பக்கங்கள்

24 டிசம்பர் 2015

புரட்சித்தலைவர் நினைவு நாள் யாழில் அனுஷ்டிப்பு!

 
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 28வது நினைவு தினம் இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் கல்வியங்காடு சந்தை பகுதில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் காட்டி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து கல்வியங்காடு வர்த்தக சங்க தலைவர் ஆ.கேதீஸ் மற்றும் முன்னாள் வர்த்தக சங்க தலைவர் ரவி ஆகியோரும்  மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந் நிகழ்வில் வரத்தகர்கள்,எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டு எம்.ஜி இராமச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும் உலகத்தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.இராமசந்திரன் அவர்களின் 28வது நினைவு தினம் இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் கல்வியங்காடு சந்தை பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பரும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் அவர்கள் மாலை அணிவித்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து கல்வியங்காடு வர்த்தக சங்க தலைவர் ஆ.கேதீஸ் மற்றும் முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் ரவி ஆகியோரும் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந் நிகழ்வில் வரத்தகர்கள்,எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டு எம்.ஜி இராமச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

04 டிசம்பர் 2015

நடராஜா வித்தியாலய மாணவியை பலியெடுத்தது கடற்படை!


வேலணை பகுதியில் இன்று காலை 8.00 மணியளவில் கடற்படையினரின் கெப் வாகனம் மோதி, நாரந்தனை பகுதியைச் சேர்ந்த நடராஜா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் உதயகுமார் உசாந்தினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார். இன்று காலை பாடசாலைக்கு வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த வேளை, வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது கடற்படையினரின் வாகனம் மோதியதில் மாணவி படுகாயமடைந்துள்ளார். 
காலை 8.00 மணியளவில் சிறீலங்கா கடற்படையினரின் கெப் வாகனம் மோதி, வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் நாரந்தனையை சேர்ந்த உதயகுமார் உசாந்தினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார். இன்று காலை பாடசாலைக்கு வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த வேளை, வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது கடற்படையினரின் வாகனம் மோதியதில் மாணவி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த மாணவியை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் எடுத்து வரும் போது மாணவி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவியின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

03 நவம்பர் 2015

சிசுவைக் காப்பாற்றிய கருணைகொண்ட நாய்!

வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவ்விச் செல்லும் படமொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமானில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியில் யாரோ ஒருவரால் வீசப்பட்டிருந்த தொப்புள் கொடியுடன் காணப்பட்ட சிசுவொன்றை நாயொன்று தூக்கிச் சென்று அருகில் இருந்த வீட்டு வாசலில் போட்டுள்ளது. மேலும் வாசலில் நின்று குரைத்துமுள்ளது. வீட்டில் உள்ளோர் வெளியே வந்து பார்த்த தும் சிசுவொன்று வாசலில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவ்வீட்டிலிருந்தோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் குழந்தை உயிரோடு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தைக்கு காயமேதும் ஏற்பட்டிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. நாயின் புத்திக் கூர்மையான செயற்பாட்டால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி:கிரு நியூஸ்

27 அக்டோபர் 2015

கருணையே இல்லாத சிங்களப் படைகளுக்கு கருணைச்சபை!

கருணையே இல்லாத தமது படைகளுக்கு கருணைச்சபை அமைக்கிறதாம் சிறீலங்கா அரசு.சிறீலங்கா மட்டுமல்ல ஆசிய நாடுகளுடன் கூட்டிணைந்து வல்லாதிக்க நாடுகளும் தமிழர்களுக்கு அநீதியே இளைத்து வருகின்றன.சாதாரண கல்வியறிவே அற்ற ஒருவனுக்கே நீதி என்றால் என்னவென்று புரிந்து கொள்ளும் தன்மை இருக்கும்போது இந்த உலக அரசுகளுக்கு மட்டும் ஏன் புரியாமல் இருக்கிறது.உள்ளக பொறிமுறை மூலம் தாமே விசாரணையை மேற்கொள்வோம் என்று கூறும் சிறீலங்கா அரசு படையினரை பாதுகாப்போம் என்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ,கோத்தபாய ராஜபக்ஷ போன்றோரை காப்பாற்றி விட்டோம் என்றும் பகிரங்கமாகவே தம்பட்டம் அடிக்கிறது.அப்படியானால் இந்த விசாரணைப் பொறிமுறை எதற்காக?இது வெறும் ஏமாற்று வேலை என்பது தமிழ் மக்களுக்கு புரிகிறது.ஆனால் தமிழர் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு சிறீலங்காவின் நாடாளுமன்றக் கதிரைகளில் அமர்ந்திருப்போருக்கு பதவி மட்டுமே தெரிகிறது.இவர்களுக்கு எல்லாம் வாக்களித்து நாடாளுமன்றக் கதிரைகளில் அமர்த்தியது தமிழர்களின் சாபக்கேடு.தமிழர்கள் அனுபவித்த கொடூரங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிற துன்பங்கள் கண்டு எவனுக்குமே கருணை வரவில்லை,ஆனால் மாபாதகர்கள் மீது மட்டும் கருணை வருகிறது.
எங்கே செல்லும் இந்தப்பாதை இதை யார்தான் யார்தான் அறிவாரோ?

-இது நீதி வேண்டும் ஒரு தமிழனின் ஆதங்கம்-

24 அக்டோபர் 2015

16 படுகொலைகளுடன் கோத்தாவுக்கு நேரடிப் பொறுப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று கொழும்பு ஆங்கில செய்தி இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்தக்கொலைகளுக்கு தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பறங்கியரான முன்னாள் பொலிஸ் அதிகாரி- பாபியன் ரோய்ஸ்டர் டௌஸியன்ட் உடந்தையாக இருந்துள்ளார். முன்னாள் பொலிஸ் அதிகாரியான பாபியனுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகை பணத்துக்காகவே அவர் இரண்டு செஞ்சிலுவை சங்க அதிகாரிகளை கொழும்பு கோட்டையில் இருந்து கடத்திச்சென்று கொலை செய்தார். பின்னர் சட்டவிரோதமான மனைவியுடன் குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி, அவுஸ்திரேலியாவுக்கு தப்பிவிட்டார். பொலிஸ் அதிகாரியின் சட்டவிரோத மனைவியும் சர்வதேச ரீதியில் பாரிய நிதிமோசடியில் ஈடுபட்டவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் கோத்தபய மற்றும் கருணாவின் பெருந்தொகை பண உடன்பாட்டுக்காக முன்னாள் பொலிஸ் அதிகாரி பாபியன் மேற்கொண்ட கொலைகளை ஆங்கில இணையம் வரிசைப்படுத்தியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், நிலம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் சந்திரபோஸ் சுதாகரன், வீரகேசரியின் மட்டக்களப்பு செய்தியாளர் நடேசன், மட்டக்களப்பு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தரநாயகம், திருகோணமலை நகரசபையின் முன்னாள் தலைவர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.எஸ் ஜெகநாதன், அம்பாறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களான சந்திரமோகன் மற்றும் சண்முகலிங்கம் உள்ளிட்டோரின் கொலைகளுக்கே கருணா மற்றும் கோத்தபய ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைகளுக்காக பெற்ற பணத்தை கொண்டே முன்னாள் பொலிஸ் அதிகாரி பாபியனும் அவருடைய சட்டவிரோத மனைவியும் முதலீட்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்று விட்டனர் என்று ஆங்கில இணையம் தெரிவித்துள்ளது.

18 அக்டோபர் 2015

தமிழீழ அரசியற்றுறை மகளிரணிப் பொறுப்பாளர் தமிழினி மரணம்!

தமிழீழ தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழினி
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி சிவசுப்பிரமணியம்) சுகவீனம் காரணமாக சாவடைந்தார்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1991இல் இணைந்து கொண்ட தமிழினி, தனது கவனிக்கத்தக்க பங்களிப்புக்களின் ஊடாக மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளரானார்.2009 இறுதிப்போரின் பின்னர் முள்வேலி முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழினி 2013ஆம் ஆண்டில் வவுனியாவில் வைத்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அவருக்கு புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் கொழும்பில் சிகிச்சை பெற்று வந்தார். திடீரென அவரது உடல் நிலை மோசமாகியதையடுத்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சாவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் கிளிநொச்சி பரந்தனில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல இன்னல்களை தாங்கி பற்பல எண்ணங்களுடன் காவியமாகி விட்ட அந்த வரலாற்று நாயகிக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் தனது வீரவணக்கத்தை செலுத்தி நிற்கின்றது.

12 அக்டோபர் 2015

தீவகத்தின் காந்தி டேவிட் ஐயா காலமானார்!

