பக்கங்கள்

31 ஜனவரி 2018

கோயிலில் பிரச்சாரம் உந்து உருளிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக தமிழ்த் தேசியப் பேரவைக்கும் ஆலய குருக்கள்மாருக்கும் எதிராக வலிவடக்கு பிரேதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போது 20ஆம் வட்டாரம் மல்லாகம் பகுதிக்கான வேட்பாளருமான சோ.சுகிர்தன் அவர்களால் அரசியல்க் காழ்ப்புணர்ச்சியுடன் இந்து மதத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான வழக்கு கௌரவ மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வழக்கில் சட்டத்தரணிகள் குருபரன், காண்டீபன், ஜெயரூபன், பார்த்தீபன், ஜோய் மகிழ் மகாதேவா, லலிதாஸ் சர்மா,சுபாஷ்கரன், றோய், கீர்த்தனா, தனுஜா, கஸ்தூரி,சுகாஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்மோடு கூட இருந்து எம்மை வழிப்படுத்தும் எல்லாம் வல்ல இறைவனிற்கு நன்றிகள். எம்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டமையை கேள்வியுற்ற நொடிப்பொழுது முதல் நல்ல தீர்ப்பு வரும்வரை எமக்காக இறைவனைப் பிரார்த்தித்த நல்லுள்ளங்களிற்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பிலும்,தனிப்பட்ட முறையிலும் நன்றிகளைப் பகிர்கின்றேன். மாவிட்டபுரம் கந்தன் ஆலயத்தில் தேர்தல் விதிமுறையினை மீறியவகையில் செயற்பட்டதாகக் குறிப்பிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிவடக்கு வேட்பாளர் சோ.சுகிர்தன் அவர்கள் பெலீசாரிடம் சமர்ப்பித்த புகைப்படங்களை இத்தால் வெளிப்படுத்துகின்றேன். ஆலய வழிபாட்டினை கொச்சைப்படுத்திய நயவஞ்சகர்களுக்கு சரியான பாடம் புகட்ட அணிதிரள்வோம். மாற்றத்திற்காய் வாக்குகளை வழங்கி எதிர்கால சந்ததி நிம்மதியாய் தலைநிமிர்ந்து வாழ வழிகாட்டுவோம்.இவ்வாறு தாயுமானவர் நிகேதனின் முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் சாப்பிடுகின்றனர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உணவு

28 ஜனவரி 2018

புலித்தேவனின் சகோதரர் பாலதயாகரன் மாரடைப்பினால் மரணம்!

தமிழீழ சமாதான செயலகப் பொறுப்பாளராக விளங்கிய புலித்தேவன் அவர்களின் சகோதரர் இன்று மாரடைப்பால் காலமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.யாழ்,தும்பளை
சிவப்பிரகாசா வித்தியாலயத்தில் கணித ஆசிரியராக கடமையாற்றி வந்த சீவரெத்தினம் பாலதயாகரன் மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானதாகவும் இறுதி நிகழ்வுகள் நாளை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

26 ஜனவரி 2018

உந்து உருளிப் பக்கம் மக்கள் பார்வை திரும்பியதால் பெரும் அச்சத்தில் பிற கட்சிகள்!

