பக்கங்கள்

24 ஏப்ரல் 2011

யாழில் கத்திக்குத்து சம்பவம்!

இரு வேறு சம்பவங்களில் கத்தி, வாழ் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் ஐவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக் காயங்களுக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு பெண்கள் உட்பட இளைஞர் ஒருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் யாழ். கொய்யாத்தோட்டம் புதுவீதியைச் சேர்ந்த இன்பநாதன் கபிரியேற்பிள்ளை வயது 59 என்பவரே வாழ் வெட்டுக்கு இலக்கானவர்.
இன்று இரவு 8 மணியளவில் நடைபெற்ற இச் சம்பவத்தில் வீட்டினுள் நான்கு, ஐந்து பேர் சென்று வெட்டியதாக வைத்தியசாலைப் பொலிசாருக்கு வயோதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் ஆனைக்கோட்டை வீதியில் சென்றுகொண்டிருந்தவர் மீது மதுபோதையில் வந்தவர் கத்தியால் குத்தியதில் அதே இடத்தைச் சேர்ந்த ஏ. தயாபரன் வயது 28 என்பவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.