காந்தீயம் அமைப்பின் மூத்த தலைவர் டேவிட் ஐயாவின் மறைவுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அஞ்சலி செலுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- "டேவிட் ஐயா என கழக தோழர்களாலும் காந்தீய தொண்டர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட சொலமன் அருளானந்தம் டேவிட் (டேவிட் ஐயா) அவர்கள் 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தியுள்ளார். இவரின் இழப்பால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் (புளொட் அமைப்பினர்) மிகுந்த துயரத்துடன் உள்ளனர். யாழ். கரம்பொன் கிழக்கு, ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகக் கொண்டிருந்த டேவிட் ஐயா நீண்ட காலமாக தமிழகத்தில் வசித்ததன் பின்னர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நோய்வாய்பட்டநிலையில் தனது உறவினருடன் இல, 33 மகாத்மா வீதி, ஆனந்தபுரம், கிளிநொச்சியில் வசித்து வந்தார். இலங்கையில் அதிகூடிய தகுதிவாய்ந்த கட்டிடக் கலைஞராக அந்தக் காலத்தில் திகழ்ந்த சொலமன் அருளானந்தம் டேவிட் ஐயா அவர்கள் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரின் சிரேஸ்ட கட்டிடக் கலைஞராகவும், பின்னர் கென்யாவின் மொம்பாசா நகரின் பிரதம கட்டிடக் கலைஞராகவும் பணியாற்றியவர். 1979களின் ஆரம்ப காலத்தில் டாக்டர் ராஜசுந்தரம், சந்ததியார், சுந்தரம் (சிவசண்முகமூர்த்தி) மற்றும் யோதீஸ்வரன் (கண்ணன்) ஆகியோருடன் இணைந்து வன்முறையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை வடக்கு, கிழக்கில் குடியேற்றுவதை பிரதான நோக்கமாகக் கொண்டு காந்தீயம் என்ற அமைப்பினை உருவாக்கி அதன் தலைவராக இருந்தார். பின்னர் இலங்கையின் இன ஒடுக்குதல்களுக்கும், இன ரீதியான வன்முறைகளுக்கும் எதிராக காந்தீய வழியில் தீவிரமாக செயற்பட்டார். 1983 ஏப்ரல் மாதத்தில் டேவிட் ஐயா மற்றும் காந்தீயத்தின் செயலாளராக இருந்த டாக்டர் ராஜசுந்தரம் ஆகியோர் உமாமகேஸ்வரன் மற்றும் சந்ததியார் ஆகியோருடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பலத்த சித்திரவதைகளுக்கு உள்ளாகி வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 1983 ஜூலையில் இடம்பெற்ற வெலிக்கடைப் படுகொலையின்போது டாக்டர் ராஜசுந்தரம் உட்பட 52பேர் சிறையில் இருந்த சிங்களக் காடையர்களால் கொலைசெய்யப்பட்டபோது மயிரிழையில் உயிர் தப்பியவர்களுள் டேவிட் ஐயாவும் ஒருவர். அதன் பின்னர் 1983 செப்டம்பர் மாதம் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பி தமிழகம் சென்றார். இக்காலப் பகுதியில் புளொட் அமைப்பின் உத்தியோகபூர்வ ஆங்கிலப் பத்திரிகைகளான PLOT-Bulletin மற்றும் மாத சஞ்சிகையான SPARK ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் முக்கிய பங்காற்றி பல முக்கிய அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவந்தார். அதேபோல் புளொட் அமைப்பின் தமிழீழத்தின் குரல் (Voice of Tamil Eelam - VOTE) வானொலி சேவையின் ஆங்கிலப் பிரிவிலும் தனது முழுமையான பங்களிப்பை வழங்கினார். 1983இன் இறுதிப் பகுதியில் அன்றைய மொறீசியஸ் பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு புளொட்டின் செயலதிபர் உமாமகேஸ்வரன் சென்றிருந்தபோது அவருடன் டேவிட் ஐயா மற்றும் சித்தார்த்தனும் உடனிருந்து அந்நாட்டின் செங்கம்பள வரவேற்பைப் பெற்றிருந்தனர். பின்னர் 1986இல் வறிய மற்றும் அகதி மக்களுக்கு தனி மனிதராக தன்னாலான சேவைகளை தமிழ் நாட்டிலிருந்து ஆற்றிவந்தார். பின்னர், 2015 ஜூலை மாதம் இலங்கை திரும்பி கிளிநொச்சியில் தனது உறவினர்களுடன் தங்கியிருந்தபோது சுகயீனமுற்று 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார்.

26 செப்டம்பர் 2015

தியாக தீபம் திலீபனின் 28ஆவது ஆண்டு நினைவு தினம்!

வடக்கு - கிழக்கு இணைந்த தமிழீழ விடுதலைக்காக யாழ். நல்லூரில் உண்ணாநோன்பிருந்து அஹிம்சை வழியில் போராடி தனது உயிரை
ஆகுதியாக்கிய தியாக தீபம் லெப்டினண்ட் கேர்ணல் திலீபனின் 28ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழீழத் தாயக மண்ணிலிருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நல்லூரில் திலீபன் என்று அழைக்கப்படும் இராசையா பார்த்தீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். 12 நாள்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்த அவர் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி வீரச்சாவடைந்தார்.

24 செப்டம்பர் 2015

சரவணையில் வெறிச்செயலில் களிசறைகள்!

நண்பனை அடித்து மயக்கமடையச் செய்துவிட்டு அவரின் மனைவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய இருவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் சரவணையில் இடம்பெற்றுள்ளது என தெரியவருகிறது.இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,8 மாதங்களுக்கு முன்னரே சரவணையைச் சேர்ந்த குறித்த நபருக்கு திருமணம் இடம்பெற்றது. இவருடன் அதே இடத்தைச் சேர்ந்த நபரும் தென்னிலங்கையைச் சேர்ந்த நபரும் மேசன் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நண்பரின் வீட்டுக்குள் நேற்று அதிகாலை புகுந்த இருவரும் அவரைக் கொட்டனால் பலமாகத் தலையில் தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழவே, அவரின் மனைவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. பின்னர் ஒருவாறாக அவர்களிடம் இருந்து தப்பி வந்த பெண் அயலாரை உதவிக்கு அழைத்து கணவனை அவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார். பின்னர் தனக்கு நேர்ந்த நிலை குறித்து ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைகளில் உடனடியாக இறங்கிய பொலிஸார் நேற்று மதியமளவில் சந்தேகநபர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர் எனக்கூறப்படுகிறது.

20 செப்டம்பர் 2015

கட்டளையிட்டவர்களை கண்டறிவதே நோக்கம் என்கிறார் மங்கள!

இறுதி யுத்தத்தின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரை தண்டிப்பதைவிட, அவர்களுக்கு கட்டளையிட்டவர்களை கண்டறிவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஹைபிரிட் நீதிமன்ற கட்டமைப்பு போன்ற நீதிமன்றங்கள் இதற்கு முன்னரும் செயற்பட்டுள்ளன. 1970 களில் கதிர்காம அழகி பிரேமவதி மனம்பேரியின் மரணம் தொடர்பான விசேட நீதிமன்றம் அதற்கான எடுத்துக்காட்டாகும். இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை புறக்கணித்து, தொடர்ந்தும் அவர்களை ஒடுக்கி வைத்திருக்க முடியாது. போர்க்குற்றங்கள் தொடர்பான கலப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் இலங்கை அரசாங்கத்துக்கே உள்ளது. எனினும் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களை மட்டுமே அதற்கு நியமிக்க வேண்டும்.இதன்போது சர்வதேச மட்டத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இலங்கையர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த நீதிமன்றத்தின் நோக்கம் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிப்பாய்களைக் கண்டறிந்து தண்டனை அளிப்பதல்ல. அவர்களுக்கு கட்டளையிட்டவர்களைக் கண்டறிவதே கலப்பு நீதிமன்றத்தின் நோக்கம். அவ்வாறானவர்களைத் தண்டிப்பதன் ஊடாக மட்டுமே இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

19 செப்டம்பர் 2015

கலப்பு நீதிமன்றம் மற்றுமொரு நாடக அரங்கேற்றம்!

கலப்பு நீதிமன்றம் தொடர்பில் ஐ.நா.மனித உரிமை ஆணையர் விடுத்திருக்கும் பரிந்துரை தமிழ் மக்களை பொறுத்தவரை ஒரு கண்துடைப்பு நாடகமாகவே நோக்கப்பட வேண்டியிருக்கிறது.சிறு சிறு குற்றச் செயல்களுக்கே நீதியை எதிர்பார்க்க முடியாத சிறிலங்காவில் மாபெரும் இன அழிப்பு ஒன்றுக்கு அந்த இன அழிப்பில் ஈடுபட்டவர்களும் இணைந்து நடத்தும் விசாரணை எப்படி தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.சர்வதேச நீதிபதிகளுடன் சிங்கள அரச சார்பிலும் நீதிபதிகள் நியமிக்கப்படும் பட்சத்தில் அது ஒரு குழப்பமான நீதிமன்றமாக இருக்குமே தவிர நீதிக்கான ஒரு மன்றமாக அமையப்போவதில்லை என்பதே வெளிப்படையான உண்மை.ஆண்டாண்டு காலமாக தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் வன்முறைகள் உலக நாடுகளோ ஐ.நா.மன்றமோ அறியாததல்ல.இன்று தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் எதிர்பார்ப்பது இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்புத்தான் என்பதை ஏற்றுக்கொண்டு தமிழர் தேசத்தை அங்கீகரித்து அவர்களையும் உள்வாங்கி இணைந்து செயற்பட உலக நாடுகளும் ஐ.நா.மன்றமும் முன்வர வேண்டும்.சர்வதேசத்தில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காத வரை உள் நாட்டில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது பகற் கனவாகவே இருக்கும்.
இந்த கலப்பு நீதிமன்றம் ஒரு கண்துடைப்பு நாடகமே!

16 செப்டம்பர் 2015

மனித உரிமை விவகாரத்தில் அமெரிக்கா பின்வாங்குகிறது!

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா பின்வாங்குவதாக, போர்க் குற்ற ஆவணப்படங்களை வெளியிட்ட இயக்குநர் கலம் மக்ரே குற்றம்சாட்டியுள்ளார். மைத்திரிபால சிறிசேன அரசு மேற்கு நாடுகளுடன் கூட்டணி அமைத்ததால் அமெரிக்கா பின்வாங்குகிறது. சீனாவுக்கு ராஜபக்ச ஆதரவளித்ததால் அவர் அரசுக்கு எதிராக செயல்பட்டது அமெரிக்கா.உள்நாட்டு விசாரணை என்ற நிலைப்பாடு பாதிக்கப்பட்டவர்களுக்கு விரோதமானது. தமிழர்கள் கொலைக்கு காரணமான மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் உயர் பதவியில் உள்ளனர் என்றார்.மனித உரிமை விவகாரத்தில் அமெரிக்கா பின்வாங்குகிறது!

12 செப்டம்பர் 2015

எப்போ மனோ த.தே.கூட்டமைப்பில் இணைந்தார்?-சிவாஜிலிங்கம்

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை கோரி வரும் தமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித தடைகளையும் ஏற்படுத்தவில்லை என வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கு கட்சி தடை விதிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 10ம் திகதி கிளிநொச்சியில் போர்க்குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச விசாரணை அவசியமானது என அழுத்தம் கொடுக்கும் வகையில் சிவாஜிலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைபாடு கிடையாது எனவும் அது சிவாஜிலிங்கத்தின் தனிப்பட்ட நிலைப்பாடு எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கருத்து வெளியிட்டிருந்தார்.இது தொடர்பில் திவயின பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே சிவாஜிலிங்கம் தமது போராட்டங்களுக்கு கட்சி தடை விதிக்கவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். அமைச்சர் மனோ கணேசன் எப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார்? அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக எப்போது மாறினார்? என்பதனையும் அறிந்து கொள்ள விரும்புவதாக சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

10 செப்டம்பர் 2015

நீதிக்கான தேடல்' - கல்லம் மக்ரேயின் புதிய ஆவணப்படம்!