நடைபெற இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.இம்முறை மக்கள் பார்வை அகில இலங்கை தமிழ்க்காங்கிரசின் உந்து உருளிப் பக்கம் திரும்பியுள்ளதால் பிற கட்சிகள் மிகவும் கலங்கிப்போய் இருக்கிறார்கள்.தமிழ் மக்களின் வாக்குகளில் பதவிக்கு வந்தவர்கள் சிங்கள அரசின் கைப்பொம்மையாக மாறியிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இன்றைய காலகட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேவை மக்களால் நன்கு உணரப்பட்டிருக்கிறது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு மக்கள் மத்தியில் நாளாந்தம் அதிகரித்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத பிற கட்சியினர் தோல்வி பயத்தில் இருப்பதோடு உந்து உருளி சின்னத்தில் போட்டியிடுபவர்களை எப்படி ஓரம் கட்டலாம் என பல வழிகளிலும் சிந்தித்து குழப்பத்தில் மூழ்கியிருப்பதாக அறிய முடிகிறது.தமக்கிருக்கும் அரச பலத்தை பயன் படுத்தி பொய்க்குற்றச் சாட்டுகளில் உந்து உருளி சின்ன வேட்பாளர்களை சிறைக்குள் தள்ளப்போவதாக மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.மக்களின் பலத்தை மட்டுமே நம்பி களத்தில் நிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அம்மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை மக்கள் அவர்களுக்கு அளிக்கும் வரவேற்பின் மூலம் காண முடிகின்றது.இது வெறும் வீதி திருத்தத்திற்கான தேர்தல் இல்லை தமிழ் மக்களின் விதியை தீர்மானிக்கும் போர் என்பதை ஒவ்வொரு தன்மானத் தமிழனும் உணர்ந்திருக்கிறான் என்பது உண்மை.பேரமற்ற நேர்மையான அரசியலுக்கு உந்து உருளிக்கு வாக்களிப்போம்,உரிமைகளை வென்றெடுக்க ஓங்கிக் குரல் கொடுப்போம்.

24 ஜனவரி 2018

காணாமல் போனோரை புலிகள்தான் கடத்தினார்கள் என்று சுமந்திரன் சொல்ல வருகிறாரோ?

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் மூலமாகவே காணாமல் போனோருக்கு ஒரு தீர்வு வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், சர்வதேச விசாரணைகள் நடைபெறுவதற்கு இந்த சட்டத்தில் இடமிருக்கின்றது. இதில் செஞ்சிலுவை சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. எனினும், காணாமல் போனோர் விடயத்திலும், சிறையில் உள்ளவர்களை விடுவிப்பது தொடர்பிலும் அரசாங்கத்திற்கு பல அழுத்தங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனோர் விடயத்தில் “இராணுவத்திடம் எமது உறவுகளை கையளித்தோம்.” என்று வடக்கில் உள்ளவர்கள் கூறும் போது, “இராணுவத்திற்கு தண்டனை வாங்கி கொடுக்கப்போகின்றார்கள்” என்ற கருத்து தெற்கில் எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அண்மையில் தான் படித்ததாக ஒரு கருத்தையும் சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.அதில் “இறுதி யுத்தத்தில் தனது மகளை விடுதலைப்புலிகள் கொண்டு போய்விட்டார்கள்.” என அந்த தாய் குறிப்பிட்டுள்ளார். அந்த தாயே தனது மகளை விடுதலைப்புலிகள்தான் கொண்டு சென்றார்கள் என கூறுகின்றார். ஆகவே விடுதலைப்புலிகள் கொண்டு சென்றவர்களில் அனைவருமே உயிருடன் வரவில்லை. ஆகவே காணாமல் போனவர்கள் விடயத்தில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். இராணுவத்தினர் கொண்டு சென்றவர்கள் மட்டுமல்லாது வேறு விதத்திலும் காணாமல் போனவர்களின் விபரங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இவ்வாறு ஒரு இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

22 ஜனவரி 2018

சம்பந்தன் முடியாவிட்டால் விட்டுப்போ-கஜேந்திரகுமார் ஆக்ரோஷம்!

