பக்கங்கள்

27 மார்ச் 2021

நாளை மாபெரும் சைக்கிள் பேரணிக்கு நாம் தமிழர் அழைப்பு!

சென்னையில், மார்ச் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, நாம் தமிழர் கட்சி சைக்கிள் பேரணி நடத்தி மக்களிடம் ஆதரவு கேட்க உள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடைபெற இருக்கின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்பதும், அதன் வேட்பாளர்களில், சரிபாதி தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவதும் தாங்கள் அறிந்ததே.அதில் ஒரு சிறப்பம்சமாக, தியாகராய நகர் தொகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் சகோதரி சிவசங்கரி போட்டியிடுகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறையின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.சகோதரி சிவசங்கரியை ஆதரித்தும், தமிழகம் முழுவதும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் ஆதரித்து வருகிற மார்ச் 28ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பாசறையானது, மாபெரும் மிதிவண்டிப் பரப்புரைப் பேரணியை நடத்த உள்ளது.மிதிவண்டிப் பரப்புரைப் பேரணியானது, அன்றைய தினம் காலை 6.30 மணி அளவில் ஆரம்பித்து, சௌந்தர பாண்டியனார் அங்காடி, எம்ஜிஆர் நினைவு இல்லம், நடேசன் பூங்கா, துரைசாமி சுரங்கப்பாதை, மேற்கு மாம்பலம், அசோக்நகர் , வடபழனி, கோடம்பாக்கம் வழியாக மீண்டும் பனகல் பூங்காவினை காலை 8.30 மணி அளவில் சென்றடைந்து நிறைவடைகிறது. இந்த நிகழ்வில் நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

19 மார்ச் 2021

தமிழர்களுக்கு எதிரான உச்சக்கட்ட கொடூரமே முள்ளிவாய்க்கால் படுகொலை!

2009 ஆம் ஆண்டில், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி சில மாதங்களில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர் என பிரித்தானிய நாடாளுமன்ற தொழிற்கட்சியின் உறுப்பினர் சியோபைன் மெக்டோனாக் தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் ஒன்று (Back bench Debate) நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்திற்கான முன்னெடுப்புக்களை பிரித்தானியத் தமிழர் பேரவையினர், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவினூடாக (APPG forTamils) முன்னெடுத்திருந்தனர். கடந்த 11ஆம் திகதி பெப்ரவரி மாதம் 
நடைபெறவிருந்த இந்த விவாதமானது நாடாளுமன்றத்தில் வேறு ஒரு அவசர நிகழ்வால் மாற்றப்பட்டு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளின் மிக உச்சகட்டமான முள்ளிவாய்க்கால் படுகொலையின் கொடூரத்தை நாம் அனைவரும் அறிவோம். இலங்கையின் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும், அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச (தற்போதைய ஜனாதிபதி) பாதுகாப்பு செயலாளராக இருந்தனர். 1980 களில் இருந்து, தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினரான இலங்கையில் குறைந்தது 60,000 மற்றும் 100,000 வழக்குகள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச பொது மன்னிப்பு சபை மதிப்பிடுகிறது. இந்த புள்ளிவிவரங்கள் துன்பத்தின் அளவு, உண்மைகளைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் தீர்வுக்கான அவசரத் தேவையை வலியுறுத்துகின்றன. உள்நாட்டுப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றின் கொடுமை, பெண்களின் உரிமைகளை பெருமளவில் மீறிய கதைகள், அவை நாம் ஒருபோதும் மறக்க முடியாத கதைகள். எனினும், இன்றுவரை, சர்வதேச குற்றங்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இதேவேளை, இலங்கையில் மனித உரிமைகள் மீண்டும் மீறப்படுகின்றன. கடுமையான போர்க்கால துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பலர் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் ஏழு அமைச்சரவை பதவிகள் உட்பட ஒன்பது அமைச்சர் பாத்திரங்களை வகிக்கின்றனர், மேலும் பாதீட்டில் கால் பகுதியை நிர்வகிக்கின்றனர். மனித உரிமை மீறல் குற்றவாளிகளாக கருதப்படும் பாதுகாப்புப் படையின் உறுப்பினர்களில் ஒருவரான சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மன்னிப்பு வழங்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான மிரட்டல் மிகச் சிறந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு வலுவான நடவடிக்கை எடுக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவை அழைப்பு விடுத்தது. இது தமிழர்களின் மனித உரிமைகள் பற்றியது மட்டுமல்ல. கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசு வலியுறுத்தியது. இதன் மூலம் நாட்டில் உள்ள கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களின் மத நம்பிக்கைகளை புறக்கணித்தது எனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, பிரித்தானியா முழுவதும் அரை மில்லியன் தமிழர்கள் உள்ளனர். அவர்கள் ஒரு கடின உழைப்பாளி, மரியாதைக்குரிய மற்றும் அர்ப்பணிப்புள்ள சமூகம், அவர்கள் எனக்கு மிகுந்த மரியாதை செலுத்துகிறார்கள். அயராது உழைக்கும் ஏராளமான தமிழர்களுக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம். நான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி செலுத்துகிறேன், நல்லிணக்கத்திற்கான பாதை நீண்ட காலமாக இருந்தாலும், அவை அடையப்படும் வரை நாங்கள் நீதி மற்றும் மனித உரிமைகளுக்காக போராடுவோம் என்று சத்தமாகவும் தெளிவாகவும் கூறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

