பக்கங்கள்

06 ஏப்ரல் 2011

கடத்தல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அலட்சியப்போக்கு!

சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் கடத்தல்கள் தொடர்பில் காவல்துறையினரோ அல்லது சிறீலங்காவின் மனித உரிமை அமைப்புக்களோ நடவடிக்கைகளை எடுப்பதில்லை, இது மிகவும் வேதனையானது என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் சட்டக்கல்லூரியில் கல்விகற்கும் மாணவன் எம்.துசாரா ஜெயரட்னா என்பவர் கடந்த மாதம் 04 ஆம் நாள் கடத்தப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அச்சுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இது தொடர்பில் அவர் மேற்கொண்ட முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு சிறீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மறுப்புத்தெரிவித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 05 ஆம் நாள் சிறீலங்காவில் உள்ள சட்டக்கல்லூரியில் நடைபெற்ற பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டதால் துசாரா கடத்தப்பட்டிருந்தார். இந்த முறைகேடுகளில் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நமால் ராஜபக்சாவும் தொடர்புபட்டிருந்தார். நாமல் தொடர்பில் கல்லூரி நிர்வாகத்தினரிடமும், அனைத்து அமைப்புக்களிடமும் துசாரா மேற்கொண்ட முறைப்பாடுகள் தொடர்பில் கடத்தலில் ஈடுபட்;டவர்கள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.