Ähnliches Fotoநடக்கப்போகின்ற சதித்திட்டங்களுக்கு துணை போகாமல் உரிமையைப் பெற்றெடுப்பதற்கான பங்காளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் முன்வாருங்கள். எங்களது மக்களை ஏமாற்றி அழிக்காதீர்கள் என்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,தெரிவித்துள்ளார்.வவுனியா பாவற்குளம் ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியப்பேரவையின்  செட்டிக்குளம் பிரதேச சபைக்கான பிரசார கூட்டத்தில் மிகவும் ஆவேசமாக உரையொன்றை ஆற்றியுள்ளார். அவர் தனது உரையில், “எமது விடுதலை போராட்டமானது பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்ட போது இந்த போராட்டத்தை ஒரு விடுதலைப்போராட்டமாக வெளியுலக்குக்கு கொண்டுச் சென்றதோடு இப்போராட்டத்தை பயங்கரவாதமாக கொச்சைப்படுத்த எண்ணிய தரப்புக்கும் அது பெரும் சவாலாகவே இருந்தது.ஆயுதப் போராட்டம் பலம் பொருந்தி வந்த காலத்தில் ஜனநாயக தலைமை என்னுடைய தந்தையின் கைகளுக்கு மாறிவிடும் என்ற பயத்தில் அவரை சுட்டுக்கொலை செய்தார்கள். ஆகவே எங்களுக்கு தியாகம் என்றால் என்ன என்று தெரியும். இலட்சக்கணக்கான மக்கள் உயிரைக்கொடுத்தது ஒற்றையாட்சிக்கு ஆதரவளிப்பதற்காக அல்ல. அவ்வாறெனின் எப்பொழுதே இலட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியிருக்கலாம். உயிர்போனாலும் பரவாயில்லை சரணடையாது இப்போராட்டம், முள்ளிவாய்க்காலில் போய் முடிந்தமையானது எட்டு வருடங்கள் கழித்து நாங்கள் இந்த இலட்சியத்தை கைவிடுவதற்காக அல்ல. சம்பந்தனுக்கு முடியா விட்டால் விட்டு போ. வேறு யாரும் வருவார்கள். நாங்கள் வருவோம் எங்களுக்கென்று ஓர் அணுகுமுறை உள்ளது. நாங்கள் சர்வதேச அரசியலை படித்தவர்கள். எங்களது மக்களது உரிமைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது தொடர்பாக ஒரு திட்டம் எங்களிடம் இருக்கின்றது.முழங்கால் இட்டு கெஞ்சிக்கொண்டு போவதுதான் உனது பாதையென்றால் நீ போ. இதை விட்டு போங்கள். எங்களது மக்களை ஏமாற்றி அழிக்காதீர்கள். தியாகத்தின் உச்சமான இந்த மண்ணில் இருந்து கேட்கின்றேன் நடக்கப்போகின்ற சதித்திட்டங்களுக்கு துணை போகாமல் உரிமையை பெற்றெடுப்பதற்கான பங்காளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் முன்வாருங்கள்” என்றார்.

21 ஜனவரி 2018

நாளை தபால் மூல வாக்களிப்பு!

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளது என்று தேர்தல் ஆணைய பணிப்பாளர் நாயகம் ஆர்.எல்.ஏ.எம். இரத்நாயக்க தெரிவித்துள்ளார். “நாளை, 22 ஆம் திகதி, காவல் நிலையங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள், தேர்தல் செயலகங்களில், தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும். ஏனைய அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25ஆம், 26ஆம் நாள்களில் இடம்பெறும். இம்முறை சுமார் 560,000 அரச பணியாளர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

18 ஜனவரி 2018

எம்மீதான தாக்குதல்களுக்கு பதிலடி 11ம் திகதி-மணிவண்ணன்!

