பக்கங்கள்

10 மார்ச் 2017

சர்மிளா மரணத்தால் சோகத்தில் மூழ்கியது கூடலூர்!


புளியங்கூடலை சொந்த இடமாக கொண்டவரும் தற்பொழுது கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி சர்மிளா விஜயரூபன் அவர்கள் தனது தாயாரின் சுகயீனம் காரணமாக தனது இரு பிள்ளைகளுடன் புளியங்கூடல் சென்றிருந்தார்.நேற்றைய தினம் தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து புளியங்கூடல் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில் விஜயரூபனின் தந்தை திரு வேலுப்பிள்ளை கந்தலிங்கம் அவர்களும் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.