பக்கங்கள்

28 பிப்ரவரி 2020

குற்றவியல் நீதிமன்று அல்லது சர்வதேச தீர்ப்பாயம் ஐநாவில் கஜேந்திரகுமார் கோரிக்கை!

இப்போதாவது சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பிரேரிப்பதற்கு அல்லது விசேட சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றை நிறுவுவதற்கான கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43வது கூட்டத் தொடரில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை மீதான பொது விவாதத்தில் இன்று ஆற்றிய உரையில், 30/1 தீர்மானத்தை அமுல்படுத்துவது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் நடத்தை குறித்து இந்த வாய்மொழி மூல அறிக்கை கணிப்பீட்டை மேற்கொண்டிருக்கிறது. இந்த பிரேரணையின் உள்ளடக்கமானது , மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்ற விடயங்களில், இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளோடு ஒப்பிடுகையில் மிகப்பாரிய குறைகளோடு இருந்தமையால், தமிழர்களால் இப் பிரேரணையானது சந்தேகத்துக்குரியதாகவே பார்க்கப்பட்ட போதிலும், இந்த 30/1 பிரேரணையானது, சிறிலங்கா அர்சாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்டு, அது இந்த ஐநா மனித உரிமை சபையின் அங்கத்துவர்கள் பலராலும் பெரிதும் சிலாகிக்கப்பட்டும் இருந்தது. இந்த 30/1 பிரேரணையானது, சர்வதேச கலப்பு (Hybrid) குற்றவியல் பொறிமுறையை கொண்டிருக்கும் என்று, தமிழர்களிற்கு சொல்லப்பட்ட போதும் (தமிழர்கள் மத்தியில் விற்பனை செய்யப்பட்ட போதும்) அதற்கு மாறாக, பொறுப்புக்கூறலை உள்ளக விசாரணைக்குள் மட்டுப்படுத்தப்படுத்தக்கூடிய வகையில் மிக சாமர்த்தியமான வார்த்தைகள் மூலம் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது என்பதை எமது அமைப்பு இங்கே பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தது. இந்த பிரேரணையை அமுல்படுத்த முடியாது என அப்போதைய சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாகவே மறுதலித்திருந்த போதிலும் , தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் கால நீடிப்பு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த நவம்பரில் சிறிலங்காவில் புதிய அரசாங்கமொன்று பதவிக்கு வந்திருக்கிறது. இங்கு இழைக்கப்பட்ட அனைத்து குற்றங்களுக்கும் பின்னணியில் இருந்த முக்கிய சூத்திரதாரி எனக் குற்றம் சாட்டப்பட்டிருப்பவரே இப்போது புதிய ஜனாதிபதியாக வந்திருக்கிறார். இந்த புதிய அரசாங்கமானது , எதிர்பார்க்கப்பட்டபடியே, 30/1 பிரேரணையின் இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வதாக , உத்தியோகபூர்வமாக இந்த மன்றிற்கு அறிவித்திருக்கின்றதன் மூலம் இந்த பிரேரணையை நிராகரித்திருக்கின்றது . அவையின் தலைவர் அவர்களே மற்றும் ஆணையாளர் அவர்களே , நீதியை நிலைநாட்ட மறுதலிக்கின்ற நாடொன்றில், குற்றவியல் நீதியை அமுல்படுத்துவதற்கான வல்லமைகள் இந்த மனித உரிமை பேரவைக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றது என்பதை ஏற்று, இப்போதாவது, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பிரேரிப்பதற்கு அல்லது விசேட சர்வதேசதீர்பாயம் ஒன்றை நிறுவுவதற்கான கோரிக்கையை விடுக்கப்பட வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

19 பிப்ரவரி 2020

முன்னாள் முதல்வர் உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிடுகிறார் என கண்டனம்!


முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பான கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் யாழ் இணைப்பாளர் இன்று  ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பான கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் யாழ் இணைப்பாளர் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 'விக்னேஸ்வரன் அவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கஜேந்திரகுமார் பிரித்தாளுவதாக அண்மையில் கூறியதனூடாக எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பு மீது கட்சி சாயம் பூசி சிறிலங்கா அரசின் ஓ.எம்.பிக்குள் முடக்க எத்தனிக்கிறாரா??? தமிழர்களை காணாமலாக்கிய ஒட்டுக்குழுக்களை ஒன்றாக்கி ஒட்டுக்குழுக்களின் கூட்டணி அமைத்திருக்கும் விக்னேஸ்வரனுக்கு எம்மையும், எமது போராட்டத்தையும் எப்படிப் புரிந்து கொள்ள முடியும். விக்கினேஸ்வரன் நீதியரசர் என்ற பெயரை வைத்துக்கொண்டு நீதிக்கும் ,நேர்மைக்கும் உண்மைக்கும் எதிரான கருத்தை வெளிகொண்டு வருவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் எமது போராட்டத்தை கஜேந்திரகுமார் பிரித்தாளுகின்றார் என்றால் அதற்கான ஆதாரங்களை விக்னேஸ்வரன் வெளிப்படுத்த வேண்டும். எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தி நீதி வேண்டி போராடி வருகின்றது ஓ.எம்.பியை வெளியேறக்கோரி தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம். எமது அமைப்பு கடந்த பிப்ரவரி 4 திகதி அன்று இலங்கை சுதந்திர தினத்திற்கு எதிராக கறுப்பு கொடிகளை தாங்கி போராடி எமது எதிர்ப்பை வெளியிட்டோம். இவ்வாறு தூய்மையான போராட்ட அமைப்பின் மீது அரசியல் சாயத்தை பூசி அதை இல்லாமல் ஒழிக்க விக்னேஸ்வரன் முயற்சிக்கிறாரா? கனகரஞ்சினி உள்ளிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் ஓ.எம்.பி யை ஆதரித்து அவர்களுடன் பல தடவை ரகசிய பேச்சுக்களை நடத்தி யாழ்ப்பாணத்தில் ஓ.எம்.பியைத் திறக்க வழி கோலிவிட்டு இலங்கை அரசாங்கத்திடம் நீதியை கோரி வருகின்றனர். அரசிடம் நீதியை கோருகின்ற தரப்புக்கு விக்னேஸ்வரன் ஆதரவா ?என்ற கேள்வி எம் மத்தியில் எழுந்துள்ளது. எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு ஐநா பாதுகாப்புச்சபை ஊடாக நீதியை வலியுறுத்தி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது. இதனை அரசியல் சாயத்தை பூசி இல்லாமல் ஒழித்து கோத்தா அரசை பாதுகாக்க விக்னேஸ்வரன் முயற்சிக்கிறாரா? நாம் ஓ.எம்.பியை வெளியேற கோரி தொடர் போராட்டத்தை மேற்கொண்டு இன்றுடன் 162 ஆவது நாளை கடந்துள்ள நிலையில் இது வரைக்கும் எமது போராட்ட கொட்டகைக்கு வந்து ஏன் இதில் இருக்கிறீர்கள்? எதற்காக இருக்கிறீர்கள் ? என்று கூட கேட்காத விக்னேஸ்வரன் தனது கட்சி லாபத்திற்காக வாக்கு வேட்டைக்காக எமது தூய்மையான போராட்டத்தை கொச்சைப்படுத்த முயல்கிறார். காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தை சிறிலங்கா அரசு பிரித்தாழ்கிறது என்பது விக்னேஸ்வரனுக்குத் தெரியாத விடயமல்ல ?அல்லது தெரியாது போல் நடிக்கிறாரா? தமிழின அழிப்பிற்கான நீதியை சொகுசான வாழ்க்கைக்காகவும்,தமது அரசியல் இருப்பிற்காகவும் விலைபேசி விற்ற கூட்டமைப்புப் போன்று கூட்டணி அமைத்து கும்மாளம் போட்டு தமிழர் தேசத்தை கூறுபோடும் விக்கினேஸ்வரனின் உண்மை முகம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இனிவரும் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடுதலை வேண்டி உறவுகளின் வலி சுமந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடிந்தால் வரலாம் இல்லையேல் எமது போராட்டம் பற்றி வாய் திறக்கக்கூடாது. இல்லை கதைப்பேன் என நினைத்து எம்மைச் சீண்டினால் நீதியரசருக்கெதிராகவும் எமது போராட்டம் திரும்பும். என்பதினை அறியத்தருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.இவ்வாறு செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 பிப்ரவரி 2020

சவேந்திர சில்வாவிற்கு தடை போட்டது அமெரிக்கா!

போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை படைத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர், அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டில் இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தின் போது இலங்கை இராணுவத்தின் 58 ஆவது பிரிவினரால் மனித உரிமை மீறலான சட்டவிரோதக் கொலைகளில், அவரது ஈடுபாடு தொடர்பில் நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அதிகாரிகள் மனித உரிமை மீறல் அல்லது குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருக்கு நம்பகமான தகவல்கள் இருந்தால், அந்த நபர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவிற்குள் நுழைய தகுதியற்றவர்களாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட சவேந்திர சில்வா மீதான மொத்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் நம்பகமானவை. அவரது பதவி இலங்கையிலும் உலக அளவிலும் மனித உரிமைகள் மீது நாம் வைத்திருக்கும் முக்கியத்துவத்தை அது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தண்டனை விதிக்கப்படுவது குறித்த நமது அக்கறை, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான எங்கள் ஆதரவு. மனித உரிமைகளை ஊக்குவிக்கவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான நபர்களை வைத்திருக்கவும், பாதுகாப்புத் துறை சீர்திருத்தத்தை முன்னெடுக்கவும், நீதி மற்றும் நல்லிணக்கத்தைத் தொடர அதன் பிற கடமைகளை ஆதரிக்கவும் இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இலங்கை அரசாங்கத்துடனான எங்கள் கூட்டாண்மை மற்றும் இலங்கை மக்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் நீண்டகால ஜனநாயக பாரம்பரியத்தை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இலங்கையுடனான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கும், தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அதன் பாதுகாப்புப் படைகளை மாற்றியமைக்க உதவுவதற்கும் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு எங்கள் பயிற்சி, உதவி மற்றும் ஈடுபாடுகளின் அடிப்படை அங்கமாக மனித உரிமைகளுக்கான மரியாதையை தொடர்ந்து வலியுறுத்தும். உலகெங்கிலும் உள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை எப்போது நிகழ்ந்தது அல்லது யார் செய்தார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், கிடைக்கக்கூடிய அனைத்து செயற்பாடுகளையும் அமெரிக்கா தொடர்ந்து பயன்படுத்துகிறது. இன்றைய நடவடிக்கைகள் மனித உரிமைகளை ஆதரிப்பதற்கும், குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கும், அமைதியான, நிலையான மற்றும் வளமான இலங்கைக்கு ஆதரவாக நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் எங்கள் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்றுள்ளது.