இலங்கையின் போர்க்குற்றங்களை, சனல் 4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்திய 'போர் தவிர்ப்பு வலயம்' ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லம் மக்ரே, ‘இலங்கை: நீதிக்கான தேடல்’ (Sri Lanka: The Search For Justice) என்ற தலைப்பில் மற்றொரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த அரை மணிநேர ஆவணப்படம் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஸ் மொழிகளில் தயாரிக்கப்பட்டு அனைத்துலக சமூகத்துக்கு காண்பிக்கப்படுகிறது. இந்த ஆவணப்படம், தமிழ், சிங்களம், ஹிந்தி, பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அடுத்த சில நாட்களில் இணையத்தில் வெளியிடப்படவுள்ளது. அவர்களைக் கேட்க வேண்டும் என்ற தொனிப்பொருளில், சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில், பாதிக்கப்பட்டவர்களின் குரல்களையும், போர்க்குற்ற ஆதாரங்களையும் கொண்டதாக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது பொலிவியா, பரகுவே, ஆர்ஜென்ரீனா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய தென்அமெரிக்க நாடுகளில் கல்லம் மக்ரே இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை காண்பித்து வருகிறார். அவர், அமெரிக்கா சென்று, நியூயோர்க் மற்றும் வொசிங்டனில், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டுக் காண்பிக்கவுள்ளார். அதன் பின்னர், ஜெனிவாவிலும் ஐ.நா தலைமையக வளாகத்தில் இதனை காண்பிக்கவும் கல்லம் மக்ரே திட்டமிட்டுள்ளார்.

01 செப்டம்பர் 2015

சர்வதேச விசாரணை முடிந்து விட்டதாம்!சிங்கக்கொடி சம்பந்தர் சொல்கிறார்!

இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை நடைபெற்றிருப்பதாகவும், அந்த அறிக்கை சில நாட்களில் வெளிவரும் என்றும் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று ஞாயிறன்று கொழும்பில் கூடிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் (டெலோ, ஈபிஆர்எல்எஃப், பிளாட்) நான்காவது பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்திருந்தன. நடந்து முடிந்த பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு தேசிய பட்டியல் இடங்களுக்கான ஆட்களை நியமிப்பதில் இந்த கட்சிகளுக்கு அதிருப்தி நிலவுவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவரும் பின்னணியில், தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய 3 கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கொழும்பில் இரண்டாவது முறையாக கூடி தமக்குள் விவாதித்திருந்தனர். செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் விசாரணை அறிக்கையின் அடுத்து மேற்கொள்ளப்படவுள்ள விசாரணையும் சர்வதேச விசாரணையாக அமைய வேண்டியதன் அவசியம், அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுவன ரீதியாகச் செயற்பட வேண்டியதன் தேவைகள், முக்கியத்துவம் என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான எம்.கே. சிவாஜிலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருந்தார். இந்த கூட்டம் குறித்தும், அதில் தமிழரசு கட்சிக்கு வைக்கப்பட்ட கோரிக்கை குறித்தும் பிபிசி தமிழோசையின் கேள்விகளுக்கு பதிலளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர், இலங்கை விவகாரத்தில் சர்வதேச விசாரணையையே தாமும் தமது கட்சியும் வலியுறுத்தி வந்ததாகவும், சென்ற ஆண்டு பங்குனி மாதம் சர்வதேச விசாரணை கோரி ஒரு ஐநா மனித உரிமைப் பேரவையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டதாகவும் அந்த சர்வதேச விசாரணை நடைபெற்றிருப்பதாகவும், அந்த அறிக்கை சிலநாட்களில் வெளிவரும் என்றும் தெரிவித்தார்.

நன்றி:பிபிசீ  தமிழோசை

30 ஆகஸ்ட் 2015

தேசியத் தலைவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்-கருணா(காணொளி)

இலங்கையின் இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என முன்னாள் அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது மனைவி, மகள் ஆகியோர் ராணுவ ஷெல்வீச்சில் உயிரிழந்தனர் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக ஊடகமான 'புதிய தலைமுறை' தொலைக்காட்சிக்கு வழங்கி செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எனக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் சில முரண்பாடுகள் காணப்பட்டன என்பது உண்மையே. நான் என்றும் மதிக்கும் ஒரு தலைவர் பிரபாகரன். அவரது தியாகத்தையும், ஒழுக்கத்தையும் நாம் மதிக்க வேண்டும். போராட்டத்தில் மரணித்தவர்களின் தியாகத்திற்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும். - என்றார். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'அக்னிப்பரீட்சை' நிகழ்ச்சிக்கு கருணா அளித்த செவ்வி காணொளியாக இங்கே.

28 ஆகஸ்ட் 2015

உள்ளக விசாரணை! தர்மசங்கடத்தில் கூட்டமைப்பு ஆதவாளர்கள்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமை உள்ளக விசாரணைக்கு சாதகமான சமிக்ஞை காட்டியுள்ள நிலையினில் அதன் ஆதவாளர்கள் பலரும் மக்களிடத்தே கடுமையான எதிர்விளைவுகளை எதிர்நோக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக ஆதரவாளர்களிற்கு பதிலளிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களது தொலைபேசிகள் தயாராக இல்லையெனவும் கூறப்படுகின்றது.இதனால் பல ஆதவாளர்களும் முடக்க நிலையினை அடையத்தொடங்கியுள்ளனர்.நிஸா பிஸ்வாலுடனான சந்திப்பின் பின்னர் சுமந்திரன் ஊடககங்களிற்கு தெரிவித்துள்ள கருத்தினில் சர்வதேச பொறிமுறைகளின் கீழ் உள்ளக விசாரணையினை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.இது தமிழ் மக்களிடையே கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மக்களது இத்தகைய எதிர்ப்பு நிலைப்பாடு தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட ஆதவாளர்களை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது.இதற்கு பதிலளிக்க முடியாது பலரும் தற்போது முடங்கிப்போயுள்ளனர்.குறிப்பாக சமூக வலைத்தளங்களினில் குரல் எழுப்பிய பலரும் தற்போது சுருண்டு போயுள்ளனரென அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.தொடர்ந்து வரப்போகும் ஜ.நா விசாரணை அறிக்கை வெளியீடு மற்றும் உள்ளக விசாரணை காலங்கள் கடுமையான எதிர்வினைகளினை கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களிற்கு கடுமையான தர்மசங்கடங்களை தரலாமென நம்பப்படுகின்றது.

16 ஆகஸ்ட் 2015

மாவையும் சிறீகாந்தாவும் சேர்ந்து திட்டமிட்ட குண்டுத்தாக்குதல்!

நேற்று இரவு மாட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகம் மீது நடாத்தப்பட்ட திட்டமிட்ட குண்டுத்தாக்குதலின் பின்னணி வெளியாகியுள்ளது. முற்று முழுதாக திட்டமிட்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரே இந்தத் தாக்குதல்ளை நடாத்தியுள்ளனர். குருநகர் தண்ணீர்த் தாங்கிப் பகுதியில் உள்ள ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட டைனமற் வெடி மருந்ததைப் பயன்படுத்தியே இத் தாக்குதலை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிறிகாந்தாவின் ஆதரவாளரான நிசாந்தன் என்பவரின் வழிகாட்டலில் நடாத்தியுள்ளது தெரியவந்துள்ளது. குருநகர் தண்ணீர்த்தாங்கிப் பகுதியைச் சேர்ந்த டைனமற் பாவித்து மீன் பிடித்து நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவரான டேவிட் ஜேம்சன் என்பவர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும் சட்டத்தரணியுமான சிறீக்காந்தாவால் பிணையில் எடுக்கப்பட்டிருந்தான். அவனைப் பாவித்து டைனமற் வெடி மருந்தைப் பெற்றே அவனது துணையுடன் கூட்டமைப்பினர் தமக்கு அனுதாபம் பெறுவதற்காக இத் தாக்குதலை நடாத்தியுள்ளனர். இதற்காக குறித்த டேவிட்ஜேம்சனுக்க 50 ஆயிரம் ரூபா கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.இத் தகவல்களை சிறீக்காந்தாவுடன் நெருக்கிச் செயற்படும் இருவர் எமது செய்திச் சேவைக்கு உறுதிப் படுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துள்ளதால் பீதியடைந்துள்ள கூட்டமைப்பினரும் தமிழரசுக் கட்சியினரும் தமக்கான அனுதாப வாக்குகளைப் பெறுவதற்காக இவ்வாறான தில்லாலங்கடி வேலையைச் செய்துள்ளனர் . மாவை சேனாதிராஜாவின் திருகுதாளங்கள் மக்களுக்குத் தெரியவந்ததையிட்டு மாவையின் அனுசரனையுடனேயே இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.வழமையாக அதிகாலையிலேயே வரும் உதயன் பத்திரிகை இன்னும் வரவில்லை. எல்லாம் திட்டமிட்டது போல் செய்திகளை வெளியிடச் செய்து வருவதற்கான ஆயத்தமே இது.உண்மையில் தாக்குதல்களை நடாத்துபவர்கள் வெறுமனவே வீதியில் குண்டைப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்து அனுதாப அலையை உருவாக்க மாட்டார்கள் என்பது அனைவருக்கம் தெரிந்த விடயம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள், தேர்தலில் பின்னர் இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை அறிந்து சரியான முறையில் பாடம் புகட்டுவதற்கான ஆயத்தங்கள் தமிழ்த்தேசியத்தில் பற்றுக் கொண்ட இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வயது போன நேரத்திலும் மக்களே எங்களுக்கு வாக்களியுங்கள் என்று பிச்சை கேட்கும் இந்த மாவையின் நடவடிக்கைகளை தமிழ்மக்களாகிய நீங்கள் உணராது விடில் எதிர்காலத்தில் நீங்கள் தொடர்ந்து அடிமையாகவே நடாத்தப்படுவீர்கள்.இங்கேயுள்ள காணொலியை பார்த்தால் விளங்கும் ஏன் குண்டு வெடிப்பை நிகழ்த்தினார்கள் என்பது.