தமிழ்த் தேசியப் பேரவையைத் தோற்கடிப்பதற்காக அரச இயந்திரம் முழுமையாக களமிறக்கப்பட்டுள்ளது. தேர்தல் திணைக்கள அதிகாரிகளே எமக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளரும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணம் இளைங்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாரோ ஒரு தரப்பு தோற்றுப் போய்விடக்கூடாது என்பதற்காகவே அரச இயந்திரம் எமக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றது. இதுவரை காலமும் வென்று கொண்டிருந்த ஒரு தரப்பு அரசுக்குத் தேவையான தரப்பாக இருக்கின்றது. அரசைக் காப்பாற்றுகின்ற ஒரு தரப்பாக இருக்கின்றது. அரசைக் காப்பாற்றுகின்ற ஒரு தரப்பிற்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதால்தான் நேற்று நடைபெற்ற முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்துக்குக் கூட தடை விதிக்கப்பட்டது. அரச இயந்திரத்தையும் பொலிஸாரையும் கொண்டு சட்டத்தை மீறாத எங்களது தேர்தல் பிரச்சாரங்களின் மீது தடையை ஏற்படுத்தி நாங்கள் தேர்தல் பிரச்சாரங்களை விட்டு நீதிமன்றங்களிலே காலத்தைச் செலுத்த வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தங்களை உருவாக்குகின்ற செயற்பாட்டில் அரசாங்கமும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்ற ரத்னஜீவன் எச்.ஹூல் என்பவர் இதுவரை முறைப்பாடு செய்த ஒரே கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஆக்கியிருக்கின்றார்கள். அவருடைய முழுநேரப் பணி எங்களுடைய கட்சி என்ன செய்கின்றது, அதனை எவ்வாறு தடுக்கவேண்டும் என்பதுதான். எங்கள் மீது பெப்ரவரி 10 ஆம் திகதிவரை நீங்கள் தாக்குதலை நடத்துங்கள். 11 ஆம் திகதி உங்கள் மீது தாக்குதல் தொடங்கப்படும். அதை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருங்கள் என்றார்.

17 ஜனவரி 2018

சம்பந்தனின் பொங்கல் வாழ்த்து செய்தி ஏமாற்று வித்தை-கஜேந்திரகுமார்!

தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், இறையாண்மை மதிக்கப்பட்டு சுயாட்சியுடன் கூடிய தீர்வினை பெறுவோம் என பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பது நகைப்புக்குரியது. இந்த ஏமாற்று வேலையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.2017ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21ம் திகதிக்கு முன்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு சமஷ்டி, சுயநிர்ணய உரிமை, வடகிழக்கு இணைப்பு, இறையாண்மை போன்றவற்றினடிப்படையில் தீர்வு கிடைக்க வேண்டும் என கூறியிருந்தது. மேலும் இவற்றுக்கு எதிராக ஒரு தீர்வு வருமாக இருந்தால் அதனை எதிர்ப்போம் என கூறியிருந்தார்கள். ஆனால் இன்று இலங்கை அரசாங்கத்துடன் பங்காளிகளாக மாறி புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான இடைக்கால அறிக்கை ஒன்றை தயாரித்து, அதில் ஒற்றையாட்சியை அங்கீகரித்து வடகிழக்கு இணைப்பை மறந்து, பௌத்தத்திற்கு முதலிடம் கொடுத்திருக்கிறது. அதற்கு மேலாக தாம் இணங்கிய ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு மக்கள் ஆணை வழங்கவேண்டும் என மக்கள் மத்தியில் இன்றைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரச்சாரமும் செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கூட்டமைப்பின் தலைவர் உள்ளக சுயநிர்ணய உரிமை எனவும், சுயாட்சி எனவும், இறைமை மதிக்கப்பட்டு எனவும் கூறுவதை நகைப்புக்குரிய ஒரு கருத்து என கூறுவதில் தவறு எதுவும் இருக்காது. மேலும் உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதே ஒரு மோசமான விடயம்.இருந்தும் ஒரு பேச்சுக்கு உள்ளக சுயநிர்ணயம் என சொன்னால் இடைக்கால அறிக்கையில் இறைமை பகிரப்பட முடியாதது என கூறப்பட்டுள்ளது. சமஷ்டி இல்லை என்கிறது இடைக்கால அறிக்கை. இந்த லட்சணத்தில் உள்ளக சுயநிர்ணய உரிமை, இது மதிக்கப்படல், சுயாட்சி என்பனற்றை இரா.சம்மந்தன் எங்கே எடுக்கப்போகிறார்? ஆக மொத்தத்தில் சம்மந்தனின் இந்த உரை நகைப்புக்குரியது. நொந்துபோய் கிடக்கும் தமிழ் மக்களின் தொண்டைக் குழியை நெரிக்கும் வகையிலான ஒரு கருத்தாகும் என்றார்.

