பக்கங்கள்

09 ஜனவரி 2018

தேர்தல் களம் நோக்கி புளியங்கூடல் மண்ணின் மைந்தன்!

புளியங்கூடல் மண்ணின் மைந்தனும் சமூக சேவையாளருமாகிய கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்கள் இம்முறை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்றார்.சொந்த ஊரான புளியங்கூடலின் 8ம் வட்டாரம் ஜே/59 ஜே/60 பிரிவில் முதன்மை வேட்பாளராக களம் இறங்குகிறார் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்கள்.கொள்கைப்பற்றோடும் தேசிய உணர்வோடும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சியும் தமிழ் மக்களின்  நம்பிக்கையின் சின்னமுமான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரோடு இணைந்து பயணித்து வரும் ஞானேஸ்வரன் அவர்கள் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சின்னமான உந்து உருளி சின்னத்தில் தமிழ்த்தேசிய பேரவையின் கீழ் தேர்தல் களம் நோக்கி வந்திருக்கின்றார்.இந்த கொள்கை பற்றாளனை வெற்றி பெறசெய்வது தாய் மண்ணில் பற்றுக்கொண்ட ஒவ்வொருவரதும் கடமையாகும்.கேதீஸ்வரன் ஞானேஸ்வரனின் வெற்றியை ஒவ்வொருவரும் இன்றே உறுதி செய்து கொள்வோம்.10.02.2018ல் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.