15 ஆகஸ்ட் 2015

சுமந்திரனுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு!

தமிழரசுக்கட்சி வேட்பாளர் சுமந்திரனிற்கு அமைச்சரவை பாதுகாப்பு இன்று காலை முதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் படி அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த மூவர் விசேட அதிரடிப்படையினை சேர்ந்த எண்மர் மற்றும் சாதாரண காவல்துறையினை சேர்ந்த நால்வரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு வடமராட்சி வருகை தந்து தங்கியுள்ள சுமந்திரன் தான் மக்களுடன் நெருங்கி உறவாடுவது போல காட்டிக்கொள்ள தனது பாதுகாப்பு பொறிமுறைகளினை நீக்கிக்கொண்டிருந்தார்.பிரச்சாரங்கள் முடிவடைந்ததையடுத்து தற்போது தனது விசேட பாதுகாப்பினை பெற்றுக்கொண்டுள்ளார். முன்னதாக ஒட்டுக்குழு தலைவராக இருந்த டக்ளஸ் ஆளுநர் சந்திரசிறி போன்றவர்களிற்கு வழங்கப்பட்டதைவிட அதிக பாதுகாப்பு சுமந்திரனிற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

14 ஆகஸ்ட் 2015

தேவியனை அரசபடைகளுக்கு காட்டிக் கொடுக்க சிறீதரன் 4 கோடி ரூபா பெற்றார்!

தேவியன் 
விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்கவும் அவர்களை ஆயுத ரீதியாக பலப்படுத்தவும் முயன்ற விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தராக இருந்த தேவியன் மற்றும் அப்பன் போன்றவர்களை சிறீதரன் அரச புலானாய்வுப் பிரிவிடம் காட்டிக் கொடுத்து அவர்களைக் கொலை செய்த பின் மகிந்தராஜபக்சவிடம் இருந்து 4 கோடி ரூபா பெற்றதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது, 2010ம் ஆண்டு கூட்டமைப்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வந்த சிறீதரன் 2012ம் ஆண்டு வரை கடும் தேசியம் பேசி வந்துள்ளார். இவரை எவ்வாறு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என மகிந்தவும் மகிந்தவின் புலனாய்வுப் பிரிவினரும் பெரும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்த வேளை சிறீதரனின் பாலியல் பலவீனம் பற்றிய தகவல்களை துல்லியமாகப் பெற்றனர். தனது அலுவலகத்திற்குள் தனது அந்தரங்க உதவியாளரான வேளமாளிதனை நியமித்து, அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக வரும் ஏழைகளான யுவதிகளையும் இளம் பெண்களையும் ஆசை வார்த்தைகள் மற்றும் வேலை வாய்ப்பு, பண உதவி என்பன தருவதாக வேளமாகிதனுாடாக பேரம் பேசி அவர்களை தனது பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்துவது அரச புலனாய்வுத் துறையினருக்குத் தெரியவந்தது. இதன் பின்னர் சிறீதரனது அலுவலகத்தைச் சுற்றிவளைத்த பொலிசார் வேளமாகிதனை ஆண்உறைகளுடன் பிடித்தது. அத்துடன் சிறீதரன் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்த பாலியல் மாத்திரைகளையும் கைப்பற்றியது. இதனையடுத்து வேளமாகிதனை விசாரித்த பாதுகாப்புத் துறையினர் வேளமாகிதனின் வாயால் சிறீதரனின் அனைத்து பாலியல் செயற்பாடுகளையும் கண்டு பிடித்தனர். இந்தப் பின்னணியை வெளியிடப் போவதாக சிறீதரனை அச்சுறுத்த தொடங்கவே சிறீதரன் மகிந்தவிடம் சரணடைந்ததாகத் தெரியவருகின்றது. 2012ம் ஆண்டு இறுதிப் பகுதிக்குப் பின்னர் சிறீதரன் அரசாங்கத்தை விமர்சிப்பதைக் குறைத்துக் கொண்டார். ஆனால் இவ்வாறு தொடர்ச்சியாக அமைதியாக இருந்தால் தவறு எனத் தெரிந்து டக்ளஸ் தேவானந்தாவை மட்டுமே குறை கூறி வந்தார். இந் நிலையில் சிறீதரனிடம் தேசியப் பற்று நினைப்பதாக கருதிய சில புலி உறுப்பினர்கள் தாங்கள் தொடங்க உள்ள ஆயுதப் போராட்டம் பற்றி தெரிவித்ததாகவும் இதனையடுத்து சிறீதரன் உசாரடைந்ததாகவும் இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவியன் உட்பட்ட புலிகள் இவ்வாறு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடப் போவது தொடர்பாக மகிந்தவின் தம்பியான கோத்தாவிடம் தகவல்களைத் தெரிவித்துள்ளார் சிறீதரன். அதன் பின்னர் தேவியன் குழுவினருக்கு ஆதரவு தெரிவிப்பது போல் காட்டிக் கொண்டு அவர்களுக்கு உதவி செய்பவகள் யார் எங்கிருந்து உதவி்கள் வருகின்றன, புலம்பெயர் தமிழர்களின் பின்னணி இருக்கின்றதா? என சகலவற்றையும் அறிந்த படையினருக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தார் சிறீதரன். தேவியன் குழுவினர் ஆயுதப் போராட்டத்தை தொடங்க ஆயத்தமான வேளை சிறீதரன் சரியான தருனத்தில் படையினருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து தேவியனின் மறைவிடம் சுற்றிவளைக்கப்பட்டது. அங்கு இருந்த தேவியன் உட்பட்டவர்கள் தப்பி ஓடினர். இதனால் அரசாங்கத்தரப்பு சிக்கலில் இருந்தது, இருந்தும் சிறீதரனின் காட்டிக் கொடுப்பு தெரியாத தேவியன் மீண்டும் சிறீதரனைத் தொடர்பு எடுத்த போது சிறீதரன் அவர்களைக் குறித்த இடத்திற்கு வருமாறு கூறி அரச படையினரிடம் மாட்ட வைத்ததாக சிறீதரனுடன் நெருங்கிய நண்பர்களின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த டீலுக்காக மகிந்த தரப்பு சிறீதரனுக்கு 4 கோடி ரூபாக்களைக் கொடுத்ததாகவும் அதனை வைத்து சிறீதரன் கிளிநொச்சி உட்பட்ட பகுதிகளில் நெல் வயல்கள் மற்றும் காணிகளைக் கொள்வனவு செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர், இதே வேளை சிறிதரன் புலிகளில் இருந்து தப்பி ஓடியவர்களையும் புலிகளையும் மக்களையும் காட்டிக் கொடுத்தவர்களையும் தனது பக்கத்தில் வைத்துக் கொண்டு தனது தம்பி சிறிகுகனின் இணையத்தளங்களான லங்காசிறி, தமிழ்வின் , ஜேவிபி ஆகியவற்றைப் பயன்படுத்தி விசமப் பிரச்சாரங்களைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது, வெகு விரைவில் சிறீதரனின் பாலியல் லீலைகள் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் இங்கு வெளியிடுவதற்கு முற்பட்டுள்ளோம். இவர் செய்த லீலைகளை இவரது அலுவலகத்திற்குச் சென்ற பெண் தெரிவிக்க முன்வந்துள்ளார். விரைவில் அவற்றை வெளியிடவுள்ளோம்.
இவ்வாறு இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

13 ஆகஸ்ட் 2015

தோல்வி பயத்தால் முன்னணியினர் மீது கூட்டமைப்பு வன்முறைத்தாக்குதல்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர ஆதரவாளரொருவர் நேற்றிரவு உடுப்பிட்டி பகுதியினில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். அதே வேளை கனகராயன் குளப்பகுதியினில் வைத்து மற்றுமிரு ஆதரவாளர்கள் கூட்டமைப்பின் வேட்பாளரான சிவமோகனின் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.நேற்றிரவு வடமராட்சி பகுதியினில் பிரச்சார நடவடிக்கைகளினை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பியிருந்த அவரை அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் நபர்கள் தாக்கியுள்ளனர்.செயின் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குண்ட அவர் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினில் அயலவர்களால் மீட்டெடுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே அதே போன்று வவுனியாவினில் நடைபெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக் கூட்டத்தினில் பங்கெடுக்க சென்று கொண்டிருந்த மற்றுமிரு ஆதரவாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.நேற்று தனது செயற்பாட்டாளர்களிற்கு மது விருந்தொன்றை வைத்தியர் சிவமோகன் வைத்திருந்ததாகவும் அதிலிருந்தவர்களே முன்னணியின் ஆதவாளர்களை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவங்கள் தொடர்பினில் தேர்தல் கண்காணிப்பு அலுவலகங்கள் விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.தோல்வி பயத்தில் கூட்டமைப்பு தடுமாறத் தொடங்கியிருப்பதாகவே தெரிகிறது.

11 ஆகஸ்ட் 2015

கொள்கையின் சின்னமாக உந்து ஊர்தி!

புளியங்கூடல் 
எதிர்வரும் 17ம் திகதி இலங்கையின் பாராளுமன்றத்திகான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்களும் வடக்கு கிழக்கு பகுதிகளில் களைகட்டியுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில்தான் இம்முறை பெரும் போட்டி நிலவுகிறது.கூட்டமைப்பின் முன்னுக்குப்பின் முரணான பேச்சுக்களும் தேர்தல் நேர பொய் வாக்குறுதிகளும் இனிமேலும் தமிழ் மக்களிடத்தில் எடுபடப்போவதில்லை என்றும் இம்முறை கூட்டமைப்பு பெரும் பின்னடைவை சந்திப்பது உறுதி என்றும் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களின் தேசியக்கட்சியாக உருவெடுக்கும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரியவருகிறது.கொள்கையின் சின்னமான  உந்து ஊர்திக்கே வாக்களிக்க உள்ளதாக இளையோர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்து பரிமாறி வருகிறார்கள்.