13 மார்ச் 2021

மறுபடியும் இரட்டை இலை, உதயசூரியனுக்கு ஓட்டு போட்டால்நாசமாகத்தான் போவீங்க-சீமான்!

ஒன்னு சொல்றேன்.. மறுபடியும் இரட்டை இலை, உதயசூரியனுக்கு ஓட்டு போட்டால், நாசமாகத்தான் போவீங்க" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் காட்டமாக முழங்கினார். பேசினார். சீமான் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.. தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.. செல்லும் இடமெல்லாம் சீமானின் பேச்சுக்கு மக்கள் கைகளை தட்டி வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல சீமானும், தன்னுடைய பேச்சில் அதிமுக, திமுகவை சரமாரியாக விமர்சித்து வருகிறார். கிருஷணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்றும் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் சொல்லும்போது, "கழக ஆட்சிகளை, கட்சிகளை முழுதுமாக அப்புறப்படுத்தாமல், நாட்டு மக்களை வாழ வைக்க முடியாது... தமிழக அரசிற்கு உள்ள, 6 லட்சம் கோடி கடனை யார் தள்ளுபடி செய்வது என்ற கேள்விக்கு இப்போ வரைக்கும் பதில் இல்லை... ஊழல் மிகவும் குறைவாக உள்ள நாடு டென்மார்க். அதற்கு காரணம் வெளிப்படை நிர்வாகம்.. அந்த மாதிரிதான் நாங்கள், தமிழகத்திலும் வெளிப்படை நிர்வாகத்தை கொடுக்க விரும்புகிறோம்.கல்வியில் சிறந்த நாடாக தென்கொரியா உள்ளது. அந்த நாட்டை தாண்டி, தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும்... தரமான கல்வி, மருத்துவத்தை இலவசமாக வழங்குவோம். கல்வி, மருத்துவம், குடிநீர் வினியோகம் ஆகியவற்றை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து உள்ளது.. இப்போதைய ஆட்சி யாளர்களின் பொருளாதார கொள்கை முடிவு.முதல்வர், அமைச்சர், எம்எல்ஏ, எம்பி அரசு அதிகாரிகள் குழந்தைகள், அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும்.. அரசு மருத்துவமனையை பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் சட்டம் கொண்டு வருவோம்... எங்களை நம்பி, ஓட்டு போட்டால் நீங்கள் நல்லா இருப்பீங்க.. ஆனால், மறுபடியும் இரட்டை இலை, உதயசூரியன் என்றால் நாசமாக போவீங்க..திராவிட அரசியல் என்பது, திராவிட கோட்பாடு என்பது தமிழர்களை சாதி, மதம் என பிளந்து, பிளவுபட்டு ஆளுவது.. ஆனால், தமிழ் தேசிய அரசியல் என்பது சாதி, மத பிளவுகளை இணைத்து, ஒன்றுபட்டு, ஒன்றுதிரட்டி, அரசியல் வலிமை பெற்று, அதிகாரத்தை கைப்பற்றி ஆளுவது.. இது இரண்டுக்கும் வேறுபாடு இருக்கு.. கட்சி வேற கட்சிதான்.. கோட்பாடு ஒன்றுதான், கொள்கை ஒன்றுதான்.திமுகவில் எந்த இடத்தில் அதிமுக கொள்கை மாறுபடுகிறது? அதிமுகவில் இருந்து திமுக எந்த இடத்தில் மாறுபடுகிறது? இங்கியும் ஊழல், அங்கியும் ஊழல்.. இங்கியும் லஞ்சம், அங்கியும் லஞ்சம்.. இங்கியும் திருட்டு, அங்கேயும் திருட்டு.. இங்கியும் இருட்டு, அங்கேயும் இருட்டு.. இங்கியும் டாஸ்மாக், அங்கியும் டாஸ்மாக், அதனால ரெண்டு கட்சியும் இதுவரை பாஸ்மார்க்..!அப்போ இந்த கருத்தியலுக்கு மாற்று தமிழியம்தான், தமிழ்தேசிய அரசியல்தான்.. தயவுசெய்து இந்த முறை, இந்த முறை பழகிடுச்சுன்னு மட்டும்
சொல்லாதீங்க.. சிந்தனையை மாற்றி பாருங்கள்.. இந்த முறை விவசாய சின்னத்துக்கு ஓட்டு போட்டு பாருங்கள்" என்றார்.

