யாழ். ஊர்காவற்துறை 3 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டிலிருந்து இளம் யுவதி ஒருவருடைய சடலத்தை ஊர்காவற்துறைப் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக ஊர்காவற்துறை அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலமானது மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன தருமன் விதுலா (வயது 24) என்ற இளம் யுவதியுடையதென அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
இச்சடலம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.