07 ஆகஸ்ட் 2015

மன்னார் ஆயரின் சிகிச்சைக்கு நிதி உதவி கோரப்படுகிறது!

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக மன்னார் குருமுதல்வர் விக்டர் சோசை தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மனித மாண்பினைக்காக்கும் அமைப்பின் 9ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை கடந்த 3 மாதகாலமாக கடும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் உடல் நலம் நலம் பெறவும் அவர் முன்பு ஆற்றிய பணிகளை தொடர்வதற்கு நமது நாட்டில் சிகிச்சைகள் பலனின்றி உள்ளதால் சிங்கப்பூரில் 6 வாரம் தங்கியிருந்து மேலதிக சிகிச்சையினை பெறும் நோக்கில் இன்னும் சில தினங்களில் ஆயரை சிங்கப்பூர் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.அதற்கான செலவாக கிட்டத்தட்ட ஒருகோடி ரூபா தேவை. இந்நிதி உதவியினை புலம்பெயர் எமது உறவுகள் மூலமாகவும் மற்றும் எமது மக்களாகிய உங்களிடமும் தாம் எதிர்பார்ப்பதாகவும் இது தொடர்பான மேலதிக தகவல்களை மன்னார் ஆயர் இல்லத்தில் பெற்றுக் கொள்ளுமாறும் குருமுதல்வர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

06 ஆகஸ்ட் 2015

சுமந்திரனின் விதண்டாவாதம்!(காணொலி இணைப்பு)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுமந்திரன் அவர்கள் இன்று மதியம் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடாத்தினார். அதில் முக்கியமான தரவு ஒன்றினை பிழையாகச் சொன்னது மட்டுமல்லாது, மூத்த ஊடகவியலாளர் ஒருவர் அதனைச் சுட்டிக் காட்டிய போது அவரது கருத்தை பரிசீலிக்காமல் தான் சொன்னது தான் சரி என்கிற வகையில் நடந்து கொண்டுள்ளார். உண்மையில் 1982 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் தான் அதிக வாக்குகளைப் (87,263) பெற்றார். அதே நேரம் கொப்பேக்கடுவ அவர்கள் (77,300) வாக்குகளைப் பெற்று யாழில் இரண்டாவதாக வந்தார். ஆனால், சுமந்திரனோ யாழில் கொப்பேக்கடுவா தான் முதலாவதாக வந்தார். குமார் பொன்னம்பலம் இரண்டாவதாக வந்ததாக திரும்பத் திரும்பக் கூறினார். குறித்த தேர்தலில் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி நின்றுதான் குமார் பொன்னம்பலம் அதிக வாக்குகளைப் பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

03 ஆகஸ்ட் 2015

கொள்கை மாறாதவர் கஜேந்திரகுமார் என்கிறார் தினேஷ்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி முறைமையில் தீர்வு என்று குறிப்பிட்டதன் மூலம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பெரும் தவறிழைத்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தோற்கடிக்கவே அவர் இவ்வாறு செய்துள்ளார் என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி முறைமையிலேயே தீர்வு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கூட்டமைப்பின் தலைவர் தீர்வு விடயத்தில் ஒரு கடும்போக்கான கட்டத்துக்கு சென்றுள்ளார். இதன் மூலம் அவர் பெருந் தவறிழைத்துள்ளார் என்பதனை குறிப்பிடுகின்றேன். குறிப்பாக இவ்வாறு கடும்போக்குவாதத்தை பின்பற்றி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. குறிப்பாக பெரும்பான்மை மக்களின் சம்மதமின்றி எந்தத் தீர்வையும் இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியாது. இந்நிலையில் சம்பந்தன் சமஷ்டி என்ற விடயத்தை குறிப்பிட்டவுடன் தென்னிலங்கை மக்கள் எதிர்க்கின்றனர். இவ்வாறு தென்னிலங்கையில் எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவும் தேர்தலில் தனித்து ஒரே கொள்கையுடன் களமிறங்கியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தோற்கடிக்கவுமே சம்பந்தன் இந்த சமஷ்டி என்ற கடும்போக்கு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். சம்பந்தன் அடிக்கடி தமது நிலைப்பாடுகளை கூட்டமைப்புக்காக மாற்றிக்கொண்டிருக்கின்றார். கஜேந்திரகுமாரின் கொள்கைகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் அவர் ஒரே கொள்கையில் தொடர்ச்சியாக இருந்து வருகின்றார். எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவ்வப் போது கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் கருதி நிலைப்பாடுகளை மாற்றி வருகின்றார் என்றார்.

27 ஜூலை 2015

ஜனநாயகப் போராளிகளை மிரட்டுகிறதாம் இந்தியா!

யாழ். மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியை தேர்தலில் இருந்து விலகிக்கொள்ளுமாறு இந்தியா தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகித்துவருவது அம்பலமாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இந்தியத் துணைதூதுவராலய அதிகாரிகளான நட்ராஜ் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் நேரடியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் இம்மிரட்டலை விடுத்துள்ளனர். இந்தியா புலிகள் எவ்வகையிலும் மீளெடுக்க அனுமதிக்கப்போவதில்லையென மிரட்டலில் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழ் மக்களின் இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் சரியான தலைமைகளை உருவாக்குவதற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதமேந்திப் போராடிய நாங்கள், ஆயுதமின்றி ஜனநாயக ரீதியில், நடைபெறறவுள்ள நடாளுமன்ற தேர்தலின் ஊடாக மீள்பிரவேசம் செய்துள்ளோம். எம்மை நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் நம்புகின்றோமென ஜனநாயக போராளிகள் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய எம்மை, பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திய சர்வதேச நாடுகள் அனைத்தும், 2001ஆம் ஆண்டின் பின்னர் ஒன்றிணைந்து எம்மை இல்லாதொழிக்க செயற்பட்டன. நாம் மக்களுக்காக போராடியவர்கள். இன்று எமக்கு பின்னால் பலர் உள்ளனர் என்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் எமக்கு பின்னால் வலிகளை சுமந்த மக்களே உள்ளனர். பொருளாதார ரீதியிலும் ஏனைய வழிகளிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு தற்போது யாரும் இல்லை. ஆகையால், போராளிகளாகிய நாம் ஜனநாயக ரீதியில் மக்களுக்காக குரல் கொடுக்க நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குப் பலத்தை உடைக்கும் எண்ணம் எம்மிடம் இருந்திருந்தால் நாம் ஏன் அரசியல் அங்கீகாரம் கேட்டு அக்கட்சியிடம் செல்லவேண்டும்?. யாரையும் விமர்சிக்கும், குற்றம் சுமத்தும் எண்ணம் எம்மிடத்தில் இல்லை. ஏனெனில், மக்களுக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் தான் நம் முன் உள்ளன. கூட்டமைப்புடன் இணைந்து அதனை பலப்படுத்தி காத்திரமான தலைமைகளை உருவாக்குவதற்காகவே நாம் அவர்களிடம் ஆதரவு கேட்டோம். ஆனால், எம்மை அவர்கள் நிராகரித்தனர். மீண்டுமொரு ஆயுதப்போராட்டம் தலைதூக்க வாய்ப்புக்கள் உள்ளது என்ற கருத்துக்கு நாம் அடையாளம் காட்டப்படுகின்றோம். இதிலிருந்து வெளிவருவதற்கு ஜனநாயக முறையில் செல்வதே ஒரே வழி. மக்களின் தற்போதைய தேவை எதுவோ அதை பெற்றுகொடுப்போம். போரின் வடு இல்லாத சூழலை உருவாக்க முயல்வோம். போராளிகள் ஜனநாயக வழிக்குள் வந்தால் மக்கள் நிம்மதியாக வாழும் சூழல் ஏற்படும். எனவே எமது கொள்கைகள், செயற்பாடு என்பன எதிர்வரும் புதன்கிழமை (29) சுதுமலையில் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்படும். போராளிகளாகிய நாம் ஜனநாயக ரீதியில் செல்வதற்கான ஆணையினை மக்கள் எமக்கு நிச்சயம் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதுதென ஜனநாயகப்போராளிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

25 ஜூலை 2015

நீங்கள் என்ன சொன்னாலும் சனம் நம்பாது என்றாராம் சிறீதரன்!

வவுனியாவில் சிறிதரன் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தால் தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. உண்மையான விடுதலைப் புலிப் போராளிகள் என்றால் முள்ளிவாய்க்காலில் செத்திருக்க வேண்டும் என்ற கருத்து முன்னாள் புலிப் போராளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் இவ்வாறு தான் பேசவில்லை என சிறிதரன் கூறிவருகின்றார். சிறிதரன் வவுனியாவில் புலிகளைப் பற்றி கூறிய வேளையில் அங்கு இருந்த ஏனைய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஊடாக சிறிதரன் கூறியது உண்மை என்பதை அறிந்த சிறிதரனின் விசுவாசியான ஒருவர் இது தொடர்பாக சிறிதரனிடம் நேரடியாகக் கேட்டுள்ளார். அதற்கு சிறிதரன் இவ்வாறு பதில் சொன்னாராம் ”அண்ணை நான் கதைக்கும் போது என்னோட இருந்தவங்களைப் பற்றியோ அல்லது என்னோட இருந்தவங்கள் சொல்லுறதைக் கேட்டுவிட்டு என்னோட கதைக்கிறவங்களைப் பற்றியோ நான் கவலைப்படப் போவதில்லை. ஏனென்றால் நீங்கள் என்னத்தைதான் சொன்னாலும் சனம் நம்பாது என்று எனக்குத் தெரியும். அவங்கள் (முன்னாள் போராளிகள்) அந்தக் கூட்டத்துக்குள்ள வந்து நின்று குழப்பியடிப்பாங்கள். மற்றவங்கள் போல நானும் பார்த்துக் கொண்டு நிக்குறதோ? ” இவ்வாறு சிறிதரன் சொன்னாராம். கடந்த 2010ம் ஆண்டு தேர்தலில் வெறும் பத்தாயிரம் வாக்குகளுடன் வந்த சிறிதரன் அதுவும் புலிகளின் தளபதி தீபனின் மச்சான் (தங்கையின் கணவர்) என்ற போர்வையில் வந்த புலித்தோல் போர்த்தி நரி இவ்வாறு கூறியதைக் கேட்டு மிகவும் கோபத்துடன் எழுந்து வந்துள்ளார் சிறிதரின் விசுவாசி.

