பக்கங்கள்

30 ஏப்ரல் 2011

அமெரிக்க தூதரகத்தில் நடந்த இரகசியப்பேச்சு.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரீசியா புட்டினாசின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அமெரிக்கத் தூதுவரினால் இந்த சந்திப்பிற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
கொள்கை அடிப்படையில் தூதுவரின் சந்திப்புக்கள் மற்றும் பேச்சுவார்த்தை விவகாரங்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதில்லை என தூதரகம் அறிவித்துள்ளது.
புட்டினாசின் அழைப்பின் அடிப்படையில் இவ்வாறான ஓர் சந்திப்பு நடைபெற்றதாக தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எவ்வாறு காத்திரமாக பயன்படுத்த முடியும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையை பிரிவினையை ஏற்படுத்தும் கருவியாக பயன்படுத்திக்கொள்ளாது அதன் பரிந்துரைகளை எவ்வாறு ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து, சிரானி சேவியர், ஜே.சீ. வெலியமுன, சுதர்சன குணவர்தன, சுனிலா அபேசேகர மற்றும் இந்தியா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், நெதர்லாந்து, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், நோர்வே, தென் ஆபிரிக்கா, தென் கொரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய இராஜதந்திரிகளும், ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக ஜெஹான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.