13 ஜனவரி 2018

யாழில் மண்பானை விற்பனை இம்முறை அதிகரிக்கும் என நம்பிக்கை!

யாழ்ப்பாணம்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்.குடாநாட்டில் தைப்பொங்கல் பண்டிகை களைகட்ட ஆரம்பித்துள்ளது. தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையை அண்டியுள்ள பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மண்பானைகளின் வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.மண்பானைகளில் சிறிய பானையொன்று 150 ரூபாவாகவும், அதற்கு அடுத்துள்ள தரத்திலான பானைகள் 500 ரூபா, 550 ரூபா, 600 ரூபா ஆகிய பல்வேறு விலைகளிலும் விற்பனையாகின்றன. கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகளவிலான மண்பானைகள் விற்பனையாகுமென வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர் என செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09 ஜனவரி 2018

தேர்தல் களம் நோக்கி புளியங்கூடல் மண்ணின் மைந்தன்!

புளியங்கூடல் மண்ணின் மைந்தனும் சமூக சேவையாளருமாகிய கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்கள் இம்முறை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்றார்.சொந்த ஊரான புளியங்கூடலின் 8ம் வட்டாரம் ஜே/59 ஜே/60 பிரிவில் முதன்மை வேட்பாளராக களம் இறங்குகிறார் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்கள்.கொள்கைப்பற்றோடும் தேசிய உணர்வோடும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சியும் தமிழ் மக்களின்  நம்பிக்கையின் சின்னமுமான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரோடு இணைந்து பயணித்து வரும் ஞானேஸ்வரன் அவர்கள் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சின்னமான உந்து உருளி சின்னத்தில் தமிழ்த்தேசிய பேரவையின் கீழ் தேர்தல் களம் நோக்கி வந்திருக்கின்றார்.இந்த கொள்கை பற்றாளனை வெற்றி பெறசெய்வது தாய் மண்ணில் பற்றுக்கொண்ட ஒவ்வொருவரதும் கடமையாகும்.கேதீஸ்வரன் ஞானேஸ்வரனின் வெற்றியை ஒவ்வொருவரும் இன்றே உறுதி செய்து கொள்வோம்.10.02.2018ல் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

05 ஜனவரி 2018

பெற்ற தாயை மாடியிலிருந்து தள்ளிக் கொன்ற பேராசிரியர்!

son kiled motherஉடல்நிலை சரியில்லாத தாயைச் சொந்த மகனே மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த கொடூர சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.சந்தீப் நத்வானி என்பவர் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிப்புரிந்து வந்தார். இவரின் 64 வயது தாயார் ஜெயாஸ்ரீ பென் (Jayshreeben) பல நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஜெயாஸ்ரீ மாடியிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காவல்துறை சந்தீப்பிடம் விசாரித்தபோது தன் தாய் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக அனைவரையும் நம்ப வைத்துள்ளார். ஜெயாஸ்ரீயின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஜெயாஸ்ரீயின் உடல்நிலையைப் பார்க்கும்போது அவர் தானாக நடந்து சென்று மாடியிலிருந்து கீழே குதிக்க வாய்ப்பில்லை’ என்று மருத்துவர்கள் போலீஸிடம் தெரிவித்துள்ளனர். இதனால் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. சந்தீப் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது காவல்துறைக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜெயா ஸ்ரீ பலியான அன்று சந்தீப் ஜெயாஸ்ரீயை வலுக்கட்டாயமாக மாடிக்கு இழுத்து செல்கிறார். சிறிது நேரத்தில் சந்தீப் மட்டும் மாடியிலிருந்து கீழே இறங்கிவந்து தன் வீட்டுக்குள் சென்று தாழிட்டுக்கொள்கிறார். சற்று நேரத்தில் ஒருவர் வந்து சந்தீப் வீட்டின் கதவைத் தட்டி ஜெயா ஸ்ரீ கீழே விழுந்துகிடப்பதைத் தெரிவிக்கிறார். சந்தீப்பும் எதுவுமே தெரியாததுபோல் ஓடுகிறார். இந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து சந்தீப்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலைக்கு சந்தீப்பின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். உடல்நிலை சரியில்லாதத் தாயைக் கவனித்துக் கொள்வதில் ஏற்பட்ட சலிப்பே தாயை கொலை செய்யத் தூண்டியுள்ளது என்று அக்கம்பக்கத்தினர் ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.