12 மார்ச் 2021

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரது கூடாரத்தை அகற்றியது பொலிஸ்!

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பு – மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நடைபெறுகின்ற நிலையில், இன்று அதிகாலை போராட்டம் நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரமும், பதாகைகளும் அகற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பொலிஸாரினால் இந்த அகற்றல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், கறுப்புக் குடைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டததை முன்னெடுத்தனர். இதேவேளை, கூடாரம் மற்றும் பதாகைகள் அகற்றப்படடமை தொடர்பாக, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்வதற்குச் சென்றவேளை, கூடாரம் உள்ளிட்டவற்றை தாமே அகற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்துள்ளார். நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாகவே குறித்த கூடாரம் உள்ளிட்டவை அகற்றப்பட்டதாக, குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார். எனினும், நீதிமன்றக் கட்டளை தொடர்பாக எந்தவித அறிவிப்புகளும் தமக்கு வழங்கப்படாமல், எவ்வித முன்னறிவித்தலும் வழங்கப்படாமல் தன்னிச்சையாக இந்தச் செயற்பாடு இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இது சட்ட விரோதமான செயலென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவுசெய்துள்ளதாக அருட்தந்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில், சாத்வீக ரீதியான, அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் நீதி கோரிய போராட்டம் அனைத்துத் தடைகளையும் தாண்டி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவிக்கையில், நாங்கள் போராட்டம் நடத்தும் கூடாரங்களை அகற்றிச் சென்றமையானது இந்த நாட்டில் நீதி செத்துவிட்டது என்பதையும் அநீதி தலைவிரித்தாடுவதையும் காட்டுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

09 மார்ச் 2021

பிரபாகரனின் தம்பி நான்,சமரசத்திற்கு இடமில்லை,சீமான் அதிரடிப்பேச்சு!

