பக்கங்கள்

13 ஏப்ரல் 2011

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் மனைவிக்கு நாடுகடத்தல் உத்தரவு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மாமனிதர் அமரர் ஜோஸப் பரராஜசிங்கத்தின் மனைவியான திருமதி சுகுணம் பரராஜசிங்கத்தின் அகதி மனுவை நிராகரித்த கனடிய கன்சவேட்டிவ் அரசாங்கம் அவரை நாடு கடத்த உத்தரவிட்டிருக்கிறது.
2005ம் ஆண்டு நத்தார் தினத்தன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தினுள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது ஜோஸப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் இடம்பெற்ற போது அவருடன் கூடவிருந்த திருமதி சுகுணம் பரராஜசிங்கம் படுகாயமடைந்திருந்தார்.
இதேவேளை, திருமதி ஜோசேப் பரராஜசிங்கத்தின் நாடுகடந்தல் கோரிக்கையை எதிர்த்து மனுச் செய்யப் போவதாக அவரது சட்டத்தரணி ராகுல் பௌலாக்கியா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.