பக்கங்கள்

07 ஏப்ரல் 2011

ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் விஜயகலா.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவுடன், புதிய பதவி நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் படி ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொது செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகலரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.தேசிய இளைஞர் முன்னணியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் முன்னணியின் தலைவராக மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கோனகஹகே நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பிரதி இணைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறிஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ், கட்சியின் செயற்குழுவுக்கு ரணில் விக்ரமசிங்க 16 புதிய உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கட்சியின் செயற்குழுவில், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் பெயரும் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விஜயகலா அண்மைக்காலங்களில் மகிந்த மற்றும் சுதந்திரக் கட்சியுடன் நெருக்கமான உறவுகளை பேணிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.