திருகோணமலை மூதூர் கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தில் தமிழர் என கூறி ஆலய குருக்களுக்கு உதவியாளராக இருந்த முஸ்லிம் நபர் ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்தநபர் ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுத்தாரா? என்று பக்தர்கள் எழுப்பிய சந்தேகத்தையடுத்து அது தொடர்பில் ஆலய நிர்வாசபையினரை அழைத்து நேற்று மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஏறாவூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சொந்தப் பெயரை மறைத்து சிவா என்ற தமிழ் பெயரில் கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தின் பூசகருக்கு உதவியளாராக கடந்த 02 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் பூஜையின் போது பக்தர்களுக்கு வழங்கும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளைக் கலந்து கொடுத்து வந்துள்ளதாக பக்தர்கள் சிலர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர் கடையொன்றில் கையடக்க தொலைபேசிக்கான அட்டைகளை திருடி சேருவில பகுதியில் விற்ற போதே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை மூதூர் பொலிஸார் விசாரணைக்குட்படுத்திய போது மேற்படி நபர் தமிழர் அல்லர் என்றும் முஸ்லிம் எனவும் போலியான பெயரில் அங்கு பணிபுரிந்ததுவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இவரை புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து அவதானித்து வந்த நிலையில், இவர் ஏறாவூருக்கு தனது தாயாரின் வீட்டுக்கு சென்று அங்குள்ள பள்ளிக்கு தொழ சென்ற வேளையில் இவர் முஸ்லிம் நபர் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
இதற்கிடையில் இவர் பற்றிய ஒரு தகவல் முகப்புத்தக நூலில் வெளிவந்த போது தான் தமிழர் தான் முஸ்லிம் அல்ல என மறுத்துரைத்து தன்மீது பொறாமை உள்ளவர்களே இந்த முகநூலை வெளியிட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தனியார் நிறுவனமொன்றில் ஆசிரியராக கடமையாற்றி முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் முடித்ததற்காகவே தான் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூதூர் பொலிஸார் ஆலய குருக்களையும் பரிபாலன சபையினரையும் நேற்று சனிக்கிழமை அழைத்து விசாரணைகளை செய்துள்ளனர்.
இதேவேளை கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தில் குருக்களாக பணியாற்றி வரும் குருக்களுக்கு உதவியாளராக குறித்த நபர் சேர்ந்து கடந்த 02 வருடங்களாக இந்த ஆலயத்தில் பணியாற்றி வந்துள்ளதோடு மேற்படி குருக்களிடமிருந்தே குறிக்கப்பட்ட பணத்தை சம்பளமாக பெற்று வந்துள்ளார் எனவும் ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர். இவர் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையை கலந்து விநியோகித்துள்ளாரா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மூதூர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் சிவா, என்று அழைக்கப்படும் குறித்த நபரின் உண்மையான பெயர் புஹாரி முகமது லாபீர் கான் என்றும் இவர் ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்டவரென்றும் ஏலவே மூன்று திருமணங்கள் செய்துள்ளார் எனவும் தெரிய வருகிறது. மூத்த மனைவி ஓட்டமாவடி மீராவோடைச் சேர்ந்த அபுல் ஹாசன் சுபாஹனி என்றும் இரண்டாவது மனைவி மட்டக்களப்பு கரடியனாற்றைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தியென்ற தமிழ் பெண் என்றும் மூன்றாவதாக திருமணம் செய்தவர் கல்முனையைச் சேர்ந்த ஏ.ஜே.எப்.சப்னா என்றும் தெரிய வருகிறது. இவர் ஏலவே கற்பழிப்பு மற்றும் ஜீவனாம்சம் வழங்காமை ஆகிய குற்றச்செயல்கள் காரணமாக நீதிமன்ற வழக்குக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர் என்றும் இவரது கையடக்க தொலைபேசியை பரிசீலித்த போது ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சில தகவல்கள் கண்டறியப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
26 மே 2019
25 மே 2019
கொள்கையோடு போராடிய புலிகளோடு குண்டுதாரிகளை ஒப்பிடவேண்டாம்-ரவூப் ஹக்கீம்!
