பக்கங்கள்

17 ஏப்ரல் 2021

நடிகர் விவேக் மரணம்!என்னதான் நடந்தது?

நடிகர் விவேக்கின் திடீர் மரணம் தமிழ் சினிமாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவரது மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விவேக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் கோலோச்சி வந்தார்.இயக்குநர் பாலச்சந்தர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட விவேக் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் விவேக். மக்கள் தடுப்பூசி போட அச்சப்படக்கூடாது என்று தைரியம் கூறினார் விவேக்.இதனை தொடர்ந்து உடல் சோர்வுடன் இருந்த நடிகர் விவேக், நேற்று காலை வழக்கமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சியையும் மேற்கொள்ளவில்லை. பின்னர் காலை 11 மணியளவில் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார் விவேக்.அப்போது திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக் திடீரென மயங்கி சரிந்து விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் மற்றும் எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், விவேக் இன்னும் ஆபத்தான கட்டத்தில் தான் இருக்கிறார் என்றனர்.மேலும் அவரின் உடல் நலக்குறைவுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினர். நடிகர் விவேக்கிற்கு ஏற்கனவே ரத்தக்கொதிப்பு இருந்தது என்றும் அவரது இதயத்தின் இடதுபுற ரத்தக்குழாயில் 100% அடைப்பு இருந்தது என்றும் கூறினர்.மேலும் நடிகர் விவேக்கிற்கு கார்டியோஜெனிக் ஷாக் எனும் இதய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் உடலுக்குத் தேவையான போதுமான இரத்தத்தை இதயத்தால் பம்ப் பண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது கடுமையான மாரடைப்பை ஏற்படுத்தி விட்டது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து விவேக்கின் உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஆனால் 24 மணி நேரத்திற்குள்ளேயே இன்று காலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக்கின் உயிர் பிரிந்தது.விவேக்கின் இதயத்துடிப்பு மற்றும் நுரையீரல் செயல்பாட்டை தூண்டும் வகையில் தொடர்ந்து எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் விவேக்கின் இதயத்துடிப்பு முற்றிலும் குறைந்து இன்று காலை நின்று போனது. அவரது உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

15 ஏப்ரல் 2021

புளியங்கூடல் பற்றிய காணொளி-வெளியீடு கப்பிற்றல் தொலைக்காட்சி!

புளியங்கூடல் கிராமம் பற்றிய தகவல்களை வழங்கியிருப்போர் மதிற்பிற்குரிய கணேசலிங்கம் அண்ணா மற்றும் செந்தூரன் அவர்கள்.