14 பிப்ரவரி 2020

இளம் மனைவியை கொன்று தோலை உரித்த கொடூரன்!

ஆத்திரம் அடங்காமல் சமையல் அறைக்கு ஓடிப்போய்,காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து மனைவியை குத்தி கொன்றதுடன், அவரது தோலையும் தனியாக உரித்தெடுத்துள்ளார் கொடூர, கொடுமைக்கார கணவர்! மெக்சிகோ நகரைச் சேர்ந்தவர் எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ.இவருக்கு வயது 46 ஆகிறது.. இவரது மனைவிக்கு வயது 25 ஆகிறது.. வயது பொருத்தம் இல்லாத காரணத்தினால் இருவருக்குள்ளும் நிறைய தகராறு வந்துள்ளது.அப்படி ஒரு சண்டை சம்பவத்தன்றும் நடந்தது.. அந்த நேரம் பார்த்து கணவன் செம போதையில் இருந்துள்ளார்.. தம்பதியிடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமும் போதையும் தலைக்கேறிய கணவன், நேராக சமையலறைக்கு போய் கத்தியை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக குத்திவிட்டார்... உடம்பில் பல இடங்களில் கத்திகுத்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே மனைவி இறந்துவிட்டார்... அப்போதும் ஆத்திரமும், போதையும், வெறியும் அடங்காத கணவன், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அவருடைய தலை முதல் கால் வரை தோலை உரித்து எடுத்துள்ளார்..பிறகு உடல் உறுப்புகளை தனித்தனியாக வெட்டி எடுத்து கொண்டு போய், ஒரு ஏரியில் வீசினார்... பிறகு வீட்டுக்கு வந்து கொலை செய்ததற்கான அடையாளங்களை அழித்துள்ளார். அதற்கு பிறகு முதல் மனைவிக்கு போன் செய்து தான் எப்படி எல்லாம் கொலை செய்தேன் என்பதை ஒன்றுவிடாமல் விளக்கி இருக்கிறார்.இதை போனில் கேட்டதற்கே முன்னாள் மனைவி அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்..இதற்கு பிறகுதான் போலீசார் விரைந்து சென்றனர்.. அப்போது மிச்சம் மீதி இருந்த உடல்பாகங்களை கைப்பற்றி இருக்கின்றனர். கணவனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு மெக்சிகோ நகரமே வெலவெலத்து காணப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், தோல் உரிக்கப்பட்ட நிலையில் இருந்த பெண்ணின் சடலம் போட்டோ எடுக்கப்பட்டுள்ளது.. அதை அந்நாட்டு ஊடகங்களும் பயன்படுத்தியிருந்தன.. இதற்கு மெக்சிகோவின் தேசிய மகளிர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.. இந்த போட்டோவை பார்த்து மக்களும் கொதிப்படைந்து உள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

07 பிப்ரவரி 2020

தமிழீழக் கலைஞர் முல்லை ஜேசுதாசன் காலமானார்!

ஈழத்து நடிகரும் குறும் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான முல்லை ஜேசுதாசன் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் சாவடைந்துள்ளார். 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய அபார நடிப்பு திறமைகள் மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தி பலராலும் போற்றப்பட்டு வந்தவர் அவர். ஒரு சிறந்த மனிதனாகவும் தனது திறமையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டு வந்தவரும் நடிகரும் குறும் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான முல்லை ஜேசுதாசன் இன்று அதிகாலை கள்ளப்பாட்டில் உள்ள அவரது இல்லத்தில் சாவடைந்தார்.கள்ளப்பாடு தெற்கு முல்லைத்தீவில் வசித்து வந்த சந்தியோகு ஜேசுதாசன்17.08.1955 ல் பிறந்தார். அவருடைய 65 ஆவது வயதில் இன்று காலை அவர் சாவடைந்தார்.தமிழீழக் கலைஞர் முல்லை ஜேசுதாசன் அவர்களின் புகழுடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.