விடுதலைப் புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்.
“தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை. ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இது சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள். இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்” என்றார்.
23 மே 2019
வாக்கு எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி!
லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து நாம் தமிழர் கட்சியை சீமான் நடத்தி வருகிறார். பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பல நூறு கோடி ரூபாய் தேர்தலுக்கு செலவு செய்கின்றனர். சீமானின் வியூகம் ஆனால் எளிய வீட்டுப் பிள்ளைகளை தேர்தல் களத்தில் நிற்க வைத்து பிரசாரம் செய்தார் சீமான். அவரது அரசியலை பிரிவினைவாதம் என முத்திரை குத்தி ஒதுக்கி வைத்தன பிரதான கட்சிகள். அரசியல் கட்சிகள் அதிர்ச்சி இம்முறை லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்று வரும் வாக்குகள் அந்த அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி வந்துள்ளது. நாம் தமிழர் 3-வது இடம் குறிப்பாக தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகள் என பேசப்பட்ட தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் ஆகியவற்றைவிட நாம் தமிழர் கட்சி கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியாக சீமான் விஸ்வரூபமெடுத்து வருகிறார் என்பதையே இன்றைய வாக்கு நிலவரம் வெளிப்படுத்துகிறது. சீமானின் பொதுக்கூட்ட பேச்சு சீமான் பொதுக்கூட்டங்களில் பேசும் போது, நாங்களும் ஒருநாள் அதிகாரத்துக்கு வருவோம்.. அப்ப வேடிக்கையை பாருங்க என குறிப்பிடுவார். சீமானின் பேச்சை வேடிக்கையாக எடுத்துக் கொண்டவர்கள் இப்போது கதிகலங்கியிருப்பார்கள். கனவு மெய்ப்படுகிறது!
01 மே 2019
நாட்டில் சுபீட்ஷம் ஏற்பட மீண்டும் பிரபாகரன் வரவேண்டுமா என்கிறார் தேரர்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம் இல்லாமல் போயிருக்குமா? கிழக்கு இழக்கப்பட்டிருக்குமா? என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் கடந்த முப்பது வருடங்களில் யுத்தத்தை நன்கு அறிந்த பிக்கு, நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நான் இங்கு இருந்தேன், அப்போது நான் வாகரை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளுக்குச் சென்றுள்ளேன்.
அந்த பகுதிகளுக்குச் சென்ற நான் விகாரைகளைப் புணரமைப்பதற்காக விடுதலைப் புலிகளிடம் இருந்து பல உதவிகளைப் பெற்றுள்ளேன். அதன்போது என்னை எவரும் விரல் நீட்டி பேசியதில்லை. எனக்கு அச்சுறுத்தல் விடுத்ததில்லை.
தற்போது உள்ள அரசியல் தலைமைகள், தமிழ் தலைமைகள் உள்ளிட்ட பலர் என்மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
யுத்தக்காலத்தில் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த 2000 சிங்களம் மற்றும் தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் கிடைக்கவில்லை. அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவற்றை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக பல முறை ஆட்சியாளர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது தமிழ் மக்களின் தலைமைகள் என சொல்லிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள் இது இனத்துவேசம் என என்மீது குற்றம் சுமத்தினர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான புனானை பிரதேசத்தில் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கான திறந்தவெளி பல்கலைக்கழகம் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் அமைக்கப்படுகின்றது.
தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலப்பரப்பை தமிழ் மக்களுக்கு வழங்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எவ்வாறு அரசாங்கம் அனுமதி கொடுத்தது.
தமிழர்களின் பிரதிநிதி என கூறும் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் இதனை நிறுத்த முடியுமா?
புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த புனானையில் கட்டடம் கட்டப்பட்டிருக்குமா? கிழக்கு பறிபோயிருக்குமா?எதிர்காலத்தில் நாட்டில் சுபீட்சம் நிலவுவதற்கு எதிர்காலத்தில் பிரபாகரனே மீண்டும் வரவேண்டுமா என எண்ணத் தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)