04 ஜனவரி 2018

தான் மட்டுமே படித்தவன் என சுமந்திரன் நினைக்கிறார்!-சுரேஷ்

தமிழ் மக்களுக்கு படிப்பறிவில்லை, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு படிப்பறிவில்லை, ஊடகவியலாளர்களுக்கு படிப்பறிவில்லை, நீதியரசர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு படிப்பறிவில்லை, நான் மட்டுமே படித்தவன், மேதை என்னும் தோரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசியிலமைப்பு இடைக்கால அறிக்கை பற்றி பேசிக் கொள்கின்றார். மேற்கண்டவாறு தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பின் உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார். தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுரேஷ் பிறேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், புதிய அர சியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் எல்லாமே இருக்கிறது. ஆனால் அதனை எவரும் படிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார். அவருடைய கருத்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் படிப்பறிவில்லாதவர்கள், சிவில் சமூகத்தினர்படிப்பறிவில்லாதவர்கள், மக்கள் படிப்பறிவில்லாதவர்கள், முதலமைச்சர் நீதியரசர் சீ.வி. விக்னேஷ்வரன் படிப்பறிவில்லாதவர் ஒட்டுமொத்தத்தில் நாங்கள் அனைவரும் அடி முட்டாள்கள் தான் மட்டுமே படித்தவன், மேதை என்பதே அதன் பொருள். இதனை விட அவ ர் கூறுகிறார் சமஷ்டி பெயர் பலகை இல்லை. ஆனால் சமஷ்டி இருக்கிறது. நன்றாக புகுந்து பார்க்கவேண்டுமாம். சுமந்திரன் மக்களை எந்த நிலையில் வைத்து பார்க்கிறார் என்பதற்கு இது சிறந்த உதாரணம். வடகிழக்கு இணைப்பை பற்றி பேசுகிறார். அதாவது வடகிழக்கு இணைப்புக்கு 3 யோசனைகள் கூறப்பட்டுள்ளதாம். அதுதான் வடகிழக்கு இணைப்புக்கான வழி. ஜனாதிபதியும், பிரதமரும் மிக தெளிவாக சொல்கிறார்கள். வடகிழக்கு இணைப்பு தொடர்பாக 73 தடவைகள் கூடிய வழிகாட்டல் குழுவில் ஒன்றுமே பேசப்படவில்லையென. ஆனால் வடகிழக்கு இணைப்புக்கு 3 யோசனைகள் உள்ளதாம் சுமந்திரன் சொல் கிறார். எனவே மக்கள் தீர்மானிக்கவேண்டும் இங்கே ஜனாதிபதி பிரதமர் பொய்யர்களா ? சுமந்திரன் பொய்யனா? என்பதை. எங்கள் பார்வையின் படி ஜனாதிபதியும் பிரதமரும்தங்கள் மக்களுக்கு உண்மை சொல்கிறார்கள். தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தமது மக்களுக்கு பொய்யை மட்டுமே சொல்கிறார்கள். நாங்கள் சொன்னோம் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் வடகிழக்கு இணைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தியா சென்று அரசிடம் கேளுங்கள். அரசு கேட்காவிட்டாலும் அங்குள்ள ஊடகங்கள் கேட்கும் அதன் ஊடாக இந்தியாக கேட்கும் இந்தியாக கேட்டால் இலங்கை அரசு அதனை கேட்கும் என சொன்னோம். அதற்கு சம்மந்தன் எமக்கு சொன்ன பதில் சிங்கள மக்களை பகைத்து கொண்டு நான் இந்தியா செல்லமாட்டேன் என்பதே. இந்த லட்சணத்தில் சுமந்திரன் எங்களை கேட்கிறார் முடிந்தால் வடகிழக்கை இணைத்து காட்டுங்கள் பார்ப்போமாம். இதனை விட மோசமான பேச்சு புதிய அரசியலமைப்பு உருவாக்க பணியில் அரைவாசி தூரம் பயணித்து விட்டார்களாம். அரைவாசி தூரம் பயணித்து என்ன சாதித்தீர்கள்? கொழும்பு-07ல் உல்லாச பங்களா, எஸ்.ரி.எப் பாதுகாப்பு. பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை, இதுதான் சாதித்தது. மக்கள் இதனால் அடைந்த பயன் ஒன்றுமில்லை. எனவே மக்கள் இந்த தடவை மாற்றம் ஒன்றை நிச்சயமாக கொண்டுவரவேண்டும் என்றார்.

