பக்கங்கள்

01 ஏப்ரல் 2011

தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும்!

தெற்கு லண்டன் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐந்து வயது தமிழ் சிறுமியும், மற்றுமொரு தமிழரும் காயமடைந்துள்ளனர். இதனை மேற்கொண்ட குற்றவாளிகள் தொடர்பில் தகவல் தருபவர்களுக்கு 50,000 பவுண்ஸ்கள் சன்மானம் வழங்கப்படும் என லண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தெற்கு லண்டனில் உள்ள ஸ்ரொக்வெல் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கியே இவர்கள் காயமடைந்துள்ளனர். இரண்டு நபர்களை, துப்பாக்கி ஏந்திய மூன்று நபர்கள் துரத்திவந்தபோது, அவர்கள் குறிப்பிட்ட கடைக்குள் சென்று ஒளிந்துள்ளனர். எனினும் கடைக்குள் புகுந்த நபர்கள் சரமாரியாக சுட்டத்தில் துசா கமலேஸ்வரன் (05) மற்றும் றொசான் செல்வகுமார் (35) ஆகியயோர் காயமடைந்துள்ளனர். துசாவின் இரு சகோதரர்களும் கடையில் இருந்தபோதும், அவர்கள் காயங்கள் இன்றி தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.