பக்கங்கள்

11 ஏப்ரல் 2011

கனடிய மனித உரிமை அமைப்பு புது உத்வேகம் பெறுகிறது!

கனடிய மனித உரிமை அமைப்பின் ஆலோசகர் குழுவின் தலைவராக கனடாவின் பிரபல சட்டத்தரணியும், துப்பறியும் ஊடகவியலாளருமான திரு.பீற்றர் சில்வர்மான் இணைந்துள்ளதை மேற்படி அமைப்பு வரவேற்றுள்ளது. சிறீலங்காவின் யுத்தக் குற்றவிசாரணைகளை முன்னெடுக்கும் கனடிய மனித உரிமை அமைப்புடனான இந்தப் பிரபல சட்டத்தரணியின் இணைவு யுத்தக் குற்றவிசாரணையை விரைவாக முன்னெடுக்க உதவும் என்றே கருதப்படுகிறது. பீற்றர் சில்வமானின் இணைவு தங்களது அமைப்பின் திடகாத்திரமான செயற்பாட்டிற்கும் மனித உரிமைகள் சம்பந்தமான கருத்தூட்டத்திற்கும் இன்றியமையாததாக இருக்கும் என்று தெரிவித்த கனடிய மனித உரிமை அமைப்பின் தலைவரான திரு. பாபு நாகலிங்கம் அவர்கள், திரு. பீற்றர் சில்வமானின் காத்திரமான பங்களிப்பை தாங்கள் கனடிய மனித உரிமை அமைப்பினூடாக எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த பீற்றர் சில்வமான் அவர்கள், கனடிய மனித உரிமை அமைப்பினூடாக தான் மனித உரிமை சார்ந்த விடயங்களிற்கு திடமான பங்கை வழங்கவிருப்பதாகவும், மனித உரிமைகள் சம்பந்தமான விவகாரங்களிலான பங்களிப்பை கனடா மண்ணிலேயே வழங்க ஆரம்பித்து அதனை உலகளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த தான் கனடிய மனித உரிமை அமைப்புக்களுடன் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.