இலவசங்களையும் கவர்ச்சித் திட்டங்களையும் அறிவிக்கப் போவதில்லை. மக்களுக்கு இலவசங்களே தேவைப்படாத அளவிற்கு வாழ்க்கைத்தரத்தை மாற்றுவோம் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். திருவொற்றியூர் தொகுதியில் முதல் பிரச்சாரத்தை தொடங்கிய சீமான், ஓடி ஆடி வேலை செய்யக்கூடிய தெம்பு இருக்கும் போதே அதிகாரத்தை கொடுங்கள் சிறப்பான ஆட்சியை தருகிறோம் என்று கூறி வாக்கு சேகரித்தார். சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி. ஒரே மேடையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து விட்டு பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டார் சீமான்.சென்னை திருவொற்றியூரில் களம் காண்கிறார் சீமான். விவசாயி சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்த சீமான், முதல் பிரச்சாரத்திலேயே அதிரடியான வாக்குறுதிகளை அளித்தார். மிக்சி தருகிறேன், டிவி தருகிறேன் என்று இலவசங்களை கவர்ச்சி திட்டங்களை அறிவிக்க மாட்டேன் என்று கூறினார்.உங்களை நம்பி இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான இலவசக் கல்வியை அளிப்போம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும் வகையில் உத்தரவாதத்தை கொடுப்போம் என்றார்.இலவசங்களை மக்கள் எதிர்பார்க்காத அளவிற்கு அவர்களின் வாழ்வை உயர்த்த முயற்சி செய்வோம். தண்ணீர் விற்பனைக்கு தடை செய்வோம். தரமான மருத்துவம் ,கல்வி ,கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்பினை அளிப்போம் என்றார், அனல்மின் நிலையத்தை உருவாக்கி வாழும் இடத்தை அழித்து சாம்பலாக்கி கொண்டிருக்கிறார்கள். காட்டுப்பள்ளியில் 6000 ஏக்கர் இடத்தை அதானி வாங்கி மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக்கட்ட முடிவு செய்துள்ளார். பிரபாகரனின் தம்பி நான்; எதற்கும் சமரசம் செய்யாமல் சண்டை போடும் துணிவு கொண்டவன்.உடம்பில் ஆடி ஓடி வேலை செய்ய தெம்பு இருக்கும் போதே கொண்டு போய் அதிகாரத்தில் அமர வைத்து விடுங்கள் நாங்கள் சிறப்பான ஆட்சியை உங்களுக்குக் கொடுக்கிறோம். சக்கர நாற்காலியில் அமர்ந்த பிறகு பதவி கொடுத்தால் வேலை செய்ய முடியாது எனவே இப்போதே ஜெயிக்க வைத்து விடுங்கள் என்று வாக்கு சேகரித்தார் சீமான்.

08 மார்ச் 2021

மக்கள் நலனே முக்கியம் என்பதால் திருவொற்றியூரில் போட்டி​-சீமான்!

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன் என்று சீமான் விளக்கி உள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்காக தற்போது நாம் தமிழர் கட்சி டாப் கியரில் சென்று கொண்டு இருக்கிறது. திமுக, அதிமுக இன்னும் முழுமையாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிக்கவில்லை. ஆனால் நாம் தமிழர் கட்சியோ கூட்டணி பற்றியெல்லாம் யோசிக்காமல் துணிச்சலாக தேர்தலை தனியாக சந்திக்க உள்ளது. இதற்காக நேற்று நாம் தமிழர் கட்சி தங்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்தது. சட்டசபை தேர்தலுக்கான 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி நேற்று அறிவித்தது.ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்தார். ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. லோக்சபா தேர்தல் போலவே 50% பெண் வேட்பாளர்களை சட்டசபை தேர்தலிலும் களமிறக்குவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் நேற்று 50% பெண் வேட்பாளர்களை சீமான் அறிவித்தார்.234 வேட்பாளர்களில் 117 ஆண் வேட்பாளர்கள் ,117 பெண் வேட்பாளர்கள் நாம் தமிழர் சார்பாக சீமானால் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட போகிறேன் என்று சீமான் முன்பு கூறி இருந்தார்.இதனால் கொளத்தூர் தொகுதியில் சீமான் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் கொளத்தூர் தொகுதிக்கு பதிலாக திருவொற்றியூர் தொகுதியை சீமான் தேர்வு செய்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன் என்று சீமான் விளக்கி உள்ளார். அதில், கொளத்தூரில்தான் போட்டியிடலாம் என்று இருந்தேன்.ஆனால் மக்கள் நலன்தான் முக்கியம். ஒருவரை வீழ்த்துவது முக்கியம் இல்லை. ஒருவரை வீழ்த்துவதை விட மக்களுக்கு என்ன செய்கிறேன் என்பதே முக்கியம். இதனால் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடாமல் திருவொற்றியூர் தொகுதியை தேர்வு செய்து இருக்கிறேன், என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.