பக்கங்கள்

23 ஏப்ரல் 2011

நாம் பதிலளிக்கப்போவதில்லை.

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் பங்கேற்கப் போவதில்லை என உண்மையைக் கண்டறியும் ஆணைக்கு அறிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் உறுப்பினர் எச்.எம் பலிஹக்கார, நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்கும் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழுவின் அறிக்கைக்கு, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உறுப்பினர்கள் பதிலளிப்பது பொருத்தமாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சுயாதீனமான செயற்பட்டு வருவதாகவும், அதன் உறுப்பினர்கள் வேறும் ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பது பொருத்தமாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.