பக்கங்கள்

26 மே 2019

பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை?இந்துவாக நடித்த இஸ்லாமியர் கைது!

Bildergebnis für பஞ்சாமிர்தத்தில்திருகோணமலை மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தில் தமிழர் என கூறி ஆலய குருக்களுக்கு உதவியாளராக இருந்த முஸ்லிம் நபர் ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்­த­நபர் ஆல­யத்­துக்கு வரும் பக்­தர்­க­ளுக்கு வழங்­கப்­படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து கொடுத்­தாரா? என்று பக்­தர்கள் எழுப்­பிய சந்­தே­கத்­தை­ய­டுத்து அது தொடர்பில் ஆலய நிர்­வா­ச­பை­யி­னரை அழைத்து நேற்று மூதூர் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளதாக தெரியவருகிறது. இச்சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, ஏறா­வூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சொந்தப் பெயரை மறைத்து சிவா என்ற தமிழ் பெயரில் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தின் பூச­க­ருக்கு உத­வி­ய­ளா­ராக கடந்த 02 வரு­டங்­க­ளாக பணி­யாற்றி வந்­துள்ளார். இவர் பூஜையின் போது பக்­தர்­க­ளுக்கு வழங்கும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களைக் கலந்து கொடுத்து வந்­துள்­ள­தாக பக்­தர்கள் சிலர் சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ளனர். இந்­நி­லையில் குறித்த நபர் கடை­யொன்றில் கைய­டக்க தொலை­பே­சிக்­கான அட்­டை­களை திருடி சேரு­வில பகு­தியில் விற்ற போதே கைது­செய்­யப்­பட்­டுள்ளார். இவரை மூதூர் பொலிஸார் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­திய போது மேற்­படி நபர் தமிழர் அல்லர் என்றும் முஸ்லிம் எனவும் போலி­யான பெயரில் அங்கு பணிபுரிந்­த­து­வந்­ததும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. அது­மட்­டு­மின்றி இவரை புல­னாய்வு பிரி­வினர் தொடர்ந்து அவ­தா­னித்து வந்த நிலையில், இவர் ஏறா­வூ­ருக்கு தனது தாயாரின் வீட்­டுக்கு சென்று அங்­குள்ள பள்­ளிக்கு தொழ சென்ற வேளையில் இவர் முஸ்லிம் நபர் என்­பது ஊர்­ஜி­த­மா­கி­யுள்­ளது. இதற்­கி­டையில் இவர் பற்­றிய ஒரு தகவல் முகப்­புத்­தக நூலில் வெளி­வந்த போது தான் தமிழர் தான் முஸ்லிம் அல்ல என மறுத்­து­ரைத்து தன்­மீது பொறாமை உள்­ள­வர்­களே இந்த முக­நூலை வெளி­யிட்­டுள்­ளார்கள் என தெரி­வித்­துள்ளார். அது­மட்­டு­மன்றி தனியார் நிறு­வ­ன­மொன்றில் ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்றி முஸ்லிம் பெண் ஒரு­வரை திரு­மணம் முடித்­த­தற்­கா­கவே தான் ஊரை விட்டு ஒதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார். இவர் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக மூதூர் பொலிஸார் ஆலய குருக்­க­ளையும் பரி­பா­லன சபை­யி­ன­ரையும் நேற்று சனிக்­கி­ழமை அழைத்து விசா­ர­ணை­களை செய்­துள்­ளனர். இதே­வேளை கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தில் குருக்­க­ளாக பணி­யாற்றி வரும் குருக்­க­ளுக்கு உத­வி­யா­ள­ராக குறித்த நபர் சேர்ந்து கடந்த 02 வரு­டங்­க­ளாக இந்த ஆல­யத்தில் பணி­யாற்றி வந்­துள்­ள­தோடு மேற்­படி குருக்­க­ளி­ட­மி­ருந்தே குறிக்­கப்­பட்ட பணத்தை சம்­ப­ள­மாக பெற்று வந்­துள்ளார் எனவும் ஆலய நிர்­வாக சபை­யினர் தெரி­வித்­துள்­ளனர். இவர் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரையை கலந்து விநி­யோ­கித்­துள்­ளாரா என்­பது தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை பொலிஸார் மேற்­கொண்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதே­வேளை மூதூர் பொலி­ஸாரால் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டி­ருக்கும் சிவா, என்று அழைக்­கப்­படும் குறித்த நபரின் உண்­மை­யான பெயர் புஹாரி முக­மது லாபீர் கான் என்றும் இவர் ஏறா­வூரை பிறப்­பி­ட­மாகக் கொண்­ட­வ­ரென்றும் ஏலவே மூன்று திரு­ம­ணங்கள் செய்­துள்ளார் எனவும் தெரிய வரு­கி­றது. மூத்த மனைவி ஓட்­ட­மா­வடி மீரா­வோடைச் சேர்ந்த அபுல் ஹாசன் சுபா­ஹனி என்றும் இரண்­டா­வது மனைவி மட்­டக்­க­ளப்பு கர­டி­ய­னாற்றைச் சேர்ந்த நல்­ல­தம்பி சாந்­தி­யென்ற தமிழ் பெண் என்றும் மூன்­றா­வ­தாக திரு­மணம் செய்­தவர் கல்முனையைச் சேர்ந்த ஏ.ஜே.எப்.சப்னா என்றும் தெரிய வருகிறது. இவர் ஏலவே கற்பழிப்பு மற்றும் ஜீவனாம்சம் வழங்காமை ஆகிய குற்றச்செயல்கள் காரணமாக நீதிமன்ற வழக்குக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர் என்றும் இவரது கையடக்க தொலைபேசியை பரிசீலித்த போது ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சில தகவல்கள் கண்டறியப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