24 ஜூலை 2015

புளொட் சித்தார்த்தனை ஆதரிக்கும் அனந்திக்கு எதிர்ப்பு!

இறுதியுத்த கணம் வரையினில் விடுதலைப்புலிகளை அழிப்பதிலும் அதே போன்று அவர்களை வேட்டையாடி காட்டிக்கொடுப்பதிலும் முன்னின்ற புளொட் அiமைப்பின் தலைவர் சித்தார்த்தனிற்கு வாக்கு கோரும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் நடவடிக்கை அவரது எஞ்சிய ஆதவாளர்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதி யுத்த நடவடிக்கைகளினில் தப்பித்து வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களுள் பதுங்கியிருந்த பல முன்னாள் போராளிகளை வேட்டையாடுவதினில் புளொட் அமைப்பின் உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டிருந்தனர். அவர்களால் கடத்தப்பட்ட மற்றும் அரச படைகளிடம் காட்டிக்கொடுக்கப்பட்ட பல போராளிகள், ஆதவாளர்களென பலர் பற்றி தகவல்களில்லாதுள்ளது.இந்நிலையினில் காணாமல் போனவர்களிற்காக குரல் எழுப்புவதாக கூறிக்கொள்ளும் அனந்தி இதனை செய்த சித்தார்த்தனிற்கும் அவரது ஆட்களிற்கும் குரல் கொடுப்பதே ஆதரவாளர்களை சீற்றங்கொள்ள வைத்துள்ளது. ஏற்கனவே அனந்தியினது நடவடிக்கைகள் காரணமாக அவரது ஆதரவாளர்கள் பலரும் விட்டுவிலகியுள்ளனர்.இந்நிலையினில் தற்போது எஞ்சிய ஆதரவாளர்களும் விட்டு விலக முடிவு செய்துள்ளனர். இதனிடையே அனந்தியை தற்போது இயக்கிவரும் தென்னிலங்கை தரப்புக்கள் குறித்த முக்கிய புகைப்படங்களை வெளியிட ஆதரவாளர்கள் முடிவு செய்திருப்பதாக தெரியவருகின்றது. இச்சம்பவங்களின் தொடர்ச்சியாகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினில் இணைந்து அனந்தி விருப்பம் கொண்டிருந்த போதும் அவர்கள் பின்னடித்ததாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

18 ஜூலை 2015

முதல்தர கொலையாளி வேட்பாளர்!வெளிக்கக்குகிறார் கருணா!

தமிழ் அரசியல்வாதிகள் பலரைப் படுகொலை செய்த முதலாம் நம்பர் கொலைகாரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு மற்றும் பேராசிரியர் ரவீந்திரநாத் ஆகியோரின் படுகொலைகளில் நேரடியாகத் தொடர்புடைய நபருக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்தவே இந்த தனிநபருக்கு தனது சுயவிருப்பில் இடமளித்திருக்கிறார். இந்த முதல் தர கொலைகாரன் பற்றிய உறுதியான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என குறிப்பிட்டுள்ளார். எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் குறிப்பிட்ட முதல் தர கொலையாளி யார் என்ற விபரத்தை வெளியிடவில்லை. இதேவேளை, முன்னாள் கிழக்கு முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் இந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.தேசியப் பட்டியலில் இடமளிப்பதாக கருணாவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குறுதி கொடுத்திருந்த போதிலும் அவருக்கு அதில் இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

13 ஜூலை 2015

புலிமுகச்சிலந்தி ஜனநாயகப்போராளிகளின் சின்னம்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் போராளிகளின் கட்சியான ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு புலிமுகச் சிலந்தி சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுடன் மக்களாக இணைந்து சமூகவிரோதிகளையும் துர்நடத்தையில் ஈடுபடுபவர்களையும் தமது வலைக்குள் வீழ்த்தி அவர்களது நடவடிக்கைகளை இல்லாது செய்து தமிழ்மக்களை நிம்மதியாக வாழச் செய்த முன்னாள் போராளிகளுக்கு பொருத்தமான சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலமும் இவ்வாறான சிறந்த வலையமைப்பைப் பேணி சமூகவிரோதிகளுக்கு புலிமுகச் சிலந்தியின் குணத்தைக் காட்டுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றனர் ஜனநாயகப் போராளிகள்.

த.தே.ம.முன்னணியின் வேட்பாளர் பட்டியல்!

யாழ்ப்பாணத்தினில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பினில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செயலாளர் செல்வராசா கஜேந்திரன்,பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
(1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் த.தே.ம.மு தமிழ்காங்கிரஸ் கட்சி தலைவர் )
(2)செல்வராஜா கஜேந்திரன் (முன்னாள் நா.உ)
(3)மணிவண்ணன் (சட்டத்தரணி)
(4)ஆனந்தி சிவஞானசுந்தரம் (ஓய்வுபெற்ற அதிபர்- இராமநாதன் கல்லூரி)
(5)சுதா – (குருநகர் பாடும் மீன் விளையாட்டுக்கழக உபதலைவர் ) (6)அமிர்தலிங்கம் இராசகுமாரன் (விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்க தலைவர்)
(7) திருநாவுக்கரசு சிவகுமாரன் (சிவா) – யாழ் பல்கலைக்கழக பட்டதாரி - (தீவகம்)
(8)பத்மினி சிதம்பரநாதன் (முன்னாள் நா.உ)
(9)சின்னமணி கோகிலவாணி – (கிளிநொச்சி)
(10)ஜெயரட்ணம் வீரசிங்கம் (வீரா) - (பல்கலைக்கழக ஊழியர் சங்கம்)

07 ஜூலை 2015

குப்பி கடிக்காதோரை முன்னாள் போராளிகள் எனக்கூற முடியாதென்றாராம் சிறீதரன்!

இறுதி யுத்தத்தில் குப்பி கடித்து வீரச்சாவடையாத எவருமே தம்மை முன்னாள் போராளிகள் என அடையாளப்படுத்த முடியாது.போராளிகளாயின் குப்பி கடித்து வீரச்சாவடைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக நேற்று வவுனியாவில் இடம்பெற்ற சம்பந்தன் தலைமையிலான கூட்டத்தில், ஜனநாயகப் போராளிகள் என்ற அமைப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் பொழுதே அவர் இவ்வாறு தொரித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட தமிழ் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடவுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு வவுனியாவில் இடம்பெற்றது. இச்சந்திப்பு நடைபெறுவுள்ளமையை அறிந்த ஊடகவியலாளர் வித்தியாதரன், முன்னாள் போராளிகளுக்கும் ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எமது தலைவர் சம்பந்தனிடம் முன்வைத்தார். ஆனால், தலைவர் சம்பந்தன் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் பின்னர் எமது கட்சிக் கூட்டத்தில் முன்னாள் போராளிகளின் ஜனநாயகக் கட்சி என்ற அமைப்புத் தொடர்பில் விவாதித்தோம். அந்த விவாதத்தில் சிறிதரன் கருத்துத் தெரிவிக்கையில், இறுதியுத்தத்தின் பொழுது குப்பி கடித்து வீரச்சாவடையாத எவருமே தம்மை முன்னாள் போராளிகள் எனத்தொரிவிக்க முடியாது என்ற தனது கருத்தைத் தெரிவித்தார். அதேபோல் பிரபாகரன் மட்டுமே தமது தலைவர் எனவும் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த தலைவர் சம்பந்தன், தந்தை செல்வநாயகமே எல்லோருக்கும் தலைவர் எனத் தெரிவித்து இவ்விடயம் மீதான விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்றனர்.

06 ஜூலை 2015

ஸ்ரீலங்காவின் மூத்த படையதிகாரி திடீர் மரணம்!

சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரும், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக நேற்று திடீரென மரணமானார். நேற்றுமாலை திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாகவே, மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக மரணமானதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவர் சிறிலங்கா இராணுவத்தில் முக்கியமான பல பதவிகளை வகித்திருந்தவர் என்பதுடன், 2013 ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய வந்தார். இவரது பொறுப்பின் கீழேயே முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.புலிகளின் முக்கிய தளபதிகளாக விளங்கிய பாப்பா,லோறன்ஸ் உட்பட 60வரையிலான போராளிகள் மைத்திரி ஜனாதிபதியானதன் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அதனால் ஏற்பட்டுள்ள உள்ளகப்பிரச்சனைகளால்
இந்த படையதிகாரிக்கு மரணம் நேர்ந்திருக்கலாம் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

02 ஜூலை 2015

எனையாளும் என் அன்னை ஒலிப்பேழை வெளியிடப்பட்டது.

தீவகத்தின் கண்ணே அமைந்துள்ள ஊர்காவற்றுறை புளியங்கூடல் செருத்தனைப்பதிதனில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் அன்னை ஸ்ரீ இராஜமகாமாரியின் துணையுடன் வெளிவந்திருக்கும் "எனையாளும் என் அன்னை"பக்தி மழை பொழியும் ஒலிப்பேழை 26.06.2015 அன்று ஆலய முன்றலில் வெளியீடு செய்யப்பட்டது.இந்த ஒலிப்பேழைகளை புலம்பெயர் தேசங்களிலும் பெற்றுக்கொள்ளும் வசதியை ஆலய நிர்வாகத்தினர் மேற்கொண்டிருக்கின்றனர்.
கனடா:புவனேஸ்வரன்-4164099947
ஜெர்மனி:இரவீந்திரகுமார்-015217517832
பிரான்ஸ்:ராசன்-0661474728
பிரித்தானியா:சாந்தகுமார்-02030974065
அவுஸ்திரேலியா:கிரிசாந்த்-0403231581
சுவிற்சர்லாந்து:திருவருட்செல்வம்-41766833019
உங்கள் வீடு தேடி வந்து அருள்பாலிக்கும் மகாமாரி அன்னையை

ஒவ்வொருவரும் பூஜித்துக்கொள்ளுங்கள்.இலக்கியன் அவர்களின் இனிமை ததும்பும் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் தேனாய் பாய்கிறது.

