பக்கங்கள்

15 ஏப்ரல் 2011

ஸ்ரீலங்கா அரசு போர்க்குற்றவாளிதான்!

சிறீலங்கா அரச தலைவர்கள் போர்க்குற்றங்களை மேற்கொண்ட குற்றவாளிகள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்காவின் மேரிலான்ட் இல் உள்ள பல்ரிமோர் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் சட்டத்துறை மாணவன் ரஜீவ் சிறீதரன் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவின்; சகோதரர் கோத்தபாயா ராஜபக்சா மற்றும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் போர்க்குற்றவாளிகள் என தெரிவித்துள்ள சிறீதரன் அவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஒருவரின் கேள்வி ஒன்றிற்கு பதில் தரும்போதே சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். நூரெம்பேர்க் தொடக்கம் டாபர் பகுதி வரையிலுமான வரலாற்றை பார்த்தால் தெரிவுசெய்யப்பட்ட சில மக்களுக்கே நீதி கிடைத்துள்ளது. அவர்களுக்கே வரலாற்றை எழுதும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தனது கல்வியை தொடர்ந்தவாறே அவர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட இனப்படுகொலைகளுக்கு எதிரான தமிழர் அமைப்புடனும் இணைந்து பணியாற்றிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.