01 ஜனவரி 2018

முதலமைச்சரை விமர்சிப்பது கூட்டமைப்பின் அந்தரநிலையை காட்டுகிறது-கஜேந்திரகுமார்!

Bildergebnis für கஜேந்திரகுமார் பொன்னம்பலம்பத­விக்­கா­கவே வடக்கு முத­ல­மைச்­சர் தமிழ்த் தேசி­யக் கூட்டமைப்பின் தலை­மையை விமர்­சிக்­கின்­றார் என்று கூறி­னால் அதை சிறுபிள்ளை கூட ஏற்­காது என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்னணியின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் தெரிவித்தார்.தமிழ்த் தேசிய மக்­கள் பேர­வை­யின் வேட்­பா­ளர்­களை அறி­மு­கப்­ப­டுத்­தும் நிகழ்வு நேற்று வட்­டுக்­கோட்­டை­யில் உள்ள பேரவையின் அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரிவித்தபோது அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். தமிழ் தேசி­யக் கூட்டமைப்புக்கு விசு­வா­ச­மாக இருந்­தி­ருந்­தால் அடுத்த தலைமையாக அவர் இருந்­தி­ருப்­பார். முத­ல­மைச்­சர் சம்­பந்­தனை வீழ்த்தி தலை­மைப் பத­வியை பெற­வேண்­டும் என நினைக்கவில்லை.சம்­பந்­தன் மீது ஒரு­வித நன்­றிக்­க­டன் இருப்பதால்தான் இப்­போ­தும் ஒரு நிலைப்­பாட்­டுக்கு வராது இன்­றும் அமை­தி­யாக இருக்­கின்­றார். தமிழ் மக்­களை சுமத்­தி­ரன் மட்­டும் அழிக்­க­வில்லை, சம்­பந்­தனும் சேர்ந்து அழித்­துக் கொண்டிருக்கின்றார்.முத­ல­மைச்­சர் ஒரு பக்­கத்­தில் எழு­திய அறிக்கைக்கு பத்து பக்­கத்­தில் தமி­ழ­ர­சுக் கட்சி பதிலை வழங்கியுள்ளது என்­றால் அவர்­கள் எந்­த­ள­வுக்கு அந்­த­ரத்­தில் உள்ளனர் என விளங்­கு கின்­றது.தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் இடைக்­கால அறிக்­கை­யில் உள்ள விட­யங்­களை வீடு வீடாக சென்று மக்­கள் மத்­தி­யில் பொய்­யான பரப்­பு­ரை­களை மேற்­கொண்டு குழப்பப் போகின்­ற­னர். தமிழ் மக்­கள் இந்த விட­யத்­தில் தெளிவடைய வேண்­டும். அபி­வி­ருத்தி என்ற பெய­ரில் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் இந்த தேர்­த­லில் வெற்­றி­யீட்­டி­னால் சர்­வ­தேச மட்டத்தில் தமிழ் மக்­கள் தமக்கு ஆத­ரவு உள்­ளது என்று வெளிக்காட்டி அர­ச­மைப்பை நிறை­வேற்ற உத்­தே­சிக்­கின்­ற­னர் என்பதையும் கஜேந்திரகுமார் தெளிவுபடுத்தியுள்ளார்.