குழந்தையை காப்பாற்றிய கடவுள்கள்!

முல்லைத்தீவு முல்லியவளையில் கிணற்றினுள் வீழ்ந்த 4 வயதுச் சிறுமியுடன் பிள்ளையாரும், அம்மனும் பேசி அமைதியாக வைத்திருந்ததாக குறித்த சிறுமி கூறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சிறுமி தனது விளையாட்டுக் காரை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அந்தக் காருடன் கிணற்றினுள் வீழ்ந்து விட்டார். குறித்த கிணறு 12 அடி நீரைக் கொண்ட ஆழமான கிணறாகும். இருந்தும் சிறுமி அக் கிணற்றின் உள்ளே ஏதோ ஒரு ஆதாரத்தைப் பிடித்தபடி தனது அத்தையை அழைத்துள்ளாள். சிறுமியின் குரல் கேட்ட அத்தை கிணற்றினுள் பார்த்து விட்டு அலறி அடித்தபடி கிணற்றினுள் வாளியை விட்ட போது சிறுமி வாளியைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தாள். சிறுமிக்கு எதுவித காயங்கள் இல்லாதும் சிறுமி பயமேதும் இல்லாதும் இருந்த போது இது தொடர்பாக சிறுமியை அயலவர்கள் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி கிணற்றினுள் பிள்ளையாரும் ஒரு அம்மாவும் தன்னை பயப்பட வேண்டாம் என்று கூறி துாக்கி வைத்திருந்ததாகவும் இனிமேல் இவ்வாறு கிணற்றுப் பக்கம் வரவேண்டாம் எனச் சொன்தாகவும் கூறியுள்ளாள். இதனால் அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்து காட்டாறு விநாயகரினதும் வற்றாப்பளை அம்மனுடைய புதுமை எனவும் கூறுகின்றனர்.

27 ஜூன் 2015

கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பணியகம்!

இன்று (27-06-2015) மாலை 3.00 மணிக்கு கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட பணியகம் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏ-9 வீதி, கரடிப்போக்குச் சந்தியில் அமைந்துள் ராஜன் கட்டடத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான செயலகம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

20 ஜூன் 2015

கம்(Hamm)காமாட்சி அம்பாள் நாளை இரதோற்சவம்!

ஜெர்மனியின் கம்(Hamm)மாநகரில் கோவில் கொண்டருளியிருக்கும் ஸ்ரீ காமாட்சி அம்பாள் தேர்த்திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை(21.06.2015)நடைபெற உள்ளது.பகல் 12மணிக்கு அம்பாள் தேரேறி புறப்படுவாள்.இவ்வாலயத்தின் தேர் உற்சவத்தை காண ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு வருகின்றனர்.அத்துடன் பிற மதத்தை சார்ந்தவர்களும் குறிப்பாக வெள்ளையின மக்களும் பெருமளவில் கலந்து சிறப்பித்து வருகிறார்கள்.அத்துடன் ஜெர்மானிய பாடப்புத்தகங்களிலும் கம் காமாட்சி அம்பாள் ஆலயம் இந்துக்களின் அடையாளமாக குறிப்பிடப்பட்டிருப்பது சுட்டிக்காட்டதக்கது.

19 ஜூன் 2015

பிரான்சில் சிங்கள அரச புலனாய்வாளர்கள் அடாவடி!


பிரான்சில் சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோரின் கொலைவெறித் தாக்குதலில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு கடந்த நிலையில் தனது வர்த்தக நிறுவனத்தை மூடிவிட்டு செல்ல முற்படுகையிலேயே அங்கு காத்திருந்த கும்பல் அவர்மீது கண்மூடித்தனமான தாக்குதலைமேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பிரான்சு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். புலம்பெயர் நாடுகளில் எமது தேசிய செயற்பாடுகளை முடக்கும் முகமாக செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் ஏற்கெனவே கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகியோரை பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் படுகொலைசெய்யப்பட்டமை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் பரிதி அவர்கள் பாரிசில் படுகொலை செய்யப்பட்டமை என்பன இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது. அதன் தொடர்ச்சியாக பாரிசில் இருந்து வெளியாகிய ஈழமுரசு பத்திரிகை மற்றும் அதன் இணையத்தளங்கள் யாவும் கொலைவெறியர்களின் எச்சரிக்கை காரணமாக முடக்கப்பட்டன. அத்துடன் நிறுத்திக்கொள்ளதவர்கள், தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் தமது நடவடிக்கைகளை விஸ்தரித்திருந்தனர். இன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளமை புலம்பெயர்நாடுகளில் உள்ள அனைத்து தேசிய செயற்பாட்டாளர்களையும் விசனமடையவைத்துள்ளது. பொதுமக்கள் இதுகுறித்து விளிப்புடன் இருக்கவேண்டும் எனவும் - தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஊடுருவியுள்ள சிறிலங்கா அரச புலனாய்வாளர்களை இனங்கண்டுகொள்ளவேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரான்ஸ்

13 ஜூன் 2015

யாழ்,நீதிமன்ற தாக்குதலில் ஈபிடிபி?

யாழ்.நீதிமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஈபிடிபியின் முக்கிய கைகள் இருந்தமை தொடர்பான தகவல்கள் விசாரணைக் குழுவிற்கு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.கொழும்பில் இருந்து வருகை தந்துள்ள விசேட குற்றத்தடுப்பு காவல்துறைக்கே இத்தகவல்கள் கிடைத்துள்ளனவாம்.அவ்வகையில் ஈபிடிபி வசமுள்ள வேலணைப்பிரதேச சபையின் தலைவரான போல் என்றழைக்கப்படும் சி.சிவராசா உள்ளிட்ட வேறு சில கட்சியின் உறுப்பினர்களிடம் மேற்படி வன்முறைச் சம்வங்களின் பின்னணி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் டக்ளஸின் வலது கையும் முன்னாள் யாழ்.மாநகர துணை முதல்வாரன றீகனையும் தேடி வலைவிரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கைதாகியுள்ள விஜயகாந்த் மற்றும் செந்தூரன் இருவரும் இத்தகைய பின்னணியினை கொண்டுள்ளனர். இதனிடையேகைது நடவடிக்கைகளை அடுத்து வன்முறைச்சம்பவங்களில் தொடர்புபட்டனரென அடையாளம் காணப்பட்ட பலர் தலைமறைவாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

05 ஜூன் 2015

புளியங்கூடல் அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம்!

புளியங்கூடல் ஊர்காவற்றுறை செருத்தனைப்பதியில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் சிறீ இராஜமகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 12ம்(12.06.2015)திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற அம்பாளின் அனுக்கிரகம் கூடியுள்ளது.(27.06.2015)சனிக்கிழமை தேர்த்திருவிழாவும்,(28.06.2015)ஞாயிற்றுக் கிழமை தீர்த்தோற்சவமும்,18ம் திருவிழாவாகிய திங்கட்கிழமை பூங்காவனத் திருவிழாவும் இடம்பெறும்.இதேவேளை"எனை ஆளும் என் அன்னை"எனும் ஒலிப்பேழை வெளியிடப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ் ஒலிப்பேழைகளை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

04 ஜூன் 2015

நாரந்தனையில் தொடரும் வாள்வெட்டு!

நாரந்தனையில் நேற்றுக்காலை மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் ஒருவரை வாளால் வெட்டியதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரு சமூகப் பிரிவுகளுக்கு இடையே கடந்த ஒரு மாத காலமாக நிலவும் பிரச்சினையே இந்த வாள்வெட்டுக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே மது போதையில் சென்ற நால்வர் ஊர்காவற்றுறைப் பகுதியில் வைத்து ஒருவரை வாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்தவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

01 ஜூன் 2015

பெண்களுடன் சேஷ்டை விடுவோரைக் கைது செய்ய உத்தரவு!

பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெண் பிள்ளைகளிடம் சேஷ்டை செய்வோரைக் கைது செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா உத்தரவுட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார். புங்குடுதீவு மாணவி பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பெண் பிள்ளைகளுக்கு அவ்வாறான சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லியடியிலுள்ள கல்வி நிலையங்கள், மகாத்மா திரையரங்கு, தொலைத்தொடர்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகில் நின்று பெண் பிள்ளைகளின் தொலைபேசி இலக்கங்களை கோருபவர்களையும் அவர்களைக் கேலி செய்து அவர்கள் அணிந்துள்ள தொப்பிகளைக் கழற்றுபவர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறான சம்பவம் நடைபெறுவதாக பொதுமக்களால் புகைப்படங்களுடன் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாட்டை கவனத்தில் எடுத்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பொறுப்பதிகாரி கூறினார்.

23 மே 2015

காணவில்லையென தேடப்படும் இளம்பெண் இவர்தான்!

யாழ்ப்பாணம், வேலணை கிழக்கு, 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் விமலினி (வயது 20) என்ற யுவதியை வியாழக்கிழமை (21) முதல் காணவில்லையென அவரது உறவினர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள நண்டு பதனிடும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இந்தச் யுவதி, வியாழக்கிழமை (21) காலை வேலைக்குச் சென்று, இதுவரையில் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, உறவினர்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.முன்னர் நாரந்தனையை சேர்ந்தவர் என செய்திகள் வந்திருந்தமையால் நாமும் அதை பிரசுரித்திருந்தோம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

22 மே 2015

நாரந்தனையை சேர்ந்த இளம்பெண்ணை காணவில்லை!

நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 20 வயது இளம்பெண்ணை காணவில்லையென ஊர்காவற்றுறை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நிரோஜினி (20) என்பவரே காணாமல் போயுள்ளார். இவரது தாயார் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். கடந்த 11ம் திகதி இவர் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். முல்லைத்தீவில் உள்ள தனது கணவரை பார்ப்பதற்காக செல்வதாக கூறி, இரண்டரை வயதான தனது குழந்தையை தாயாரிடம் ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார். ஆனால் அவர் முல்லைத்தீவிற்கும் வந்து சேரவில்லையென அவரது கணவர் கூறியுள்ளார். ஏற்கனவே தீவகத்தில் வித்தியா காணாமல் போய், பின்னர் சடலமாக மீட்கப்பட்ட கொந்தளிப்பு அடங்குவதற்கு முன்னர் மீண்டும் அந்த பகுதியில் இளம்பெண்ணொருவர் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

21 மே 2015

வித்தியா கொலையாளிகள் 10 பேரையும் பகிரங்கமாக தூக்கிலிடவேண்டும்!

புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான பாலியல் வல்லுறவு, படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய பத்துப் பேருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். புலிகளின் காலத்தில் இத்தகைய பாலியல் வல்லுறவுகள் இடம்பெற்றதில்லை. அப்படி நடந்தால் 24 மணித்தியாலத்தில் தண்டனை வழங்கிவிடுவர் என்றும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பில் இந்த நாடாளுமன்றத்தில் எனது துக்கத்தை வெளிப்படுத்துகிறேன். மேற்படி மாணவி படுகொலை செய்யப்பட்டு ஏழு தினங்களாகின்றன. இதனால் இன்று வட மாகாணம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது, யாழ்ப்பாணத்தின் இயல்புநிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி கடத்தப்பட்ட மறுதினம் அதிகாலை 6 மணியளவில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாருக்கு அறிவித்தபோதும் பொலிஸார் 9 மணிக்கே வருகை தந்தனர். முன்னதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்ற தாயார் நான்கு மணித்தியாலங்களாக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இது தேவையற்ற விடயமாகும். அதுமாத்திரமன்றி, குறித்த மாணவி சிநேகிதனுடன் சென்றிருக்கலாம் எனக் கூறியுள்ளதுடன், மறுநாள் வந்து முறையிடுமாறு பொறுப்பின்றிய நிலையில் அசட்டையாகச் செயற்பட்டுள்ளனர். மாணவி மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலை ஆகியவற்றுடன் 10 பேருக்கு தொடர்புள்ளது. இதில் வேலணைப் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரும் அடங்குகிறார். கடந்த காலங்களிலும் இப்பிரதேசங்களில் தொடர்ச்சியான பாலியல் வல்லுறவுகள், படுகொலைகள், சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தல் போன்ற குற்றச்செயல்கள் இடம்பெற்றன. அங்கு இயங்கி வருகின்ற ஆயுதக்குழுக்களாலேயே இந்தக் குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறுமிகளை, யுவதிகளை, பெண்களை படுகொலை செய்து கிணறுகளில் போட்டு புதைத்ததும் இந்த ஆயுதக்குழுக்களே ஆகும். இன்று வடக்கில் குழப்பகரமான நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அங்கு இயங்குகின்ற ஆயுதக்குழுவே இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாரும் அசட்டையாக இருக்கின்றனர். மேற்படி ஆயுதக்குழுக்கள் இன்று பலவந்தமாக பொதுமக்களுக்குச் சொந்தமான வீடுகளையும், உடைகளையும் பறித்து அலுவலகங்களை நடத்திவருகின்றன. எனவே, வடக்கில் இருக்கின்ற ஆயுதக்குழுக்களை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சகலரையும் பொதுமக்களின் முன்னிலையில் மரணதண்டனைக்கு உட்படுத்தவேண்டும். இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் உடனடியாக பதவி விலக்கவேண்டும்'' என்றார்.

19 மே 2015

சுவிசிற்கு தப்பிச்செல்ல முயன்ற மகாலிங்கம் சிவகுமார் கைது!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய ஒன்பதாவது சந்தேகநபர் இன்று பிற்பகல் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் சுவிஸிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில், சந்தேகநபரான மகாலிங்கம் சிவகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சுவிஸிலிருந்து இலங்கை வந்திருந்த மகாலிங்கம் சிவகுமார் என்பவருக்கு வித்யா கொலையுடன் நேரடித்தொடர்பு இருப்பதாக சந்தேகித்த புங்குடுதீவு பிரதேச மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க முற்பட்டனர்.அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்திற்குச் சென்ற சட்டத்தரணி வி.ரி.தமிழ்மாறன் பொதுமக்களுடன் கலந்துரையாடி குறித்த நபரை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அவரைத் தான் பொலிஸாரிடம் ஒப்படைப்பதாகவும் அளித்த வாக்குறுதியின் பிரகாரம் பிரதேசமக்கள் குறித்த சந்தேகநபரை சட்டத்தரணியிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், வித்தியாவின் கொலை தொடர்பில் வடமாகாண பொலிஸ் மாஅதிபருடன், சட்டத்தரணி தமிழ்மாறன் குறித்த பகுதிக்கு இன்று காலை மீண்டும் சென்று பிரதேச மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். அவ்வேளையில், சந்தேகநபர் மகாலிங்கம் சிவகுமார் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ளதாகவும், அவர் சுவிஸ்ஸிற்கு இன்று பிற்பகல் தப்பிச் செல்லவுள்ளதாகவும் பிரதேச மக்களுக்கு கிடைத்த செய்தியினை அடுத்து அவர்கள் சட்டத்தரணியிடம் கேள்வியெழுப்பியதுடன், சந்தேகநபரை ஒப்படைக்குமாறும் கோரினர். இதனையடுத்து, இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், வி.ரி.தமிழ்மாறனின் வாகனத்தை முற்றுகையிட்டு பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

17 மே 2015

புங்குடுதீவில் மாணவி படுகொலை!மேலும் ஐவர் கைது!

நல்லூரில் போராட்டம்
புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை புலனாய்வு காவல்துறையினர் ஞாயிறன்று மாலை கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்குத் தாங்களே தண்டனை வழங்கவேண்டும் என்றும், ஆகவே அந்த ஐவரையும் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்றும் புங்குடுதீவு ஊரவர் நூற்றுக்கணக்கில் திரண்டு காவல்துறையினரிடம் கோரி வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி மாணவி வித்யாவின் கொடூரமான கொலைக்கும், பாலியல் பலாத்காரத்துக்கும் இவர்களே காரணம் என கண்டறிந்து இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஐந்து பேரும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்துள்ளதாகவும், காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை அறிந்த ஊர் மக்கள், அவர்களை காவல்துறையினரிடமிருந்து கைப்பற்றுவதற்காக காவல்துறையினருடைய வாகனத்தைச் செல்லவிடாமல் வீதிகளை மறித்து போராட்டம் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்களைப் பாதுகாப்பாக குறிகட்டுவான் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து, அந்த காவல் நிலையத்தையும் ஊர் மக்கள் சூழ்ந்து கொண்டதாகவும், இதனால் அங்கும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஊர் மக்கள் திரண்டு கைது செய்யப்பட்டவர்களைக் கைப்பற்ற மேற்கொண்டுள்ள முயற்சியையடுத்து, புங்குடுதீவுக்கு மேலதிக காவல்துறையினரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. புங்குடுதீவில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை அறிந்து அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புங்குடுதீவு மாணவி வித்யா பாடசாலைக்குச் சென்றபோது கடத்தப்பட்டு மறுநாள் காலை காட்டுப்பாங்கான பகுதியில் கோரமாகக் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் ஏற்கனவே மூன்று பேரைக் கைது செய்திருந்தனர். அவர்களை மே மாதம் 28ஆம் தேதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே இந்த ஐந்து பேர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இலங்கையின் வடபகுதியில் பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்தக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்து தண்டனை வழங்கக் கோரியும் பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

15 மே 2015

புலிகளின் காலத்தில் பெண்களால் நள்ளிரவிலும் தனியாக நடமாட முடிந்தது!

விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாடமுடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும் வராதா என்று மக்கள் இப்போது ஏங்க ஆரம்பித்துள்ளனர் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை ( 15.05.2015 ) புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஞ்சலி உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையை மிருகத்தனமானது என்று சிலர் குறிப்பிட்டார்கள். நான் அவ்வாறு சொல்லமாட்டேன். மிருகங்கள்கூடச் செய்யத்துணியாத கொடுஞ்செயல் இது. இந்த மாபாதகத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எந்தப் பிறவியிலும் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. போருக்குப் பிறகு இதுபோன்ற கொலைகளும், சமூகவிரோதச் செயற்பாடுகளும் அதிகிரித்துள்ளன. இவற்றின் பின்னணியில் போதைப்பழக்கம் ஒரு பிரதான காரணமாக இருக்கிறது. என்றும் இல்லாத வகையில் இளைய தலைமுறையிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. எமது இளைய தலைமுறையைத் தவறான பாதையில் வழிநடத்துவதன்மூலம் அவர்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்கச் செய்யலாம் என்ற நோக்கத்துடனேயே இங்கு போதைப்பொருள் பாவனை திட்டமிட்டு ஊக்கிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் காவல்துறை குற்றங்களைக் கட்டுப்படுத்தியிருந்தது. இப்போது கடும்குற்றவாளிகள்கூட சுதந்திரமாக நடமாடக்கூடியதாக உள்ளது. எனவே, எமது இளைய தலைமுறையின் பாதுகாப்புக் குறித்து பெற்றோர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எமது இளைய தலைமுறையின் பழக்கவழக்கங்கள் குறித்துப் நாம் விழிப்பாயிருக்க வேண்டும். வடக்கு மாகாண சபையும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய தீர்க்கமான வழிமுறைகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இவ்வஞ்சலி நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், க.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள்.

14 மே 2015

புங்குடுதீவில் பாழடைந்த வீட்டிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

கடத்தப்பட்ட மாணவி ஒருவர் இன்று காலை புங்குடுதீவினில் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.புங்குடுதீவு 4 வட்டாரம் - கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்படடுள்ளார். நேற்றுப்புதன்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவி பற்றி தகவல் கிடைத்திராத நிலையினில் அவரின் பெற்றோர் மாணவியைத் தேடியுள்ளனர். எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இந்த நிலையில் கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மாணவியின் சடலத்தை பொதுமக்கள் கண்டுள்ளனர். அவர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்.போதனாவைத்தியசாலையின் பிரேத அறையினில் ஒப்படைத்துள்ளனர்.