பக்கங்கள்

18 ஏப்ரல் 2011

இனப்பிரச்சனை தீர்வில் அரச தரப்புக்கு அக்கறையில்லை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் இன விவகாரத்தீர்வு தொடர்பாக நடைபெறும் பேச்சு மிகவும் சுமுகமாக நடைபெறுவதாகக் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பேச்சில் கலந்துகொள்ளும் அரசாங்கத் தரப்பினர் இனவிவகாரத்தீர்வில் எவ்வித அக்கறையும் இன்றியே பேச்சில் கலந்துகொள்கின்றனர். அரசாங்கத்தைப் பொறுத்தவரை இன விவகாரத் தீர்வு விடயத்தில் தீர்வு குறித்த எவ்வித சிந்தனையும் இன்றி இருப்பதையே இது காட்டுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 'ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தீர்வையே நாம் நாடி நிற்கின்றோம். ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வைத் தர அரசாங்கம் தயாரா என்பது குறித்து அவர்கள் வெளிப்படையாகப் பேசுகின்றார்கள் இல்லை. பேச்சுவார்த்தையின் போக்கையும் அரசாங்கத்தரப்பினரின் நடவடிக்கைகளையும் பார்க்கும் போது இழுத்தடிப்பை மேற்கொள்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. தொடர்ந்தும் இழுத்தடிப்பதில் பிரயோசனம் இல்லை. அரசாங்கம் ஒரு தீர்க்கமான முடிவை முன்வைக்க வேண்டும். இல்லையேல் தொடர்ந்தும் பேச்சு நடத்துவதில் பயனில்லை'' எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.