பக்கங்கள்

11 ஜனவரி 2015

சுமந்திரனும் அமைச்சரானார்!

இலங்கையின் புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்களும் 10 இணை அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை வென்று புதிய அதிபராக பதவி ஏற்றுள்ளார் மைத்ரிபால சிறிசேன. இவர் ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டிருந்தவர்களை பதவி நீக்கம் செய்ததுடன் அந்த பதவிகளில் புதிய நபர்களை நியமித்துள்ளார்.மேலும், இலங்கையில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 10 இணை அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நிதி அமைச்சராக கலாநிதி ஹர்ஸ டி சில்வா, பாதுகாப்பு அமைச்சராக ஜெனரல் சரத் பொன்சேகா, சுகாதார அமைச்சராக கலாநிதி ராஜித சேனாரத்ன, கல்வித் துறை அமைச்சராக கபீர் ஹாசிம். பொது அலுவல்கள் அமைச்சகத்தின் சஜித் பிரேமதாச, வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சராக ரவி கருணாநாயக்க, வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர, ஊடகம் மற்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சராக ஜெயந்த கருணாதிலக, மின்சாரம், எண்ணெய், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி துறையின் அமைச்சராக பாட்டலி சம்பிக்க ரணவக்க, நீதி மற்றும் சட்ட அலுவல்கள் அமைச்சராக கலாநிதி விஜயதாச ராஜபக்ச, சுற்றுலா மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பைசர் முஸ்தபா, விமானத் துறை மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம், விவசாய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக கரு ஜயசூரியவும், கலாசார, பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரத் துறை அமைச்சராக ரோசி சேனநாயக்கவும், நீர்ப்பாசனம் மற்றும் மரம் வளர்ப்பு அமைச்சராக நவீன் திசாநாயக்க.விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறை அமைச்சராக அர்ஜுன ரணதுங்கவும், மீன்வளத் துறை அமைச்சராக ரிஷாத் பதியுதீன்தபால், தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக துமிந்த திஸாநாயக்கவும், தொழிலாளர் அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் துறை அமைச்சராக நிறோசன் பெரேராவும், நாடாளுமன்றம், உள்ளூராட்சி, தேசிய முகாமைத்துவ மீள்கட்டமைப்பு அமைச்சராக ஜோசப் மைக்கல் பெரேராவும், சமூக விவகாரங்கள் துறை அமைச்சராக லட்சுமன் கிரியல்லவும், கலாசார மற்றும் சமய விவகாரங்கள் துறை அமைச்சராக ஜோன் அமரதுங்கவும், மொழிகள், சமூக விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் சமாதான துறைக்கு எம்.ஏ.சுமந்திரனும், பாரம்பரிய, கைத்தொழில், ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் திறன் அபிவிருத்தி துறைக்கு எம்.கே.டி.எச்.குணவர்தனவும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இணை அமைச்சர்களாக நிதித் துறைக்கு எரான் விக்கிரமரட்னவும், கல்வித் துறைக்கு அகில விராஜ் காரியவசம்வும், சுகாதாரத் துறைக்கு புத்திக்க பத்திரணவும், ஊடகத் துறைக்கு சுஜீவ சேனசிங்கவும், வெவிவகார அலுவல்கள் இணை அமைச்சராக ருவான் விஜயவர்தனவும், நீதி மற்றும் சட்ட அலுவல்கள் இணை அமைச்சராக அஜித் பி.பெரேராவும், மீன்வளத் துறை இணை அமைச்சராக பாலித ரங்கேபண்டாரவும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையின் இணை அமைச்சராக அஜித் மன்னப்பெருமவும், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறையின் இணை அமைச்சராக ராஜன் ராமநாயக்கவும், மரநடுகை மற்றும் நீர்ப்பாசனத் துறையின் இணை அமைச்சராக பி.திகாம்பரமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

10 ஜனவரி 2015

மரக்கறி விற்கிறார் மகிந்த-கலகல போட்டோ!

