பக்கங்கள்

28 ஏப்ரல் 2011

பான் கீ மூன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்து.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மேற்கொள்ளப் பட்ட போர்க் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சுயாதீனமான சர்வதேச விசாரணைகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகிய மனிதவுரிமை அமைப்புக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
நிபுணர்கள் குழுவின் அறிக்கை உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட நிலையில் இவ் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வன்னிப் போரின்போது இலங்கைப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் தன்னால் எவ்வித விசாரணைகளுக்கும் உத்தரவிட முடியாது என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியிருந்தார்.
பான் கீ முனின் இந் நிலைப் பாடு தொடர்பாக சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளதுடன் இப் போர்க் குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை மேற் கொள்வதற்கு ஏனைய நாடுகள் பான் கீ முனிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளன. அதேவேளை பான் கீ மூன் தனது அதிகார வரையறை குறித்து கூறியுள்ளதை ஆய்வாளர்கள் முற் றாக நிராகரித்துள்ளனர்.
இலங்கைக்கு சாதகமான நிலைப்பாடு களைக் கொண்டுள்ள சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை எதிர்த்து நிற்பதை பான் கீ மூன் விரும்பவில்லை என சனல்4 தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக தான் 2-வது தடவையும் தெரிவுசெய்யப்படுவதற்காகவே இப் போர்க் குற்றங்கள் குறித்து மென்போக்கை பான் கீ மூன் கடைப்பிடிப்பதாக நியூயோர்க் சென்.ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகப் பணியாற்றும் ஜோன் மெற்ஸ்லர் கூறியிருப்பதாகவும் இத் தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் வன்னிப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போVக்குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள தன்னிடத்தில் அதிகாரமில்லை என பான் கீ மூன் கூறுவது, நிபுணர்கள் குழுவின் பெறுமதியை குறைத்துக் காட்டுவ தாகவே அமையும் என அரசியல் விமர்சகர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இப் போர்க் குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசார ணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கவேண்டும் அல்லது ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் கோரிக்கை விடுக்கவேண்டும் என பான் கீ மூன் தெரிவித்திருந்த நிலையில், பான் கீ மூன் மீது இது தொடர்பன சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருவதாகவே நிபுணர்கள் கருதுகின்றனர்.
வன்னிப் போரின்போது போரில் ஈடுபட்ட இரு தரப்பினரும் சர்வதேசப் போர் நியமங்களுக்கு மாறாக போர்க் குற்றங்களில் ஈடுபட்டிருப்பதை ஐக்கியநாடுகள் சபையின் நிபுணர் குழு உறுதிப்படுத்தியிருந்ததுடன் போர்ப் பிரதேசத்தில் பொது மக்களை பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.
இப் போர்க் குற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் சுயாதீனமான, காத்திரமான விசாரணைகளை முன் னெடுக்காத இடத்தில் ஐக்கிய நாடுகள் சபை சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் குழு பரிந்து ரைத்திருந்தது.
இந்நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பிலான புலனாய்வில் இது வரை ஒளிபரப்பியதை விட மிகப் பயங்கரமான காணொளிக் காட்சிகளை சனல்4 தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளதாக பிரித்தானிய ஊட கங்கள் தெரிவித்துள்ளன.
சனல்4 தொலைக்காட்சி வெளியிடவுள்ள இந்தக் காணொளிக் காட் சிகள் பயங்கரமாக இருப்பதால், இக் காணொளி நள்ளிரவிலேயே ஒளிபரப்பப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.