நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
24 ஏப்ரல் 2017
ஊர்காவற்றுறையில் யுவதி மீது மயக்க மருந்து தூவிய மட்டக்களப்பு நபர்!
22 ஏப்ரல் 2017
கடத்தப்பட்ட சிறுமியை மீட்க உதவி கோரப்படுகிறது!
03 ஏப்ரல் 2017
வேலணையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!
வேலணை துறையூரை சேர்ந்த மாணவி ஒருவர் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வீட்டினர் ஆலயத் திருவிழாவிற்கு சென்றிருந்த வேளை,தனிமையில் இருந்த மாணவி வீட்டின் அறையினில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பல்கலைக்கழகம் சென்று வீடு திரும்பிய சகோதரி ஒருவர் மூலமாக குறிப்பிட்ட மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளமை தெரியவந்தது.எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்கவில்லை என்ற மன உளைச்சலே தற்கொலைக்கு காரணம் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.கல்விப் பொது தராதர பரீட்சை பெறுபேறுகள் கடந்தவாரம் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.உயிரிழந்த மாணவி பதினாறு வயதுடைய அருட்பிரகாசம் ரேணுகா என அறியவந்திருக்கின்றது.இவர் 1A 7B 1S என்ற பெறுபேற்றை பெற்றுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது.
01 ஏப்ரல் 2017
தமிழ் எழுத்தை கணினியில் தந்த விஜயகுமார் கனடாவில் மறைவு!
தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்து வைத்த கலாநிதி எஸ்.விஜயகுமார் கனடாவில் மார்க்கம் பகுதியில் நேற்று காலமானார். அன்னாருடைய இழப்பு தமிழுக்கும், விஞ்ஞான உலகிற்கும் பேரிழப்பாகும். இவரது உடல், நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையிலும், திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கம், 11 மணி வரையிலும், Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave., Markham, ON, Canada என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.இந்தியாவின் மொழி வரலாற்றில் தமிழ் மொழியே முதல் முதலில், கணினியில் பயன்படுத்தப்பட்டது. அப்போது கலாநிதி விஜயகுமார் அவர்களின் தமிழ் எழுத்துக்களே பயன்படுத்தப்பட்டன. கம்யூட்டர் தமிழில் 'ரெமிங்ரன்' முறையிலான தட்டச்சினை அறிமுகமாக்கி இலங்கையில் வெளிவரும் வீரகேசரி, கனடாவில் முதன் முதலாக வெளிவந்த உலகத்தமிழர் பத்திரிகை போன்றவற்றிக்கு கணினியில் உருவம் கொடுத்தவர் காலம் சென்ற விஜயகுமார் அவர்களாவர்.கணினி எழுத்துக்களை அமெரிக்க விஞ்ஞானி ஜோர்ச் ஹார்ட் மூலம் உலகம் கண்டிருந்தாலும், அவற்றினை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தந்தவர் கலாநிதி விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.அன்னாருக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் அக வணக்கத்தை செலுத்திக்கொள்கின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)