தேர்தலில் தோல்வியடைந்துள்ள மகிந்தரின் வருங்கால நிலை இப்படி தான் இருக்கப்போகிறது என்று சித்தரிக்கப்படும் படம் ஒன்று பேஸ் புக்கில் சக்கை போடு போடுகிறது. என்ன தான் தேர்தலில் தோற்றாலும் மகிந்தவிடம் கோடி கோடியாக பணம் உள்ளது என்று சிலர் கூறுவார்கள். அவர் அதனை வைத்துக்கொண்டு இருப்பார் என்றும் சொல்லுவார்கள். ஆனால் தற்போது கிடைக்கும் சில தகவல்கள் அடிப்படையில் சரத் பொன்சேகாவையே பாதுகாப்பு செயலாளராக மைத்திரி நியமிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை. 2010 தேர்தலில் சரத் பொன்சேகா தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அவரை கைதுசெய்து நொங்கெடுத்தார் மகிந்தர். இதனை சரத் பொன்சேகா அவ்வளவு எழிதில் மறந்துவிடுவார என்ன ? …எனவே மெல்ல மெல்ல பழிவாங்கல் ஆரம்பிக்க உள்ளது. தேர்தலில் வென்றவுடன் மகிந்தரை பழிவாங்க ஆரம்பித்தால். வெற்றிக் கழிப்பில் இவ்வாறு ஆடுகிறார்கள் என்று சிங்களவர்கள் கூறுவார்கள். எனவே மெல்ல மெல்லமாக, சில நடவடிக்கைகள் தொடங்கும். இதேவேளை இலங்கையில் இனி எவரும் போய், எனது கணவரை கோட்டபாய தான் கடத்தினார் என்று பொலிஸ் நிலையத்தில் சொல்லலாம். தற்போது கோட்டபாய சாதாரண ஒரு மனிதர். அவர் மீது பொலிஸ் நடவடிக்கை எடுத்துதான் ஆகவேண்டும். இவர்கள் கொட்டம் எல்லாம் 9ம் திகதியோடு அடங்கி ஒடுங்கிப் போய்விட்டது அல்லவா. வட கிழக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லீம் சகோதரர்கள் கொடுத்த நல்ல பாடம் இதுவாக தான் இருக்க முடியும். 2010 ம் ஆண்டில் கூட மகிந்தருக்கு எதிராக சரத் பொன்சேகா போட்டியிட்டார். அந்தவேளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு தமிழர்களை வாக்குப் போடச் சொன்னது. ஆனாலும் எவரும் அவருக்கு போடவில்லை. அனால் இம் முறை தமிழர்கள் மகிந்தருக்கு எதிராக காத்திரமான ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் வேண்டும். குடும்ப அரசியல் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக நின்றுள்ளார்கள். எனவே மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

09 ஜனவரி 2015

கே.ஸ்ரீபவன் முன்னிலையில் மைத்திரி சத்தியப்பிரமாணம் எடுப்பார்!

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சத்தியப்பிரமாணம், உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன, தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க முடியாது என்று கூறியுள்ள நிலையிலேயே நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

06 ஜனவரி 2015

கோத்தாவுடன் ஓடத் தயாராகும் கருணா… பிள்ளையான்!

தற்போது மகிந்தவின் தோல்வி நிச்சயப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டை விட்டு தப்பியோட முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. மலேசியா அல்லது சிங்கபூருக்கு இவர்கள் தப்பிச் செல்லக்கூடும் என்று கொழும்பின் முக்கிய வட்டாரங்கள் மூலமாக அறியமுடிகிறது.முள்ளிவாய்க்கால் வரை யுத்தத்தை வழிநடத்தியது கருணாவே . இவர் போட்டு கொடுத்த திட்டத்தின் படியே இராணுவம் தனது போரை நடத்தி மக்களையும் புலிகளையும் அழித்தது. அதன் நன்றிக் கடனுக்காவே கோத்தபாயாவின் ஏற்பாட்டில் ஆசிய நாட்டுக்கு தப்பிச்செல்ல ஏற்பாடு செய்யப் பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கருணாவை கைது செய்தால் மகிந்தவின் போர் குற்றங்கள் அம்பலமாகி விடும் என்பதாலேயே இந்த நகர்வுகள் நகர்த்தப்பட்டு வருகின்றனவாம். அவ்விதம் கருணா தப்பி செல்லாவிட்டால் அவரை இராணுவம் படுகொலை செய்யும் என்றே அந்த முக்கிய வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது . எதிர் வரும் நிமிடங்களில் இவற்றில் ஏதாவது நடக்கலாம் என்பதே அந்த பர பரப்பு . மேலும்நான்கு நாட்கள் உள்ள நிலையில் இந்த பர
பரப்புக்கள் அரேங்கேறி வருகின்றன.

01 ஜனவரி 2015

எட்டாம் திகதியின் பின் எதிர்க்கட்சியில் மகிந்த?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதி என்பது உளவுத் தகவல்கள் மூலம் ஜனாதிபதிக்கு தெரியவந்துள்ளது.நாளுக்கு நாள் ஆளுங்கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குத் தாவும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை தேர்தல் தோல்வி குறித்த முன்னறிவிப்பை தெளிவாக வழங்குவதாக ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் உணர்ந்துள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடும் முடிவில் ஜனாதிபதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மைத்திரிபால சிறிசேனவிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதை தடுப்பது ஜனாதிபதியின் நோக்கமாக உள்ளது. மேலும் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக கூடுதல் ஆசனங்களை வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமது ஆதரவாளர் ஒருவருக்கு பெற்றுக் கொடுப்பதும் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதன் மூலம் தொடர்ச்சியாக அரசியலில் தமது குடும்ப செல்வாக்கைத் தக்க வைத்துக்கொண்டு மீண்டும் அரசியல் தலைமைத்துவத்தை அடைவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வகுத்துள்ள புது வியூகத்தின் நோக்கம் என்று கூறப்படுகின்றது.