.தற்போது இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரு நாளிதழும் தனது தவறுக்கு வருத்தத்தை வெளியிட்டுள்ளது.அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது.யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருச்சியில் மர்மமான முறையில் மரணமானதாக வெளியாகிய செய்தி முற்றிலும் தவறானது என்று இப்போது தெரியவந்துள்ளது.கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற இந்த மரணம் தொடர்பாக நடைபெற்ற விசாரணைகளில் இருந்தும்,பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்தும் மேற்படி செய்தி தவறானது என்று தெரியவந்துள்ளது.வெளிநாட்டு செய்தி இணையத்தளங்கள் சில இச்செய்தியை பரபரப்புடன் வெளியிட்டிருந்தன.இந்த மரணத்துக்கான உண்மையான காரணத்தை உரியதரப்புக்களுடன் தொடர்புகொண்டு உடனடியாக உறுதிப்படுத்த முடியாமல் இருந்தது.இதே செய்தியை எமது செய்திப் பக்கத்திலும் கடந்த 09.02.13ஆம் திகதி பிரசுரித்திருந்தோம்.இந்த மரணத்துக்கான உண்மையான காரணம் காலதாமதமாகவே கிடைத்தது.ஏற்கனவே நாம் வெளியிட்ட செய்தியால் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக நாமும் மனம் வருந்துகிறோம்.இவ்வாறு அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.