பக்கங்கள்

24 டிசம்பர் 2015

புரட்சித்தலைவர் நினைவு நாள் யாழில் அனுஷ்டிப்பு!

 
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 28வது நினைவு தினம் இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் கல்வியங்காடு சந்தை பகுதில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் காட்டி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து கல்வியங்காடு வர்த்தக சங்க தலைவர் ஆ.கேதீஸ் மற்றும் முன்னாள் வர்த்தக சங்க தலைவர் ரவி ஆகியோரும்  மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந் நிகழ்வில் வரத்தகர்கள்,எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டு எம்.ஜி இராமச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும் உலகத்தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.இராமசந்திரன் அவர்களின் 28வது நினைவு தினம் இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் கல்வியங்காடு சந்தை பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பரும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் அவர்கள் மாலை அணிவித்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து கல்வியங்காடு வர்த்தக சங்க தலைவர் ஆ.கேதீஸ் மற்றும் முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் ரவி ஆகியோரும் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந் நிகழ்வில் வரத்தகர்கள்,எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டு எம்.ஜி இராமச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

04 டிசம்பர் 2015

நடராஜா வித்தியாலய மாணவியை பலியெடுத்தது கடற்படை!


வேலணை பகுதியில் இன்று காலை 8.00 மணியளவில் கடற்படையினரின் கெப் வாகனம் மோதி, நாரந்தனை பகுதியைச் சேர்ந்த நடராஜா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் உதயகுமார் உசாந்தினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார். இன்று காலை பாடசாலைக்கு வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த வேளை, வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது கடற்படையினரின் வாகனம் மோதியதில் மாணவி படுகாயமடைந்துள்ளார். 
காலை 8.00 மணியளவில் சிறீலங்கா கடற்படையினரின் கெப் வாகனம் மோதி, வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் நாரந்தனையை சேர்ந்த உதயகுமார் உசாந்தினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார். இன்று காலை பாடசாலைக்கு வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த வேளை, வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது கடற்படையினரின் வாகனம் மோதியதில் மாணவி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த மாணவியை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் எடுத்து வரும் போது மாணவி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவியின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.