பக்கங்கள்

16 ஏப்ரல் 2011

கருணாநிதிக்கு நெடுமாறன் ஐயா கண்டனம்!

தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் எந்த விதமான அசம்பாவிதங்கள் இல்லாமல் நடந்திருக்கிறது. இதற்கு காரணம் தேர்தல் ஆணையத்தின் சிறப்புதான். தமிழக முதல்வர் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை குறை கூறி வருகிறார். ஆனால் மக்களும் எதிர்க்கட்சிகளூம் பாராட்டுகின்றன. தேர்தல் ஆணையைத்தை கலைஞர் குறை சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. திருமங்கலத்தை போல தில்லுமுல்லு செய்யமுடியாததாலும் முறைகேடுகள் செய்ய முடியாததாலும் தான் குறை கூறி வருகிறார்கள். மே- 13ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதை கலைஞர் குறை கூறியுள்ளார். இந்த ஒரு மாத கால இடைவெளியில் அரசு நிர்வாகம் ஸ்தபித்துவிட்டது என்று சொல்கிறார். இது தவறான குற்றச்சாட்டு. 5ஆண்டுகாலம் முதல்வராக இருந்தவருக்கு இது தெரியாதது அல்ல. ஊழல் முறைகேடுகளை அழிக்க தேர்தல் ஆணையைம் தடையாக இருக்கிறது என்பதால்தான் குற்றம் கூறிக்கொண்டிருக்கின்றார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்’’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.