பக்கங்கள்

17 ஏப்ரல் 2011

மின்சாரக்கதிரையில் இருத்தினாலும் கவலையில்லை என்கிறார் மகிந்த!

தேசத்திற்காக மின்சார நாற்காலி தண்டனையை தந்தால்கூட சந்தோசமாக எற்றுக்கொள்வேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.30 ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டு வந்ததனை தாங்கிக்கொள்ள முடியாத சில தரப்பினர் சர்வதேச ரீதியில் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான போலிப் பிரச்சாரங்களுக்கு பதிலளிப்பதற்கு தாம் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட போது மஹிந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு காலத்தில் மக்கள் தமது வேலைகளை சுதந்திரமான முறையில் மேற்கொண்டதனை அவதானித்ததாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே தினத்தன்று இலங்கையில் காணப்படும் சுதந்திரத்தை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறுகிய அரசியல் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு சில தரப்பினர் தாய் நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடிக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.