பக்கங்கள்

03 ஏப்ரல் 2011

மாங்குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த படகுகள் மீட்பாம்!

மாங்குளம் - நத்தன்கண்டால் வனப் பிரதேசத்தில் பொதியிட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உரித்தானது என கருதப்படும் 39 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மாங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படை குழுவிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே நேற்று இந்த படகுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நத்தன்கண்டால் பிரதேசத்தில் அடர்ந்த காட்டில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு பொதியிடப்பட்டிருந்த படகுகள் இரகசியத் தன்மையுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் மாங்குளம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த படகுகள் மோதல் இடம்பெற்ற காலத்தில் யாழ்ப்பாண குடாநாட்டில் தாக்குதல் மேற்கொள்வதற்காகவே மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அரசசாங்க தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.