பக்கங்கள்

10 ஏப்ரல் 2011

மக்கள் காணாமல் போதல் தொடர்கிறது!

சிறீலங்காவில் பெருமளவான தமிழ் மக்களை விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் சிறீலங்கா அரசு தடுத்துவைத்துள்ள அதேசமயம், அங்கு தொடர்ந்தும் மக்கள் காணாமல்போவதாக அமெரிக்க கடந்த வெள்ளிக்கிழமை (08) வெளியிட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்கா அரசு எண்ணிக்கை தெரியாத விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை தடுத்து வைத்துள்ளது. 1,200 இற்கு மேற்பட்டவர்கள் சிறீலங்கா காவல்நிலையங்களிலும், குற்றப்புலானாய்வு அலுவலகங்களிலும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் முகாம்களிலும், சிறிலங்கா இராணுவ முகாம் மற்றும் துணைஇராணுவக்குழுவினரின் முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,400 என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. அங்கு வெளியார் செல்வதற்கு சிறீலங்கா அரசு அனுமதிகளை மறுப்பதால் அவர்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றனர் என்பது தொடர்பில் அறிவது கடினம். பொதுமக்களை சாதாரணமாக கைது செய்யும் அதிகாரங்களை சிறீலங்கா படையினருக்கு வழங்கும் அவசரகாலச்சட்டத்தை சிறீலங்கா அரசு தொடர்ந்து வருகின்றது. சிறீலங்கா படையினரின் முகாம்களிலும், காவல்நிலையங்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மரணமடைகின்றனர். இது நீதிக்குப்புறம்பான படுகொலையாகும். அங்கு இடம்பெறும் படுகொலைகள் தொடர்பில் காத்திரமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.