25 மே 2019

கொள்கையோடு போராடிய புலிகளோடு குண்டுதாரிகளை ஒப்பிடவேண்டாம்-ரவூப் ஹக்கீம்!

Ähnliches Fotoவிடுதலைப் புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம். “தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை. ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இது சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள். இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்” என்றார்.

23 மே 2019

வாக்கு எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி!

லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து நாம் தமிழர் கட்சியை சீமான் நடத்தி வருகிறார். பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பல நூறு கோடி ரூபாய் தேர்தலுக்கு செலவு செய்கின்றனர். சீமானின் வியூகம் ஆனால் எளிய வீட்டுப் பிள்ளைகளை தேர்தல் களத்தில் நிற்க வைத்து பிரசாரம் செய்தார் சீமான். அவரது அரசியலை பிரிவினைவாதம் என முத்திரை குத்தி ஒதுக்கி வைத்தன பிரதான கட்சிகள். அரசியல் கட்சிகள் அதிர்ச்சி இம்முறை லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்று வரும் வாக்குகள் அந்த அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி வந்துள்ளது. நாம் தமிழர் 3-வது இடம் குறிப்பாக தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகள் என பேசப்பட்ட தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் ஆகியவற்றைவிட நாம் தமிழர் கட்சி கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியாக சீமான் விஸ்வரூபமெடுத்து வருகிறார் என்பதையே இன்றைய வாக்கு நிலவரம் வெளிப்படுத்துகிறது. சீமானின் பொதுக்கூட்ட பேச்சு சீமான் பொதுக்கூட்டங்களில் பேசும் போது, நாங்களும் ஒருநாள் அதிகாரத்துக்கு வருவோம்.. அப்ப வேடிக்கையை பாருங்க என குறிப்பிடுவார். சீமானின் பேச்சை வேடிக்கையாக எடுத்துக் கொண்டவர்கள் இப்போது கதிகலங்கியிருப்பார்கள். கனவு மெய்ப்படுகிறது!

01 மே 2019

நாட்டில் சுபீட்ஷம் ஏற்பட மீண்டும் பிரபாகரன் வரவேண்டுமா என்கிறார் தேரர்!

Ähnliches Fotoதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம் இல்லாமல் போயிருக்குமா? கிழக்கு இழக்கப்பட்டிருக்குமா? என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். நான் கடந்த முப்பது வருடங்களில் யுத்தத்தை நன்கு அறிந்த பிக்கு, நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நான் இங்கு இருந்தேன், அப்போது நான் வாகரை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளுக்குச் சென்றுள்ளேன். அந்த பகுதிகளுக்குச் சென்ற நான் விகாரைகளைப் புணரமைப்பதற்காக விடுதலைப் புலிகளிடம் இருந்து பல உதவிகளைப் பெற்றுள்ளேன். அதன்போது என்னை எவரும் விரல் நீட்டி பேசியதில்லை. எனக்கு அச்சுறுத்தல் விடுத்ததில்லை. தற்போது உள்ள அரசியல் தலைமைகள், தமிழ் தலைமைகள் உள்ளிட்ட பலர் என்மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். யுத்தக்காலத்தில் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த 2000 சிங்களம் மற்றும் தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் கிடைக்கவில்லை. அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவற்றை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக பல முறை ஆட்சியாளர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது தமிழ் மக்களின் தலைமைகள் என சொல்லிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள் இது இனத்துவேசம் என என்மீது குற்றம் சுமத்தினர். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான புனானை பிரதேசத்தில் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கான திறந்தவெளி பல்கலைக்கழகம் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் அமைக்கப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலப்பரப்பை தமிழ் மக்களுக்கு வழங்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எவ்வாறு அரசாங்கம் அனுமதி கொடுத்தது. தமிழர்களின் பிரதிநிதி என கூறும் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் இதனை நிறுத்த முடியுமா? புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த புனானையில் கட்டடம் கட்டப்பட்டிருக்குமா? கிழக்கு பறிபோயிருக்குமா?எதிர்காலத்தில் நாட்டில் சுபீட்சம் நிலவுவதற்கு எதிர்காலத்தில் பிரபாகரனே மீண்டும் வரவேண்டுமா என எண்ணத் தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.