பக்கங்கள்

08 ஏப்ரல் 2011

காணாமல் போனோர் பற்றிய விபரம் வெளியிடப்படவேண்டும்!

காணாமல் போனவர்கள் தொடர்பிலான தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை வெறுமனே நிராகரிக்காமல், அவற்றுக்கு அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டியது அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட சகலர் தொடர்பிலும் தரவுகளை வெளியிட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுமாறு அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.