பக்கங்கள்

21 ஏப்ரல் 2011

ஸ்ரீலங்கா அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!

சிறீலங்கா அரசினால் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை தண்டிக்கும் நோக்கோடும், அதற்கு காரணமாக இருந்தவர்களை சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்தவும் புலம்பெயர் ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டங்கள் அரசியல் வேலைத்திட்டங்கள் மற்றும் போர்க்குற்ற ஆதாரங்களை ஜ.நா மனித உரிமை அமைப்புக்களுக்கு வழங்கியது போன்ற செயற்பாடுகளுக்கு இசைவாக ஜ.நா சபையின் நிபுணர் குழு அறிக்கை அமைந்துள்ளது.
ஜ.நா சபையின் இந்த நகர்விற்கும் அதனூடாக சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்காக சர்வதேசத்தின் முன் நிறுத்தி தண்டனைக்கு உட்படுத்த ஜ.நா அமைப்புக்களும் சர்வதேச அமைப்புக்களும் முயற்சி எடுத்துவருகின்றன. இந்தவேளையில் இந்தியா, சீனா ரஷ்சியா போன்ற நாடுகளினூடாக சிறீலங்கா அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருவது ஜ.நா வின் முயற்சியை தடுக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ முனைவதாகவே தெரிகிறது.
சிறீலங்கா அரசினால் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட போரிற்கும், அக்காலப்பகுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கும் சிறீலங்கா அரசிற்கு உறுதுணையாக நின்ற இந்தியா, சீனா போன்ற நாடுகள் எதிர்ப்பை தெரிவிப்பது யதார்த்தமானதே. பூகோள அரசியலில் இன்று ஏற்பட்டிருக்கும் மாற்றத்தினூடாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சூழல் ஏற்பட்டுள்ள இத்தருணத்தில் ரஷ்சியா போன்ற நாடுகளின் செயற்பாட்டால் இந்த அரிய சந்தர்ப்பமும் கைநழுவிப் போகும் வாய்ப்பு உள்ளது.
எனவே பிரித்தானியா வாழ் தமிழர்கள் மட்டுமன்றி புலம்பெயர் ஈழத்தமிழர்கள் அனைவரும் தமது கருத்துக்களை ரஷ்சிய அரசிற்கு தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களையும் ஜ.நா வின் சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைக்கவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படவைக்கவும் முடியும் என நம்புகிறோம்.
ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலைக்கு உத்தரவிட்டவரும் முப்படைகளின் தலைமை பொறுப்பில் உள்ளவருமான சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ அவர்களை போர்க்குற்றவாளியாக்க சர்வதேச சட்டத்திற்கு அமைவாக ஜ.நா அமைப்புக்களும் சர்வதேச அமைப்புக்களும் எடுக்கும் முயற்சிக்கு ரஷ்சிய அரசு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். எனும் கருத்துக்களை பிரதிபலிக்கும் வண்ணம் ரஷ்சிய அரசிற்கு forighnpolicy@resump.org.uk எனும் மின்னஞ்சல் ஊடாக தெரிவிக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்.
0044 (0) 208 133 3225
britishtamilsunion@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.